Friday 27 October 2023

இந்த 25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள்

ஸ்ரீ பாஞ்சராத்ர  ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest )  கீழ்கண்ட நபர்களை தீக்சை செய்யவேண்டும் (இவர்கள் அனைவரும் நிரந்தரமாக கோயிலில் பெருமாள்  கைங்கரியம் செய்யவேண்டும் )
1) ஆசார்யன் - கர்சனதிப் பிரதிஷ்டைவரை  செய்பவர் 

2) அர்ச்சகர்  - உதவி அர்ச்சகர் ( Helper )

3)சன்னதிபரிசாரகர்  - பெருமாள் பாத்திரத்தை சுத்தம் செய்பவர்  மற்றும் திருமணி கைங்கரியம் செய்பவர்   மற்றும் பெருமாளுக்கு தேவையான சந்தனாதி திரவியங்களை தயார் செய்து வைப்பவர் மற்றும் அர்ச்சகருக்கு தேவையான உதவி செய்பவர்.

4) பரிசாரகர் (மடப்பள்ளி)  -  பெருமாளுக்கு தேவையான நித்யபடி மற்றும் அதிகப்படி உத்ஸவ காலங்களில்        பொறுப்புடன் பெருமாள் தளிகை செய்பவர். 

5) பிசக் (Dr)  - கோயில் அர்ச்சகருக்கு மருத்துவம் பார்ப்பவர் 

6) தைவக்ஞ்யன் ( Astrologer ) - கோயிலுக்கு ஜோதிடம் பார்ப்பவர் , உத்ஸவத்திற்கு  மற்றும் பிரதிஷ்டைக்கு ( கும்பாபிஷத்துக்கு  லக்கனம் மற்றும் முகூர்தம் வைத்து தருபவன் 

7) கர்மஹ:   நாவிதன்  ( சவரர் செய்பவன் )

8)குலால: கோயிலுக்கு தேவையான மண்பாண்டம் செய்பவன் (கலசம்)

9) பார்சவ: டவன்டை அடிப்பவன்.

10) வ்யாத:  வாத்தியம் தயார் செய்பவன்.

11) தந்துவாய:  நாதஸ்வரம் வாசிப்பவன்.

12) கோப: மாட்டை மேய்ப்பவன் ( பசுவை ரட்சிப்பவன் )

13) மாஹீச: எருமை மேய்ப்பவன் (  எருமை பால் கறப்பவன் )

14) கரிபந்தந:  யானைக்காரன் ( யானையை பார்த்துக்கொள்பவன் )

15)சூளிக: ஆயுதம் இரும்பு வேலை செய்பவன்.

16) மணிவித்ரய: பத்தன் ( தங்கம் வேலை செய்பவன் ஆசாரி )

17) புஷ்பகார :  மாலை கட்டுபவர்.

18) மாளவக:  குதிரையை ரட்சிப்பவன் 

19) சூத: வஸ்திரம்  பார்த்துக்கொள்பவன் ( சலவை ரூம் )

20) சண்டாள:  உத்ஸவம் மற்றும் மற்ற கோயில் வைபவங்களை மக்களுக்கு கூறுபவன்.

21) நத்தக: நாட்டியம் ஆடுபவன் .

22) பெளராணிக: புராணம் சொல்பவன் 

23) தக்ஷ:  ஸ்தபதி 

24) ரதகார: வாகனம் செய்பவன் 

25) தைலிக: எண்னை காப்பு தயார் செய்பவன் 

இவர்கள்  25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள் அனைவருக்கும் ப்ரதான அர்ச்சகர் தீக்சை செய்யவேண்டும்.

Thanks to சக்கரபாணி பட்டாச்சியர்

இப்படிக்கு,
R. சக்கரபாணி பட்டாச்சியர்,
திருக்குடந்தை,
9566206189.

No comments:

Post a Comment