Skip to main content

ஜகதாசார்யரும், லோகாசார்யரும்

இன்று(14/11/2018 ஐப்பசி திருவோணம்-ஸ்ரீ பிள்ளை லோகாசார்யர்/உலகாரியர் திருநட்சித்திரம்.18 ரஹஸ்ய கிரந்தங்களை இயற்றி, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய அடிப்படைத் தத்துவங்களை, திருமால் அடியார்கள் எளிதில் புரிந்து கொள்ள வழி செய்தார். இஸ்லாமியபடையெடுப்பிலிருந்து ஸ்ரீநம்பெருமாளையும்,ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய
த்தையும் காப்பாற்றிய, அரிய கைங்கர்யத்தைச் செய்த, ஆசார்ய புருஷர்.இவருடைய கைங்கர்யங்கள் எல்லா வற்றுக்கும் ஜகதாசார்யர், ராமானுஜரின் கைங்கர்யங்கள் முன்னோடியாக இருந்து வழி காட்டியுள்ளன. அது பற்றி சில வைபவங்களைப் பார்ப்போம்.

1.ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கான, அடிப்படை கிரந்தங்களை இயற்றிய மஹான்கள்.

ராமானுஜர் காலத்தில் புறச்சமயங்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது.அவை பற்றிய கிரந்தங்கள்/வ்யாக்யா
னங்கள் எல்லாமே சம்ஸ்கிருதத்தில் இருந்தன.
அந்தப் புரட்டு வாதங்களை நிராகரிக்கவும்,விசிஷ்டாத்வைதத்தின் ஏற்றத்தை எடுத்துரை க்கவும், அவரும் சம்ஸ்கிரு தத்தில்எழுதவேண்டிதாயிற்று.அவ்வாறு அவர் "ஸ்ரீபாஷ்யம்"
"வேதார்த்த ஸங்ரஹம்" முதலான 9 கிரந்தங்களை இயற்றினார்.அவை 'நவரத்னங்கள்'என்று போற்றப்
படுகின்றன.

பிள்ளை லோகாசார்யர், காலத்தில் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம் நன்றாக வளர்ந்திருந்தது.திவ்யப்பிரபந்தம்/திருவாய்மொழி வ்யாக்யானங்கள் மிகச் சிறப்பான முறையில் இருந்தன.
திவ்யப்பிரபந்தம்உரைக்கும்,
திருமால் அனுபவத்தில் திளைக்கும் அடியார்கள், ஸ்ரீவைஷ்ணவத் தத்துவ விசாரங்களை முறைப்படி அறிந்து நடக்க, 18 ரஹஸ்ய க்ரந்தங்கள்இயற்றினார்.அவற்றுள் "முமூக்ஷுபடி" "ஸ்ரீவசனபூஷணம்" ஆகியவை மிக முக்கியமானவை.
மணிப்ரவாள நடை கிரந்தங்கள் அதிகம் இருந்தகாலகட்டத்தில்
,இவை எளிய தமிழில் ஸ்ரீவைஷ்ணவ நெறிமுறை
களை, விளக்குவதாக அமைந்தன.எதிராசரைப் பெரிதும் கொண்டாடிய மணவாள மாமுனிகள், லோகாசாசார்யரை 8 பாசுரங்களால்,உபதேச ரத்தின மாலையில் கொண்டாடுகிறார்.

2.காஞ்சி வரதராஜப் பெருமாளின் பரிபூரண அநுக்ரஹம், பெற்ற ஆசார்ய புருஷர்கள்:

