Skip to main content

சாட்சி சொன்ன தெய்வம்


வித்யா நகரை சேர்ந்த
வயதில் முதிர்ந்தவர் 
இவர் பெரும் செல்வந்தர் வடநாட்டு தலங்களை தரிசிக்க சென்றிருந்தார்.

இவரை போலவே திவ்ய தலங்களை காண வந்த அதே ஊரை சேர்ந்த
ஓர் இளைஞரின் நட்பு 
ஒரு தலத்தில் கிடைக்கிறது.

இருவரும் நிறைய தலங்களை காண்கின்றனர்.

காசி கயா பிராயகை முதலான தலங்களை தரிசித்துவிட்டு பிருந்தாவனம் வந்தனர்.

திடீரென ஓர் நாள் பெரியவருக்கு நோய் பீடித்தது. 

படுத்த படுக்கையான முதியவரை
பல நாட்கள் இளைஞர் தூங்காமல் கவனித்து கொண்டார்.

முதியவரின் நோய் குணமானதும்,
முதியவர் தனது மகளை அந்த இளைஞருக்கு திருமணம் செய்து தருவதாக சொன்னார்.

இளைஞரோ நான் எவ்வித எதிர்பார்ப்புமின்றியே செய்தேன்,
அடியவர்களுக்கு சேவை செய்வது அந்த அனந்தனுக்கு செய்யும் சேவையாக நினைத்தே செய்தேன் என்றார்.

முதியவரோ,
நீ ஏழையாக இருந்தாலும் 
நான் வாக்கு தவற மாட்டேன், 
என கிருஷ்ணனுக்கு முன் சத்தியம் செய்தார்.

முதியவரும் இளைஞரும் 
ஊர் வந்து சேர்ந்தனர்.

முதியவர் தனது குடும்பத்தாரிடம் 
தான் இளைஞனுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றி கூறினார்.

ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதனை ஏற்கவில்லை.

பெண் கேட்டு வந்த இளைஞன் துரத்தப்பட்டான்,

ஊர் பஞ்சாயத்தை கூட்டினான் இளைஞன்.

பெரியவரோ குடும்பத்தின் நெருக்கடியில் 
தான் அப்படி சொன்னதாக ஞாபகம் இல்லை என்றார்.

சாட்சி ஏதாவது இருக்கிறதா என பஞ்சாயத்தார்கள் கேட்டனர்.

அந்த கோபாலனே சாட்சி என்றான் இளைஞன்.

அந்த கோபாலனை அழைத்து வாருங்கள் 
தீர்ப்பு சொல்கிறோம் என்றனர்.

பிருந்தாவனம் வந்தான் 
கோபாலனிடம் 
எனக்கு அவர் மகளை மணக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை 
ஆனால் அவர் உன் முன்னால் அளித்த வாக்கு பொய்யாகி விடக்கூடாதல்லவா ,
ஆகையால் நீ என்னுடன் வர வேண்டும்
வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்றான்.

கிருஷ்ணர் ஊர் விட்டு ஊர் வந்து சாட்சி சொல்வது நடவாத காரியம் என பலவாறு அங்கே வராமல் இருக்க வழி தேடினார்.

ஆனால் இளைஞர் முடிவாக நீ வர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

கடைசியாக 
கிருஷ்ணர் அந்த இளைஞனிடம் 
நீ முன்னே திரும்பி பார்க்காமல் போக வேண்டும் 
உன் பின்னே நான் வந்து கொண்டே இருப்பேன்.
கால் கொலுசுகளின் சத்தமும் உனக்கு கேட்டுக்கொண்டே இருக்கும்.

நீ எப்போது திரும்பி பார்க்கிறீயோ
அங்கேயே நான் இருந்துவிடுவேன் என்றார்.

இளைஞன் முன்னே செல்ல 
கிருஷ்ணர் பின்னேயே சென்றார்.

கொலுசு சத்தம் கேட்டபடி இருந்தது.

பிருந்தாவனத்தில் இருந்து பல நாட்கள் நடந்து 
அந்த குறிப்பிட்ட கிராம எல்லைக்கு வந்தனர்.

பெரிய மணல் மேடு ஒன்று இருந்தது.
அதில் கால் வைத்து நடந்தனர்.

கொலுசில் மண் ஏறியதால் கொலுசு சத்தம் கேட்காமல் போனது,
இளைஞர் கொலுசு சத்தம் வராததால்
திரும்பி பார்த்தார்.
சிரித்தபடி நின்றிருந்த கிருஷ்ணர் 
ஓளி வீசும் சிலையாக மாறி நின்றார்.

இதனை கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் 
இறைவனை வந்து தொழுதனர்.

முதியவர் தனது குடும்பத்தோடு வந்து 
இறைவனின் காலில் விழுந்து வணங்கினார்.

இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் முதியவர்.

இறைவன் சாக்ஷி கோபால் என ஆனார்.
ஊரும் சாக்ஷி கோபால் ஆனது.
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் இருந்து 3 km தொலைவில் உள்ளது ஆலயம்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...