Skip to main content

கருட நாக பஞ்சமி

இன்று (5/8) கருட பஞ்சமி!



ஆடி அமாவாசை அடுத்து வரும் பஞ்சமி, கருட பஞ்சமி என்று அழைக்கப்படும். பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் கருட பஞ்சமி விரதமாகும்!

நாகர்களும், கருடனும் ஒரு தந்தையின் (தாய் வேறு வேறு) பிள்ளைகள். சகோதரர்கள் என்பதால் நாக சதுர்த்தி/பஞ்சமி - கருட பஞ்சமி ஆகிய இரு நாட்களும் சகோதரர்களுக்கான பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது!

பிரம்ம தேவனின் மகனான கஷ்யபரின் நான்கு மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களின் தாயாகவும், வினதை கருடனின் தாயாகவும் விளங்கினார்கள். கத்ருவுக்கு வினதையை பிடிக்காது. அவளை தனக்கு அடிமையாக்க நினைத்து, தந்திரமாக போட்டிக்கு அழைப்பு விடுத்தாள். அந்தப் போட்டியில் ஜெயிப்பவர்க்கு தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர். போட்டியின் முடிவில் வஞ்சகமாக விளையாடி கத்ரு ஜெயித்து விட்டாள்-வினதை தோல்வியால், மகன் கருடனுடன் சேர்ந்து அவளுக்கு அடிமை சேவகம் செய்யளானாள்.

கருடன் கத்ருவிற்கும் அவளது பிள்ளைகள் நாகர்களுக்கும் வாகனமானான். கருடன் மிகவும் மனம் வருந்தி தனது தாயை எப்படியாவது கத்ருவின் அடிமை வாழ்விலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான்.

கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடம் இருந்து 'அமிர்த கலச'த்தை கொண்டு வந்து தந்தால், இருவருக்கும் நிலையான விடுதலை தருவதாக சொல்கிறாள். கருடன், தன் தாயை வணங்கி தேவலோகம் சென்று, தேவர்களுடன் போர் புரிந்து, வெற்றி பெற்று, தேவேந்திரனிடம் இருந்து அமிர்த கலசத்தைப் பெற்று அதை கத்ருவிடம் தருகிறான். இருவருக்குமான அடிமை வாழ்வு நீங்கி, ஆனந்த வாழ்வு வாழ கருடன் வழி செய்து கொண்டான். அந்தநாள் கருடன் பிறந்த தினமாக "கருட பஞ்சமி" என்று போற்றப் படுகிறது!

நடந்ததை மறந்து கத்ருவை மன்னித்து ஏற்றுக் கொண்ட வினதைக்கும், தாயை காத்த தனயன் கருடனையும் மெச்சி எம்பெருமான் அவர்களுக்கு சேவை சாதித்ததுடன், கருடனை தன் வாகனமாகவும் இந்த கருட பஞ்சமி திதியன்று ஏற்றுக் கொண்டான்! கருடன் நாகர்களையும் அரவணைத்து கொள்கிறான், அவனது உடலில் எட்டு ஆபரணமாக, அஷ்ட நாகர்கள் பெருமை சேர்க்கிறார்கள்!

ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும், அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுணம் ஆகும். பகைவர்களை அடக்குவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், எதிலும் வெற்றி ஆகியவற்றை கருடனை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்று பத்மபுராணம் கூறுகிறது!!
-
"தத்புருஷாய வித்மஹே
 ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்"

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...