Skip to main content

"எனக்குத் தெரியாமல் ஒளிப்பாயோ


விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அவள். பெரும்பாலும் கோகுலத்திலுள்ள அனைவருமே விடியலுக்கு முன் எழுந்துவிடுவர். எழுந்ததும் ஒரு எண்ணெய் விளக்கை எடுத்துக்கொண்டு நேராக மாட்டுத் தொழுவத்திற்கு வந்தாள். நாற்பதைம்பது மாடுகள் நிரம்பிய தொழுவம். ஒவ்வொன்றும் நன்றாக வளர்ந்து சித்தானைக்குட்டி போலிருக்கும். ஒவ்வொரு மாடாய்த் தடவி விட்டுக் கொண்டும், அவைகளோடு பேசிக்கொண்டும் கன்றுக்குட்டிகளை ஊட்டுவதற்காக அவிழ்த்துவிட்டாள்.
ஒரு காளைக்கன்று எப்போதும் துள்ளிக்கொண்டே இருக்கும். கண்ணன் பிறந்த அன்று அதுவும் பிறந்தது. அவன் நினைவாக அதற்கும் கான்ஹா என்று பெயர். அதன் அம்மா மாடு வரலக்ஷ்மி. அதன் பாலைக் கண்ணன் மிகவும் விரும்பிக் குடிப்பான். சமயத்தில் கான்ஹாவும் அந்தக் கருப்பனும் சேர்ந்து வரலக்ஷ்மியிடம் ஊட்டுவதை அவளே நேரில் கண்டிருக்கிறாள்.
கண்ணன் அவளிடம் ஊட்டிவிட்டுப் போனால் அந்த வரலக்ஷ்மி மகிழ்ச்சி மிகுதியால் இரு மடங்கு பால் கொடுப்பாள்.
சமயத்தில் வரலக்ஷ்மி கண்ணனுக்கு ஊட்டினாளா அல்லது அவன் இவளுக்கு செலுத்தினானா என்று சந்தேகம் வருமளவிற்கு பாலைக் கொட்டித் தீர்த்துவிடுவாள்.
அந்தப் பாலைத் தோய்த்து வெண்ணெய் கடைந்தால் அதன் சுவையை பூலொகத்தில் எதனுடனும் ஒப்பிட முடியாது.
பொதுவாகவே சித்ரகலா மிக இனிமையாகக் கண்ணனின் லீலைகளைத் தொகுத்துப் பாடிக்கொண்டே பால்கறப்பாள். அவள் குரலினிமையிலும், அவனது லீலாம்ருதத்திலும் மயங்கும் மாடுகள் ஏராளமாகப் பாலைக் கொட்டித்தரும்.
இன்றும் வழக்கம்போல் பாடிக்கொண்டே கறக்க ஆரம்பித்தாள்.
நாற்பது பானைகள் நிரம்பின. வண்டியில் கட்டி விடிவதற்குள் அரண்மனைக்கு அனுப்பவேண்டும்.
ஜாக்கிரதையாக எடுத்து வைத்தபின், வெண்ணெயைக் கடைய ஆரம்பித்தாள். தன் இனிமையான குரலால் அதில் கருப்பனின் நாமங்களைக் கலந்தாள்.
த்ருஷ்டி சுற்றி எடுத்தாள்.
இனிமேல்தான் சவால்.
எங்கே ஒளித்து வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறானே. என்ன செய்யலாம்? சமையலறையில், பருப்புப் பானைகளுக்கு நடுவே வைத்தாள்.
திரும்பியவள் இங்கே வேண்டாம் என்று கூடத்தில் மச்சில் வைத்து மூடினாள். ஒரு நிமிடம் கழித்து யோசித்து வேறிடம் மாற்றினாள். அங்கு வைத்தபோதும் ஒருநாள் அவன் கொள்ளையடித்தது நினைவுக்கு வர, மறுபடி மாற்றினாள். பத்துப் பதினைந்து இடங்களுக்கு மாற்றியபின்னும் குழப்பம் தீரவில்லை. அதற்குள் அவளது கணவன் ஸ்மிதாக்ஷன் வந்தான்.
சித்ரா என்ன செய்யற? நேரமாச்சு பார். அரண்மனைக்குப் போகணும். பால் குடங்களை எடு என்றான்.
