Skip to main content

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து


1. சுவாமிக்கு நகைகளை அணிவித்து அழகு பார்க்கிறோம். இப்படி செய்வது வெறும் அழகு உணர்ச்சிக்காக மட்டுமா? அன்றி வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?
பழங்காலத்து மன்னர்கள் தாங்களும் தங்கள்
மனைவிமார்களும் அணிந்திருந்த நவரத்தின அணிகலன்களைப் பொதுவுடைமையாகச் செய்தார்கள். தனியுடைமை என்றைக்கும் அழிந்து போகும். பொதுவுடைமை என்றைக்கும் இருக்கும். நளச் சக்கரவர்த்தி தான் அணிந்திருந்த அணிகலனை கொல்லூர் மூகாம்பிகைக்கு அணிவித்து இருக்கிறான்.

நளச் சக்கரவர்த்தி எந்த காலத்தில் வாழ்ந்தானோ! அவன் இன்று இல்லை. ஆனால் அவன் இட்ட அணிகலன்கள் இன்றும் இருக்கின்றன. ஆகவே, மன்னர்கள் தமக்குச் சொந்தமாய் இருந்த தனிவுடமையை பொது உடைமைகளாக செய்தவைகள் தான் அணிகலன்கள்.
மேலும், ஒருவன் தன் மனைவி, அணிகலன்களை அணிந்து இருந்தால் ஒருவரும் பார்க்க இசைய மாட்டான். இறைவிக்கு அணிவித்து இருந்தால் யாரும் தரிசித்து மகிழலாம் அல்லவா ?
2. இறைவனுக்கு வேர்ப்பதில்லை. ஆனால் வெண் சாமரம் வீசுகிறோம். அவனுக்கு எந்த அழுக்கும் சேர்வதில்லை. ஆனால் அவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பவன் இறைவன். அவனுக்கு நிவேதனம் புரிகிறோம். இவை எல்லாம் தேவை தானா சுவாமி?
வேரிலே தண்ணீர் விட்டால் மரங்களுக்கெல்லாம் போகும். அப்படி இறைவன் எல்லாவற்றிலும் உறைகிறான்.
"உரைசேரும் எண்பத்து நான்கு நூறு
ஆயிரமாம் யோனி பேத
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய்
அங்கங்கே நின்றான்" என்பார் ஞான சம்பந்தப் பெருமான்.

எனவே, இலைகளுக்கு தண்ணீர் விட்டால் வேருக்குப் போகாது. வேருக்குத் தண்ணீர் விட்டால் விருட்சம் முழுதும் பரவும். அவ்வாறு இறைவனுக்கு நாம் ஒரு பொருளை அபிஷேகம் செய்கிற பொழுது அகில உலகிற்கும் அந்த பலன்போய் நன்மை செய்கிறது.
ஆகவே, இறைவனுக்குச் செய்வதெல்லாம் உயிர்களுக்குச் செய்வது போல். அதனால் தான் அபிஷேக ஆராதனைகளை எல்லாம் நம் முன்னோர்கள் வைத்தனர்.
(தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)

1. சுவாமிக்கு நகைகளை அணிவித்து அழகு பார்க்கிறோம். இப்படி செய்வது வெறும் அழகு உணர்ச்சிக்காக மட்டுமா? அன்றி வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

பழங்காலத்து மன்னர்கள் தாங்களும் தங்கள் 
மனைவிமார்களும் அணிந்திருந்த நவரத்தின அணிகலன்களைப் பொதுவுடைமையாகச் செய்தார்கள். தனியுடைமை என்றைக்கும் அழிந்து போகும். பொதுவுடைமை என்றைக்கும் இருக்கும். நளச் சக்கரவர்த்தி தான் அணிந்திருந்த அணிகலனை கொல்லூர் மூகாம்பிகைக்கு அணிவித்து இருக்கிறான். 

நளச் சக்கரவர்த்தி எந்த காலத்தில் வாழ்ந்தானோ! அவன் இன்று இல்லை. ஆனால் அவன் இட்ட அணிகலன்கள் இன்றும் இருக்கின்றன. ஆகவே, மன்னர்கள் தமக்குச் சொந்தமாய் இருந்த தனிவுடமையை பொது உடைமைகளாக செய்தவைகள் தான் அணிகலன்கள். 

மேலும், ஒருவன் தன் மனைவி, அணிகலன்களை அணிந்து இருந்தால் ஒருவரும் பார்க்க இசைய மாட்டான். இறைவிக்கு அணிவித்து இருந்தால் யாரும் தரிசித்து மகிழலாம் அல்லவா ?

2. இறைவனுக்கு வேர்ப்பதில்லை. ஆனால் வெண் சாமரம் வீசுகிறோம். அவனுக்கு எந்த அழுக்கும் சேர்வதில்லை. ஆனால் அவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பவன் இறைவன். அவனுக்கு நிவேதனம் புரிகிறோம். இவை எல்லாம் தேவை தானா சுவாமி?

வேரிலே தண்ணீர் விட்டால் மரங்களுக்கெல்லாம் போகும். அப்படி இறைவன் எல்லாவற்றிலும் உறைகிறான். 

"உரைசேரும் எண்பத்து நான்கு நூறு 
 ஆயிரமாம் யோனி பேத
 நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய்
 அங்கங்கே நின்றான்" என்பார் ஞான சம்பந்தப் பெருமான்.

எனவே, இலைகளுக்கு தண்ணீர் விட்டால் வேருக்குப் போகாது. வேருக்குத் தண்ணீர் விட்டால் விருட்சம் முழுதும் பரவும். அவ்வாறு இறைவனுக்கு நாம் ஒரு பொருளை அபிஷேகம் செய்கிற பொழுது அகில உலகிற்கும் அந்த பலன்போய் நன்மை செய்கிறது. 

ஆகவே, இறைவனுக்குச் செய்வதெல்லாம் உயிர்களுக்குச் செய்வது போல். அதனால் தான் அபிஷேக ஆராதனைகளை எல்லாம் நம் முன்னோர்கள் வைத்தனர்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...