கண்ணிநுண்சிறுத்தாம்பு | |
தனியன்கள் | |
அவிதித விஷயாந்தரசடாரே: உபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவசாத் ததேகசேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து |
|
வேறொன்றும்நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வாரவரே யரண். |
|
பாசுரங்கள் | |
* கண்ணிநுண்நிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன், என்னப்பனில் நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. ---1) நாவினால்நவிற்றி இன்பமெய்தினேன் மேவினே;ன அவன்பொன்னடிமெய்ம்மையே தேவுமற்றறியேன் குருகூர்நம்பி பாவினின்னிசை பாடித்திரிவனே. ---2) திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்நான் பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா - ளுரியனாய், அடியேன் பெற்றநன்மையே. ---3) நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவராதலில் அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் - தன்மையான், சடகோபனென்நம்பியே. ---4) நம்பினேன் பிறர்நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையுமுன்னெலாம் செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு - அன்பனாய், அடியேன் சதிர்த்தேனின்றே. ---5) இன்றுதொட்டும் எழுமையுமெம்பிரான் நின்றுதன்புகழ் ஏத்தவருளினான் குன்றமாடத் திருக்குருகூர்நம்பி என்றுமென்னை இகழ்விலன் காண்மினே. ---6) கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டைவல்வினை பாற்றியருளினான் எண்டிசையும் அறியவியம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே. ---7) அருள்கொண்டாடும் அடியவரின்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான் அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே. ---8) மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு, ஆட் - புக்ககாதல் அடிமைப்பயனன்றே. ---9) * பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி! முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.--10) *அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா - மன்பன், தென்குருகூர் நகர்நம்பிக்கு அன்பனாய் மதுரகவிசொன்னசொல் - நம்புவார்பதி, வைகுந்தங்காண்மினே. ( கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் - பண்ணியபெருமாயன் என்னப்பனில் நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. ) *இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும். |
|
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...
Comments
Post a Comment