Skip to main content
காப்பிடல்
 தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம: !
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!
மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.
பாசுரங்கள்
*இந்திரனோடு பிரமன் ஈசனிமையவரெல்லாம்
மந்திர மாமலர்கொண்டு மறைந்துவராய் வந்துநின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளரை நின்றாய்!
அந்தியம்போதிதுவாகும் அழகனே! காப்பிடவராராய்  . ..... . . . . 1 .

கன்றுகளில்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம்
நின்றொழிந்தேனுன்னைக் கூவி நேசமேலொன்றுமிலாதாய்!
மன்றில்நில்லேலந்திப்போது மதிள்திருவெள்ளறை நின்றாய்!
நன்றுகண்டாயென்தன் சொல்லு நானுன்னைக் காப்பிடவாராய்.. 2 .

செப்போது மென்முலையார்கள் சிறுசோறுமில்லும் சிதைத்திட்டு
அப்போது நானுரைப்பப்போய் அடிசிலுமுண்டிலையாள்வாய்!
முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய்!
இப்போது நானொன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிடவாராய்...3

கண்ணில் மணல்கொடுதூவிக் காலினால் பாய்ந்தனையென்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே! வெள்ளறைநின்றாய்! கண்டாரோடேதீமைசெய்வாய்
வண்ணமே வேலையதொப்பாய்! வள்ளலே! காப்பிடவராராய் ...4

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார்
எல்லாமுன்மேலன்றிப்போகாது எம்பிரான்! நீயிங்கேவாராய்
நல்லார்கள் வெள்ளறைநின்றாய்! ஞானச்சுடரே உன்மேனி
சொல்லார வாழ்த்திநின்றேத்திச் சொப்படக் காப்பிடவராராய் ...5

கஞ்சன் கறுக்கொண்டுநின்மேல் கருநிறச் செம்மயிர்பேயை
வஞ்சிப்பதற்குவிடுத்தான் என்பதோர் வார்த்தையுமுண்டு
மஞ்சுதவழ் மணிமாட மதிள்திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சவன் நீயங்குநிற்க அழகனே! காப்பிடவாராய். ....................6

கள்ளச்சகடும் மருதும் கலக்கழியவுதை செய்த
பிள்ளையரசே! நீ பேயைப்பிடித்து முலையுண்டபின்னை
உள்ளவாறொன்றுமறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய்!
பள்ளிகொள்போதிதுவாகும் பரமனே! கர்ப்பிடவாராய். . . . . . . . .7

இன்பமதயுயர்த்தாய்! இமையவர்கென்றுமரியாய்!
கும்பக்களிறட்டகோவெ! கொடுங்கஞ்சன் நெஞ்சினில் கூற்றே!
செம்பொன்மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால்வளர்பிள்ளாய்!
கம்பக்கபாலி காணங்குக் கடிதோடிக் காப்பிடவாராய்.  . . . . . .   8

இருக்கொடு நீர்சங்கில் கொண்டிட்டு எழில் மறையோர் வந்துநின்றார்
தருக்கோல்நம்பி! சந்திநின்று தாய்சொல்லுக்கொள்ளாய் சிலநாள்!
திருக்காப்புநான் உன்னைச்சாத்த தேசுடைவெள்ளறை நின்றாய்!
உருக்காட்டுமந்திவிளக்கு இன்றுஒளிகொள்ள ஏற்றுகேன்வாராய் ..9

*போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்தவசோதை மகன்தன்னைக் காப்பிட்டமாற்றம்
வேதப்பயன் கொள்ளவல்ல விட்டுசித்தன் சொன்னமாலை
பாதப்பயன் கொள்ளவல்ல பத்தருள்ளார் வினைபோமே. . . . . . .  . 10

அடிவரவு: - இந்திரன், கன்று, செப்பு, கண்ணில், பல்லாயிரவர். கஞ்சன், கள்ளம், இன்பம், இருக்கு, போதமர்.

 
*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...