Skip to main content

*மார்கழி மஹான்கள்*

Thanks to : 
திருமலை சீனிவாசன்.
 மேற்கு மாம்பலம்.



*27.12.2021.*

 *ஸ்ரீபக்த கோமாபாய்*


*பக்திக்கு ஆண் என்ன பெண் என்ன!  பகவான் இதையெல்லாம்* *பார்ப்பதில்லை.பகவான்  மனிதனில் பிரிவு பார்க்க மாட்டார்.*ஆணுக்கு ஒரு நியதி பெண்ணுக்கு ஒரு நியதி கிடையாது.** *பக்தியைக் தான் கவனிப்பார். ஏழையோ பணக்காரனோ ஆணோ பெண்ணோ என்பதைக் கவனிக்க மாட்டார்.* *பக்தி மட்டும் தான் அடிப்படை.*
*பக்திக்கு தான் மரியாதை.*

கேரளத்தில் ஒரு குரூர அம்மைப் போல் மஹாராஷ்டிராவில் ஒரு கோமாபாய். இளம் வயதில் தாய் தந்தை இழந்து பின் கணவனை இழந்த கோமாபாய் பாண்டு ரெங்கனின் பரம பக்தை.ஏழை! *ஏழைக்கு தான் நல்ல பக்தி வருமோ!ஊழ்வினைப் பயனால் கஷ்டம் வந்தாலும் பாண்டு ரெங்கனிடம் பரம பக்தி! அதுவும் ஊழ்வினையில் ஒரு நல் வினையோ!*

ஒருமுறை ஏகாதசி தினம் வந்தது! 
பண்டரிபுரம் செல்ல வேண்டும். பாண்டு ரெங்கனை தரிசனம் செய்ய வேண்டும்.  நடந்து சென்றாள்  கோமா பாய். சந்திரபாகா நதியை அடைந்து விட்டாள். ஓடத்தில் ஏறி மறு கரை செல்ல வேண்டும். *ஏழை. பாவம் என்ன செய்வாள்!*
ஓடக்காரனிடம் தன்னிடம் கொஞ்சம் ரொட்டி மாவு இருக்கிறது தருகிறேன். என்னை மறு கரை சேர்த்துவிடு என்றாள். அவனோ பணம் தந்தால் ஓடத்தில் ஏறலாம். இல்லையென்றால் ஓடத்தில் இடமில்லை. *வாழ்வு எனும் சாகரத்தில் நாம் கரை சேர வேண்டும்.* *அதற்குத்தானே பாண்டு ரெங்கனை தரிசனம். ஆனால் இக்கரையில் நின்ற அக்கரை செல்ல முடியவில்லை. ஏழை* *என்றால் ஏளனம். பணக்காரனுக்கு ஓடத்தில் பயணம்!*

மனிதர்களில் தான் எத்தனை வேறுபாடுகள்! ஓடக்காரன் காலை பிடித்து கெஞ்சினாள். அவன் உதறினான். கோமா பாய் கோபம் கொள்ளாமல் பாண்டு ரெங்கனை  கரையிலிருந்து காண கதறினாள். பாண்டு ரெங்கன் பக்தையின் கூக்குரலுக்கு செவி சாய்த்தான். 

அந்த கரையில் ஒரு ஓடக்காரன் வந்தான். "வாம்மா வா! சீக்கிரம்! கடைசி சவாரி! வா!" என்றான். ஓடத்தில் கோமாபாய் ஏறினாள். சந்திரபாகா நதியை கடந்து கரையில் இறங்கினாள். திரும்பி பார்க்க ஓடமுமில்லை. ஓடக்காரனுமில்லை. *மாயக்காரன் பாண்டு ரெங்கன் பெரிய ஓடக்காரன் அல்லவா!*

அன்று காலை நதியில் குளித்தாள். பாண்டு ரெங்கனை நன்றாக தரிசித்தாள். பஜனையில் கலந்து கொண்டாள். ஏகாதசி அவளுக்கு விரதமும் விட்டலலின் நாம ஜபமும் நன்றாக அமைந்தது. மறுநாள் துவாதசிக்கு அதிதிக்கு காத்திருந்தாள். ஏழை என்பதால் யாரும் அவளை கண் எடுத்து கூடப் பார்க்கவில்லை! பாண்டு ரெங்கா!  பாண்டு ரெங்கா!
மனம் அழைத்துக் கொண்டிருந்தது. முதலில் ஒரு ஏழை பிராமணன் வடிவில் ஒருவர் வந்தார். பசிக்கிறது என்றார். கோமா பாய் சுள்ளி சேர்த்து நெருப்பு மூட்டி ரொட்டி செய்தாள். அதை அவளிடம் உண்ணச் சொல்ல, சிறிது நேரம் கழித்து புதிய மூதாட்டி ஒருத்தி வந்தாள். " ஸ்வாமி உங்களை எங்கு தேடுவது! என்னை விட்டு தனியாக எப்படி வந்து இங்கு சாப்பிடலாம்?" என்று கேட்டாள். அவளும் உண்ண  பக்த கோமா பாய் ரொட்டிகள் கொடுத்தாள்.

பக்த கோமா பாய் மனம் மகிழ்ந்தாள்.தம்பதியருக்கு துவாதசி பாரணை அளிக்கும் பெரும் பாக்யம் கிடைத்ததே என மகிழ்ந்தாள்.
அருந்திய பின் ருக்மணி சமேத பாண்டு ரெங்கன் காட்சியளித்தார். கோமா பாய் நிலத்தில் விழுந்து வணங்கினாள்.
திருநாமங்களை சொல்லி உருகினாள்.

பண்டரீபுரத்தில்  பல காலம்  தங்கி  பாண்டு ரெங்கன் பாமாலை ஜபித்து முடிவில் பாண்டு ரெங்கனுடன் ஐக்கியமானாள்.

*உண்மையான ஏழையின் பக்தி வெல்லும்.*


Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...