Skip to main content

நாமமே பலம் நாமமே சாதனம்

ஹரி நாமம்
திருதிராஷ்டிரன் ” நீ இன்னும் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்வரூபத்தையும் அவருடைய பெயர்களின் ரகசியத்தையும் எனக்கு கூறு என்று கேட்டுக் கொண்டார்.
சஞ்சயன் “நான் மாமுனிவர்களின் வாய் மூலம் ஸ்ரீ கிருஷ்ணரின் பல பெயர்களின் காரணத்தை கேட்டிருக்கிறேன். அவற்றில் எனக்கு நினைவிலிருப்பதைக் கூறுகிறேன், அந்த அனந்தனுடைய பெயர்களும் அனந்தம்(எண்ணற்ற ) உண்மையில் எந்த ப்ரமானத்திர்க்குமான விஷயமல்ல.

“தேவர்களுக்கும் கூட பிறப்பிடமானவராகவும், எல்லாவற்றையும் தன் மாயையினால் மறைத்து விடுவதாலும் அவர் வாசுதேவன் ஆவார்.

எங்கும் நிறைந்த பரம் பொருளாய், பெரியவராய் இருப்பதால் அவரை விஷ்ணு என்று கூறுகிறார்கள்.

மௌன – தியானத்தாலும் யோகத்தாலும் அடையத் தக்க காரணத்தால் அவர் மாதவன் என அழைக்கப் படுகிறார்.

மதுவென்னும் அரக்கனை வதைத்த காரணத்தால் அவருக்கு மதுசூதனன் என்னும் பெயர் வழங்கப்படுகிறது.

க்ருஷ எனும் வினைச் சொல்லின் மூல உருவத்தின் பொருள் இருப்பு என்பதாகும் ‘ண’ ஆனந்தத்தைக் குறிக்கும் சொல். ஆனந்தத்திற்கு இருப்பிடமான காரணத்தால் அவர் யது குலத்தில் அவதரித்த பிரபு கிருஷ்ணனன் ஆவார்.

இதய புண்டரீகமே அவரது நித்யதாம வாசஸ்தலம். ஆகவே அவர் புண்டரிகாஷன்.

துஷ்டர்களை அடக்குவதால் அவர் ஜனார்தனன்.

சத்வ குணத்திலிருந்து அவர் ஒருபோதும் வழுவாதிருப்பதால் அவர் சாத்வதன் ஆவார்.

ஆர்ஷ உபநிஷத்துக்களின் மூலம் ஒளி விட்டு பிரகாசிப்பதன் மூலம் அவர் ஆர்ஷபர் ஆவார்.

வேதங்களே அவரது கண்கள், ஆகவே வ்ருஷபேஷனர் என அழைக்கப் படுகிறார்.

எந்த பிறப்புள்ள பிராணிகளிடமிருந்தும் தோன்றாததால் அவர் அஜர்!

வயிறு முதலான எல்லா இந்த்ரியங்களையும் ஒளி பெறச் செய்பவரும் (பெருமையுடைய ) அவற்றை அடக்குபவருமாதலால் அவரது பெயர் தாமோதரன் என்பதாகும்

வ்ருத்தி சுகமும், ஸ்வரூப சுகமும் ஹ்ருஷீக என பெயர் பெறும். இவற்றின் தலைவனாதலால் அவர் ஹ்ருஷிகேசன் என்று கூற படுகிறார்

தன் புஜங்களாலேயே புவி, ஆகாயம் எல்லாவற்றையும் தரிப்பதால் அவர் மஹாபாஹூ ஆவார்அவர் ஒருபோதும் (அதோ)கீழே இருப்பதில்லை ஆகவே அதோக்ஷஜன் ஆவார்

நரர்களின் அயன ஆச்ரயமாதலால் நாராயணன் ஆகிறார்.

எல்லாவற்றிலும் நிறைந்து எல்லாவற்றிற்கும் புகலிடமாய் உள்ளவரை புருஷன் என்கிறோம். அந்த புருஷனைக் காட்டிலும் சிறந்தவராதலால் அவரது பெயர் புருஷோத்தமன் ஆகும்.

சத் அசத் எல்லாவற்றின் தோன்றல், மீண்டும் லயத்துக்கு இடமான காரணத்தால் அவரே சர்வமும்.

ஸ்ரீ கிருஷ்ணன் சத்தியத்தில் நிலை பெற்றும், சத்யம் அவரில் நிலை பெற்றிருப்பதால் அவரே சத்யர்

உலகில் பரவியிருந்து ஒழுங்கை நிலை நாட்டுவதால் அவரே விஷ்ணு

எல்லோரையும் வெல்வதால் விஷ்ணு

நித்யமாயிருப்பதால் அனந்தன்

“கோ” அதாவது இந்த்ரியங்களை அறிந்தவராதலால் கோவிந்தன்

பீஷ்மர் சொல்லிய நாமங்களோ ஆயிரம்

ராம என்ற இரண்டழுத்தினால் இன்னலும் துன்பமும் பாபங்களும் சிதைந்து ஒழியும் என்கிறான் கம்பன்

பிரகலாதநோ “பகவானின் திருநாமத்திற்கு எத்தனை பாவங்களை போக்கக்கூடிய சக்தி உண்டோ, அத்தனை பாவங்களை நம்மால் செய்ய முடியவில்லை” என்று குறிப்பிட்டான்.

அப்பேர்பட்ட பகவானின் திருநாமங்களை ஜபித்து நாம் நற்கதியை அடைவோமாக.

இயன்ற வரையில் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொண்டே இறைவன் திருநாமத்தை ஜபம் செய்யவேண்டும். நாம ஜபம் கடவுள் சிந்தனையை உள்ளத்தில் தோற்றுவிப்பதற்கு மிகவும் சிறந்த எளிய ஒரு வழியாகும்.

இறைவனும் இறைவனின் திருநாமமும் ஒன்றேயாகும். அவை இணை பிரியாதவை, தனி தனியே பிரிக்க இயலாதவை.

நாம ஜபம் நம் வாழ்வில் அன்றாட வழக்கமாகட்டும்.

நாமமே பலம் நாமமே சாதனம்

ராம கிருஷ்ண ஹரி பாண்டுரங்க ஹரி.

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...