Tuesday 29 June 2021

புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றி

புதன் ஷேத்திரம் திருவெண்காடு இன்று 30/6/2021 புதன்கிழமை புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra. குறைந்தது 36, 54 முறை சொல்லவும் தடைகள் யாவும் வெல்லவும் ஞானம் சித்திக்கவும் புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாக்ஷி கோவில், மற்றும் திருவாலங்காடு , சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
திருவெண்காடு புதன் திருவடிகளே போற்றி
புதன் திசை மற்றும் புதன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது புதன்
பகவானால் நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாக்ஷி கோவில், மற்றும் திருவாலங்காடு , சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
புதன் பகவான்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி

புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
Budha Gayatri (Gayatri for Mercury)
Om gajadhwajaaya vidmahae
sukha hastaaya dheemahi
tanno budha: prachodayaat
Om Somaputraaya vidmahe
mahaa pragnaaya dheemahi
tanno Budhan prachodayaat
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரக்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om Chandrasutaaya vidmahe
Sowmyagrahaaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om Atreyjaaya vidmahe
somaputraaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
புதன் 108 போற்றிகள்
ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி

 ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
ஓம் தேவனேபோற்றி
ஓம் தேரேறி வருபவனேபோற்றி
ஓம் நட்சத்ரேசனேபோற்றி
ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
ஓம் நாற்கரனேபோற்றி
ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
ஓம் நான்காமவனேபோற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
ஓம் பயிர்க் காவலனேபோற்றி
ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
ஓம் பித்தளை உலோகனேபோற்றி
ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
ஓம் புராணத் தேவனேபோற்றி
ஓம் புலவர் பிரானேபோற்றி
ஓம் புலமையளிப்பவனேபோற்றி
ஓம் பூங்கழலடியனேபோற்றி
ஓம் புண்ணியனேபோற்றி
ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
ஓம் பொன்னணியனேபோற்றி
ஓம் பொற்கொடியோனேபோற்றி
ஓம் பொன்மேனியனேபோற்றி
ஓம் பொன்னாடையனேபோற்றி
ஓம் போகமளிப்பவனேபோற்றி
ஓம் மணிமுடியனேபோற்றி
ஓம் மரகதப் பிரியனேபோற்றி
ஓம் மனோகரனேபோற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
ஓம் ரவி மித்ரனேபோற்றி
ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
ஓம் வள்ளலேபோற்றி
ஓம் வல்லபிரானேபோற்றி
ஓம் வாட்கரனேபோற்றி
ஓம் வடகீழ் திசையனேபோற்றி
ஓம் வாக்கானவனேபோற்றி
ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
ஓம் வித்தகனேபோற்றி
ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
ஓம் புத பகவானே போற்றிபோற்றி

