Sunday 25 June 2023

Temple Restoration Sponsorship

400 Number of donors are urgently needed to contribute the amount per square feet for the restoration work of Sri Kannan temple.

Tuesday 20 June 2023

நானூறில் ஒன்று உங்களுடையதாகவும் இருக்கட்டுமே

நானூறில் ஒன்று உங்களுடையதாகவும் இருக்கட்டுமே

இன்னும் 400 அன்பர்களிடமிருந்து ஒரு சதுர அடிக்கான நன்கொடையை நாடுகின்றோம்

தாங்கள் வழங்கி இருந்தாலும் தயை கூர்ந்து ஏனையோருக்கும் பகிர்ந்து

கண்ணபிரானின் கைங்கர்யம் விரைந்து பூர்த்தி அடைய தாங்களும் ஓர் உற்ற துணையாக இருக்க வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இவண்

ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
(ப.எண்:75/2010)
இளங்காடு

Bank Details
Sri Kannan Trust,City Union Bank Thirukkattuppalli Branch,
Account No : 019001000928885
IFSC Code : CIUB0000019

Wednesday 7 June 2023

Donate Temple Renovation Progress

We are seeking your donation for Kannabiran Moolasthan vimana works please support to fulfill of the Holy process complete as early!

*sharvam Krishnarpanam*

Tuesday 6 June 2023

திரிபுரதாசர்



கிருஷ்ணர் அருள்புரியும் திருத்தலமான மதுராவில் திரிபுரதாசர் என்ற பக்தர் வாழ்ந்து வந்தார். இயல்பிலேயே அவரது மனம் கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்திருந்தது. 
எப்போதும் கடவுளின் சேவையில் ஈடுபட்டு வந்தார். பஜனை பாடல்களைப் பாடுவதிலும் சிறந்து விளங்கினார். கல்வி, கேள்விகளில் சிறந்த தாசரைப் பற்றி அறிந்த மதுராவை ஆண்ட மன்னன், அவரை அமைச்சராக நியமித்தான். ஆனால் அவர் அந்தப் பதவியை விரும்பவில்லை. 

சிறிது காலத்திலேயே மன்னரிடம் அவர், அரச பதவியில் இருப்பவர் போர் சிந்தனையிலேயே இருக்க வேண்டியுள்ளது. பகவானுக்கு கைங்கர்யம் செய்வதையே விரும்புகிறேன். மந்திரி பதவியில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்று கூறினார்.

அமைச்சரின் எண்ணத்தை அறிந்த மன்னன், பக்தர் ஒருவர் தன்னிடம் பணியாற்றியதை எண்ணி மகிழ்ந்தான். தாசருக்கு நிறைய பொன்னும் பொருளும் வாரி வழங்கினான். ஆனால், பொருளாசை அற்ற தாசர், அதை ஏழைகளுக்கும், கோயில் திருப்பணிக்கும் செலவிட்டார். 

நாம சங்கீர்த்தனம் செய்வதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டிருந்தார்.

ஒரு நல்ல நாளில் இல்லத்தில் பஜனை நடத்தி, அடியார்களுக்கு அன்னதானம் செய்தார். மனைவியை அழைத்துக் கொண்டு யாத்திரை கிளம்பினார். பக்திப்பாடல்களைப் பாடியபடியே நடந்தார். அவர்கள் பிருந்தாவனத்தை அடைந்தனர். 

அங்குள்ள கோயில் கோபுரத்தைக் கண்டதும், தாசரின் மனதில் பக்தி பெருக்கெடுத்தது. பிருந்தாவன கிருஷ்ணரைத் தரிசித்த பின், வேறு எந்த திருத்தலத்திற்கும் செல்ல அவருக்கு மனமில்லை. அங்கேயே தங்கி, கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பினர். சிறுகுடில் அமைத்து தங்கினார். 

உஞ்ச விருத்தியாக (யாசகம் செய்தல்) கிடைக்கும் அரிசியைச் சமைத்து பகவானுக்கு நைவேத்யம் செய்து உண்டார். பஜனை செய்ய ஒருநாளும் தவறியதில்லை. ஒருமுறை, பிருந்தாவனத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாகத் தொடங்கியது. மன்னர்கள், செல்வந்தர்கள் பட்டு பீதாம்பரங்களை கிருஷ்ணருக்கு காணிக்கையாக அளித்தனர். 

