பாஞ்ராத்ர ஆகமப்படி நம் கண்ணன் திருக்கோயிலின் ஸ்ரீ கண்ணபிரானின்
திருவதார வைபவம் 02.09.2018 காலை பத்து மணியளவில் ஸ்ரீ சந்தான கோபால
கிருஷ்ணன் மற்றும் கருடாழ்வாருக்கும் விசேட திருமஞ்சனம் நடைபெறும் மறுநாள்
காலை 03.09.2018 7மணியளவில் கோ பூஜையுடன் துவங்கி ஸ்ரீ கண்ணபிரானுக்கு
விசேஷ திருமஞ்சனம் நடைபெறும். மாலை திருவீதி எழுந்தருளி இரவு வையாழி கண்டு
உறியடி நிகழ்ச்சி நடைபெறும் அனைவரும் வந்திருந்து ஸ்ரீ கண்ணபிரான் மற்றும்
லக்ஷ்மி ஹயக்ரீவர் திருவருளுக்கு பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...
Comments
Post a Comment