Skip to main content

தினமலர் - கோயில் வலைதளத்திற்க்காக தயாரிக்கப்பட்டது



திருக்கோயிலின் பெயர்          :     ஸ்ரீகண்ணன் திருக்கோயில்
மூலவர்                   :     ஸ்ரீ ஆ(யா)தவக்கண்ணன் – ஸ்ரீ லக்ஷ்மி
ஹயக்ரீவர்
உற்சவர்                   :     ஸ்ரீ வேணுகோபாலன் 
பிற மூர்த்தங்கள்           :     ஸ்ரீ ஸந்தான கோபால கிருஷ்ணன்
தாயார்                    :     மூலவர் கோமாதாவுடன் ஒன்றாக
இருப்பதால் தனியே தாயர் சன்னதி இங்கு இல்லை.
ஆகமம்                   :     பாஞ்சராத்ர ஆகமம்
திருவாரதனம்              :     தென்கலை
புராதன பெயர்             :     இராஜகேசரி புரம் (ஊரின் பெயர்) 
ஊர்                       :     இளங்காடு(வாலவனம்,இராஜகிரி) 
மாவட்டம்                 :     தஞ்சாவூர்
மாநிலம்                   :     தமிழ்நாடு 
திருவிழா                  :     ஸ்ரீஜெயந்தி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவ
                                ஜெயந்தி
திறக்கும் நேரம்            :     காலை 7.00 – 11.00மணி
                                மாலை 6.00 – 8.00மணி
முகவரி                   :     தெற்குத்தெரு
                                இளங்காடு(அஞ்சல்)
                                திருக்காட்டுப்பள்ளி(வழி)
                                திருவையாறு(வட்டம்)
தஞ்சாவூர்(மாவட்டம்)
                                அ.கு எண்:613104
பேருந்து வழித்தடம்   :    
Ø  தஞ்சாவூர் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து 51 என்ற பேரூந்து மூலமாக நேரே கோயிலின் வாசலில் இறங்கி கொள்ளலாம்.
Ø  தஞ்சாவூரிலிருந்து கல்லணைக்கு அகரப்பேட்டை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் இளங்காட்டு பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம்.
Ø  திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5கி.மீ தொலைவில் சிற்றுந்து மூலமாகவும் வந்து அடையலாம்.
Ø  திருச்சிராப்பள்ளியிலிருந்து கல்லணை வந்து,கல்லணையிலிருந்து அகரப்பேட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் இளங்காட்டு பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோயிலை அடையலாம்.

ப்ராத்தனை:
ü  விரும்பியதைத் தரும் காமதேனுவுடன் கண்ணபிரான் சேவை சாதிப்பதால் இங்கே தாங்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற சனிக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி திருத்துளாயால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் விரும்பியவை கைகூடும்.
ü  புத்திர பாக்யம், திருமணம் கைகூட, மனை மற்றும் வீடு  ஆகியவைகள் உடனே கிட்ட இங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணனை மூலவருக்கு நடைபெறும் உரோகிணி திருநட்சத்திர திருமஞ்சன காலங்களில்  வெண்ணையுடன் வழிபட்டு பயனை அடையலாம்.
ü  மார்கழி மாத புதன்கிழமையில் குசேலர் கண்ணபிரானுக்கு  அவல் படைத்து செல்வந்தரானது போல நீங்களும் இங்கு கண்ணபிரானுக்கு  அவல் படைத்து குபேரனாகளாம்.
ü  திருக்கோயில் துவங்கியதிலிருந்து அட்டமி திதி இக்கோயிலுடனே தொடர்ந்து வருகின்றது இங்கு அனைத்து விசேடங்களும் எதிர்பாராதவிதமாக அட்டமியிலே நடைபெறுகின்றன,ஆகவே அட்டமி திதியில் தவறாது அர்ச்சித்து வணங்கி அனைத்திலும் வெற்றி வாகை சூடலாம்.
ü  உரோகிணி நட்சத்திரகாரர்கள் உரோகிணி திருமஞ்சனங்களில் தவறாது கலந்து கொண்டு பகவானை சேவித்து தடைகள் நீங்கப் பெறலாம்.
ü  கல்வி, நாவன்மை மேம்படவும் செல்வம் தழைத்தோங்கவும் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற இங்குள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வரப்பிரசாதியாவார்.இவருக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம், ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்து பயனடைந்தோர் பலர்.
ü  நாக தோஷம் நீங்க கருடாழ்வாருக்கு இராகு காலங்களில் தீபமேற்றி வழிபட்டு பயன் அடையலாம்.
ü  பட்சி,நாக தோஷம் நீங்க ஆடி மாத கருட,நாக பஞ்சமியில் நடைபெறும் திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு அருள் பெறலாம்.

