Skip to main content

✨ *வரலட்சுமி பூஜை அழைப்பிதழ்* ✨

🌸 *இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்* 🌸

✨ *வரலட்சுமி பூஜை அழைப்பிதழ்* ✨
🙏 அன்பார்ந்த பக்தர்களே,

அதி விசேடமான வரலட்சுமி விரதம் இருப்பவர்களும் மற்றும் அனைவரும் ஒன்று கூடி நம் கண்ணன் திருக்கோயிலில்
வருகின்ற வெள்ளிக்கிழமை *(08.08.2025)*
திருவோணமும் பெளர்ணமியும் கூடிய நன்னாளில்
மாலை 06.00 மணியளவில்

*தங்களின் மாங்கல்ய பாக்கியம் பெருகவும் கன்னிப் பெண்களுக்கு நல்ல மணமகன் அமையவும் அஷ்ட லட்சுமிகளின் கடாக்ஷம் நம் இல்லங்களில் பெருகி நிலைத்திருக்கவும்* கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி *வரலட்சுமி பூஜை* நடைபெற உள்ளதால்
அனைவரும் தவறாது கலந்து கொண்டு
மஹாலக்ஷ்மி தாயாரின் பரிபூரண அருளைப் பெற
வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.


---

🌺 *வைபவ விபரம்* 🌺

1️⃣ தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு
கருட மகாமண்டபம் எழுந்தருளல்

2️⃣ மஹாலக்ஷ்மி தாயாரே இங்கு இருப்பதால்
கடத்தில் லட்சுமிதேவியை ஆவஹனம் செய்யாது
தாயாருக்கு விசேட திருமஞ்சனம்

3️⃣ சங்கல்பம் மற்றும் திருவாராதனம்

4️⃣ தாயாரின் மங்கலப்பொருட்கள்
பூஜையில் கலந்து கொண்ட அனைத்து மகளிருக்கும் வழங்கப்படும்

5️⃣ சாற்றுமறை, தீர்த்தம், கோஷ்டி & பிரசாதம்

6️⃣ தாயார் மூலஸ்தானம் சேர்ந்த பின் மங்கலஹாரத்தி


---

💐 *இந்த வைபவத்தில் தாங்களும் பங்கு பெற விரும்பினால் அழைக்கவும்*:

📞 *95002 64545 | 99426 04383 | 80569 01601*

🌟 இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் தரிசனம் –
மஹாலக்ஷ்மி தாயார் அருளைப் பெறும் அரிய வாய்ப்பு! 🌟

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...