வரதர் திருக்கச்சி நம்பிகள் மூலம் சொன்ன, ஆறு வார்த்தைகளே, ராமானுஜர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது..
விசிஷ்டாத்வைத சித்தாந்த த்தின் அடிப்படையாக அமைந்தது.வரதர் அருளுடன் இளையாழ்வார் துறவு பூண்டு எதிராஜர் ஆனார்.சர்வக்யஜ்ய பட்டரிடம் 17 நாள் நடந்த வாதப்போரில்,எந்த முடிவும் ஏற்படாததால், சோர்ந்திருந்த ராமானுஜர் கனவில் தோன்றிய வரதர்,ஆளவந்தாரின் மாயாவதக் கண்டன
ஸ்தோத்ரங்கள் துணை
கொண்டு வாதிடச் சொன்னார்.
மறுநாள் காலை வரதர் அருளால், கம்பீரமாக வந்தார் வாத மண்டபத்துக்குள். ராமானுஜரின் தேஜஸைக் கண்ட சர்வக்யஜ்யர்,வாதிட முடியாமல் அவரைச் சரணமடைந்து 'அருளாளப்
பெருமாள் எம்பெருமானார்' ஆனார்.ராமானுஜர் நியமனப்படி,கூரத்தாழ்வான் வரதரை வேண்டிக்
,கண்பார்வைபெற்றார்.ராமானுஜரின் திருவாராதனைப் பெருமாளாகஎழுந்தருளியிருந்த, காஞ்சி வரதர்,பல சூழ்நிலைகளிலும்,அவருக்கு உகந்த வழிகாட்டியாக விளங்கினார்.

வரதரின் அம்சமாகவே,பிள்ளை லோகாசார்யர்,ஸ்ரீரங்கத்தில் அவதரித்தார். காஞ்சியில் மணப்பாக்கத்து நம்பி என்னும் அடியாருக்கு,தேவப்பெருமாள் சில உபதேசங்களைச் செய்தார்.ஒரு நாள் உபதேசத்தை நிறுத்திவிட்டு, நம்பியை ஸ்ரீரங்கம் செல்லுமாறும்,தாம் அங்கு வந்து,உபதேசங்களைத் தொடர்வதாகவும் அருளினார்.ஸ்ரீரங்கம் வந்த நம்பி காட்டழகிய சிங்கர் சந்நிதி அருகில்(அன்று அந்தப்பகுதி மக்கள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியாக இருந்தது) இருந்து வந்தார்.ஒரு நாள் அங்கு ஒரு ஆசார்யரும்,(பிள்ளை லோகாசார்யர்) அவருடைய சீடர்கள் சிலரும் வந்தனர்.சுற்றுமுற்றும் பார்த்து,வேறு ஆட்கள் இல்லை என்று தெரிந்து கொண்டு, ஆசார்யர் உபதேசம் ஆரம்பிக்க சீடர்கள் பவ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அங்கே மறைந்திருந்த மணப்பாக்கத்து நம்பி,அவற்றைச்செவியுற்றார்.தேவப்பெருமாள் காஞ்சியில் எங்கு நிறுத்தினாரோ,அதன்
தொடர்ச்சியாக இந்த உபதேசங்கள் இருப்பதை உணர்ந்து ஆச்சரியப்பட்ட நம்பி,வெளியே வந்து லோகாசார்யரின் திருவடிகளில் தண்டனிட்டு"அவரோ நீர்"
என்று சிலாகிக்க,உலகாரியர்
,"ஆவது;எது"(ஆம்;அதற்கு என்ன இப்போது) என்று பகர்ந்து, தாமே தேவப்பெருமாள் என்று உணர்த்தினார்.(இந்த உபதேசங்களே,முமூக்ஷுப்படி,
ஸ்ரீவசனபூஷணம் முதலானவை)

மேலும் ஒரு வைபவம்: உலகாரியர்,ஜோதிஷ்குடியில், தம் இறுதிக்காலத்தில்
ஒரு நாள் தம் சீடர் கூரகுலோத்தம தாசரை அழைத்து,பாண்டிய மன்னன் அரசவையில் அமைச்சராக இருக்கும்திருமலைஆழ்வாரைத்(திருவாய்மொழிப்பிள்ளை) திருத்திப் பணிகொண்டு, ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயப் பணிகளில் ஈடுபடுத்துமாறு உரைத்தார். இன்னொரு சீடர் நாலூர்ப்பிள்ளையிடம்,திருமலை ஆழ்வாருக்கு, திருவாய் மொழியின் அர்த்த விசேஷங்களைக் உபதேசிக்குமாறு கூறினார். சில ஆண்டுகளுக்குப்பின் ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தின் பிரதம ஆசார்யராக மிளிர்ந்த திருவாய்மொழிப்பிள்ளை,காஞ்சிக்கு தேவப்பெருமாளைச்
சேவிக்கச் சென்றார்.அப்போது தேவப்பெருமாள், சந்நிதியில் நின்றிருந்தநாலூர்பிள்ளையிடம்"நாம் ஜோதிஷ்குடியில் நியமித்தாற் போல்,இவருக்கு திருவாய்மொழி/அருளிச்செயல் அர்த்த விசேஷங்களைச்
சாதித்தீரா"என்று கேட்டார்.

