Skip to main content

அங்கு அப்படி என்ன தான் விசேஷம்?

*பண்டரிபுரம் பூலோக வைகுண்டம் என்று பலமுறை சொல்லப்படுகிறதே..!!*

அங்கு அப்படி என்ன தான் விசேஷம்?

தெருவெல்லாம் பாலாக ஓடுகிறதா?

எவருக்குமே எப்போதுமே பசியின்றி யதேஷ்டமாக ஆகாரம் இலவசமா?

யாருக்குமே காசே அவசியம் இல்லாத ஊரா?

துணியெல்லாம் இலவசமா?

வீடுகளை ராஜாவே தன் செலவில் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தானா?

இப்படிக் கேட்போருக்கு ஒரு பதில் தான் விடையாகும். "வைகுண்டம் என்றால் இது தான் உங்கள் நினைப்பா?"

இறைவன் மனிதனாகவே, மனித உணர்வுகளுடன், மனிதர்களோடு, கலந்து, பழகி, பேசி, உண்டு, உறங்கி, களித்து, ஆங்காங்கு தேவைப்பட்ட இடத்தில் தனது அமானுஷ்ய சக்தியைச் சிறிது வெளிப்படுத்தி அவர்களோடு சந்தோஷமாக வாழ்ந்தானே அந்தக் காலம்-- அந்த இடம், பண்டரிபுரம் தான் பூலோக வைகுண்டமாக இருந்தது,

வைகுண்டம் விட்டலன் ருக்மணியோடு இருக்கும் இடம். அங்கு இருப்போர் அனைவரும் அவனைச் சதா கண்டு, களித்து மகிழும் இடம். அங்கு செல்ல, இப்படி அனுபவிக்க, தனித்தகுதி வேண்டுமே.   

எல்லோராலும் முடியாதே. அதெல்லாம் ஒன்றுமே இல்லாமல் நாம் இருக்கும் இடத்திற்கு அவன் வந்து நம்மோடு பழகி மகிழ்வித்த போது நாம் வாழும் இடம் பூலோக வைகுண்டம் ஆகிவிடுகிறது.

விட்டலன் நாமதேவரைப் பிரிய முடியாதவன். அவர் வீட்டில் ஜனாபாய் வளர்ந்து சிறப்பாக ஆன்மீக வாழ்வு வாழ தேர்ச்சி அடைந்தபோது அவள் குடிசையும் விட்டலன் அடிக்கடி நடமாடும் ஒரு இடம் ஆனதில் என்ன ஆச்சர்யம்!.

விட்டலன் ஜனாவின் குடிசையில் அமர்ந்து அவள் பாடும் அபங்கங்களை ரசித்துக் கொண்டிருந்தான். 
சில நேரங்களில் அவள் விட்டலனின் ஆலயத்திலும் அபங்கங்களை இயற்றி பாடி அவனை மகிழ்விப்பாள். ஒரு நாள் ஆலயத்தில் விட்டலன் எதிரே ஜனா ஒரு புது அபங்கம் இயற்றி அதை பாடிக் காட்டினாள். 

"ஜனா இந்த அபங்கம் வெகு அருமையாயிருக்கிறது. நீ சொல்லிக்கொண்டே வா. நான் எழுதுகிறேன்" என்று அவள் பாடிக் கொண்டே வரும்போது அடி அடியாக விட்டலன் அதை எழுதிக் கொண்டு வந்தான். 

அந்த நேரம் பார்த்து ஞானதேவர் ஆலயத்திற்குள் நுழைந்தவர் தூரத்திலிருந்தே ஆனந்தமாக ஜனாவின் அபங்கத்தை ரசித்துக் கொண்டே வந்தார்.  

உள்ளே நுழைந்த ஞானதேவர் ஜனா பாடிக்கொண்டிருப்பதையும் விட்டலன் அவரைக்கண்டதும் தன கையை பின்னால் , மறைத்துக்கொண்டு சிரிப்பதையும் பார்த்தார். அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது

"விட்டலா என்ன செய்துகொண்டிருந்தாய்?

"ஒன்றுமில்லையே"

"என்னைக்கண்டதும் ஏதோ பின்னால் மறைத்தாயே ?

" அதுவா? ஜனா அபங்கம் ஏதோ புதியதாக பாடினாள், அதை எழுதிக்கொண்டிருந்தேன்."

"ஞானதேவர் இடி இடி என்று சிரித்தார் உடம்பு குலுங்க. என்னது, ஜனா அபங்கம் இயற்ற நீ அதை ஸ்ரத்தையாக எழுதினாயா?

"இதில் சிரிக்க என்ன இருக்கிறது?

"விட்டலா, ஜனா ஒரு குழந்தை. வாயைத் திறந்தாலே உன்னைப்புகழ்வது ஒன்று தான் அவள் வேலை. அவள் அபங்கம் உன்னையே புகழ்ச்சியாக பாடியதாக இருக்குமே.  

உன்னைப் பற்றிபுகழ்ச்சியாகப் பாடியதை நீயே எழுதிக் கொண்டிருந்தாயா ?

" ஆம். ஞானதேவ். அவள் இயற்றிய இந்த அபங்கம் மிகவும் உண்மையான அன்பினால் மனத்தூய்மையோடு உருவானது. எனவே தான் என்னைக் கவர்ந்தது."

"அது சரி உன்னை ப்பற்றி இன்னும் எத்தனை எத்தனையோ பேர் எல்லாம் பாடி இருக்கிறார்களே அவற்றையெல்லாம் நீ ஏன் எழுதிக்கொள்ளவில்லை?" 

"நல்ல கேள்வி கேட்டாய் ஞானதேவ். எவ்வளவோ கை தேர்ந்த சித்திரக்காரர்கள் வரைந்த விலையுயர்ந்த சித்திரங்கள் இருந்தும், ஒரு தாய்க்கு தனது சிறு குழந்தை குழந்தை கஷ்டப்பட்டு தான் தீட்டியதாக கொண்டு தரும் ஒரு கிறுக்கல் ஓவியம் தான் மிக்க சந்தோஷத்தை அளிக்கும் என்பதை நீ எவ்வளவு சுலபத்தில் மறந்து விட்டாய் பார்த்தாயா?".

"விட்டலா, பாண்டுரங்கா, பிரபோ" என்பதற்கு மேல் வார்த்தை எழவில்லை ஞானதேவுக்கு.

விட்டலனைக் கொள்ளை கொண்ட ஜனாபாய் இயற்றிய அபங்கங்கள் அவளது அடி மனத்திலிருந்து எழும்பிய ஆழ்ந்த பக்தியைக்கொண்டு ஆசை ஆசையாக விட்டலனுக்கு அற்பணித்தவை அல்லவா? இதனால் தான் இறைவன் வேண்டுவோர்க்கு வேண்டியவனாகிறான்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...