Friday 11 March 2016

அனுமனுக்கும் நரஸிம்மத்துக்கும் உள்ள பலவிதமான ஒற்றுமைகள்.

இந்திரா செளந்திரராஜனின் அனுமன் மகிமையிலிருந்து.
 
எல்லா நரஸிம்மர் ஆலயத்திலும் அனுமனின் திருச்சந்நிதி கட்டாயம் இருக்கும். காரணம், 

அனுமனுக்கும் நரஸிம்மத்துக்கும் உள்ள பலவிதமான ஒற்றுமைகள்.

  • இருவருமே விலங்கு முகமும் மனித உடலுமானவர்கள்.
  • இருவருமே பெரும் வரசித்தி உடையவர்கள.
  • இருவருமே அசுரவதம் புரிந்தவர்கள்.
  • நரஸிம்மம் அழித்தது ஹிரண்யனை என்றால் , அனுமன் அழித்தது ராவண சேனையை..
  • நரஸிம்மம் ப்ரஹலாதனால் குளிர்ந்தது.. ஸ்ரீராமன் அனுமனால் குளிர்ந்தான்.
  • நரஸிம்ம மூர்த்திக்கும் யோகநிஷ்டை உண்டு. அனுமனும் யோகநிஷ்டை உடையவன்.
  • இருவருமே பெரும் பலசாலிகள். இதனாலேயே இருவரையும் ஒரே ஆலயத்தில் 'ப்ரதானம்-உபம்' என்று ஸ்தாபித்தார்கள்.
  • நரஸிம்மம் நல்ல வழி காட்டும். தீய சக்திகளை விரட்டும். அனுமன் மனோபலம் தருவான்.
  • நம்மை பலவீனப்படுத்தும் தீயசக்திகளையழித்து நல்வழியில் நாம் நடக்க மனோபலம் பெரிதும் தேவைதானே?

No comments:

Post a Comment