பக்தர்கள் இறைவனுக்கு புதுப்பட்டாடை அணிவித்ததைப் பார்த்த திரிபுரதாசர், தாமும் இறைவனுக்கு பட்டாடை சமர்ப்பிக்க விரும்பினார். இந்த ஆசையைத் தன் மனைவியிடம் தெரிவித்தார். அதற்கு அவர் மனைவி, சுவாமி! ஏன் கவலைப்படுகிறீர்கள்? ஒரு நூல் வேட்டியாவது வாங்கிக் கொடுப்போம் என்றார். 

பிறகு வீட்டிலிருந்த ஒரு பித்தளைப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குப் புறப்பட்டார். அதை விற்று அந்தப் பணத்தில் நூலாடை ஒன்றை வாங்கிக் கொண்டு கண்ணபிரான் ஆலயத்துக்குள் நுழைந்தார். கோயிலில் சந்தியாகால தீபாராதனையின் போது, பக்தர்கள் கூட்டம் கண்ணனின் புகழைப் பாடிக் கொண்டிருந்தது. திரிபுரதாசர், அர்ச்சகரிடம் ஆடையைக் கொடுத்து அதை எம்பெருமான் திருமேனியில் சாத்தி, கற்பூர ஆரத்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அந்த ஆடையை வாங்கிய அர்ச்சகர், அவரை ஒருமுறை அலட்சியமாகப் பார்த்து விட்டு, ‘‘பெரிய செல்வந்தர்கள் தரும் விலை உயர்ந்த பட்டாடைகளே அணிவிக்க முடியாமல் ஆலயத்தில் குவிந்திருக்கின்றன. இதைச் சமர்ப்பிக்கவா ஓடோடி வந்தீர்? இந்தத் துணியை எடுத்துச் செல்லுங்கள்!’’ என்றார் சத்தமாக. உடனே திரிபுரதாசர், ‘‘ஐயா! இந்த ஏழையின் ஆடையை ஒரு முறையேனும் இறைவன் திருமேனியில் சாத்த வேண்டும்!’’ என்று நயமாகச் சொல்லி, அதை அர்ச்சகரிடமே கொடுத்துவிட்டு கோயிலை வலம் வரச் சென்றார்.

அர்ச்சகர் ஏளனத்துடன் அந்தத் துணியைக் கீழே விரித்து, அதன் மேல் கால்களை நீட்டி அமர்ந்து விட்டார். இரவில் திருமஞ்சனம் முடிந்து பூஜைகள் ஆரம்பமானதும் மூலமூர்த்தியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அர்ச்சகர்கள் துப்பட்டாக்களையும், பீதாம்பரங்களையும் கொணர்ந்து போர்த்தினர். எனினும் நடுக்கம் குறைய வில்லை. தூபம், தீபம், அகில், கற்பூரம் ஆகியவற்றைக் கமழச் செய்தனர். நடுக்கம் நின்றபாடில்லை. செய்தி ஊரில் பரவ, கோயிலில் குழுமிய மக்கள், ‘இது என்ன கெட்ட காலமோ?’ என்று கலங்கினர். 

அப்போது, "எம் பக்தன் திரிபுரதாசன் தந்த நூல் ஆடையை அணிவித்தால் என் நடுக்கம் நிற்கும்’’ என்ற அசரீரிக்குரல் அர்ச்சகரின் செவியில் விழுந்தது. அதை எல்லோருக்கும் கேட்கும்படி உரத்த குரலில் தெரிவித்த அந்த அர்ச்சகர், தான் கீழே விரித்திருந்த துணியை எடுத்து உதறிவிட்டு பயபக்தியுடன் எம்பெருமான் திருமேனியில் சாத்தினார். 

திரிபுரதாசர் அளித்த நூல்வேட்டியை மூலவருக்கு அணிவித்ததும் பகவானின் நடுக்கம் நீங்கியது.

அப்போது கோயில் பிரகாரத்தில் தியானத்தில் ஆழ்ந்திருந்த திரிபுரதாசர், யாரோ பிடித்து உலுக்கியது கண்டு விழித்து எழுந்தார். 

விவரம் அறிந்த தாசர், ‘‘வேணுகோபாலனே! எனது எளிய ஆடையை ஏற்றுக் கொண்ட உமது பெருந் தன்மையை என்ன சொல்வேன்!’’ என்று மெய் சிலிர்க்க, கை கூப்பியபடி நின்று விட்டார்.

