Skip to main content

தெரியபடுத்துங்கள்

🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸
*.தினமும் காலையில் வாசலில்  கோலம் போட்டு வாசபடியின் வலது பக்கம் விளக்கேற்றி வையுங்கள் வீட்டிற்கு நல்லது.(5 to 6) மணிக்குள். மாலையிலும் மிகவும் நல்லது.*

*தனி வீடு என்றால் காலையில் எழுந்தவுடன் முதலில் பின் புறம் கதவை திறந்து விட்டு பின் வாசல் கதவை திறக்க வேண்டும்.*

*வீட்டில் காலை வேளையில் நல்ல கடவுள் தோத்திர பாடல் ஒலி நாடவை போட்டு கேளுங்கு அது வீட்டிற்கு நல்ல சக்தியை கொண்டு வரும்.*

*வெள்ளி கிழமைகளில் கல் உப்பு வாங்க வேண்டும்.இது வீட்டில் லஷ்மி காடாக்ஷம் பெருக.*
*மற்றும் வெள்ளி கிழமைகளில் கீரை சமைத்தால் நல்லது.*

*குழந்தைகளுக்கு சின்ன ஸ்லோகங்களை  சொல்லி கொடுங்கள்.*
*மற்றும் குழந்தைகள் காலை குளித்தவுடன் பூஜை அறையில் நிற்க வைத்து கடவுளை வணங்க சொல்லி கொடுங்கள்.*

*குழந்தைகளுக்கு உங்கள் வழக்க படி நெற்றியில் திருமண் ஶ்ரீசூரணம்,விபூதி,குங்குமம் இட்டு கொள்ள பழக்க படுத்துங்கள்.*

*.வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் வீட்டிற்கு உறவினர் யார் வந்தாலும் அவர்களை வரவேற்று,தண்ணீர் கொடுக்க சொல்லி கொடுங்கள்.*

*பள்ளியில் இருந்து வந்ததும் கை,கால்கள் சுத்தம் செய்து கொள்ள பழக்குங்கள்.*

*வீட்டில் பெரிய பிள்ளைகள்,பெரிய பெண் குழந்தை படித்து கொண்டிருந்தால் படிப்பில் நல்ல ஞாபக சக்தியும்,நல்ல மதிப்பெண் பெறவும் வீட்டில் ஹயக்ரீவர்  படம் வைத்து  வியாழக்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாற்றி,நெய் தீபம் ஏற்றி வழி பட நல்ல பலன் கிடைக்கும்.இது எங்கள் அனுபவம். ஹயக்ரீவர் ஸ்லோகம் பிள்ளைகளை தினமும் ஒன்பது முறை சொல்லி வழி பட  சொல்லுங்கள்.*

 *ஏலக்காய் மாலையை   ஹயக்ரீவர் சன்னதி கோவிலில் இருந்தால் சாற்றலாம்.சன்னதி இல்லாதவர்கள் ஹயக்ரீவர் படம் வாங்கி வீட்டில் வைத்து மேலே குறிப்பிட்ட படி ஏலக்காய் மாலை சாற்றி வழி பட வேண்டும்.7,9,11,13 வாரங்கள் செய்யலாம்.வாரம் அந்த  ஏலாக்காய் மாலையை கோவில் பெருமாள் தீர்த்ததில் சேர்க்க கொடுத்து விடலாம்.*

*வாசலில் பசு வந்தால் அரிசி வெல்லம் கொடுத்தால் பித்ருகளுக்கு நல்லது.*

*தினமும் காலையிலும் ,மாலையிலும் விஷ்ணுசகஸ்ரநாமம்,லலிதா சகஸ்ரநாமம் சொல்ல தெரிந்தவர்கள் சொல்லுங்கள் தெரியாதவர் ஒலி நாடவை ஓட விட்டு கேளுங்கள் மிகவும் நல்லது.*

*காலையில் வீடு பெருக்கும் போது வீட்டின் உள்ளிருந்து வாசல் நோக்கி பெருக்க  வேண்டும். மாலையில் நுழை வாசலில் இருந்து  வீட்டில் உள் நோக்கி  பெருக்க வேண்டும்.மிகவும் நல்லது.*

*இரவு நேரங்களில் கடையில் உப்பு வாங்க கூடாது.*

*யாருக்காவது  உரை மோர் கொடுக்க வேண்டும் என்றால் இரவில் கொடுக்க கூடாது.அவர்களை அவர்கள் வீட்டு பாலை கொண்டு வர சொல்லிடா உரை ஊற்ற வேண்டும்.*

*வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.அவ்வாறு செய்வது மிகவும் நல்லது.*

 *பெண்கள்,பெண் குழந்தைகள் செவ்வாய்,வெள்ளி கிழமைகளில் எண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.*

*ஆண்கள்.ஆண் குழந்தைகள் புதன்,சனி கிழமைகளில் எண்ணை  தேய்த்து குளிக்க வேண்டும்.*

*மாதம் உங்களுக்கு சம்பளம் வந்ததும் உங்கள் குலதெய்வத்திற்கு உங்களால் முடிந்த பணத்தை உண்டியல் வைத்து போட்டு வாருங்கள்.அது மிகவும் நல்லது.பின்னர் அந்த பணத்தை குலதெய்வ கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.இது உங்கள் குடும்பத்திற்கு மிகவும் நல்லது.*

*தினமும் வாசலில் நாயிருந்தால் பிஸ்கட் வாங்கி போடுங்கள் நல்லது.*

*வீட்டை விட்டு ஏதாவது நல்ல விஷயங்களுக்கு கிளம்பும் போது வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி செல்லுங்கள் நல்லது.*

*தினம் சமையல் முடிந்ததும் கடவுளுக்கு படைத்து விட்டு காகாவிற்கு சாதம் வையுங்கள் பித்ருகளுக்கு நல்லது.*

*தினமும் இரவில் மறுநாள் என்ன சமையைல் செய்ய* *வேண்டும் என்று  தீர்மானம் செய்து காய்கறிகளை கட் பண்ணி வைத்து கொண்டால் காலையில்   வசதியாக இருக்கும்.*
*குறிப்பாக பீன்ஸ்,அவரைக்காய், கீரை ,கோஸ் போன்ற காய்கறிகளை  மட்டும்.*

*வருஷம் ஒரு முறை தவறாமல் குலதெய்வம் கோவிலுக்கு போய் விட்டு வாங்க அது மிகவும் நல்லது.*
 *குழந்தைகளுக்கு சின்ன உண்டியல் வாங்கி கொடுத்து அதில் நீங்கள் மாதம் குழந்தைகளுக்கு கொடுக்கும் பணம்,மற்றும் உறவினர்கள் நாள் கிழமைகளில் கொடுக்கும் பணம் இவற்றை உண்டியலில் போட்டு வைக்க சொல்லி கொடுங்கள்.இதன் மூலம் சேமிப்பை தெரிந்து கொள்வார்கள்*
*பெண் குழந்தைகளுக்கு   நல்லது எது,கெட்டது எது என்று புரியும் படி சொல்லி கொடுங்கள் நல்லது.*
*ஒரு குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டு பேசாதீகள்.*

*அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் அதிகமாக உள்ளது என்று அறிந்துதுறையில் அவர்களை  உற்சாக படுத்துங்கள் நல்லது*

*வெள்ளி கிழமைகளில் முடிந்தவர் பூஜை அறையில் நெய் விளக்கு ஏற்றி வையுங்கள் வாரம் தவறாமல் நல்லது.*
      *பண்டிகை நாட்கள்,தை வெள்ளி,ஆடி வெள்ளி,வீட்டில் விஷேச நாட்களில் வாசலில் தவறாமல் மாவிலை கட்டுங்கள் தவறாமல் மற்றும் தலைவாசல் படியில் மஞ்சள் பூசி குங்குமம் இடுங்கள் லஷ்மி கடாஷம் பெருகும்.*

*குழந்தைகள் எதிரில் சண்டை  போடாதீர்கள்.*

*வருஷம் ஒரு முறை உங்க வீட்டின் வழக்க படி உங்கள் கணவரின் உடன் பிறந்த சகோதரிக்கு உங்களால்  முடிந்த விலையில் புடவை வாங்கி சுமங்கலி பிரார்த்தனை செய்து கொடுங்கள் வீட்டில் நல்ல சுபவிஷயங்கள் தடங்கல் இல்லாமல் நடக்கும்.*

*வீட்டில் வெண்ணை வாங்கி காய்ச்சும் போது வெண்ணை காய்ந்து இறக்கி வைத்தவுடன் அதில் ஒரு துளி பால் தெளித்தால் நல்லது.மற்ற முருங்கை இலை போட்டால் நெய் மணமாக இருக்கும்.*

*இரவில் வெண்ணை காய்ச்ச கூடாது.*

 *இந்த விஷயங்கள் தெரிந்தவர் நிறைய பேர் இருப்பீர்கள். தெரியாதவர்களுக்கு பயன் படும் என பதிவு செய்தேன்.*
🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...