Thursday 23 November 2023

கைசிக ஏகாதசி 23.11.2023

108வைணவ திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான அன்பில் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் கைசிக ஏகாதசி உற்சவம் 23.11.2023
https://youtu.be/LJYShAOOTos?si=-4TrlWNf9PpURCGo

Tuesday 14 November 2023

உலகளந்தானுக்கு ஓர் அடி தாரீர்

"Join us in preserving the divine heritage of Lord Sri Krishna's temple as we embark on a transformative renovation journey. Your generous sponsorship will help restore this sacred space and ensure its legacy for generations to come. Together, let's honor the divine presence of Lord Sri Krishna and create a sanctuary that inspires devotion and spiritual growth.

https://youtube.com/shorts/Bgn7eFE36QA?feature=shared
Bank Account Details
Sri Kannan Trust
City Union Bank Thirukkattuppalli Branch 
Account Number:019001000928885
IFSC CODE: CIUB0000019

"மாறும் மாற்றமான புனரமைப்புப் பயணத்தைத் தொடங்கும்போது, ஸ்ரீ கிருஷ்ணரின் கோவிலின் தெய்வீகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எங்களுடன் சேருங்கள். உங்களின் தாராளமான அனுசரணை இந்த புனித இடத்தை மீட்டெடுக்கவும், தலைமுறைகளுக்கு அதன் பாரம்பரியத்தை உறுதிப்படுத்தவும் உதவும். ஒன்றாக, ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இருப்பை போற்றுவோம்.  கிருஷ்ணா மற்றும் பக்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சரணாலயத்தை உருவாக்குங்கள்.

https://youtube.com/shorts/Bgn7eFE36QA?feature=shared

Monday 13 November 2023

Join us in preserving the divine heritage of Lord Sri Krishna's temple as we embark on a transformative renovation journey.

"Join us in preserving the divine heritage of Lord Sri Krishna's temple as we embark on a transformative renovation journey. Your generous sponsorship will help restore this sacred space and ensure its legacy for generations to come. Together, let's honor the divine presence of Lord Sri Krishna and create a sanctuary that inspires devotion and spiritual growth. #TempleRenovation #PreservingHeritage #RenovateWithPurpose #SupportLordKrishna"

Bank Account Details
Sri Kannan Trust
City Union Bank Thirukkattuppalli Branch 
Account Number:019001000928885
IFSC CODE: CIUB0000019
"மாறும் மாற்றமான புனரமைப்புப் பயணத்தைத் தொடங்கும்போது, ஸ்ரீ கிருஷ்ணரின் கோவிலின் தெய்வீகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் எங்களுடன் சேருங்கள். உங்களின் தாராளமான அனுசரணை இந்த புனித இடத்தை மீட்டெடுக்கவும், தலைமுறைகளுக்கு அதன் பாரம்பரியத்தை உறுதிப்படுத்தவும் உதவும். ஒன்றாக, ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக இருப்பை போற்றுவோம். கிருஷ்ணா மற்றும் பக்தி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சரணாலயத்தை உருவாக்குங்கள். #TempleRenovation #PreservingHeritage #RenovateWithPurpose #SupportLordKrishna"


https://youtube.com/shorts/SfnCly-QvFs?si=lr4m4Zb_P7GJ_ht6

Sunday 12 November 2023

Need Sponsorship for Temple Restoration

"அனைத்து பக்தர்களையும், பரோபகாரர்களையும் அழைக்கிறோம்! எங்கள் அன்புக்குரிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலின் மிகவும் தேவையான புனரமைப்பை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புனிதப் பயணத்தை நாங்கள் தொடங்கும் போது, ​​இந்த தெய்வீக இருப்பிடத்தை மீட்டெடுக்கவும், புத்துயிர் பெறவும் உதவ உங்கள் தாராளமான அனுசரணையை நாங்கள் தாழ்மையுடன் நாடுகிறோம்.  ஆன்மிக பாரம்பரியத்தை காப்பதிலும், துடிப்பான சமுதாயத்தை வளர்ப்பதிலும் எங்களுடன் இணைந்து, பக்தி செழிக்கும் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த ஒரு புகலிடத்தை உருவாக்குவோம். #கோயில்புனரமைப்பு #அனுசரணை வாய்ப்பு #தெய்வீகமறுசீரமைப்பு"
"Calling all devotees and philanthropists! We are excited to announce the much-needed renovation of our beloved Lord Sri Krishna temple. As we embark on this sacred journey, we humbly seek your generous sponsorship to help restore and revitalize this divine abode. Join hands with us in preserving the spiritual heritage and fostering a vibrant community. Together, let's create a haven where devotion thrives and blessings abound. #TempleRenovation #SponsorshipOpportunity #DivineRestoration"

