Thursday 9 January 2014

அமலனாதிப்பிரான்
 தனியன்கள்
ஆபாதசூடமநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்
காட்டவேகண்டபாத கமலநல்லாடையுந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே
பாசுரங்கள்
*அமலனாதிபிரான் அடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான், திருக் -
கமலபாதமவந்து என்கண்ணிலுள்ளனவொக்கின்றவே. .     --- (1)

உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரைக்
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான்,
அரைச்சிவந்தவாடையின்மேல் சென்றதாமெனசிந்தனையே.--(2)

* மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் -
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்
அந்திபோல்நிறத்தாடையும அதன்மேலயனைப்படைத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.                  ---(3)

சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து -
உதிரவோட்டி, ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான், திருவயிற் -
றுதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.                    ---(4)

பாரமாய பழவினைபற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான்,
திருவாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.          ---(5)

துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன், அஞ்சிறைய -
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை, முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.     ---(6)

கையினார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல் -
மெய்யனார், துளபவிரையார் கமழ்நீள்முடியெம் - ஐயனார்,
அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.               --(7)

பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட, அமரர்க் கரியவாதிப்பிரான்
அரங்கத்தமலன்முகத்துக் கரியவாகிப்புடைபரந்து
மிளிர்ந்துசெவ்வரியோடி, நீண்டவப் - பெரியவாயகண்கள்
என்னைப்பேதைமைசெய்தனவே.                                            ---(8)

*  ஆலமாமரத்தினிலைமேல் ஓருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனிஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே.         ---(9)

*  கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெய்
உண்டவாயன், என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள்  மற்றொன்றினைக்காணாவே.                     --- (10)



அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.  *இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.

No comments:

Post a Comment