Skip to main content

திருவாய்மொழி

"""ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி
   அரவூறு சுலாய் மலை
   தேய்க்கும் ஒலி
   கடல் மாறு சுழன்று
   அழைக்கின்ற ஒலி
   அப்பன் சாறு பட அமுதம்
   கொண்ட நான்றே !
                                     - திருவாய்மொழி

இப்பாசுரத்தில் நம்மாழ்வார் திருப்பாற்கடல், அமுதம் (இன்னும் பலவும் அப்போது தோன்றின) வேண்டி, கடையப்பட்ட நிகழ்வை #நாலே_வரிகளில் பிரம்மாண்டமாக சித்தரிக்கிறார்.

பாற்கடல் கடையப்பட்டபோது எழுந்த பேரொலிகளுக்கான (cosmic sounds) காரண காரியங்களை ஆழ்வார் ஆராய்கிறார். பாசுரத்தின் பிரம்மாண்ட சித்தரிப்பை வைத்து, ஆழ்வார் பேசுவது, கடல் கடைதலான அவதார நிகழ்வை மட்டுமே அல்ல, கொஞ்சம் அறிவியலும் பேசியிருக்கிறார்….

மூன்று பெரும் சப்தங்கள் குறித்து ஆழ்வார் சொல்கிறார்...

1. ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி

கடைந்த இடத்தில் கடல்நீர் அதிவேகமாக சுழன்றதால் ஏற்பட்ட பெரும்சக்தி வாய்ந்த வெளி நோக்கிப் பாய்ந்த விசையானது (centrifugal force), மலைகளிலிருந்து கடல் நோக்கிப்பாயும் ஆறுகளை, புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் திருப்பி, மலைகளில் ஏறி ஒடும்படியாகச் செய்தது! இதனால் பேரொலிகள் எழுந்தன.

2. அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி

அடுத்த பேரொலிகள் உராய்வு விசை (Frictional force) சார்ந்தது. பாற்கடலைக் கடைகையில், மந்தர மலையைச் சுற்றிய பிரம்மாண்ட அரவின் உடலானது, மலையையோடு உராய்கையில் உண்டான பெரும் சப்தம்,

3. கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி

கடையப்பட்ட கடலானது, மாறி மாறி சுழன்றதால், கடல் நீர் ஏற்படுத்திய பேரிரைச்சல். சூரியனைச் சுற்றிவரும் பூமி, தனது அச்சிலும் (மேற்கிலிருந்து கிழக்காக) சுழல்வது தெரிந்ததே. “கடல் மாறு சுழன்று” என்று ஆழ்வார் பாடும்போது, #பூமி_சுழற்சி பற்றி புரிந்தவராகவே அவரை எண்ண வேண்டும், அதாவது, இந்த பிரம்மாண்டக் கடல் கடைதலின் ஒரு பக்க சுழற்சி, பூமியின் சுழற்சிக்கு எதிராக நிகழ்ந்த போது, பூமியின் சுழற்சியே பாதிப்புக்குள்ளாகி, பூமி அதிர்ந்து பேரொலிகள் உண்டாயின!

4. அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே!

அமுதத்தைப் பங்கிடுவதில் தேவர்களுக்கும் அசுரருக்கும் சண்டை ஏற்பட. மோகினி உருவெடுத்த விஷ்ணு, அசுரருக்குக் கிடைக்காத வண்ணம், அமுதைக் கவர்ந்து சென்றார். அசுரர்கள் மோகினியான மஹாவிஷ்ணுவை துரத்தினர். பின் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும் வண்ணம் செய்தார் மஹா விஷ்ணு.

🌹 குறிப்பு:

அசுரர்கள் துரத்திய சமயம், அமுதக்குடத்திலிருந்து சிந்திய #நான்கு_துளிகள் இந்தியாவில் பிரயாகை (அலகாபாத், கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம்), ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாலேயே, அந்த நான்கு இடங்களும் புனித/புண்ணியத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

ஓம் நமோ நாராயணா

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...