Bank Account details
Sri Kannan Trust
City Union Bank
Thirukkattuppalli Branch
Account Number: 019001000928885
IFSC CODE: CIUB0000019

Friday 27 October 2023

இந்த 25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள்

ஸ்ரீ பாஞ்சராத்ர  ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest )  கீழ்கண்ட நபர்களை தீக்சை செய்யவேண்டும் (இவர்கள் அனைவரும் நிரந்தரமாக கோயிலில் பெருமாள்  கைங்கரியம் செய்யவேண்டும் )
1) ஆசார்யன் - கர்சனதிப் பிரதிஷ்டைவரை  செய்பவர் 

2) அர்ச்சகர்  - உதவி அர்ச்சகர் ( Helper )

3)சன்னதிபரிசாரகர்  - பெருமாள் பாத்திரத்தை சுத்தம் செய்பவர்  மற்றும் திருமணி கைங்கரியம் செய்பவர்   மற்றும் பெருமாளுக்கு தேவையான சந்தனாதி திரவியங்களை தயார் செய்து வைப்பவர் மற்றும் அர்ச்சகருக்கு தேவையான உதவி செய்பவர்.

4) பரிசாரகர் (மடப்பள்ளி)  -  பெருமாளுக்கு தேவையான நித்யபடி மற்றும் அதிகப்படி உத்ஸவ காலங்களில்        பொறுப்புடன் பெருமாள் தளிகை செய்பவர். 

5) பிசக் (Dr)  - கோயில் அர்ச்சகருக்கு மருத்துவம் பார்ப்பவர் 

6) தைவக்ஞ்யன் ( Astrologer ) - கோயிலுக்கு ஜோதிடம் பார்ப்பவர் , உத்ஸவத்திற்கு  மற்றும் பிரதிஷ்டைக்கு ( கும்பாபிஷத்துக்கு  லக்கனம் மற்றும் முகூர்தம் வைத்து தருபவன் 

7) கர்மஹ:   நாவிதன்  ( சவரர் செய்பவன் )

8)குலால: கோயிலுக்கு தேவையான மண்பாண்டம் செய்பவன் (கலசம்)

9) பார்சவ: டவன்டை அடிப்பவன்.

10) வ்யாத:  வாத்தியம் தயார் செய்பவன்.

11) தந்துவாய:  நாதஸ்வரம் வாசிப்பவன்.

12) கோப: மாட்டை மேய்ப்பவன் ( பசுவை ரட்சிப்பவன் )

13) மாஹீச: எருமை மேய்ப்பவன் (  எருமை பால் கறப்பவன் )

14) கரிபந்தந:  யானைக்காரன் ( யானையை பார்த்துக்கொள்பவன் )

15)சூளிக: ஆயுதம் இரும்பு வேலை செய்பவன்.

16) மணிவித்ரய: பத்தன் ( தங்கம் வேலை செய்பவன் ஆசாரி )

17) புஷ்பகார :  மாலை கட்டுபவர்.

18) மாளவக:  குதிரையை ரட்சிப்பவன் 

19) சூத: வஸ்திரம்  பார்த்துக்கொள்பவன் ( சலவை ரூம் )

20) சண்டாள:  உத்ஸவம் மற்றும் மற்ற கோயில் வைபவங்களை மக்களுக்கு கூறுபவன்.

21) நத்தக: நாட்டியம் ஆடுபவன் .

22) பெளராணிக: புராணம் சொல்பவன் 

23) தக்ஷ:  ஸ்தபதி 

24) ரதகார: வாகனம் செய்பவன் 

25) தைலிக: எண்னை காப்பு தயார் செய்பவன் 

இவர்கள்  25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள் அனைவருக்கும் ப்ரதான அர்ச்சகர் தீக்சை செய்யவேண்டும்.

Thanks to சக்கரபாணி பட்டாச்சியர்

இப்படிக்கு,
R. சக்கரபாணி பட்டாச்சியர்,
திருக்குடந்தை,
9566206189.

