Skip to main content

ஆலய அர்ச்சகரை பற்றிய சிறு பதிவு



                         
1, சராசரியாக 80/ சதவிகித சிவாச்சாரியார்கள் காலை உணவை உண்ணுவதில்லை.

2, வருடத்தில் தொடர்ச்சியாக ஒருமாதம் (மார்கழி) முழுவதுமாக அதிகாலை 3மணிக்கு கண் விழிக்கின்றனர்.

3, விடுமுறை கிடையாது மாற்று சிவாச்சாரியார் இருந்தால் மட்டுமே விடுமுறை சாத்தியம்.

4, பெரும்பாலான ஆலயங்களில் குறைந்தபட்சம் 3நபர் செய்ய வேண்டிய வேலைப்பழுவை ஒரே சிவாச்சாரியார் செய்கிறார் காரணம் 1நபருக்கும் குறைந்த வருமானம்தான் வரும் மற்ற இருவருக்கு அவரால் தர இயலாது நிர்வாகமும் எங்களுக்கு வேலை நடந்தாபோதும் என்று இருந்துவிடும் ஆனால் விழா நாட்களில் ஆலய நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அந்த வருமானம் ஆலய அர்ச்சகருக்கு என்று ஒரு சதவிகிதம் கூட செலவு செய்வதில்லை உண்டியல் வருமானமும் நிர்வாகத்திற்கு கூடுதல் வரவாக கிடைக்கும் ஆனால் அர்ச்சகர் #தட்டுவருமானம்# மட்டுமே இங்கு பக்தர்கள் மனதில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.

5, அதிகமாக தண்ணீரில் நிற்பதால் கால்வலி,

6, காலை உணவு உண்ணாததால் சுகர்

7, கற்பூர புகை ஊதுபத்தி புகை இவைகளால் மூச்சுத்திணறல்

8, தரமற்ற பூஜைப்பொருட்கள் கலப்படத்தால் சருமம் பாதிப்பு

9,தீபாவளி,பொங்கல் இதுபோன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பக்தர்களுக்காக அதை கொண்டாட முடியாத சமூகம்.

இதுபோன்ற பல சிரமங்களை கடந்து எந்தவித அரசு ஆதரவோ,மத்தியில் ஆதரவோ,சாதி ஆதரவோ இல்லாமலும் ஆலய சொத்துக்கள் எவ்வளவோ இருந்தும் அதில் இருந்து ஒருபிடி மண்ணிற்கு கூட ஆசைப்படாமலும் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை #என்கடன்உன்பனிசெய்துகிடப்பதே# என்ற வாசகத்திற்கு இணங்கி
இன்றுவரை அரசியலிலோ,சினிமாவிலோ,தொழில் துறைகளிலோ,மற்ற மத்திய மாநில அரசு துறைகளிலோ கால் பதிக்காமல் வாழ்ந்து வரும் பழங்குடி இனமே சிவாச்சாரியார் சமூகம்

விளிம்பு நிலை சமூகமாய் நம் சமூகம்

🙏#கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நாற்றுனையாவது நமச்சிவாயவே#🙏

உலகில் எந்த ஒரு இனத்திற்கும் குருவோ,தலைவரோ அல்லது தோற்றுவித்தவரோ இருப்பார் ஆனால் சிவாச்சாரியார்களுக்கு ஈசனே குரு ஈசனே அனைத்தும் இதை மமதையில் சொல்லவில்லை பெருமையில் சொல்கிறேன்.

எங்களுக்கு எந்தவித சலுகையோ இட ஒதுக்கீடோ கேட்கவில்லை.
எங்களை அப்படியே விட்டுவிடுங்கள் வாழ்ந்து விட்டுப்போகிறோம்.

இந்த பதிவை பார்த்த
ஒரு பக்தர் மனதில் உள்ள சிவாச்சாரியார் பற்றிய தவறான என்னம் மாறினாலும் அது இந்த பதிவின் வெற்றியே.!!!

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...