Saturday 19 March 2016

திருநறையூர் என்னும் நாச்சியார்கோயில். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் முதலாவது.


முக்தி தரும் 12 தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
திருமணதோஷ பரிகாரத் தலம் - மேதாவி மகரிஷியின் மகளாக அவதரித்த தாயாரை திருமால் திருமணம் புரிந்து கொண்ட தலம். செல்வவளம் - உற்சவர் தாயார் கையில் கிளியை ஏந்தி, இடுப்பில் "சாவிக்கொத்து" வைத்தபடி அருள்பாலிக்கிறாள். இவள்தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதால் வணங்குவோர்க்கு அனைத்து வளமும் தருபவள்.கல்கருட மூலவரே உற்சவராகவும் திகழும் விசேஷம். இவரை கருவறையில் இருந்து வெளியே எடுத்துச் செல்லும்போது முதலில் நான்கு பேர் இவரை சுமந்து வருவர். பின் அப்படியே 8,16,32 எனப்பெருகி இறுதியில் பலர் இவரைச் சுமக்கிறார்கள். இவர் வெளியிலிருந்து மீண்டும் கருவறை நோக்கி வரும்போது அதே எண்ணிக்கையில் ஆட்கள் குறைந்து பின் கருவறையில் 4 பேர் மட்டுமாக வைக்கின்றனர்.

செம் மொழி வாய் நால் வேத வாணர் வாழும்
திருநறையூர் மணிமாடச் செங் கண் மாலைப்
பொய்ம் மொழி ஒன்று இல்லாத மெய்ம்மையாளன்
புல மங்கைக் குல வேந்தன் புலமை ஆர்ந்த
அம் மொழி வாய்க் கலிகன்றி இன்பப் பாடல்
பாடுவார் வியன் உலகில் நமனார் பாடி
வெம் மொழி கேட்டு அஞ்சாதே மெய்ம்மை சொல்லில்
விண்ணவர்க்கு விருந்து ஆகும் பெருந் தக்கோரே

No comments:

Post a Comment