Sunday 15 October 2023

Thayar Festival

*இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் மறுசீரமைப்பு திருப்பணி*

நவராத்திரியின் இந்த மங்களகரமான தருணத்தில், தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி ருக்மணி தாயார் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மீதும் தனது விருப்பமான ஆசீர்வாதங்களைப் பொழியட்டும்.  உங்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான பண்டிகைக் காலம் வாழ்த்துக்கள்!

 உங்கள் தாராள நன்கொடைகள் அனைத்து பக்தர்களுக்கும் ஸ்ரீ மகாலட்சுமி ருக்மணி தாயார் தேவியின் ஆசீர்வாதத்தை உறுதி செய்யும்

On this auspicious occasion of Navaratri, may Goddess Sri Mahalakshmi Rukmani Thayar shower her choicest blessings upon you and your family. Wishing you a happy and prosperous festive season!

Your generous donations will ensure the continued blessings of Goddess Sri Mahalakshmi Rukmani Thayar upon all devotees

https://youtube.com/shorts/jzM6nZ0JrP8?feature=shared

With Regards
Sri Kannan Trust
City Union Bank Thirukkattuppalli Branch
Account Number: 019001000928885
IFSC Code: CIUB0000019

Gpay/Phonepay/Paytm
8056901601 (Purusothaman)
.

Thursday 12 October 2023

சில கோவில்களுக்குப் போகும்போது நாம் கொஞ்சம் விஷயங்களைத் தெரிந்து கொண்டு போனால் நல்லது.

 

1.  குணசீலம் கோவிலில் நாம் வெளியில் இருந்து வாங்கிக்கொண்டு வரும் பூமாலைகளையோ, புஷ்பங்களையோ சார்த்துவதில்லை. அதேபோல் தான் குங்குமம் பிரசாதம். அங்கிருக்கும் நந்தவனத்தில் மலர்கின்ற பூக்கள் மட்டும் தான் ஸ்வாமிக்கு சமர்ப்பிக்கப்படும். நாம் புஷ்பம் சார்த்த விரும்பினால் திருக்கோவில் அலுவலகத்தில் பணம் செலுத்திவிட்டால் ஒருநாள் நம்முடைய கட்டளையின் பேரில் மாலை சார்த்தப்படும். குங்குமமும் அங்கேயே வாங்கித்தான் கொடுக்கவேண்டும். வெளியில் இருந்து கொண்டு வரும் குங்குமம், மஞ்சள் போன்றவற்றை நம்மிடமே கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலுக்கு வெளியே ஏகப்பட்ட பேர் “பூ வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கட்டாயப்படுத்துவார்கள். மற்ற கோவில்கள் போலல்லாது, இங்கே கோவில் வாசலிலேயே ”வெளியில் இருந்து வரும் புஷ்பங்கள் சார்த்தப்படமாட்டாது” என்ற போர்டு இருக்கும். அதைக் காண்பித்தாலும், “அதெல்லாம் சும்மா,,, நீங்க வாங்கிட்டு போங்க, போய்ட்டு வந்து பணம் கொடுங்கன்னு சொல்லிடுவாங்க. ஆனால் உள்ளே நிச்சயமாக சார்த்த மாட்டார்கள். அப்படியே ஒரு கூடையில் போட்டுவிட்டு வரவேண்டியதுதான். அங்கு போடாமல், வெளியில் வந்து திருப்பிக் கொடுத்தால், “பூவைத் திருப்பிக்கொடுக்காதீங்கம்மா, ஆகாது, வேற கோவிலுக்குப் போனீங்கன்னா அங்க சார்த்துங்களேன்னு செண்டிமெண்டா பேசுவாங்க”. ஆகவே ஞாபகம் வச்சுக்கோங்க.

2. அதேபோல் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில், நூலால் தொடுத்துத் தரப்படும் புஷ்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. நாரினால் தொடுத்திருக்க வேண்டும். பொடிக்கற்கண்டும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அங்கேயே கவுண்டரில் கற்கண்டு (பெரிய கற்கண்டு) விற்கும். அதை வாங்கித்தரலாம். ஆஞ்சநேயர் கோவில் மாத்திரமல்ல, அங்கே இருக்கும் லக்ஷ்மிநரசிம்மர் கோவிலிலும் ப்ளாஸ்டிக் கூடை, கவர்களில் கொண்டு வந்தால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நூலால் கட்டப்பட்ட பூக்களும் அலோ பண்ணமாட்டார்கள்.

