Thursday 22 November 2018

எங்கும் நிறைந்த திருமால்


எங்கும் நிறைந்தவன் திருமால். பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலே காவேரி நதி சூழ திருவரங்கம் என்னும் கோவிலில் குடி கொண்டுள்ளான். அவன் அரங்கன் என்று அழைக்கப்படுகிறான். அவனே பற்றற்ற அடியவர்களை வணங்கும் வகையில் வேங்கட மலையில் குடி கொண்டுள்ளான், மேலும் ,

" பள்ளி ஆவது பாற்கடல் அரங்
      கம் இரங்க வன் பேய் முலை
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை
      பிரான்-அவன் பெருகும் இடம்-
வெள்ளியான் கரியான் மணி நிற
      வண்ணன் என்று எண்ணி நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத் திரு
      வேங்கடம் அடை நெஞ்சமே "

-பெரிய திருமொழி.

என்று பாடுவதன் மூலம், திருமால் வெண்மையாகவும், கருமையாகவும், நீலவண்ணத்திலும் , பச்சை வண்ணத்திலும் காட்சி தருகின்றான் என்பதை நாம் அறிய முடிகிறது. கல்நெஞ்சை யுடையளான பூதனை யென்பவள் கதறும்படியாக (அவளது) முலையை சிறு குழந்தையாயிருக்கச் செய்தே உயிருடன் உறிஞ்சி அமுதுசெய்த ஸ்ரீக்ருஷ்ணபகவான் பள்ளி கொள்ளுமிடமாவது திருப்பாற்கடலும் திருவரங்கமுமாம்; அப்பெருமானே (கிருதயுகத்தில்) வெளுத்த நிறத்தனாயும் (கலியுகத்தில்) கறுத்த நிறத்தனாயும் (த்வாபரயு கதில்) சாமநிறத்தனா யுமிருப்பவன் என்று தியானித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் வணங்கப்பெற்றதாயு முள்ள திருமலையிலே அருள்கிறான், அவனை அடை நெஞ்சமே என்கிறார்.

ஓம் நமோ வெங்கடேசாய.



படம்:  ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்.

No comments:

Post a Comment