Thursday 3 March 2016

லக்ஷ்மி வசிய கலசம்:


நாம் அனைவருமெ நம் வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து அருள ஆசைப்படுவோம், ஆனால் அதற்குரிய முறையை செய்வதில்லை, அதை முறையாகவும் செய்வதில்லை.
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தான்யம், புனுகு, குங்குமப்பூ, கஸ்தூரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தும் வியாழக்கிழமையெ வாங்கி வைத்துக்கொண்டு, வெள்ளிக்கிழமை காலை 6 to 7 மணிக்குள் மேல் கூறிய அனைத்தையும் மண்கலசத்தில் வைத்து, கலசத்திற்க்கு பட்டை, சந்தனம், பொட்டு இட்டு உங்கள் பூஜையறையில் வைத்து மஹாலக்ஷ்மியை மனதாற நினைத்து தாயெ நீ என்றும் எங்கள்வீட்டில் இருந்து அருளவேண்டும் என பிராத்தனை செய்து தூபதீபம் காட்டி பின் வரும் மந்திரத்தை 108 முறை கூறி பின் கலசத்தை மூடிவைக்கவும்.
இதனை வெள்ளிதோறும் 108 முறை சொல்லி வணங்கவேண்டும், கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
அடுத்த வெள்ளிக்குள் பணவரவு உயர்வதை கண்கூடாக உணரலாம்.
இந்த எளிய பரிகாரத்தை செய்து அணைவரும் வலமடைய வேண்டுகிறேன்.
 
மந்திரம் :
 
ஓம் தன தான்ய லஷ்மியை வசி வசி
வசியை நமஹ..
இதனை முறைபடி செய்வதெ பலன் கொடுக்கும்.

No comments:

Post a Comment