அங்கு ஓடோடி வந்த அர்ச்சகர், ‘‘சுவாமி! அறியாமல் அபசாரம் செய்து விட்டேன். இறைவனே வலியக் கேட்டு, உமது ஆடையை அணிந்த பெருமையை என்னவென்பேன்! என்னை மன்னியுங்கள்!’’ என்று திரிபுரதாசரின் காலடியில் விழுந்தார்.

திரிபுரதாசரின் பக்தி எங்கும் பரவியது. அவரும், அவருடைய மனைவியும் பிருந்தாவனம் கோயிலியே தங்கி சேவையில் ஈடுபட்டனர்.🙏

Monday 5 June 2023

நிர்ஜல ஏகாதசி - 31/05/2023

இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவருக்கு, ஆண்டின் 24 ஏகாதசி விரதங்களையும் கடைப்பிடித்த புண்ணியம் கிடைக்கிறது.

இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்.

நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள்.  

மே/ ஜுன் மாதங்களில், வளர்பிறையில் தோன்றக்கூடிய நிர்ஜல ஏகாதசியின் விவரங்களை, பிரம்ம - வைவர்த்த புராணத்தில் வியாசதேவருக்கும், பீமசேனருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.

ஏகாதசி விஷ்ணுவுக்கும் உகந்த திதி. மே/ ஜுன் மாதங்களில்  மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட குடிக்காமல் விரதம் இருக்க வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது.பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

ஏகாதசி என்பது ஓர் புண்ணியகாலம் ஆகும். பரமாத்மாவுக்குப் பிரியமான திதி அது. அதைப் போற்றாத புராணமில்லை. 

பாண்டவர்களில் மூத்தவரான தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி "குருதேவா, துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல, நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள் நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்'' என வேண்டினார்.

தர்மபுத்திரா, " எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே. ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன'' என்று பதில் சொன்னார் வியாசர். 

குருவே, ஏகாதசி விரதம் மிகவும் முக்கியமாகக் கடைப்பிடிக்கவேண்டிய விரதம் என்கிறார்கள். அன்னை குந்தி, அண்ணன் யுதிஷ்டிரர், திரௌபதி, அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் என எல்லோரும் தவறாமல் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க சொல்கிறார்கள். என்னால் செய்ய கூடியதா அது?

ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப்போய் முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது. " விருகம் "என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும் நெருப்பு அடங்காது. 

 மற்றொரு பிரச்னை... ஏகாதசியும் ஏதோ மாதம் ஒருமுறையோ அல்லது இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வந்தாலும் பரவாயில்லை. அது சரியாகப் பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை வந்துவிடுகிறது. என்னால் அப்படியெல்லாம் அடிக்கடி சாப்பிடாமல் இருக்க முடியாது.

 போனால் போகிறதென்று வருடத்துக்கு ஒருநாள் வேண்டுமானால் உபவாசம் இருக்கலாம்.அப்படி நான் ஒருநாள் இருக்கும் விரதத்துக்கு ஓராண்டு விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்க வேண்டும். அப்படி ஏதேனும் வழி இருந்தால் சொல்லி உதவுங்கள் குருதேவா...” என்று பீமசேனன் அப்பாவியாகக் கேட்டான்.

நம்மில் பலருக்கும் மாதமிருமுறை வரும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கும் இந்தக் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்வதில் விருப்பம் இருக்கலாம்.

வியாசதேவர் பதிலளித்தார். கவலைப்படாதே பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது.

மே/ஜுன் மாதங்களில் வளர்பிறையில் சூரியன் ரிஷப ராசி அல்லது மிதுன ராசியில் இருக்கும்போது தோன்றக்கூடிய ஏகாதசி நிர்ஜல ஏகாதசி எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் ஒருவர் நீரும் கூட அருந்தாமல் முழு உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். அதனாலேயே அது நிர்ஜலா ஏகாதசி எனப்படுகிறது. அந்த ஏகாதசி விரதத்தை நீ கடைப்பிடி'' என வழிகாட்டினார் வியாசர். 

வியாசர் இப்படிச் சொன்னதும் பீமன் திடுக்கிட்டான்.

``என்ன நீர்கூட அருந்தக் கூடாதா?”

