Skip to main content

உபயதாரர்களுக்கு ஓர் விண்ணப்பம்

அனுதினமும் இரண்டு காலம் திருவாராதனம் நடைபெறும் இளங்காடு கண்ணன் திருக்கோயிலுக்கென எவ்விதமான அசையும் அசையா சொத்துக்கள் இல்லை மெய்யன்பர் வழங்கும் நன்கொடைகள் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன. 

அரசாங்கத்திற்கு உட்படாத சிறிய கிராமத்தில் இருக்கும் கண்ணபிரானின் திருக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை திருப்பாவை கோஷ்டி சேவை மற்றும் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனமும் வெள்ளிகிழமை தோறும் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

மாதந்தோறும் ரோகிணி திருநட்சத்திரத்தில் கண்ணபிரானுக்கும் , திருவோணம் திருநட்சத்திரத்தில் ஹயக்ரீவருக்கும், உத்திரம் திருநட்சத்திரத்தில் தாயார்களுக்கும்,மூலம் திரு நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும் மற்றும்  சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகின்றன.

வருடந்தோறும் சித்திரை வருடப் பிறப்பு அன்று திருமஞ்சனம் மற்றும் பஞ்சாங்க படனம் நடைபெறும்.

சித்திரை முழுநிலவு நாளில் சத்ய நாராயண பூஜை நடைபெறும்.

ஆடிப்பெருக்கு திருமஞ்சனம்.

திருவாடிப்பூரம் சிறப்பு திருமஞ்சனம்.

கருட நாக பஞ்சமி திருமஞ்சனம்.

கண்ணன் திருஅவதார வைபவம் (கிருஷ்ண ஜெயந்தி).

ஹயக்ரீவர் ஜெயந்தி.

புரட்டாசி சனிக்கிழமை தோறும் சிறப்பு திருமஞ்சனம்.

நவராத்திரி உற்சவம்.

தீபாவளி திருநாள் சிறப்பு திருமஞ்சனம்.

பாஞ்சராத்ர தீபம் சிறப்பு வழிபாடு.

தனுர் மாச பூஜை.

நாச்சியார் திருக்கோலம் மற்றும் வைகுண்ட ஏகாதசி உற்சவம்.

பொங்கல் திருநாள் புறப்பாடு.

பங்குனி உத்திரம்.

போன்ற உற்சவங்கள் என அனைத்தும் அன்பர் உபயமே ஆகையால் தாங்கள் விரும்பும் ஏதேனும் உபயத்தை ஏற்று உங்கள் வம்சம் தோறும் செய்து கண்ணபிரானின் திருவருளால் வாழிய வாழியவே!

மாதந்தோறும் புஷ்ப கைங்கர்யத்திற்கு ரூபாய்.1500/-

ஒரு திருமஞ்சனம் புஷ்ப கைங்கர்யத்திற்கு ரூபாய்.600/-

ஒரு மாத திருவிளக்கீடு கைங்கர்யத்திற்கு ரூபாய்.2000/-

ஒரு திருமஞ்சனம் உபயம் செய்ய ரூபாய்.1200/-

கட்டளை அர்ச்சனை வருடத்திற்கு ரூபாய்.750/-

நித்ய படி திருவாராதன உபயம் ஒரு மாதத்திற்கு ரூபாய்.3000/- (ஆண்டிற்கு ஒருமுறை)

தாங்கள் ஏதேனும் ஒரு உபயத்தை ஏற்க விருப்பமா

https://whatsapp.com/channel/0029VaAZdBN1NCrPQCLkQt0Z

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...