Skip to main content
நீராட்டம்
 தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம: !
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.

பாசுரங்கள்

வெண்ணையளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு,
திண்ணென இவ்விராவுன்னைத்
தேய்த்துக்கிடக்க நானொட்டேன்,
எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்
கெத்தனைபோதுமிருந்தேன்
நண்ணலரிய பிரானே‚
நாரணா நீராட வாராய் . . . . . . . . . . . ........ . . . . 1 .

கன்றுகளோடச் செவியில்
கட்டெறும்பு பிடித்திட்டால்,
தென்றிக்கெடுமாகில்
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்,
நின்ற மராமரம் சாய்த்தாய்‚
நீ பிறந்த திரு வோணம்
இன்று நீ நீராடவேண்டும்
எம்பிரான்‚ ஓடாதே வாராய். . . . . . . . . . . . . . 2 .

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
பின்னையும் நில்லாதென்னெஞ்சம்,
ஆய்சியரெல்லாருங் கூடி
அழைக்கவும் நான் முலை தந்தேன்,
காய்ச்சின நீரொடு நெல்லி
கடாரத்தில் பூரித்து வைத்தேன்,
வாய்த்த புகழ்மணிவண்ணா‚
மஞ்சன மாட நீ வாராய். . . . . . . . . . . .. . . . . . 3 .

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடமுதைத்து,
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய் முலை வைத்த பிரானே‚
மஞ்சளும் செங்கழுநீரின்
வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன்
அழகனே‚ நீராட வாராய். . . . . . . . . . . .. . . . . . 4

அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னலுறுதியேல் நம்பி
செப்பிள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச்சிரிப்பர்
சொப்பட நீராடவேண்டும்
சோத்தம்பிரான் இங்கே வாராய் . . . . . . . . . .. . . . . . 5

எண்ணைக் குடத்தையுருட்டி
இளம்பிள்ளை கிள்ளியெழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும்பிரானே‚
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடலோத நீர்போலே
வண்ணமழகிய நம்பீ ‚
மஞ்சனமாட நீ வாராய். . . . . . . . . . .. . . . . . . . . . . 6

கறந்த நற்பாலும் தயிரும்
கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
பெற்றறியேனெம்பிரானே‚
சிறந்தநற்றாயலர் து}ற்றும்
என்பதனால் பிறர்முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன்
மஞ்சனமாட நீவாராய் . . . . . . . . . .. . . . . . . . . . . 7

கன்றினை வாலோலைகட்டிக்
கனிகளுதிரவெறிந்து
பின்தொடர்ந் தோடியோர் பாம்பைப்
பிடித்துக்கொண்டாட்டினாய் போலும்
நின்திறத்தேனல்லேன் நம்பி ‚
நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராடவேண்டும்
நாரணா ஓடாதே வாராய் . . . . . . . . . .. . . . . . . . .. 8

பூணித்தொழுவினில் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதுமுகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணனெத்தனையுமிலாதாய்‚
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே‚
மஞ்சனமாட நீ வாராய். . . . . . . . . . .. . . . . . . . . . .9

கார்மலி மேனி நிறத்துக்
கண்ணபிரானையுகந்து
வார்மலி கொங்கையசோதை
மஞ்சனமாட்டியவாற்றைப்
பார்மலி தொல் புதுவைக்கோன்
பட்டர்பிரான் சொன்னபாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார்
தீவினையாதுமிலரே. . . . . . . . . . .. . . . . . . . . . . .10


*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   







Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...