3 இஸ்லாமிய படையெடுப்பி லிருந்து, திருமால் திருவிக்ரக ங்களைக் காப்பாற்றி, தாயினும் ஆயின செய்த பெரியோர்கள்

கர்நாடகாவின் மீது படையெடு த்து வந்த டில்லி சுல்தான், மேல்கோட்டையிலிருந்த செல்வப்பிள்ளை விக்ரக த்தை,கவர்ந்து சென்று விட்டான்.மேல்கோட்டை வந்த ராமானுஜர், இதையறிந்து டில்லி சென்று சுல்தானின் மகளின் அந்தப்புரத்தில் இருந்த செல்வப்பிள்ளையை "வாராய் செல்வப்பிள்ளாய்"என்று பாசத்துடன் அழைக்க, செல்வப் பிள்ளையும் கால் சலங்கை 'ஜல்,ஜல்'என்று இசைக்க நடந்து வந்து,ராமானுஜர் மடிமீது அமர்ந்து கொண்டார். செல்வப்பிள்ளையை பல்லக்கில் வைத்து அழைத்துக் கொண்டு வந்த உடையவர்
,மேல்கோட்டையில் பிரதிஷ்டை செய்தார்.(சுல்தானின் மகள் பீபிநாச்சியாரும் உடன் வந்தார்.)

தென்னகத்தின் மீது படையெடுத்து வந்த யூலுக்கான்(முகமது பின் துக்ளக்),பல வைணவ/சைவ கோவில்களைச்சூறையாடி,
நகைகளைக் கொள்ளை
யடித்தான்.அவன் ஸ்ரீரங்கத்தின் மீது படையெடுத்து வருகிறான் என்று அறிந்து,லோகாசார்யர் பெரியபிராட்டியார் விக்ரகத்தை வில்வமரத்தடியில் மறைத்து வைக்கவும்,பெரிய கோவில் கர்ப்பக்கிரகத்தைக் கல் வைத்து அடைக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு,நம்பெருமாளையும்,உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் ஏற்றிக் கொண்டு சில சீடர்களுடன் உடனே புறப்பட்டு காட்டு வழியாக,தென்
திசையில் பயணித்து சென்றார்.
மதுரைக்கு அருகே உள்ள ஜோதிஷ்குடி(கொடிக்குளம்) என்னும் இடத்தில்,ஆனை
மலையின் பின்புறம் உள்ள குகையில் சில ஆண்டுகள் வைத்துக் காப்பாற்றினார். அங்கு நித்யதிருவாராதனை களையும் சிறப்பாக நடத்தினார்.அவர் அங்கேயே பரமபதம் அடைந்தார்.அவரது சீடர்கள் நம்பெருமாளை எடுத்துக் கொண்டு,மேலும் தெற்கே சென்று,மலையாள தேசம் வழியாக,கர்நாடகா சென்று,அங்கிருந்து திருமலை சென்றனர்.திருமலையில் த்வஜஸ்தம்பத்துக்கு முன் வலதுபுறம் உள்ள ரங்கமண்டபத்தில் தான் நம்பெருமாள் பல ஆண்டுகள் இருந்தார்.லோகாசார்யர்,நம்பெருமாளைஎடுத்துச் சென்று 48 ஆண்டுகள் கழித்து,கி.பி 1371ல் நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.