3. திருச்சானூர் பத்மாவதி கோவில் வாசலில் அல்லிமலர்கள் நடுவே ஒரு ரோஜாவை செருகி தாயாருக்கு விசேஷம் . வாங்கிக்கொண்டு போங்க என ஒரு நூறு பேர் பின்னாடியே வருவார்கள். நிச்சயமாக அந்த பூக்களை சார்த்த மாட்டார்கள். நம்மிடமிருந்து வாங்கி அங்கே ஒரு கூடையில் போட்டு விடுவார்கள்,. மணம் மிகுந்த மலர்களான மல்லிகை, முல்லை, ரோஜா, செண்பகம், சம்பங்கி, தாமரை போன்றவைதான் சார்த்தப்படும்.
பல மாலைகளில் தற்போது சவுக்கம்புல் அல்லது மந்தார இலையை வைத்து கட்டிவிடுகிறார்கள்,. ஆரம்பகாலங்களில் கதம்பம் கட்டும்பொழுது தவனம் வைத்து கட்டுவார்கள். இப்போது அதற்கு பதில் கன்னாபின்னாவென்று இலைகளை வைத்துக்கட்டித்தருகிறார்கள். நிச்சயமாக புராதனமான எந்த பெருமாள் கோவிலிலும் அந்த மாலையை பெருமாளுக்குச் சார்த்தமாட்டார்கள். ஒன்று தூக்கிப்போட்டுவிடுவார்கள். இல்லை நம்மிடமே திருப்பித்தந்துவிடுவார்கள். நமக்குத்தான் மனசு கஷ்டமாகிவிடும். ஆகவே கூடுமானவரை மாலை வாங்கும்போது இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

4. காளஹஸ்தி கோவிலில் வாசலிலேயே நவக்கிரக பரிகாரத் தட்டு என்று ஒன்றை நம் தலையில் கட்டிவிடுவார்கள். கபர்தார். ஏனென்றால் கோவில் உள்ளே நுழைந்தபின் தான், வாசலில் வாங்கும் பொருட்கள் ஏற்கமாட்டோம்னு போர்ட் இருக்கும். அங்கே கவுண்டரில் பணம் கட்டித்தான் வாங்கவேண்டும். அதேபோல் பரிகாரம் செய்வதற்கான டிக்கட்டும் அங்கேதான் விற்கப்படும். விஷயம் தெரியாமல் வெளி ஏஜெண்டுகளிடம் பணம் கொடுத்தோமேயானால், பரிகார பூஜை நடக்கும் இடத்திற்குச் சற்றுத்தள்ளி, ஒரு ஸ்க்ரீன் இருக்கும். அங்கே உட்கார வைத்து, அங்கு நடப்பதைப் பார்த்து பண்ணுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். என்னதான் பரிகார பூஜைக்கு பணம் கட்டினாலும், கடைசியில் தக்ஷிணை கேட்டு வருவார்கள். ஆகவே எப்போதும் உங்கள் பர்சில் பத்து இருபது ஐம்பது நூறு சில்லறை இருக்கட்டும்.

5. பெருமாளுக்குப் பொதுவாக செம்பருத்தி, நந்தியாவர்த்தம் மலர்களைச் சாற்றுவது வழக்கமில்லை. நம் வீடுகளில் பொதுவாக இந்த மலர்கள் அதிகம் பூக்கலாம். அகத்தில் விளைந்ததாயிற்றே என ஆசையோடு கொண்டுபோனாலும் அனுமதி கிடையாது. ஆகவே அம்பாள், சிவன் கோவில்களுக்கு இந்த மலர்களைக் கொண்டு போகலாம். பெருமாளுக்கு துளசிதளம் இருந்தால் அதை ஆய்ந்து எடுத்துக்கொண்டு செல்லுங்கள். அதி விசேஷம். அதேபோல் பெருமாள் கோவிலில் பெரும்பாலும் ஆரத்தி , நெய்விளக்கில் தான் ஏற்றுவார்கள். ஆகவே சிவன் கோவில்களுக்குச் செல்கையில் நல்லெண்ணையும், பெருமாளுக்கு நெய்யும் எடுத்துச் செல்லுதல் நல்லது.

