Wednesday 17 March 2021

பெண்கள் வெளியே செல்லும் போது இதை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போனாலே போதும்



கண் திருஷ்டி, கெட்ட சக்தி, எதிர்மறை ஆற்றல் எதுவும் பெண்களை நெருங்கவே நெருங்காது.

பெண்கள் எல்லோருமே மஹாலக்ஷ்மி மற்றும் பராசக்தியின் அம்சமே..!!
பெண்கள் என்றாலே அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் தான். 

கண்ணுக்கு தெரிந்த சில பிரச்சனைகளிலிருந்து பெண்களை பாதுகாப்பது ஒரு கஷ்டம் என்றால், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி கெட்ட சக்தி இவைகளிடமிருந்தும் பெண்களைப் பாதுகாக்க வேண்டியது மிக மிக அவசியம். 

அந்த காலம் போன்று இந்த காலம் இல்லை. 

பெண்களும் நேரம் காலம் பார்க்காமல் வெளியே சென்று வரவேண்டிய சூழ்நிலை. 

ஸ்ரீ கிருஷ்ணர் கூறியது போல இக்கலியுகத்தில் ஆண்களும் பெண்களும் சமம் என்ற சூழ்நிலை வந்துவிட்டது. 

இருப்பினும் பெண்களுக்கு உண்டான பிரச்சனைகள் மட்டும் குறைந்த பாடில்லை.

ஆன்மீக ரீதியாக பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம், எந்த பொருளை தங்களுடைய கையில் வைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். 

பெண்கள் என்றாலே அவர்கள் தினம்தோறும் அம்பாளை மனதார நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். 

உலகுக்கே தாயாக இருப்பவள் அந்த சக்தி தேவி! அந்த சக்தி தேவியின் ஸ்வரூபத்தில் தான் பெண்கள் இந்த பூலோகத்தில் படைக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆக பெண்களின் மனம் உறுதி அடைய, பெண்கள் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்ள அம்பாள் வழிபாடு நிச்சயமாக கை கொடுக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகமே இல்லை.

முதலில் பெண்கள் நெற்றியில் நடு வகிட்டில் குங்குமம் வைத்து கொண்டாலே எந்தவொரு தீய சக்திகளும் அண்டவே அண்டாது.

குங்குமம் என்றால அது அரக்கு குங்குமம்.

ஆனால் தற்போது உள்ள கலியுகத்தில் இதெல்லாம் சாத்தியமே இல்லை கேட்டால் ஃபேஷன் என்கிறார்கள்.

ஞாபகமிருக்கட்டும் எவ்வளவுக்கு எவ்வளவு குங்குமம் பெரியதாக நெற்றியில் வைக்கிறீர்களோ அது உங்கள் கணவனின் ஆயுளை அதிகரிக்கும்.

சரி பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள ஆன்மீக ரீதியாக, ஒரே ஒரு விரலி மஞ்சளை பூஜை செய்து கையில் வைத்துக் கொண்டாலே போதும். 

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள்

உங்களுடைய வீட்டு பூஜை அறையில் கட்டாயம் ஏதாவது ஒரு அம்மனின் திருவுருவ படம் அல்லது மஹாலக்ஷ்மி படம் இருக்கும். 

அந்த திருவுருவ படத்திற்கு முன்பாக இரண்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த அம்மனின் பாதத்தில் இந்த ஒரு மஞ்சள் மற்றும் குங்குமம் வைத்து மனதார வேண்டிக்கொள்ளுங்கள். 

உங்களை எந்த துர் சக்திகளும் அண்டக் கூடாது, கண் திருஷ்டியால் பிரச்சனைகள் ஏற்படக் கூடாது. 

எந்தவித எதிர்மறையான பிரச்சனையும் நீங்கள் வெளியே செல்லும் போது, உங்களுக்கு நேரக்கூடாது, என்றபடி மனதார பிரார்த்தனை செய்துகொண்டு, மூன்று முறை ‘ஓம் சக்தி பராசக்தி’ அல்லது 'ஓம் தூம் தூர்காலஷ்ம்யை நம' என்று 108 முறை உச்சரித்து தூப தீபம் காட்டி பூஜையை சிறிய அளவில் நிறைவு செய்து கொள்ள வேண்டும். 

அந்த விரலி மஞ்சளை எடுத்து முடிந்தால் உங்களுடைய முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம்.

அல்லது ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் ஹேண்ட் பேக்கில் பர்ஸில் வைத்து கொள்ளுங்கள்.

மீண்டும் வீடு திரும்பிய பின்பு அந்த மஞ்சளை ஸ்வாமியின் படத்திற்கு முன்பாகவே வைத்துவிடுங்கள். 

ஞாபகமிருக்கட்டும் மாத விலக்காகும் போது மட்டும் கண்டிப்பாக அந்த மஞ்சள் துணியை தொட வேண்டாம்.

மீண்டும் தினம்தோறும் அந்த மஞ்சளை கையோடு எடுத்துச் சென்றால், கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

பொதுவாகவே நல்ல விசேஷங்களுக்கு விரலி மஞ்சளை, மஞ்சள் கயிற்றில் கட்டி, கையில் காப்பு கட்டும் பழக்கம் இருக்கும். 

எதற்காக இந்த காப்பு? 

விசேஷ தினங்களில் அழகாக அலங்காரம் செய்து கொள்ளும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலின் மூலம் எந்த ஒரு பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான். 

மஞ்சளுக்கு என்று எப்போதுமே தனி மகத்துவம் உண்டு. 

மஞ்சள் நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு உரியது ஆகவே நம்பிக்கையோடு எங்கு சென்றாலும் 
அந்த மந்திரத்தை உச்சரித்து கொண்டு செல்லுங்கள் போதும்.

இன்னொன்று கோவிலுக்கு சென்று அர்ச்சகரிடம் அந்த மஞ்சளை அம்பாள் பாதத்தில் வைத்து அஷ்டோத்திரம் சொல்லி மீண்டும் உங்களிடம் கொடுப்பார் அதை உங்கள் பர்ஸில் வைத்து கொள்ளுங்கள் இது அதி சிறந்த பலனைத் தரும். 

அதிலும் மஹாலக்ஷ்மி மற்றும் அம்பாள் பாதத்தில் இருந்து வைத்து எடுத்த மஞ்சள் என்றால், அதில் கெட்ட சக்தி நெருங்குவதற்கு வாய்ப்பே கிடையாது. 

உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்துதான் பார்க்கலாமே. 
நல்லதே நடக்கும். 

ஜெய் ஸ்ரீராம்
ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

No comments:

Post a Comment