Skip to main content

ஹயக்ரீவரை நேரில் தரிசித்த ஸ்ரீதேசிகர்

நான்கு வேதங்களையும் தொகுத்த ஸ்ரீவேத வியாசரின் முக்கிய சீடர்களில் ஒருவர் யாக்ஞவல்கியர். வியாசருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தான் கற்ற யஜுர் வேதத்தை யாக்ஞ வல்கியர் மீண்டும் அசானுக்கே திரும்பத்தர நேரிட்டது.

தான் கற்றதை அப்படியே தன் வாய் வழியா வெளியே எறிந்து விட்டதாகவும், அப்போது வியாசரின் சீடர்கள் தித்திரி என்ற பறவைகளாக மாறி அவற்றை உண்டதாகவும், அவர்கள் மூலம் தெரிய வந்ததே தைத்திரிய ஸம்ஹிதை என்று கூறப்படுகிறது. யாக்ஞவல்கியர் வியாசரை விட்டுப் பிரிந்து கடுந்தவம் இயற்றினார்.

அவர் முன் சூரிய பகவான் குதிரை முகத்துடன் தோன்றி யஜுர் வேதத்தை இன்னொரு முறையில் கற்றுக் கொடுத்தார். வாஜி என்ற சொல் குதிரையைக் குறிக்கும். எனவே யஜுர் வேதத்தின் இப்பகுதிக்கு வாஜஸ்னேயி ஸம்ஹிதை என்றே பெயர். மேலும் தேவலோகத்து புனிதக் குதிரை யான ததிக்ரா சூரியனுடன் சம்பந்தப்பட்டது.

சூரியன், ஆதித்தர்கள், வசுக்கள் போன்றோரடன் சம்பந்தப்பட்ட இந்த ததிக்ரா என்ற புனிதக் குதிரை ஞானத்தின் திருவுரு என்று நம்பப்படுகிறது. காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள தூப்புல் என்ற கிராமத்தில் அனந்தசூரி தோத்தாரம்மா என்ற தம்பதியருக்கு அவதரித்தவர் (புரட்டாசி திருவோணம்) ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த வைணவ பெரியார் திருமாலின் திருமணியாழ்வான் (கண்டா மணி) அம்சமாக அவதரித்தவர்.

எண்ணற்ற நூல்களையெல்லாம் கற்றுணர்ந்து தலை சிறந்த அறிவுக் கடலாக விளங்கிய ஸ்ரீதேசிகன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்தபுரம் என்ற திருத்தலத்திற்குச் சென்று அங்கிருந்த ஒளஷதகிரி என்ற ஒரு சிறு குன்றின் மீது உள்ள அசுவத்த (அரச) மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தை ஜெபித்து கொண்டிருந்தார்.

ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலைபை தூக்கி வந்த போது, விழுந்த அதன் ஒரு சிறு பகுதியே இந்த ஒளஷதகிரி என்றும் கூறப்படுகிறது. அவருக்கு கருட பகவான் பிரத்தியட்சமாகி ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தாராம்.

ஸ்ரீதேசிகன் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியைத் துதிக்க ஸ்ரீஹயக்ரீவரே அவர் முன் பிரத்யட்சமாகி தன் திருவாய் அமுதை அளித்தாராம். ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை நேரில் தரிசிக்கும் பேறுபெற்ற ஸ்ரீதேசிகன் ஞான பானுவாக விளங்கி `ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்' என்ற மகத்தான பட்டத்தைப் பெற்று எண்ணற்ற கிரந்தங்களை நமக்கு அருளினார். 


thanks to maalaimalar

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...