Sunday 23 February 2014

ஹயக்ரீவ பிரார்த்தனை இடங்களும் பலன்களும்

அத்தி மரத்தடியில் ஜபம் செய்வதால் பூமி லாபம் கிடைக்கும்.

* வில்வ மரத்தின் அடியில் ஜபம் செய்தால் தனலாபம் கிடைக்கும்.

* புளியமரத்தின் அடியில் ஜபித்தால் மனச்சாந்தி கிடைக்கும்.

* வேப்ப மரத்து அடியில் ஜபம் செய்தால் தேஜஸ் ஏற்படும்.

* மாமரத்தினடியில் ஜபம் செய்தால் நல்ல மனைவி வாய்ப்பாள்.

* துளசிவன மத்தியில் அமர்ந்து ஜபித்தால் ஞானம் பெறலாம்.

* நதிதீரத்தில் அமர்ந்து ஜபம் செய்தால் சிறந்த கல்வியைப் பெறலாம்.

* நிலையான புகழை விரும்புபவர் மலையில் அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும்.

* தான்ய விருத்தியை அடைய விரும்புபவர்கள் வீட்டில் இருந்து ஜபம் செய்யலாம்.

* பசுவை விரும்புபவர்கள் பசு கொட்டகையில் இருந்து ஜபம் செய்யலாம்.

* புத்ரலாபம் அடைய விரும்புபவர்கள் கர்ப்ப கிருஹத்தில் இருந்து ஜபிக்கவும்.

* அசோக மூலத்தில் இருந்து ஜபிப்பதால் வசியம் செய்யும் சக்தி ஏற்படும். ஆக எந்த இடத்தில் ஸ்ரீஹயக்ரீவஜபம் செய்தாலும் ஏதாவதொரு நன்மை அடைந்தே தீரும்.

No comments:

Post a Comment