 புதன் பகவான் திருவடிகளே போற்றி

திருவெண்காடு புதன் திருவடிகளே போற்றி

Friday 25 June 2021

இந்த லட்சுமி ஸ்தோத்திரத்தை படித்தால் வற்றாத செல்வ வளம் கிடைக்கும்

வற்றாத செல்வம் பெற இன்று  வெள்ளிக்கிழமை கட்டாயம் லட்சுமியை வழிபடுங்க
இந்த லட்சுமி ஸ்தோத்திரத்தை படித்தால் வற்றாத செல்வ வளம் கிடைக்கும்
ஓம் அகில லட்சுமியை நம:
ஓம் அன்ன லட்சுமியை நம:
ஓம் அலங்கார லட்சுமியை நம:
ஓம் அஷ்ட லட்சுமியை நம:
ஓம் அமிர்த லட்சுமியை நம:
ஓம் அமர லட்சுமியை நம:
ஓம் அனந்த லட்சுமியை நம:
ஓம் ஆனந்த லட்சுமியை நம:
ஓம் அபூர்வ லட்சுமியை நம:
ஓம் ஆதி லட்சுமியை நம:
ஓம் ஆத்ம லட்சுமியை நம:
ஓம் இஷ்ட லட்சுமியை நம:
ஓம் இன்ப லட்சுமியை நம:
ஓம் இதய லட்சுமியை நம:
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஈகை லட்சுமியை நம:
ஓம் உண்மை லட்சுமியை நம:
ஓம் உதய லட்சுமியை நம:
ஓம் உத்தம லட்சுமியை நம:
ஓம் உபாசன லட்சுமியை நம:
ஓம் ஊர்ஜித லட்சுமியை நம:
ஓம் எட்டு லட்சுமியை நம:
ஓம் ஏக லட்சுமியை நம:
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஒற்றுமை லட்சுமியை நம:
ஓம் ஒளி பிரகாச லட்சுமியை நம:
ஓம் ஓங்கார லட்சுமியை நம:
ஓம் ஒளதார்ய லட்சுமியை நம:
ஓம் ஒளஷத லட்சுமியை நம:
ஓம் ஒளபாஷன லட்சுமியை நம:
ஓம் கருணை லட்சுமியை நம:
ஓம் கனக லட்சுமியை நம:
ஓம் கபில லட்சுமியை நம:
ஓம் கலச லட்சுமியை நம:
ஓம் கல்யாண லட்சுமியை நம:
ஓம் கந்த லட்சுமியை நம:
ஓம் கஸ்தூரி லட்சுமியை நம:
ஓம் சந்தான லட்சுமியை நம:
ஓம் சங்கு லட்சுமியை நம:
ஓம் சக்கர லட்சுமியை நம:
ஓம் சர்வ லட்சுமியை நம:
ஓம் சந்தோஷ லட்சுமியை நம:
ஓம் சரச லட்சுமியை நம:
ஓம் சகல லட்சுமியை நம:
ஓம் ஞான லட்சுமியை நம:
ஓம் தர்ம லட்சுமியை நம:
ஓம் தன லட்சுமியை நம:
ஓம் தவ லட்சுமியை நம:
ஓம் நவ லட்சுமியை நம:
ஓம் தான லட்சுமியை நம:
ஓம் வைர லட்சுமியை நம:
ஓம் நீல லட்சுமியை நம:
ஓம் முத்து லட்சுமியை நம:
ஓம் பவள லட்சுமியை நம:
ஓம் மாணிக்க லட்சுமியை நம:
ஓம் மரகத லட்சுமியை நம:
ஓம் கோமேதக லட்சுமியை நம:
ஓம் பதுமராக லட்சுமியை நம:
ஓம் வைடூரிய லட்சுமியை நம:
ஓம் பிரம்ம லட்சுமியை நம:
ஓம் விஷ்ணு லட்சுமியை நம:
ஓம் சிவ லட்சுமியை நம:
ஓம் க்ஷேம லட்சுமியை நம:
ஓம் ஜோதி லட்சுமியை நம:
ஓம் தீப லட்சுமியை நம:
ஓம் தீன லட்சுமியை நம:
ஓம் தீர்த்த லட்சுமியை நம:
ஓம் திவ்விய லட்சுமியை நம:
ஓம் தான்ய லட்சுமியை நம:
ஓம் வீர லட்சுமியை நம:
ஓம் வித்யா லட்சுமியை நம:
ஓம் விஜய லட்சுமியை நம:
ஒம் விபுல லட்சுமியை நம:
ஓம் விமல லட்சுமியை நம:
ஓம் ஜெய லட்சுமியை நம:
ஓம் கெஜ லட்சுமியை நம:
ஓம் வர லட்சுமியை நம:
ஓம் மகா லட்சுமியை நம:
ஓம் வேணு லட்சுமியை நம:
ஓம் பாக்கிய லட்சுமியை நம:
ஓம் பால லட்சுமியை நம:
ஓம் பக்த லட்சுமியை நம:
ஓம் பாமர லட்சுமியை நம:
ஓம் புவன லட்சுமியை நம:
ஓம் புனித லட்சுமியை நம:
ஓம் புண்ணிய லட்சுமியை நம:
ஓம் பூர்ண லட்சுமியை நம:
ஓம் பூமி லட்சுமியை நம:
ஓம் சோபித லட்சுமியை நம:
ஓம் ராம லட்சுமியை நம:
ஓம் சீதா லட்சுமியை நம:
ஓம் சித்த லட்சுமியை நம:
ஓம் சிங்கார லட்சுமியை நம:
ஓம் ஸ்வர்ண லட்சுமியை நம:
ஓம் நாக லட்சுமியை நம:
ஓம் யோக லட்சுமியை நம:
ஓம் போக லட்சுமியை நம:
ஓம் கோமள லட்சுமியை நம:
ஓம் மாதா லட்சுமியை நம:
ஓம் பிதா லட்சுமியை நம:
ஓம் குரு லட்சுமியை நம:
ஓம் தெய்வ லட்சுமியை நம:
ஓம் தாமரை லட்சுமியை நம:
ஓம் நித்திய லட்சுமியை நம:
ஓம் சாந்த லட்சுமியை நம:
ஓம் ரத்தின லட்சுமியை நம:
ஓம் பிரசன்ன லட்சுமியை நம:
ஓம் மங்கள லட்சுமியை நம:

"ஸ்ரீ மகா லட்சுமி தாயார் திருவடிகளே சரணம் "

Friday 18 June 2021

ஸ்ரீராம தரிசனப் பலன் தரும் அணில்.


இறைவனுடைய அற்புதமான, சிறப்புப் படைப்புகளில் ஒன்றே அணில் ஆகும். மனித குலத்திற்கு வந்து அமைந்திடாத எண்ணற்ற பல விசேஷமான சக்திகளைப் பூண்ட அணிலானது, ஒரு மரத்தில் உள்ள காய் பழமாகி விட்டதா, இல்லையா என்பதையும், ஒரு பழம் இனிக்குமா, இனிக்காதா என்பதையும் தூர இருந்தே அதனைப் பார்த்த மாத்திரத்திலேயே பகுத்தறியும் சக்திகளைப் பெற்றதாகும்.

மேலும், பல வகைகளில் செயலாற்றும் இத்தகைய விசேஷமான சக்திக்கு சலப்ரகாஷ்டப் புலம் என்று பெயர்.

ஒவ்வொரு அணிலும் கொறிக்கின்ற (பழக்) கொட்டையின் சிதறல்கள் பூமியில் படிந்து, அதன் மூலமாக இந்த சலப்ரகாஷ்டப் புலச் சக்தி மனிதனை அடைகின்றது. இதற்காகவே 'அணிலேறி விளையாடி வா!' என அழைத்து வீட்டில் பழ மரங்களை வளர்ப்பர். இது மிருக இன வளத்திற்காக மனித குலம் ஆற்ற வேண்டிய தர்மமாகும்.

அணிலுக்கு அதன் சுறுசுறுப்பே ஒரு மகத்தான ஆன்ம சக்தியாய் உள்ளது. ஒரு அணில் 300 அடி வரை முன்னே உள்ள முள், சிறுகொம்பு போன்றவற்றை, பார்த்த மாத்திரத்திலேயே, தான் வேகமாக ஓடும் கதியிலேயே, கண்ட ஒரு சில விநாடிகளுக்கு உள்ளேயே பாதையின் தன்மைகளை சுற்றுப்புறச் சூழலுடன் உணர்ந்து அறியும் திறமையான மூளை சக்திகளை உடையது. இவ்வாறான தீர்க்க தரிசனச் சக்திகள் அணிலுக்கு நிறைய உண்டு.

மூலாதார த்ரயப் பரல்கள்!

அணிலின் முதுகில் உள்ள மூன்று பட்டைகள் மகத்தான தெய்வீகத்துவம் கொண்டவை!

