Wednesday 19 May 2021

ஸ்ரீ வைஷ்ணவ சிம்மம்

நம் சம்பிரதாயத்தின் ஆகச் சிறந்த ஆளுமை #ஸ்ரீராமாநுஜர்.அவர் ஏற்படுத்தின சமய சீர்திருத்தம் இன்றளவும் உலகிலேயே மிக பிரசித்திமான மேலாண்மை கோட்பாடுகளை கொண்டது என பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 

 ஓர் புதிய கோட்பாட்டினை உண்டாகி அதனை தம் காலத்தில் முன்னெடுத்து, செயல்படுத்தி, வெற்றி கண்டு இன்றளவும் உலகில் தொடரச்செய்வது அசாத்தியம் என சிலாகிக்கின்றனர். மதங்களை கடந்தும் கொண்டுகின்றனர்.

ஆனால்,
நம் சம்பிரதாயத்தில் பலருக்கு அப்படி என்ன செய்தார் என்பதே தெரியவில்லை. இது தான் உண்மை.

அது தெரியாமல் போனதால் அதன் உன்னதம் புரியவில்லை. 

இத்தனைக்கும் பெரிய புத்தகம் எழுதிட வில்லை, காவியம் படைக்கவில்லை ஆனால்........

அவரே பெரும் காவியமாக வாழ்ந்து காட்டினார்.

பல மேலாண்மை யுக்தியை மதத்தில் புகுத்திய மஹாசார்யர் அவர்.அது தான் இன்றும் உலகத்தில் இயக்கத்தில் இருக்கும் ஓரே பெரிய கோவில் என்ற பெருமையை #ஸ்ரீ_ரங்கம்_ரங்கநாதர் கோவில் பெற்றுள்ளது. அது மாத்திரமல்ல அவர் அன்றைக்கு அந்தக்காலத்தில் என்ன ஏற்படுத்தி வைத்தாரோ அதுவே இன்றளவும் பழமை மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது ஸ்ரீ ரங்கத்தில் மட்டும்.   

நிர்வாகத்திறனுக்கு அவர் ஏற்படுத்தின பத்துக் கொத்து பரிவாரங்களும் அதற்கு உப துணையாக பத்துக்கொத்துமே சாட்சி.பெரிய கோவில் நிர்வாகம் மற்றைய எந்த கோவில் நிர்வாகம் போல் இல்லாமல் ஒரு தடங்கலும் வராமல் செம்மையாக நடைப்பெற்று வருகிறது இன்றளவும். 

வருடம் 365 நாளும் விழா நடக்கும் திவ்ய ஷேத்திரம் ஸ்ரீரங்கமாகத்தான் இருக்கும்.
அத்தனை உப கோவில்கள், உப சன்னதிகளை கொண்டது. ஆனாலும் ஒரு குழப்பமும் இல்லாமல் குறித்த நாழிகையில் இனிதே தொடங்கிடும். இதற்கென்றே தனி மணியக்கார சுவாமி உண்டு. அவ்வளவு துல்லியம்.

அதனால் தான்,
தென்னரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என தனிவாழி திருநாமமே உண்டு.

அதுபோல்,
சம்பிரதாய சொத்தான நம்மை வழிநடத்த 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தி தந்தார் என்பது சரித்திரம்.

#சீயம் என்பது நம்மாழ்வார் ஈரச்சொல்லால் எடுத்தாளப்பட்டது. சிங்கம் என்பது அதன் பொருள். தமிழில் சீயம் என்பதே ஜீயர் என்ற சமஸ்கிருத சொல்லானது. அவர் காலத்தில் 700 ஜீயர் ஸ்வாமிகள்,1600 யதிகள் பாரதம் முழுக்கவே இருந்தாக சொல்வர், 
ஆதலால் தான் அவரை #யதிராஜர் என்று கொண்டாடினர்.

அவர் அதில் 74 பேர்களை தேர்ந்தெடுத்து பட்டம் கொடுத்து, ஒவ்வொருக்கும் தனித்தனியான #திருவாராதனை_பெருமாள் கொடுத்து சமயப்பரிபாலனத்தை ஏற்படுத்தி வைத்தார்.

❣ஏன் 74????

👉வீராணம் ஏரி
எனச்சொல்லும் #வீரநாராயண ஏரியின் மதகுகளின் எண்ணிக்கையில் 74 உள்ளது.இந்த ஏரியின் ஓர் கரையில் காட்டுமான்னார் கோவில் உள்ளது.இங்கு அவதாரம் பண்ணினவர் தாம் #நாதமுனிகள். சம்பிரதாயத்தின் முதல் ஆச்சாரியர் . இன்று நமக்கு கிடைத்துள்ள #திராவிட_வேத சாகரமான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனப்படும் ஆழ்வார்களின் #அருளிச்செயல் கிடைத்தற்கு இவரே காரணம்.