6. ஸ்ரீபெரும்புதூரில் திருவாதிரை நாட்களில் தேங்காய் உடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அன்று ராமானுஜருடைய அவதார நாள் என்பதால் அவரைக் குழந்தையாக பாவிப்பது வழக்கம். தேங்காய் உடைக்கும் சப்தம் தொல்லையாக இருக்கும் என்பதால் அன்று தேங்காய் உடைக்க மாட்டார்கள்.

7. ரொம்ப அதிகம் புழக்கமில்லாத கோவில்களுக்குச் செல்கையில் தட்டுத்தட்டாக பாதாம் முந்திரி அவசியமில்லை. தளிகைக்குத் தேவையான அரிசியோ, விளக்கேற்ற எண்ணெயோ எடுத்துச் செல்லுங்கள். அதேபோல் கோவில் வரை சென்று வாசலில் விற்கும் வாடிப்போன பூக்களையோ, வதங்கிப் போன பழங்களையோ வாங்குவதற்கு பதில், ப்ளான் பண்ணிச் சென்றீர்கள் என்றால், நல்ல அருமையான மாலைகள், நல்ல பழங்கள் வாங்கிச் செல்லுங்கள், நிச்சயம் காரில் தான் செல்லப்போகிறீர்கள் என்றால் டிக்கியில் அதற்கு ஒரு இடம் ஒதுக்குவது கஷ்டமில்லை. அர்ச்சனை செய்ய உதிரிப்பூக்களும் வாங்கிக்கொண்டு போகலாம். அதே போல் க்ரூப்பாக செல்லும்போது, அதிக பொருளாதாரமில்லாத புராதன கோவில்களில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு நிச்சயமாக தட்டில் காணிக்கை போடுங்கள். கூட்டம் நிரம்பி வழியும் கோவில்களில் நாம் தராவிட்டாலும் அவர்களுக்கு எப்படியும் வருமானம் வந்துவிடும். ஒருவேளை உங்களிடம் கோவில் போன் நம்பர் இருந்தால், பெருமாளுக்கு வஸ்திரங்கள் தேவையென்றால் அதை வாங்கித்தரலாம்.

8. கோவில்களுக்கு செல்லும்போது அங்கு கொடுக்கப்படும் விபூதி குங்குமத்திற்கு உங்கள் பையில் சிறு கவர்களையோ, பேப்பரோ எடுத்துச் செல்லுங்கள். வீட்டில் கொண்டு வந்து நாம் இட்டுக்கொண்டது போக மிச்சத்தை நீரில் கரைத்து செடிகளில் சேர்க்கலாம்.

9. கோவில்களில் தீர்த்தம் வாங்கிக்கொள்ளும்போது, பலர் தாங்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு அந்த டிஸ்போசபிள் பாட்டிலை நீட்டுவார்கள். நிச்சயமாக பல கோவில்களில் அதில் தீர்த்தம் தரமாட்டார்கள். என்னதான் இருந்தாலும் அது எச்சில்தான். ஆகவே முடிந்தவர்கள் சிறு வெள்ளிக்கிண்ணமோ, டம்ளரோ கையில் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் பித்தளை டம்ளரோ, கப்போ வைத்துக்கொண்டு அதில் வாங்கிக்கொள்ளுங்கள். பின்னர் உங்கள் வசதிப்படி பாட்டிலில் ஊற்றிக்கொள்ளலாம்.
முடிந்தவரை ப்ளாஸ்டிக் கவர்களைத் தவிருங்கள். மர கப்புகள், மரத்தட்டுகள் விற்கின்றன. ஆரம்பகாலங்களில் எல்லார் வீட்டிலும் நிச்சயமாக ஒரு எவர்சில்வர் பூக்கூடை இருக்கும். சிலர் பித்தளையில் வைத்திருப்பார்கள். அதில் தான் பூஜை சாமான்களை எடுத்துச் செல்வோம். இப்போது தூக்கிச் செல்ல அலுப்புப்பட்டு கவரில் வாங்குகிறோம். நம்மால் இயன்றது ஒரு சின்ன பித்தளைத்தட்டோ, மரத்தட்டோ, பிரம்புத்தட்டோ எடுத்துச் சென்று அதில் வைத்துக் கொடுக்கலாம். 
10. அதேபோல் பல கோவில்களில் சன்னிதிக்குள் ஊதுபத்தி ஏற்றமாட்டார்கள். ஆகவே கேட்டுக்கொண்டு வாங்கிக்கொடுங்கள். வாசலில் இருக்கும் கடையினர் எதையும் நமக்கு சொல்லமாட்டார்கள். அவர்களுக்கு வியாபாரம் ஆகவேண்டுமே…..

