Skip to main content

கோவிந்த் த்வயம் - யதுநிதியும் யாதிநிதியும்



கண்ணனுக்கும் நம் இராமானுசனுக்கும் உள்ள ஒற்றுமைகள்.

1. பிறப்பு - இருவரும் பரம பாதம் விட்டு நமக்காக அவதரித்தவர்கள்.

2. இருவரும் வடக்கே அவதாரம் - கண்ணன் பாராத தேசத்தின் வடக்கே, இராமானுசன் தமிழகத்தின் வடக்கே.

3. இருவரும் எதிரியின் ஆபத்தினால் ஒளிந்து வாழ்ந்தவர்கள் - கண்ணனுக்கு  பிருந்தாவன கோகுலவாசம். இராமானுசனுக்கு திருநாராயணபுர வாசம்.

4. இருவரும் உபதேஷ்டாக்கள் - கண்ணன் - கீதோபதேசம், இராமானுசன் -  ஸ்ரீபாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான உபதேசங்கள்.

5. இருவரும் தங்கள் அவதார ரஹஸ்யத்தை வெளியிட்டவர்கள் - கண்ணன் கீதையில் 4வது அத்யாயம் மூலம் வெளியிட்டான்.  இராமானுசர்  தொண்டனூர் சரித்திரம் மூலம் வெளியிட்டார்.

6. இருவரும் பிறந்த இடம் வேறு வளர்ந்த இடம் வேறு வாழ்ந்த இடம் வேறு - கண்ணன் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து த்வாரகையில் வாழ்ந்தான். இராமானுசர் ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்து, காஞ்சியில் வளர்ந்து, திருவரங்கத்தில் வாழ்ந்தார்.

7. இருவரும் எதிரிகளை வென்றவர்கள் - கண்ணன் தன் அடியவர்களின் எதிரிகளை வென்றான். இராமானுசர் பாஹ்ய குத்ருஷ்டிகளை எதிர்த்தார்.

8. இருவரும் கோவிந்தர்கள் - கண்ணன்: பசுவை ரக்ஷித்ததனால் கோவிந்தன்.  ஜ்ஞானேன ஹீன: பசுபி: சாமான: என்கிற ப்ரமாணதால்  ஜ்ஞானம் இல்லாத பசுக்களான நம்மை ரக்ஷித்ததால் அவர் கோவிந்தன்.

9. இருவருக்கும் பட்டாபிஷேகம் - கோவிந்த பட்டாபிஷேகம் கண்ணனுக்கு,  உபய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் இராமானுசனுக்கு.

10. இருவரும் சரணாகதியின் மேன்மையை உணர்த்தியவர்கள் - கண்ணன் த்ரௌபதி சரணாகதி மூலமாகவும் ப்ரபத்தியுபதேசம் மூலமாகவும் சரணாகதியின் மேன்மையை உணர்த்தினான்,  கத்யத்ராயம் மூலமாக இராமானுசர் சரணாகதியை அனுஷ்டித்து உணர்த்தினார்.

11. இருவரும் ஜெகதாசார்யர்கள்.

12. இருவரும் மனிதன் செய்ய முடியாத செயல்களைச் செய்தவர்கள். கண்ணனின் அதிமானுஷ்ய சேஷ்டிதங்கள் ப்ரசித்தம். இராமானுசர் காஷ்மீரம் சென்றது,  தொண்டனூரில் பாஹ்யர்களை வென்று தன் நிலையை வெளியிட்டது முதலானவையும், அதுமட்டுமின்றி அந்த மாதவன் செய்ய முடியாததையும் செய்தவர் இராமானுசர். கீழ்கண்ட பாசுரமே இதற்கு ப்ரமாணம்

"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே"

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...