அவர் ஞாபகார்த்தமாக, வீரநாராயண ஏரிக்கரையில் உள்ள மதகுகள் #74 எண்ணிக்கையில் சிம்மாசனாதிகளை ஏற்படுத்தி வைத்தார்.

நாதமுனிகள் பேரன் ஸ்ரீ ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி, அவர் குமாரர் என்னாச்சான்

#1. என்னாச்சான் குமாரர் பிள்ளை அப்பன்
#2. ஸ்ரீ பெரிய நம்பி குமாரர் ஸ்ரீ புண்டரீகர்

#3. திருக்கோட்டியூர் நம்பி தெற்காழ்வான்

#4. ஸ்ரீ திருமாலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையான்.

#5. ஸ்ரீ பெரிய திருமலை நம்பி குமாரர் ராமானுஜன் பிள்ளை திருமலை நம்பி.

#6. ஸ்ரீ கூரத்தாழ்வான் குமாரர் பட்டரும், சீராமப் பிள்ளையும்.

#7. ஸ்ரீ முதலியாண்டான், அவர் குமாரர் கந்தாடையாண்டான்.

#8. நடுவிலாழ்வான்
#9. கோமடத்து ஆழ்வான்

#10. திருக்கோவிலூர் ஆழ்வான்
#11. திருமோகூர் ஆழ்வான்
#12. பிள்ளை பிள்ளை ஆழ்வான்
#13. நடாதூர் ஆழ்வான்
#14. எங்கள் ஆழ்வான்
#15. அநந்தாழ்வான்

#16. மிளகாழ்வான்
#17. நெய்யுண்டாழ்வான்
#18. சேட்லூர் சிறியாழ்வான்
#19. வேதாந்தி ஆழ்வான்.
#20. கோவிலாழ்வாழ்வான்

#21. உக்கலாழ்வான்
#22. அரணபுரத்து ஆழ்வான்
#23. எம்பார்
#24. கிடாம்பி ஆச்சான்

#25. கணியனூர் சிறியாச்சான்
#26. ஈச்சப்பாடி ஆச்சான்
#27. கொங்கிலாச்சான்
#28. ஈச்சப்பாடி ஜீயர்

#29. திருமலை நல்லான்
#30. சட்டம்பள்ளி ஜீயர்
#31. திருவெள்ளறை ஜீயர்
#32. ஆட்கொண்ட வில்லி ஜீயர்

#33. திருநகரிப் பிள்ளான்
#34. காராஞ்சி சோமயாஜீயார்
#35.அலங்கான வேங்கடவன்
#36. நம்பிக்கருள் தேவர்
#37. சிறுப்பள்ளி தேவராஜ பட்டர்
#38. திருக்குருகைப் பிரான் பிள்ளாய்
#39. பிள்ளையுறந்தை உடையார்.

#40. பெரிய கோயில் வள்ளலார்.
#41. ஆசூரிப்பெருமாள்
#42. முனிப் பெருமாள்
#43. அம்மங்கிப் பெருமாள்.

#44. திருக்கண்ணபுரத்தரையர்

#45. மாருதிப்பெரியாண்டான்
#46. மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
#47. சோமாஜாயாண்டான்.
#48. ஜீயராண்டான்.
#49. ஈச்வராண்டான்
#50. ஈயுண்ணிப் பிள்ளையாண்டான்

#51. பெரியாண்டான்
#52. சிறியாண்டான்
#53. குறிஞ்சிபுரச் சிறியாண்டான்
#54. அம்மங்கியாண்டான்
#55. ஆளவந்தார் ஆண்டான்
#56. அருளாப்பெருமாள் எம்பெருமானார்

#57. தொண்டனூர் நம்பி
#58. மருதூர் நம்பி
#59. மழுவூர் நம்பி
#60. திருக்குறுங்குடி நம்பி
#61. குரவை நம்பி
#62. முடும்பை நம்பி
#63. வடுக நம்பி
#64. வங்கிபுரத்து நம்பி
#65. ஸ்ரீ பராங்குச நம்பி

#66. அம்மங்கி அம்மாள்
#67. பருத்திக்கொல்லை அம்மாள்
#68. உக்கலம்மாள்
#69. சொட்டையம்மாள்
#70. முடும்பையம்மாள்

#71. கொமாண்டூர் பிள்ளை
#72. குமாண்டூர் இளையவில்லி
#73. கிடாம்பிப் பெருமாள்.
#74. ஆர்க்காட்டுப் பிள்ளான்.