4.தள்ளாத வயதிலும்,தளராமல் கைங்கர்யங்கள் ஆற்றிய ஸ்ரீமான்கள்:

120 ஆண்டுகள் நிறைவாழ்வு, வாழ்ந்த,ராமானுஜர் இறுதிவரை ஓயாமல் கைங்கர்யங்கள் செய்தார். அவர் தம் 67 ஆவது வயதில் டில்லி சென்று,செல்வப் பிள்ளையை மீட்டு வந்தார்.
சுமார் 25 ஆண்டுகள் பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று(நடந்தே)
பல திவ்யதேசங்களிலும் எண்ணற்ற கைங்கர்யங்கள் ஆற்றினார்.தம்முடைய 113 ஆவது வயதில், திருமலைக்கு மூன்றாவது யாத்திரை மேற்கொண்டார்.அந்த சமயத்தில் தான் திருப்பதி கோவிந்தராஜர் சந்நிதியை தற்போது உள்ளது போல் நிர்மாணித்தார்.தில்லை கோவிந்தராஜரை திருப்பதியில் பிரதிஷ்டை செய்தார்.திருமலை/திருப்பதி கோவில் பணியாளர்களுக்கு
,வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

பிள்ளைலோகாசார்யர்,நம்பெருமாளை எடுத்துக் கொண்டு ஜோதிஷ்குடி செல்லும் போது அவருக்கு வயது 116 (106 என்றும் சொல்கிறார்கள்.எப்படி
யிருந்தாலும் தள்ளாத வயது தானே!!)

5.கடையனுக்கும்,கடைத்தேற்றம் அளித்த கருணைவள்ளல்கள்:

ஓராண் வழியாய் வழங்கி வந்த உபதேசங்களை,ஆசையுடையோர்க்கெல்லாம் வழங்கி, சாதிமதப் பாகுபாடுஇன்றி , அனைவரும் மோட்சம் அடைய வழிவகை செய்தார்.மல்லர் குலத்தைச் சேர்ந்த பிள்ளை உறங்கா வில்லி தாசருக்கு,
உயர்ந்த ஸ்தானம் வழங்கினார்.காது கேளாத/வாய் பேச முடியாத முடவனுக்கும்,தயிர்க்காரிக்கும் மோட்சம் கிடைக்கச் செய்தார்.

பிள்ளை லோகாசார்யர்; தாம் பரமபதம் செல்வதற்கு முன் தாம் அமர்ந்தஇடத்திலிருந்து,
கண்ணுக்கு எட்டிய தூரம் தெரிந்த அனைத்து ஜீவ
ராசிகளையும்,தாவரங்கள்,புல்/பூண்டு ஆகியவற்றையும் கண் குளிரக் கடாட்சித்து அவர்கள்/அவை மோட்சம் அடைய வழி வகுத்தார்.இன்றும் ஜோதிஷ்குடியில்,லோகாசார்யர் திருவரசு/நம்பெருமாள் எழுந்தருளியிருந்த குகை ஆகிய இடங்களில்,சுமார் ஒரு பர்லாங்க் தூரத்திலிருந்தே
,யாரும் மிதியடி போட்டுக்கொண்டு செல்வதில்லை.எல்லையிலேயே தண்டம் சமர்ப்பித்துச் செல்கிறார்கள்.மீனவகுலத்தில்
பிறந்த விளாஞ்சோலைப் பிள்ளையைத் தம் ப்ரிய சீடராக ஏற்று அவருக்கு அனைத்து ரஹஸ்ய அர்த்தங்களையும் எடுத்துரைத்தார்.ஸ்ரீவசனபூஷணத்தின் அர்த்தங்களை திருவாய்மொழிக்குச் சொல்லு மாறு விளாஞ்சோலைப் பிள்ளையிடம் உரைத்தார்.

6.கீதாசார்யரின் இருபக்கமும்,
எழுந்தருளியிருக்கும் ஜகதா சார்யரும்,லோகாசார்யரும்.

ஸ்ரீரங்கத்தில் உடையவர் சந்நிதிக்கு அருகில்,கீதாசார்யர் ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மேற்கு நோக்கி எழுந்தருளி
யிருக்கிறார்.ரதத்தில் அர்ச்சுனனுக்கு,கீதோப
தேசம் செய்யும் வடிவில்.
அவருக்கு இடதுபுறம் ஜகதாசார்யர் "தானான திருமேனி"யாக,தனி
சந்நிதியில் சேவை சாதிக்கிறார். வலதுபுறம் லோகாசார்யர்,தனிக் கோவிலில் சேவை சாதிக்கிறார்.உடையவர் சந்நிதியில் அவருடைய மானசீக ஆசார்யர் ஆளவந்தாரும், அவருடைய திருவாராதனைப் பெருமாள்
காஞ்சி வரதரும் எழுந்தருளி இருக்கின்றனர்.லோகாசார்யர் சந்நிதியில் அவருடைய திருவாராதனைப் பெருமாள் "சலங்கை அழகியார்- கிருஷ்ணர்"(அவருடைய திருத்
தந்தையார் வடக்குத் திருவீதிப்பிள்ளை ஆராதனை செய்த பெருமாள்) சேவை சாதிக்கிறார்.