வேலையிருந்ததால், ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டு, அவனுக்கு உதவி செய்யப் போய்விட்டாள்.
இன்று அதிசயமாக,
சூரியன் வந்ததும், கண்ணனும் வந்தான். அதை விட ஆச்சரியம் என்னவெனில்,
மாமி, உன் வீட்டு வெண்ணெய் நாக்கை சுண்டியிழுக்குது. எனக்கு கொஞ்சம் புது வெண்ணெய் தறீங்களா?
என்று கேட்டானே பார்க்கவேண்டும்.
கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
ஏனடா? திருடித்தானே சாப்பிடுவாய்? இன்னிக்கென்ன புத்தி வந்துட்டதா? கேட்கிறாயே..
இல்லை‌ மாமி. கேட்டால் நீங்கள் தருவீங்களோ இல்லையோன்னு தான். இது என் வீடு மாதிரிதானே. நானே எடுத்துப்பேன். இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா என் அம்மா மாதிரியே எனக்குத் தெரியறீங்களா. அதான் கேட்டேன்.
உள்ளம் உருகிவிட்டது. மகாராணியின் பிள்ளை, அழகன், இவனைப்போல் ஒரு பிள்ளையோ, அல்லது இவனோடு விளையாடவேனும் ஒரு பிள்ளையோ வேண்டும் என்று தவமிருப்பவள்.
பாவமாய்க் கெஞ்சிக் கேட்கிறானே குழந்தை. அம்மா என்கிறானே. மனம் தாங்கவில்லை.
சரி இரு. ஒரு உருண்டைதான் தருவேன். சரியா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனவள் திரும்பிப் பார்த்து, நீ ரேழியிலேயே நில்லு. நானே கொண்டுவரேன் என்று சொல்லிவிட்டுப் போனாள்.
வைத்த இடத்தை அவன் பார்த்தால் அடுத்த வேளைக்குள் பானையோடு காணாமல் போகுமே.
போனாள் போனாள் போனாள் வருவதாய்க் காணோம்.
கண்ணனோ சற்றைக்கொருதரம்,
மாமி மாமீ.. மா....மீ.... என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
உள்ளிருந்து வந்தவள் வெறுங்கையோடு வந்தாள்.
மாமீ என்னாச்சு ஏன் இவ்ளோ நேரம்? எங்கே வெண்ணெய்?
அதில்லடா கண்ணா. எங்கே வெச்சேன்னு மறந்துட்டேண்டா
என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
குறும்புக்காரக் கண்ணன், நமுட்டுச் சிரிப்போடு சொன்னான்,
அவ்ளோதானே மாமி, என்னைக் கேட்டா நான் எடுத்துக் கொடுத்திருப்பேனே
என்று சொல்லிக்கொண்டே நேராக உள்ளேபோய், தண்ணீர்ப்பானைகளுக்குள் ஒன்றாய் இருந்த வெண்ணெய்ப்பானையை எடுத்துக்கொண்டு வந்தான்.
மாமீ நான் கண்டுபிடிச்சதால, முழுசும் எனக்குத்தான்.
நாளைக்கு வேற இடத்தில் ஒளிச்சு வைங்கோ. நான் வந்து எடுத்துதரேன் என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே பானையோடு ஓடிவிட்டான்.
மலங்க மலங்க விழித்துக் கொண்டு அவ்விடத்திலேயே சாயங்காலம் வரை நின்றுகொண்டிருந்தாள் அந்தப் பேதை சித்ரகலா

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...