Sunday 1 September 2024

உபயதாரர்களுக்கு ஓர் விண்ணப்பம்

அனுதினமும் இரண்டு காலம் திருவாராதனம் நடைபெறும் இளங்காடு கண்ணன் திருக்கோயிலுக்கென எவ்விதமான அசையும் அசையா சொத்துக்கள் இல்லை மெய்யன்பர் வழங்கும் நன்கொடைகள் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன. 

அரசாங்கத்திற்கு உட்படாத சிறிய கிராமத்தில் இருக்கும் கண்ணபிரானின் திருக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை திருப்பாவை கோஷ்டி சேவை மற்றும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும் வெள்ளிகிழமை தோறும் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

மாதந்தோறும் ரோகிணி திருநட்சத்திரத்தில் கண்ணபிரானுக்கும் , திருவோணம் திருநட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கும், உத்திரம் திருநட்சத்திரத்தில் தாயார்களுக்கும்,மூலம் திரு நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும் மற்றும்  சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

வருடந்தோறும் சித்திரை வருடப் பிறப்பு அன்று திருமஞ்சனம் மற்றும் பஞ்சாங்க படனம் நடைபெறும்.

சித்திரை முழுநிலவு நாளில் சத்ய நாராயண பூஜை நடைபெறும்.

ஆடிப்பெருக்கு திருமஞ்சனம்.

திருவாடிப்பூரம் சிறப்பு திருமஞ்சனம்.

கருட நாக பஞ்சமி திருமஞ்சனம்.

கண்ணன் திருஅவதார வைபவம் (கிருஷ்ண ஜெயந்தி).

ஹயக்ரீவர் ஜெயந்தி.

புரட்டாசி சனிக்கிழமை தோறும் சிறப்பு திருமஞ்சனம்.

நவராத்திரி உற்சவம்.

தீபாவளி திருநாள் சிறப்பு திருமஞ்சனம்.

பாஞ்சராத்ர தீபம் சிறப்பு வழிபாடு.

தனுர் மாச பூஜை.

நாச்சியார் திருக்கோலம் மற்றும் வைகுண்ட ஏகாதசி உற்சவம்.

பொங்கல் திருநாள் புறப்பாடு.

பங்குனி உத்திரம்.

போன்ற உற்சவங்கள் என அனைத்தும் அன்பர் உபயமே ஆகையால் தாங்கள் விரும்பும் ஏதேனும் உபயத்தை ஏற்று உங்கள் வம்சம் தோறும் செய்து கண்ணபிரானின் திருவருளால் வாழிய வாழியவே!

மாதந்தோறும் புஷ்ப கைங்கர்யத்திற்கு ரூபாய்.1500/-

ஒரு திருமஞ்சனம் புஷ்ப கைங்கர்யத்திற்கு ரூபாய்.600/-

ஒரு மாத திருவிளக்கீடு கைங்கர்யத்திற்கு ரூபாய்.2000/-

ஒரு திருமஞ்சனம் உபயம் செய்ய ரூபாய்.1200/-

கட்டளை அர்ச்சனை வருடத்திற்கு ரூபாய்.750/-

நித்ய படி திருவாராதன உபயம் ஒரு மாதத்திற்கு ரூபாய்.3000/- (ஆண்டிற்கு ஒருமுறை)

தாங்கள் ஏதேனும் ஒரு உபயத்தை ஏற்க விருப்பமா

https://whatsapp.com/channel/0029VaAZdBN1NCrPQCLkQt0Z

No comments:

Post a Comment