``ஆமாம் பீமா. ஜலம் என்றால் நீர். நிர்ஜலம் என்றால் நீர்கூட இல்லாமல் என்று பொருள். ஆனால் யோசித்துப்பார், இந்த ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் நீ ஓராண்டு முழுவதும் ஏகாதசி விரதம் மேற்கொண்ட பலனை எளிமையாகப் பெறலாம். அப்புறம் உன் இஷ்டம்” என்றார் வியாசர்.

`உணவு உண்ணாமல் இருப்பதே கடினம். அதில் நீரையும் துறக்க வேண்டுமா’

பீமன் யோசித்தான். ஆனாலும் இது நல்ல யோசனையாக இருந்தது. 

பீமசேனன், குருவின் வாக்கை வேதவாக்காகக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்ள முடிவு செய்தான். அவ்வாறே நிர்ஜலா ஏகாதசி விரதத்தையும் முடித்தான். அதனால் அவனுக்குப் புண்ணிய பலன்கள் கிடைத்தன.

 பீமனே உணவை விட்டு உபவாசித்த ஏகாதசி என்பதால் அந்த ஏகாதசிக்கு   " பீம ஏகாதசி " என்றும் " பாண்டவ ஏகாதசி " என்றும் பெயர் உண்டானது.

துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.

நிர்ஜல ஏகாதசி விரத பலன் :-

நிர்ஜல ஏகாதசி விரதம் இருந்தால் மற்றைய ஏகாதசி விரதமிருந்த பலனுண்டு. 

புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும்.

வாழ்வில் வளமும் செல்வமும் பெருகும். பிறவி பிணி நீங்கும். 

ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம். 

இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள்.

மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை அழைத்துச் செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள். மாறாக விஷ்ணு தூதர்கள் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் திருப்பாதத்தை அடையும்.

நிர்ஜல ஏகாதசியை பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.
இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். 

இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்டாலே வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நிச்சயம் என்கிறது தர்ம சாஸ்திரம்

அத்தகைய அற்புதமான ஏகாதசி தினம் நாளை (31/05/2023) வாய்த்துள்ளது. 

இன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் உபவாசித்தும் முடியாதவர்கள் முழு அரிசியால் ஆன உணவைத் தவிர்த்தும் விரதமிருந்து பகவான் விஷ்ணுவை வழிபடலாம்.

 நாள் முழுவதும் நாராயண நாமமோ அல்லது ராம நாமமோ சொல்லி ஜபம் செய்யலாம். இதன் மூலம் நம் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும்.

நாராயண!! நாராயண!!

சாட்சி சொன்ன தெய்வம்


வித்யா நகரை சேர்ந்த
வயதில் முதிர்ந்தவர் 
இவர் பெரும் செல்வந்தர் வடநாட்டு தலங்களை தரிசிக்க சென்றிருந்தார்.

இவரை போலவே திவ்ய தலங்களை காண வந்த அதே ஊரை சேர்ந்த
ஓர் இளைஞரின் நட்பு 
ஒரு தலத்தில் கிடைக்கிறது.

இருவரும் நிறைய தலங்களை காண்கின்றனர்.

காசி கயா பிராயகை முதலான தலங்களை தரிசித்துவிட்டு பிருந்தாவனம் வந்தனர்.

திடீரென ஓர் நாள் பெரியவருக்கு நோய் பீடித்தது. 

படுத்த படுக்கையான முதியவரை
பல நாட்கள் இளைஞர் தூங்காமல் கவனித்து கொண்டார்.

முதியவரின் நோய் குணமானதும்,
முதியவர் தனது மகளை அந்த இளைஞருக்கு திருமணம் செய்து தருவதாக சொன்னார்.

இளைஞரோ நான் எவ்வித எதிர்பார்ப்புமின்றியே செய்தேன்,
அடியவர்களுக்கு சேவை செய்வது அந்த அனந்தனுக்கு செய்யும் சேவையாக நினைத்தே செய்தேன் என்றார்.

முதியவரோ,
நீ ஏழையாக இருந்தாலும் 
நான் வாக்கு தவற மாட்டேன், 
என கிருஷ்ணனுக்கு முன் சத்தியம் செய்தார்.

முதியவரும் இளைஞரும் 
ஊர் வந்து சேர்ந்தனர்.

முதியவர் தனது குடும்பத்தாரிடம் 
தான் இளைஞனுக்கு கொடுத்த வாக்குறுதி பற்றி கூறினார்.

ஆனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் அதனை ஏற்கவில்லை.

