Skip to main content

எம்பெருமான் திருவாசல்

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"எம்பெருமான் திருவாசல்...."

திருவரங்கம்....

அமைதி.......
உடையவர்  திருக்கண்களை மூடி வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார்.... கந்தாடையாண்டான் காத்திருந்தார்.....மடத்தில் இருந்த சீடர்கள்.... உடையவர் என்ன சொல்லப் போகிறார்..... என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள்.... "ஸ்ரீபெரும்புதூர் "அவர் அவதரித்த மண்.... அந்த திருத்தலத்தில் உடையவரின் திருமேனித் திரு ஒன்று நிறுவ நினைப்பது நியாயமே..... பதிமூன்று ஆண்டுகாலம் திருப்பாதம் பதித்து விட்டு திரும்பிய திருநாராயணபுரத்துக்கு தனது திருமேனித் திருவை செய்து வைத்துக் கொள்ள அனுமதித்தவர்.... இதற்கு எதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்....?

யாருக்கும் புரியவில்லை.... நெடுநேரம் கழித்து ராமானுஜர் திருக்கண்களைத் திறந்தார்...."சரி ஆண்டான்.... உமது விருப்பப்படியே நடக்கட்டும் " என்றார்....

சட்டென்று அங்கே மகிழ்ச்சிப் பெருக்கு நிறைந்து பரவியது....தாமதமின்றி வல்லுனரான சிற்பி ஒருவர் வரவழைக்கப்பட்டார் .... உடையவரை நேருக்கு நேர் தரிசித்து அமர்ந்து வரைந்து எடுத்துச் சென்று அவரது திருத்தோற்றத்தை அச்சில் வார்த்துக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்....

"ஸ்வாமி... தங்கள் திருமேனி.... எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்" கந்தாடையாண்டான் முன்னால் வந்து திருவை ராமானுஜர் முன் நிறுத்தினார்.... அவர் திருமுகத்தில் புன்னகை விரிந்தது.....

"அடடே.... அப்படியே எம்மை ஒத்திருக்கிறதே....."

"அப்படியானல்... இதை ஸ்ரீபெரும்புதூரில் எழுந்தருளப்பண்ணலாம் அல்லவா ....?"

"ஒரு நிமிடம்.... அதை இப்படிக் கொடு...." உடையவர் கரம் நீட்ட.... கந்தாடையாண்டான்அத் திருவை( சிலை) அவர் அருகே எடுத்து வந்து நீட்டினார்....

ராமானுஜர் அதை வாங்கி அப்படியே தன் திருமார்போடு அணைத்துக் கொண்டார்...."

"ஸ்வாமிக்கு திரு அவ்வளவு பிடித்துவிட்டது போலும்...." என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்துக் கொண்டிருந்த போது உடையவர்.... அவர்கள் அறியாத வேறொரு செயலில் ஈடுபட்டிருந்தார்....

" காலக்கணக்கற்று.... பாற்கடலில் எம்பெருமானை தாங்கி நிற்கும் சக்தி.... (ஆதிசேஷன்) ஞானக் கிடங்காக சேகரித்த பெரும் சக்தி..... கருணைக் கடலாக ஊற்றெடுத்த சக்தி.... தவம்.... ஒழுக்கம்... சீலம் காத்து ஐம்பெரும் ஆச்சார்யர்களின் திருவடி நிழலில் தங்கிப் பயின்ற பெரும் பாடங்களின் மூலாதார சக்தி.... தானே ஆசார்யராகி... ஜகதாசார்யர் என்று வழங்கப்பட்டதன் பிண்ணனியில் இயங்கிய பரம்பொருளின் அருளாசி வடிவச் சக்தி.... அனைத்தையும் திரட்டி அந்தத் திருவுக்குள் செலுத்தினார்.... தன்மானசீகத்தில் அரங்கனை நெக்குருகி வேண்டிக் கொண்டு.... திருவை கந்தாடை யாண்டானிடம் நீட்டினார்....

"ஆண்டான்.... இனி இது மக்களுடையது.... இதில் யாம் இருக்கிறோம்.... இதன் வடிவில் என்றும் அவர்களோடு இருப்போம்"


"தானுகந்த திருமேனி " என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள்.... உடையவரே அத் திருவை பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார்...." தை மாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்" என்றார்...

" அப்படியே ஸ்வாமி...." என்று திருவை வாங்கிக் கொண்டு கந்தாடையாண்டான் புறப்பட்டார்.....

ஒரு பெரும் வட்டம் சுற்றி வந்து நின்றாற்போல் இருந்தது ராமானுஜருக்கு.... நூற்றி இருபது வருட தேகயாத்திரை என்பது சிறிதல்ல....தேகமும்.... உள்ளமும் சலிக்காது ஒத்துழைக்காமல் இது சாத்தியமும் அல்ல.... ஒரு பிரமாண்ட கனவும் அதன் புனிதமும்.... மேலான மனிதகுலநேயமும் அதைச் சாத்தியமாக்கியது ....

