Skip to main content

ஸ்ரீரங்கத்துக் கைங்கர்யபரர்களின் பட்டியல்( என்னே தமிழ்ச் சொற்களின் இனிமை!)



எழுபத்து நான்கு முதலிகளான ஆசார்யபுருஷர்கள் சத்ர சாமரங்கள் 

திருவாலவட்டங்கள் 

திருப்பதாகைகள் 

திருப்பாது கைகள் 

தொடக்கமானவற்றை தரித்துக் கொண்டு செல்ல;
மற்றுமுண்டான சாத்தின, சாத்தாத முதலிகள் அனைவரும் நூற்றந்தாதி அநுஸந்தானத்தோடே நடந்துவர (திருவரங்கம் திருவீதிகளிலே இயல் ஸேவிக்கும் கைங்கர்யம் சாற்றின முதலிகளான யஜ்ஞோபவீதம் தரித்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், 

அவ்வாறு யஜ்ஞோபவீதம் தரித்துக்கொள்ளாத, ஆனால் அனைத்து பகவத் பாகவத கைங்கர்யத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சாத்தாத முதலிகளும் செய்து வந்தனர் என்பது இதனால் அறியப்படுகிறது); 

வேறே சிலர் 

விஜயத்வஜங்களான ஹம்ஸத்வஜம், ஹநுமத்வஜம் முதலான த்வஜங்களைத் தரிப்பாராய்; காஷாய வேஷ அநுரூபமான ஸமயக்குடை பிடிப்பாராய்;

பூரண பொற்குடங்களைத் தரிப்பார், 
திருவொண்பந்தம் பிடிப்பார்,
 திருவீதி செப்பனிடுவார், 
திருநீர் பரிமாறுவார், 
பூமழையாக மலர் சொரிவார், 
வாழைக்குலைகளைத் திருவீதி யெங்கும் நாட்டுவார், தோரணம் நிரைப்பார், 
பூந்தோப்புக்கள் சமைப்பார்,
 பொரிகளைச் சிதறுவார்,
 எண்ணெய் இறைத்து ஆடுவார், 
பரிவரான திருமேனி காவலர் ஆயுதங்களை ஏந்திச் செல்வார்; 

இப்படிப் பல்விதமான பணிவிடைகளில் அந்வயிப்பாராய் ஸேவித்துக் கொண்டுபோக;

கோயிலிலுண்டான சங்க, காஹள, பேரீ, ம்ருதங்க, பணவம் தொடக்கமான வாத்யங்கள் கடல்போல் கோஷிக்க; இராமாநுசனைத் தொழும் பெரியோர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் அந்த வாத்ய கோஷத்தைக் கேட்டு எழுந்திரைத்தாடி நகரிவலம் செய்து பெரிய திருநாள் போன்று தம்மை ஸேவித்துக் கொண்டு வருகிற அளவில்,

எம்பெருமானாரும் சப்தங்களையும் கோஷங்களையும் காண்பது கேட்பதாய்க் கொண்டு பெருமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருந்தார்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...