Monday 29 September 2014

புரட்டாசி சனிக்கிழமை திருமஞ்சனம்

     மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணன் கூறினாலும் வைணவர்களுக்கு புரட்டாசி மாதமும் ஒரு சிறப்பான வழிபாட்டிற்கு உரிய  மாதமே.

      அவ்வாறான இவ்மாதத்தில் நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நடைபெறும் வைபவங்கள் பின்வருமாறு.

  1. பிரதி புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை விசேட திருமஞ்சனம்
  2. சனிக்கிழமை மாலைகளில் திருப்பாவை கோஷ்டி மற்றும் பஜனைகள்
  3. மூன்றாம் சனிக்கிழமை வடைமாலை சாற்றி வழிபாடு
  4. நான்காம் சனிக்கிழமை சந்தனகாப்பு அலங்கார சேவை நடைபெறும்
  5. இதை தவிர உரோகிணி,திருவோண திருமஞ்சனங்களும் நடைபெறும்
  இவ்வாறான இம்மாதத்தில் நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் பிரானையும்,ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரையும் சேவித்து திருவருள் பெற்று உய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

No comments:

Post a Comment