பெண் கேட்டு வந்த இளைஞன் துரத்தப்பட்டான்,

ஊர் பஞ்சாயத்தை கூட்டினான் இளைஞன்.

பெரியவரோ குடும்பத்தின் நெருக்கடியில் 
தான் அப்படி சொன்னதாக ஞாபகம் இல்லை என்றார்.

சாட்சி ஏதாவது இருக்கிறதா என பஞ்சாயத்தார்கள் கேட்டனர்.

அந்த கோபாலனே சாட்சி என்றான் இளைஞன்.

அந்த கோபாலனை அழைத்து வாருங்கள் 
தீர்ப்பு சொல்கிறோம் என்றனர்.

பிருந்தாவனம் வந்தான் 
கோபாலனிடம் 
எனக்கு அவர் மகளை மணக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை 
ஆனால் அவர் உன் முன்னால் அளித்த வாக்கு பொய்யாகி விடக்கூடாதல்லவா ,
ஆகையால் நீ என்னுடன் வர வேண்டும்
வந்து சாட்சி சொல்ல வேண்டும் என்றான்.

கிருஷ்ணர் ஊர் விட்டு ஊர் வந்து சாட்சி சொல்வது நடவாத காரியம் என பலவாறு அங்கே வராமல் இருக்க வழி தேடினார்.

ஆனால் இளைஞர் முடிவாக நீ வர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார்.

கடைசியாக 
கிருஷ்ணர் அந்த இளைஞனிடம் 
நீ முன்னே திரும்பி பார்க்காமல் போக வேண்டும் 
உன் பின்னே நான் வந்து கொண்டே இருப்பேன்.
கால் கொலுசுகளின் சத்தமும் உனக்கு கேட்டுக்கொண்டே இருக்கும்.

நீ எப்போது திரும்பி பார்க்கிறீயோ
அங்கேயே நான் இருந்துவிடுவேன் என்றார்.

இளைஞன் முன்னே செல்ல 
கிருஷ்ணர் பின்னேயே சென்றார்.

கொலுசு சத்தம் கேட்டபடி இருந்தது.

பிருந்தாவனத்தில் இருந்து பல நாட்கள் நடந்து 
அந்த குறிப்பிட்ட கிராம எல்லைக்கு வந்தனர்.

பெரிய மணல் மேடு ஒன்று இருந்தது.
அதில் கால் வைத்து நடந்தனர்.

கொலுசில் மண் ஏறியதால் கொலுசு சத்தம் கேட்காமல் போனது,
இளைஞர் கொலுசு சத்தம் வராததால்
திரும்பி பார்த்தார்.
சிரித்தபடி நின்றிருந்த கிருஷ்ணர் 
ஓளி வீசும் சிலையாக மாறி நின்றார்.

இதனை கேள்விப்பட்ட அந்த ஊர் மக்கள் 
இறைவனை வந்து தொழுதனர்.

முதியவர் தனது குடும்பத்தோடு வந்து 
இறைவனின் காலில் விழுந்து வணங்கினார்.

இளைஞனுக்கு தனது மகளை திருமணம் செய்து வைத்தார் முதியவர்.

இறைவன் சாக்ஷி கோபால் என ஆனார்.
ஊரும் சாக்ஷி கோபால் ஆனது.
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தில் இருந்து 3 km தொலைவில் உள்ளது ஆலயம்.

Friday 2 June 2023

உலகளந்தானுக்கு ஓர் அடி தாரீர்!!!!

உலகளந்தானுக்கு ஓர் அடி தாரீர்!!!!
ஓங்கி உலகளந்த உத்தமனான கண்ணபிரானின் திருக்கோயில் மறுசீரமைப்பு திருப்பணிக்கு ஒரு சதுர அடிக்கு ₹2200/- மட்டும் வழங்கி கண்ணபிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

#srirajagopalaswamytemple 
#srirajagopalaswamytemple 
#Elangadu
 #thanjavur 
#kallanai 
#Thirukkattuppalli 
#lordkrishna
#iskon 
#ttd 
#vittal 
#lakshmihayagreevar 
#hindu
 #hindutemple
 #hindufestival 
#jeeyarswamy 
#govindapuram 
#srikannantemple

email: srikannantemple@gmail.com

Mobile number:

9500264545
9942604383
8056901601



https://www.instagram.com/reel/Cs_pzQgA54A/?igshid=MTc4MmM1YmI2Ng==