7.ஆசார்யர்களின் அருமை யான சீடர்கள்:

ஜகதாசார்யருக்கு 12000 சீடர்கள் இருந்தனர்.ஆனால் கூரத்தாழ்வானும்,முதலியாண்டானுமே அவருக்கு அத்யந்த சீடர்களாக விளங்கினர்.அவரே பவித்ரம், தண்டு என்று அவர்களைக் கொண்டாடினார். இவர்கள் இருவரும் ஸ்ரீரங்கம் உடையவர் சந்நிதியில் துவாரபாலகர்கள் போல் நின்று சேவை சாதிக்கிறார்கள்

லோகாசார்யருக்குப் பல சீடர்கள் இருந்த போதிலும்,
கூரகுலோத்தம தாசரும்,
விளாஞ்சோலைப் பிள்ளையும்
இரண்டு முக்ய சீடர்களாகத் திகழ்ந்தனர்.இவர்கள் ஸ்ரீரங்கம் பிள்ளைலோகாசார்யர் சந்நிதி
வாயிலின் இருபுறமும் நின்று சேவை சாதிக்கிறார்கள்.

8.போற்றும் பொன்னடிகள்:

ராமாநுஜர் சந்நிதிகளில்,நம் தலையில் சாற்றப்படும், உடையவர் திருவடிகள் (பெருமாள் சந்நிதிகளில் சாற்றப்படும் சடாரி போன்றது)
உடையவரின் அத்யந்த சீடரும், சகோதரியின் திருக்குமாரரும்
ஆன 'முதலியாண்டான்' பெயரில் சாற்றப்படுகிறது.

ஸ்ரீரங்கம் பிள்ளை லோகா சார்யர் சந்நிதியில்,அவர் திருவடிகள் அவரது சீடரும், திருத்தம்பியாரும் ஆன
"அழகிய மணவாளப் பெருமாள்
நாயனார்" பெயரில் சாற்றப் படுகிறது.

9.காட்டழகிய சிங்கர் கோவில் வைபவங்கள்:

ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தங்களில் கடைசி இரண்டு பாசுரங்களும் சாற்றுமறைப் பாசுரங்களாக இரண்டு முறை சேவிக்கப்படும். ஆனால் அமுதனாரின் இராமாநுச நூற்றந்தாதியில் மட்டும் மூன்று பாசுரங்கள்- "இருப்பிடம்வைகுந்தம்"(106),
"இன்புற்ற சீலத்து
இராமாநுச"(107),
"அங்கயல் பாய் வயல்"(108)
சாற்றுமறைப் பாசுரங்கள். இதற்குக் காரணம்--அமுதனாரும் அவர் சீடர்களும் காட்டழகிய சிங்கர் சந்நிதியில் அமர்ந்து இராமாநுச நூற்றந்தாதி எழுதிக் கொண்டி ருந்தனர்.105 ஆவது பாசுரம் முடித்து,106 தொடங்கும் முன்னர்
அழகியசிங்கரைச் சேவிக்க உடையவர் அங்கு வந்தார். உடனே அவர்கள் அனைவரும் எழுந்து அவரைச் சேவித்தனர். சாற்றுமுறைப் பாசுரங்களை எழுந்து நின்று சேவிப்பதால், எழுந்து நின்றதற்குப் பின்னால் சேவித்த மூன்று பாசுரங்களும் சாற்று மறைப் பாசுரங்கள் ஆயின!!!

லோகாசார்யர் தாம் தேவப்பெருமாளின் அம்சம் என்பதை,மணப்பாக்கத்து நம்பியிடம் உரைத்ததும் இந்தச் சந்நிதியில் தான்.(குறிப்பு 2 ல் விரிவாக)


Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...