திரேதா யுகத்தில் ஸ்ரீராமர் அணிலுக்கு அளித்த மூன்று பட்டைகளின் மகாத்மியத்தை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்! அரணீயம், பரணீதரம், பில்வதாரணீயம் என்று இந்த மூன்று பட்டைகளுக்கும் பெயராகும்.

“வரதா(ணி)யப்பா படைத்த நெடுவில் ராமனார் தோயப்படுத்தி வா அணிற் புறச்சாயம்!"

என்பது சித்த கிரந்த பரிபாஷையாகும். இதில் அணில் படைப்பின் பிரம்ம ரகசியங்கள் பல கோடி பதிந்துள்ளன. ஆத்மவிசாரத்தில் இவை காலத்தால் விரிந்து விளக்கம் காணக் கூடியதாகும்.

சேது பாலம் கட்டிட ஆற்றிய அருள் சேவைக்கான திருவுடைப் பரிசாக, ஸ்ரீராமர் தம் ஆத்மார்த்தமான அருளாசியாக, அணில் இனத்திற்கு இந்த மூன்று பட்டைகளை, மூலாதார திரயப் பரல்களாக அவற்றின் முதுகில் அளித்திட்டார். இதனால்தான் அணிலுக்கு ஆன்மப் பூர்வமான தனிச் சிறப்பிடம் தெய்வீகத்தில் ஒன்று உண்டு.

ஒரு அணிலானது தினந்தோறும் ஒரு வில்வ மரத்திலாவது ஏறி தியானித்து, இறங்க வேண்டும் என்ற தெய்வீக நியதியும், நித்தியக் கடமையும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள நித்திய பூஜைக் கடமைகள் போலவே, ஆன்மீகப் பூர்வமாக ஒவ்வொரு அணிலும் தினமுமே அந்தந்த நாள், திதிக்கேற்ப எத்தனை, எவ்வகை தெய்வீக விருட்சங்களில் ஏறி பிற ஜீவ நலன்களுக்காக, 'அணிற்புழங்க யோகாசனம்' என்னும் அரிய வகை யோகாசனங்களைப் பூண்டு தியானித்துப் பூஜிக்க வேண்டும் என்ற வரைமுறைகளும் உண்டு.

அணிலைப் பார்க்கும் போதெல்லாம் எவருக்கு ‘ராம நாம' நினைவு வருகின்றதோ, அவர் நல்ல தெய்வீகப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் என்பது பொருளாகும். இதுவும் அணில் உணர்த்தும் ஆன்மீக நெறியே!

அணில் கண்டு அணிவீர் ராமநாம ஜபம்!

அணில் குலத்தின் சார்பாக 'வாசஸ்பதி' என்ற அணில், ஸ்ரீராமரின் தரிசனம் பெற்றுத் தன் குலத்திற்கே ஸ்ரீராமரின்

திருக்கரங்களால் அனைத்துலக அணில்களுக்கும் முதுகில் மூன்று பட்டைகளைத் திரு அருள் பூர்வமாகப் பெற்றுத் தந்தது.

பெருமாள் ஆலயங்களில் தலைக்கு சடாரி சாற்றுவதுபோல, ஸ்ரீராமரும் 'வாசஸ்பதி' அணிலின் மூலாதார ஸ்தானத்தில் 'த்ரயோகப்பதாரியை', 'ஜபதப யோகாபியை' இட்டார். இதனால்தான் அணிலைப் பார்க்கும்போதெல்லாம் உடனே ராம நாமத்தை ஜபிப்போருக்கு அவரவர் ஆன்ம நிலைக்கேற்ப ஜபதப யோக சக்திகளை 'வாசஸ்பதி' அணில் தான் திரேதா யுகத்தில் பெற்ற, ஸ்ரீராம தரிசனப் பலனைக் கொடுக்கும் சங்கல்பத்தை ஏற்றதுடன், இன்றளவும், என்றுமாய் யுகயுகமாய் அளித்துக் கொண்டிருக்கிறது.