சிறப்புகள்:
v  காமதேனு ஸ்ரீ கண்ணபிரானின் திருவடி தனது நாக்கால் வருடி ஸ்ரீவைஷ்ணவ முக்கியமான ஸரணாகதி தத்துவத்தினை இங்கே நமக்கு காட்டிகொடுக்கிறார் இந்த கண்ணபிரான் ஆகையால் பஞ்ஜ ஸமஸ்காரம் செய்துகொள்வது விசேஷம்.
v  ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த் எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் வந்து வணங்கிய பெருமாள்.அன்றுமுதல் மூலஸ்தான திருவிளக்கீடு கைங்கர்யம் இன்றளவும் இவருடையது.
v  வாரந்தோறும் சனிக்கிழமையில் மாலை வேதமனைத்திற்க்கும் வித்தாகும் திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
v  ஆழ்வார்கள் அவதார திருநட்சத்திரங்களில் அவர்கள் அருளிச்செய்தவை பாராயணம் செய்யப்படும்.
v  ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை போலவே ரேவதி தான் இக்கோயிழாழ்வான் திருநட்சத்திரமாகும்.
v  ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் இங்கு பிரதிஷ்டை செய்தவுடனே இங்கு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.
v  மாசி மாதந்தோறும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் நடைபெறும்.
v  தை முதல் நாளும், ஸ்ரீஜெயந்தி அன்று நடைபெறும் வையாழி சேவை நடைபெறும்.
v  உற்சவர்  எப்போது திருவீதி கண்டருளி மூலஸ்தானம் சேரும் முன்பு பன்னிருஆழ்வார்கள் பாசுரங்கள் ஆழ்வாருக்கு ஒன்று வீதம் கேட்டுக்கொண்டே பெருமாள் மூலஸ்தானம் சேருவார்.
v  நாக , பட்சி தோஷமுள்ளவர்கள் கருட,நாக பஞ்சமி திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு திருமணம் கைகூடியவர்கள் பலர்.
திருவிழாக்கள்:
*      தை முதல்நாள் தான் ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் துவங்க ஆரம்பித்து முதல் புறப்பாடு ஆகையால் தைமுதல் நாள் மாலை உற்ச்சவர் கோயிலின் தெற்க்கு வீதியில் வையாழி கண்டருளி,பாசுரங்கள் கேட்டருளி,கருட மஹா மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளுவார்.
*      சித்திரை முழுநிலவன்று மாலை ஸ்ரீ சத்யநாரயண பூசை நடைபெறும்.
*      ஸ்ரீஜெயந்தி உத்சவம் மூன்று நாள்கள் நடைபெறும்.
o   முதல்நாள் மாலை உபன்யாசங்கள், இசைச்சொற்ப்பொழிவு,திவ்யபிரபந்த கோஷ்டி நடைபெறும்.
o   ஸ்ரீஜெயந்தியன்று காலை கோபூசையும்,மஹா திருமஞ்சனமும் திருவரங்கம் திருவத்யன கோஷ்டியினரின் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவையுடன் நடைபெறும்.
o   ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் மஹாமண்டபத்தில் தொட்டியில் எழுந்தருளுவார்.
o   மாலை உத்சவர் திருவீதி புறப்பாடு கண்டருளுவார்.
o   வையாழி சேவை,வானவேடிக்கை நடைபெறும்.
o   உற்சவர் ஆழ்வார் அருளிச்செயலுக்கு அருளால்
o   உறியடித்தல்,சாற்றுமுறை
o   மறுநாள் விடையாற்றி
*      ஆவணி திருவோணம் ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக நடைபெறும்.
*      புரட்டாசி சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடைபெறும்.
*      நாச்சியார் திருக்கோலம் வைகுந்த ஏகாதசி முதல்நாள் நடைபெறும்.
*      பரமபத வாசல் திறப்பும் நடைபெறவும்.

ஆலய தகவல் பெற
அர்ச்சகர்:
ரெகுநாத பட்டாச்சார்
9791999936
ஆலய அறங்காவலர்கள்
ஜெ.கோபிகிருஷ்ணன்
9500264545
ம.சின்னதுரை
9942604383
ப.புருசோத்தமன்
8056901601

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...