Sunday 15 December 2013

திருப்பாவை பாசுரம்

 திருப்பாவை பாசுரம்

1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள் கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி பாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம் ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரம்

 3 ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

4 ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப் பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

5 மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத் தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.

 திருப்பாவை பாசுரம் 

6 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக் கழியக் காலோச்சி வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம் 

7 கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 8 கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய். 

திருப்பாவை பாசுரம்

 9 தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்! மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.

 திருப்பாவை பாசுரம் 

10 நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருணனும் தோற்று முனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தலுடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திற ஏல் ஓர் எம்பாவாய்! 

திருப்பாவை பாசுரம் 

11 கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் குற்ற மொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய்! 

திருப்பாவை பாசுரம் 

12 கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிறங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய் 

திருப்பாவை பாசுரம் 

13 புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய்

 திருப்பாவை பாசுரம் 

14 உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய் சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய் 

திருப்பாவை பாசுரம் 15 

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன் வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள் வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய்

2 comments: