Skip to main content

உலகிலேயே முதன்முதல் கடற்கரை மாநாடு நடந்தது ராமாயணத்தில்தான்!!


விபீஷணன் ராவணனிடத்தே தர்மத்தை உபதேசிக்கிறான்
ஆனால், விநாசகாலே விபரீத புத்தியல்லவா
விபீஷணனைக் கண்முன் நில்லாதே ஓடிவிடு என்கிறான்
ராவணன்.
சிறந்த தர்மாத்மாவான விபீஷணன் சேதுசமுத்திரக் கரையிலிருக்கும் ஸ்ரீராமனைச் சரண்புக வருகிறான்.
விபீஷணன் வந்திருப்பது ராமனுக்குச் சொல்லப்படுகிறது
அப்போது ஸ்ரீராமன் தன்னுடனிருக்கும இளையபெருமாள் லெஷ்மணன் ஜாம்பவான் ஸுக்ரீவன்
ஆஞ்சநேயன் முதலான அனைவருடனும் விபீஷணனை ஏற்பது பற்றி ஆலோசனை செய்கிறான்.
ராமன் தானே முடிவெடுத்து அதனை அறிவித்தால் யார் மறுக்கப் போகிறார்கள்.
ஆனால் ஸ்ரீராமனோ ராஜதர்மத்திலிருந்து பிறழாதவனல்லவா?
எல்லோரையும் கூட்டி கருத்தறிந்து முடிவெடுக்கிறான்.
எல்லோரும் விபீஷணன் ராவணனின் தம்பி என்பதாலும்
போர்மூளும் நேரத்தில் வந்திருப்பதாலும் ஏற்கத் தயக்கம் காட்டினர்.
கடைசியாக ஆஞ்சநேயன் கைகட்டி வாய் மறைத்து மிக பவ்யமாகத் தன் கருத்தை உரைக்கிறான்.
"அரக்கனென்றோ ,அண்ணனை விட்டு வந்தவனேன்றோ,
நல்லவன் போல நடிக்கிறானென்றோ கருதத் தேவையில்லை.
ஒருவனது உள்ளக்கிடக்கையை அவனது உடல்மொழியே காட்டிக் கொடுக்கும். இவன் உண்மையாகவே தர்மாத்மா
இவனது பெண் திரிசடை ஸீதாதேவிக்கு ஆதரவாக இருக்கிறாள்.விபீஷணனை நம்பலாம் ",என்றுரைத்தார்.
இதைக் கேட்டு ஆஞ்சநேயனை ஆரத் தழுவிய ராமன்
'நன்று சொன்னாய்'என்றுரைத்தான்.
பின்னர் "சரணம் என்று யார் வந்தாலும் ,ராவணனே வந்தாலும் அபயமளிப்பேன். இது என் வ்ரதம்"எனக் கூறி விபீஷணனனின் சரணாகதியை ஏற்று அவனைத் தழுவிக்கொண்டு நின்னொடு எழுவரானேன் என மகிழ்ந்தான்.
ஆக கடற்கரை மாநாடு இனிதே நடந்தது

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...