Skip to main content

தக்ஷிண துவாரகை

ஈட்டு ப்ரவர்த்தகரான மணவாளமாமுனிகள் சோழ நாட்டு திவ்ய தேச யாத்திரையின் போது தக்ஷிண துவாரகை திவ்யதேசானது ஆழ்வார்களில் ஈரச்சொற்களான திவ்விய பிரபந்த பாசுரங்களில் ராஜமன்னார்குடி ஷேத்திரமானது விடுபட்டது நினைத்து மிகவும் மனம் வருந்தி, தம்முடைய ஞான திருஷ்டியினால் எம்பெருமானார் “ஒரு நாயகமாய்” பதிகத்தை மேல்கோட்டை திருநாராயணனுக்கு சமர்பித்தாரோ அதே போல் நம்மாழ்வாரின் “தீர்ப்பாரையாமினி” என்கிற பதிகத்தை இந்த க்ஷேத்திரத்திற்கு சமர்பித்து இதனையும் திவ்ய தேசமாக்கி ஆசார்யர்கள் உகந்தருளிய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக்கி இரண்டு மாதங்கள் இந்த திவ்விய தேசத்தில் தங்கியிருந்து எம்பெருமானை தினமும் மங்களாஸாஸனம் செய்து “தீர்ப்பாரையாமினி” பதிகத்தை நித்யானுஸந்தானமாக ஸேவிக்கச் செய்தார்.
 
 வருடத்தின் ஆடி மாதம் முதல் அடுத்த ஆடி மாத வரை பசலி கணக்குப்படி அர்ச்சகமுறைகளை பார்த்து வருகின்றனர். 
 சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருமாலைக் கட்டி சமர்ப்பித்திடும் கைங்கர்யம் உண்டு. அவர்களுக்கு தீர்த்த மரியாதையும் உண்டு. அவர்கள் கட்டியம், படிப்பு சேவிக்கும் உரிமை பெற்றுள்ளார்கள். தற்போது (2019) எந்த சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களும் எந்தக் கைங்கர்யத்திலும் இல்லை.

 இத்திருக்கோயிலில் தினந்தோறும் காலை ஹரித்ரா நதியிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது. தீர்த்தக்குடம் வந்தபின்பு, திருமடைப்பள்ளியிலிருந்து மந்த்ர, பாசுர அனுசந்தானத்தோடு ஸ்ரீராஜகோபாலனக்கு  வெண்ணெய், நாட்டுச்சர்க்கரை, பால் கண்டருளப்பண்ணப்படுகிறது பின்பு ஆரத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு விச்வரூப ஆராதனம் கண்டருளியப்பின்பு, திருவனந்தல்தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது (தத்யோதனம்-தயிர்சாதம்), 

பின்னர் ஸ்ரீமூர்த்திகளுக்கும், ஸ்நபன பேரருக்கும் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. காலைஸந்தி திருவாராதனம் நடைபெற்று தளிகைசமர்ப்பிக்கப்படுகிறது. அந்தத் தளிகை சுற்றுக் கோயில்களுக்கும் கண்டருளப்பண்ணப்படுகிறது. பின்னர் தீர்த்த விநியோகம் நடைபெறுகிறது. மதியம் சுமார் 12 மணி அளவில் உச்சி கால தளிகை (தேங்குழல், வடை, சுத்தன்னம்) கண்டருளியபின் திருக்காப்பு சேர்க்கப்படுகிறது.

 மாலை 4 மணி அளவில் திருக்காப்பு நீக்கி ஸேவை தொடங்குகிறது. 6 மணிக்கு சாயங்காலம் திருவாராதனம் நடைபெற்று தளிகை (தோசை) கண்டருளப்படுகிறது, நித்தியானுஸந்தானம் ஸேவை முடிவடைந்து கோஷ்டி விநியோகம் செய்யப்படுகிறது. பின்பு பெருமாளுக்கு மிளகுசம்பா தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு அர்த்தசாம பூஜையில் சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை, பால், பழம் கண்டருளிப்பண்ணி திரைசேர்த்து திருக்காப்புச் சேர்க்கப்படுகிறது.

 *** மோதகம் பெருமாள் பஞ்சபர்வ புறப்பாடு (மாதப்பிறப்பு, இரண்டு ஏகாதசி, ரோகிணி, திருவோணம், அமாவாசை?) ஆகிய தினங்களில் ஸ்ரீராஜகோபாலன் உள்வீதிகளில் புறப்பாடு கண்டருளி சந்நிதிருக்குள் எழுந்தரும்போது மகாமண்டபத்தின் தூணில் அமைந்துள்ள அச்சுதப்ப நாயக்கர் வியக்கராகவ நாயக்கர் ஆகியோருக்கு திருமாலை, பரியட்டம், ஸ்ரீசடகோபம் சமர்ப்பிக்கப்படுகிறது. இராப்பத்து திருநாள்களில் பெருமாள் சாற்றிக் களைந்த மாலை மரியாதையுடன் விஜயராகவநாயக்கருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 

 மேற்சொன்ன பஞ்சபர்வ புறப்பாடு தினங்களில் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் பெருமாள், தாயார் இரட்டைப் புறப்பாடு நடைபெறும். அனைத்து வெள்ளிக்கிழமையும் தாயாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். மேலும் கிரகணம், அயனம் முதலிய புண்ணிய காலங்களில் ஸ்நபன பேரருக்கு ஹரித்ரா நதியில் திருமஞ்சனம் நடைபெறும். பங்குனி உத்தரம் 18 நாள்கள் ப்ரஹ்மோத்சவ தினங்களுக்குள் வரவில்லை என்றால், பங்குனி உத்தர உத்ஸவம், தாயாருக்கு ஐந்து நாள்கள் நடைபெறும்.

 ஒவ்வொ வருடமும் தை மாதம் நான்காம் நாள் பெருமாளும் தாயாரும் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும்போது, உடையவர் அருளிச்செய்த கத்யத்ரயம் சேவிக்கப்படுகிறது.
 இராப்பத்துத் திருவிழாவின்போது அர்ச்சக நிர்வாகம் செய்யும் இரண்டாம் வம்சத்வர்களாக ஸ்ரீராஜவள்ளல் வம்சத்தைச் சார்ந்த அர்ச்சகமிராசுகளுக்கு திருமாலை, பரியட்டம், ஸ்ரீசடகோப மரியாதைகள் செய்யப்படுகின்றன. அவ்வம்சத்வர்களால் மட்டையடிபுராணம் (ஊடல்தீர்க்கும் வசனங்கள்) அர்ச்சிராதி, பேரிதாடனம், சப்தாவர்ணம் ஆகியவை ஸேவிக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...