ஆக இவர்களே ஸ்ரீராமாநுஜரின்
#74_ஸிம்ஹாஸநாதிபதிகள்.( மேலே உள்ளது வரிசை பிரகாரம் அன்று., எண்ணிக்கை மாத்திரமே...)

👉முதலியாண்டானை தாஸரதி என்றே கொண்டாடுவர் . ஸ்ரீ ராமாநுஜர் இவருக்கு மாமா ஆகவேனும். கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் எனது தண்டம், பவித்திரம் என்றே சொன்னார் ஸ்ரீராமாநுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் என்பது பிரசித்தம்.

முதலியாண்டானுக்கு குமாரரோடு சேர்த்து 6 குமார்த்திகள். அதில் ஒருவர் தாம் #குமாண்டூர்_இளையவில்லி.(72 வதாக உள்ள..)

இத்பதவினை எழுதிடும் நாம் குமாண்டூர் இளையவில்லி குடும்பத்தின், 231 வது தலைமுறையை சேர்ந்தவன்.

ஸ்ரீ ராமாநுஜர் ஏற்படுத்தி வைத்திட்ட 74 சிம்மாசனாதிகளின் வம்சத்தவரான பலரும் இன்று உலகில் பல இடங்களில் வசிக்கின்றனர். இன்று வரை இவர்கள் 5000 பேர்வரையிலான எண்ணிக்கையில் உலகம் முழுவதும் உள்ளனர். ஆனாலும் சிம்மாசனபட்டத்தினை அவரவர் வழிவந்த பலரும் பலக்காரணங்களால் ஏற்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹா....💞💕...

Tuesday 18 May 2021

ஸ்ரீ_நரசிம்மர்_வழிபாடு


--------------------------------
1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.
2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும்
உண்டு.
.
7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.
.
11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்.

23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

Wednesday 12 May 2021

நவகிரக கோலங்கள்


👉 மஞ்சள் பொடியினாலும் ,அரிசி மாவினாலும் மட்டுமே போடுவது நல்லது .

👉 காவி பட்டை போட்டு கோலம் போடுவது சிவசக்தியை குறிக்கும்.

👉 மங்களமான நாட்களில் இதை போட வேண்டும்.

👉 ஒரு இழை கோலம் போட கூடாது .இரட்டை இழை கோலம் போடுவது மங்களம் சிறக்கும் .

👉 கோலங்களில் தெய்வீக யந்திரங்களுக்கு சமமான கோலங்களை பூஜை அறையில் மட்டுமே போடவேண்டும் .

👉 கோலத்தின் நான்கு மூலைகளிலும் போடும் தாமரையானது , திசை தெய்வங்களின் ஆசியை பெற்றுதரும் .வாசல் படிகளில் குறுக்கு கோடுகள் போடக் கூடாது

👉 நம்முடைய வாழ்வில் வரும் இன்ப ,துன்பம் அனைத்தும் நவகிரகங்களின் செய்கையால் நடக்கிறது .ஆதலால் நாம் ஒவ்வொரு தினத்திற்கும் உரிய நவக்கிரக கோலத்தினை பூஜையறையில் போட்டு நன்மை பெறுவோம் .

Monday 10 May 2021

உடையவர் ஒப்பம்

திருநாராயணபுரத்தில் கோவில் நடைமுறைகளை தன் திருகரங்கரால் எழுதி ராமானுஜர் கையப்பமிட்ட ஓலை இதே கையப்பமே தயிர்காரிக்கு மோட்ஷத்தை தந்தது. தனது 80 வயதில் எம்பெருமானார் இட்ட கையப்பம் இது.
மேல்கோட்டை சமஸ்க்ருத அகாடமி
திருநாராயணபுரம்,கர்நாடகா

Saturday 8 May 2021

நோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்


குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலையன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும்.

குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் பிரசித்தி பெற்ற தாணுமாலையசுவாமி கோயில் உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் என மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கும் இவ் ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் உள்ள 18 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் உடல் நோய்கள், கிரக தோஷங்கள் அகலும். 

செவ்வாய், சனி, மூல நட்சத்திர நாள், அமாவாசை நாட்களில் வெண்ணெய் சாத்தி வழிபடுவது உகந்தது. 

ஒவ்வொரு ஆண்டும் ஆஞ்சநேயர் ஜெயந்தி இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படும். 

ஆஞ்சநேயருக்கு களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடக்கும் .

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு எதிரே உள்ள ராமபிரானுக்கு புஷ்பாபிசேகம் நடக்கும். 

பின்னர் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கும். 

ஆஞ்சநேயரை வழிபட்டால் வாழ்வில் எல்லா வித துன்பங்களும் விலகும் என்பதால், மும்மூர்த்திகளை வணங்கி விட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயர் தரிசனம் செய்வதை வழக்கமாக உள்ளனர்.