11. முக்கியமான ஒரு விஷயம். தற்காலத்தில் தீபம் ஏற்ற என்று பல எண்ணெய் விற்கின்றார்கள். வாசனைக்காக பல கெமிக்கல்கள் கலக்கப்படுகின்றன. அது எரியும்போது கெடுதல் தான். அது மட்டுமல்லாமல் சில தெய்வங்களுக்கு மட்டும் சில எண்ணெய்தான் ஏற்றவேண்டும். எல்லா எண்ணெய்களையும் கலந்து ஏற்றக்கூடாது. வாட்சப் வைத்தியர்கள் போல பலர் இன்ஸ்டண்ட் இன்பர்மேஷன் செண்டர்களாக இண்டர்நெட்டில் வலம் வந்து இஷ்டத்துக்கு இந்த எண்ணெயில் ஏற்றினால் அந்த நன்மை என்று கதை அளக்கிறார்கள். அதையெல்லாம் நம்பவேண்டும். ஆதிகாலத்தில் இருந்தே பெரும்பாலும் நெய்யும் நல்லெண்ணெயும் தான் நாம் விளக்கு ஏற்ற பயன்படுகிறோம். கன்னாபின்னாவென்று கண்ட எண்ணெயில் ஏற்றிவிட்டு, கஷ்டம் வந்தால் கடவுள் மேல் பழிபோட்டு விடுகின்றோம்.

12.  நீங்கள் பிரசாதம் விநியோகம் செய்யபோகின்றீர்களா? பெரும்பாலான கோவில்களில் அவர்களே தொன்னை தருவதுண்டு. அப்படி இல்லையெனில் நீங்கள் கொஞ்சம் இலையோ தொன்னைகளோ வாங்கிச் சென்று அதில் விநியோகம் செய்யுங்கள். பல கோவில்களில் ப்ளாஸ்டிக் டிஸ்போசபிள் டம்ளரில் தருகின்ற வழக்கம் உண்டு. கூடுமானவரை தவிருங்கள்.

13. துளசிமாலைகள் பெருமாளுக்கு மட்டுமே சாற்றப்படும். ஆகவே அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். தாயாருக்கு தாமரை, மல்லிகை, முல்லை, சம்பங்கி, தவனம் போன்றவை அதி விஷேஷம். ஏகாதசி அன்று நெல்லிக்காய் மாலை பெருமாளுக்கு சாற்றுவது செல்வவளம் தரும். அதை நாரில் தான் கோர்க்கவேண்டும். சணலிலோ, கயிற்றிலோ கோர்க்கவேண்டாம். 

14. பலர் பழம் வாங்கிச்செல்வோம். பொதுவாக ஆப்பிள், மாதுளை, ஆரஞ்ச் போன்ற பழங்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பார்கள். அதை நகம்படாமல் எடுத்துவிட்டு அப்பழங்களை அலம்பி சமர்ப்பியுங்கள். அதேபோல் திராட்சை முதலானவற்றையும் அலம்பி எடுத்துச் செல்லுங்கள்.

15. ரொம்ப முக்கியமான வழக்கம். பலர் பிரசாதம் வாங்கியவுடன், அப்படியே அதை வாயில் வைத்து கடித்து உண்பார்கள். அதே கையோடு தீர்த்தம், சடாரியும் வாங்குவார்கள். அய்யா, அம்மா, கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். அது எச்சில்தான். ஆகவே பிரசாதம் வாங்கியவுடன், அதை இடதுகையில் மாற்றிக்கொண்டு வலது கையால் வாயில் எடுத்து போட்டு சாப்பிடுங்கள். கூடுமானவரை உங்கள் கை வாயில் படவேண்டாம். பிரசாதம் சாப்பிட்டதும் கைகளை அலம்பிக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லையெனில் துணி கொண்டாவது கையை சுத்தமாக துடைத்துக்கொள்ளுங்கள்.



பதிவு :- பிராம்மணர்‌‌‌கள் முகநூல் பக்கம்