Wednesday 24 August 2022

💥பிள்ளை லோகாச்சர்யர் -இவர் மொத்தம் 18 கிரந்தங்களை இயற்றியவர்.💥


🌹 இவர் உண்மையில் காஞ்சி தேவபெருமாளின் அவதாரம்.

🌹 பிள்ளை லோகாச்ரயரின் தகப்பனார் வடக்கு திருவீதிப்பிள்ளை. இவர் நம்பிள்ளையின் சீடர்.

🌹 பிள்ளை லோகாச்சர்யர் அவதார வருஷம் 1205 AD

🌹 மோக்ஷ ப்ராப்தி அடைந்த வருஷம் 1311 AD

🌹 பிள்ளை லோகாச்ரயரின் அவதார ரகசியம் :

🌹 காஞ்சி தேவபெருமாள் ஒரு சமயம் மணர்பாக்கம் நம்பி என்றவரின் கனவில் தோன்றி சில முக்கியமான, உயர்ந்த ரகஸ்யங்களை அருளிவிட்டு சென்றதாவகவும், 

🌹 ஸ்ரீரங்கன் போய் வசிக்க வேண்டும் என்றும், பின்னொருநாள் தானே வந்து மேலும் சில அர்த்தங்களை விளக்குவதாகவும் கூறி விட்டு மறைந்தார்.

🌹 மணர்பாக்கம் நம்பியும் ஸ்ரீரங்கம் வந்தடைந்து ஒரு சிறு கோவிலை நிர்மாணித்து வழிபட்டு வந்தரர். ஒரு நாள், அந்த சிறு கோவிலுக்கு பிள்ளை லோகாச்சர்யர் தமது சிஷ்யர்களுடன் வழிபட வந்தார்.

🌹 அப்பொழுது, பிள்ளை லோகாசார்யர் தமது சிஷ்யர்களுக்கு உபதேசித்த சில ரஹஸ்யங்கள், மணர்பாக்கம் நம்பிகளின் காதில் விழுந்தன.

🌹 இதுதான் காஞ்சி தேவப்பெருமாள் தனக்கு உபதேசித்த விஷயங்கள் என்று தெரிந்துகொண்டார்.

🌹 உடனே அவர் பிள்ளை லோகாச்சரயரிடம், "அவரோ நீர்?" என்று கேட்டார். பிள்ளை லோகாசார்யரும் "ஆம்" என்று விடையளித்தார். 

🌹 அன்று முதல், மணர்பாக்கம் நம்பிகள் பிள்ளை லோகாசார்யரின் சீடர்ஆனார். 

🌹 பின்னொரு சமயம், முகமதியர்கள் ஸ்ரீரங்கம் கோவிலை கொள்ளையடிக்க வந்தனர். 

🌹 இதை கேள்விப்பட்ட பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளின் சந்நிதியை செங்கல் சுவர் கட்டி மறைத்துவிட்டு, வேறு ஒரு விக்ரஹத்தை, சுவரின் முன்னே வைத்துவிட்டு, 

🌹 நம்பெருமாளின் (உற்சவர்) விக்ரஹத்தை தூக்கிக்கொண்டு காட்டு வழியே தன சிஷ்யர்களுடன் ஓடினார்.

🌹 விழியில் திருடர்களிடம் அகப்பட்டுக்கொண்டு, நம்பெருமாளின் ஆபரணங்கள் அனைத்தையும் பறிகொடுத்தார். 

🌹 அதிர்ஷ்டவசமாக திருடர்கள் நம்பெருமாளை மட்டும் பிள்ளை லோகாசார்யரிடமே விட்டுவிட்டு சென்றார்கள்.

🌹 பின், அவர், தன சிஷ்யர்களுடனும், நம்பெருமாளின் விகரஹத்துடனும், ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை அடைந்து, உடல் நலம் குன்றியதால், அங்கேயே மோக்ஷம்அடைந்தார்.

💥 பிள்ளை லோகாசார்யரின் படைப்புகள்

🌹 முமுக்ஷுப்படி
🌹 யாத்ருச்சிகப்படி
🌹 ஸ்ரியப்பதிப்படி
பரந்தபடி
🌹 தனி சரமம்
🌹 தனி த்வயம்
🌹 தனி பிரணவம்
🌹 ஸ்ரீ வசன பூஷணம்
🌹 அர்த்த பஞ்சகம்
🌹 தத்வ சேகரம்
🌹 தத்வ த்ரயம்
🌹 அர்ச்சிராதி
🌹 பிரமேய சேகரம் -வியாக்யானம்
🌹 நவவித சம்பந்தம்
🌹 பிரபன்ன பரித்ரணம் - வியாக்யானம்
🌹 சாரா சங்க்ரகம்
🌹 நவரத்ன மாலை- வியாக்யானம்
🌹 சம்சார சாம்ராஜ்யம்
🌹 கத்யத்ரேய வியாக்யானம்

🌹 ஆச்சாரியர் திருவடிகளே சரணம் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ🌹

No comments:

Post a Comment