சரணகதியே சர்வரோக நிவாரணி என்று அவர் முன்வைத்த தீர்வும்.... பேதமற்ற பேருலகு சார்ந்த பெரும் கனவும் மக்களைக் கவர்ந்தன.... தன்னலமற்ற சேவையில் விளைவது வைணவம்.... பேதம் காணாத விரிந்த மனமே அதன் அடையாளம்.... இங்கு வாழும் தேக யாத்திரையிலும் சரி ....தேகம் துறந்த ஆத்மயாத்திரையின் இறுதியில் அடையும் இடமானாலும் சரி....ஒளி பொருந்தியதாக ...... திருப்தி தருவதாக..... ( வாழும் போதும்.... வாழ்க்கைக்குப் பின்னும்) அர்த்தம் மிக்கதாக அமைய.... எளிய உபாயம் "சரணாகதி " என்ற குழப்பமற்ற வழி காட்ட லே அவர் வாழ்வின் சாரம்சமானது.....

போதுமே.....?இனியும் சுமந்து கிடக்க வேண்டாமே.... என்று அவருக்குத் தோன்றியது.... ஒரு கணம் தான்.... சட்டென்று அவர் திருமேனி நடுங்கித் தளர்ந்து போனது..... அது தை மாதம்..... அன்று பூச நட்சத்திரம்....

புரிந்துவிட்டது..... ஸ்ரீபெரும்புதூரில் அவரது சக்தி வடிவ திரு மேனித்திரு பிரதிஷ்டை நடந்து கொண்டிருந்தது..... மானசீகத்தில் அதை உணர்ந்த உடையவர்.... உடனே கிளம்பி கோயிலுக்குப் போனார்....

காஞ்சியை விட்டு வந்த நாளாகக் காத்து நிற்கும் கரிய பெருங் கடவுள்.... கண்ணழகன்..... கமல இதழழகன் .... அரவணைத்துக் காக்கும் கரத்தழகன்..... ஜீவநதியெனப் பொங்கும் கருணை குணத்தழகன்.... என்றும் பெரியவன்.... அனைத்திலும் பெரியவன்.....

சன்னதிக்குச் சென்று கரம் கூப்பி நின்றார்...." பெருமானே..... போது மே....?

என்ன கேட்டாலும் அடுத்தகணம் பதிலளிக்கும் அரங்கப் பெருமான் அன்று அமைதியாக இருந்தார்....

"கடமைப்பட்ட அனைத்தையும் செய்திருக்கிறேன்..... வைணவ தருமம் தழைக்கப் பொருத்தமான எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்திருக்கிறேன்.... அந்த தலைமுறை காலாகாலத்துக்கும் தொடரும்.... திருக்கோயில் நடைமுறைகள் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறேன்.... இதுவும் தழைக்கும்.... வைணவத் தல ஆக்கிரமிப்புகள் இனி இராது.... அப்படியே நிகழுமானால் தட்டிக் கேட்கவும் ... தடுத்துப் போரடவும்.... எதிர்வரும் தலைமுறை தயாராக இருக்கும்.... அதற்கான சித்தாந்த பலத்தை அளித்து.... ஆத்ம நிவேதன உபாயங்களைச் சொல்லித் தந்திருக்கிறேன்.....

இப்போதும் அரங்கன் அமைதியாகவே இருந்தார்.....

"எம்பெருமானே... தோள் துவண்டு யாம்... உம்மிடம் வந்து நிற்கவில்லை.... சுமக்க ஏராளமான தோள்கள் காத்திருக்கிறபோது ... விட்டுத் தந்து அழகு பார்க்க நினைக்கிறேன்.... கூரே சருக்கு கேட்டதும் கொடுத்தாயே...? அந்த பாக்கியம் அடியேனுக்கில்லையா... 

இப்போது.... அவன் குறிப்பால் உணர்த்தினான்...."சரி.... இன்னும் ஏழு தினங்கள் "

கரம் குவித்து.... வணங்கி விடைபெற்றார் ராமாநுஜர்.... மடத்துக்கு திரும்பும்போது மிகுந்த உற்சாகமாக இருந்தார்.... இன்னும் ஏழு தினங்களையும் அர்த்தமுள்ளதாகச் செய்ய வேண்டும்....." எம்பெருமான் திருவாசல் திறந்து விடுவான்"

தேசமெங்கும் பரவியிருக்கும் தமது சீடர்கள் அனைவரையும் திருவரங்கம் வரச் சொல்லி செய்தி அனுப்பினார் .....

"உய்ய ஒரே வழி உடையவர் திருவடி"

"எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...