Sunday 25 March 2018

இராம நவமி சிறப்பு பதிவு-2018

|| ஸ்ரீ ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் ||

(தமிழ் அர்த்தம் கீழே தனியாக உள்ளது. )

வினியோக:
ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ர மந்த்ரஸ்ய புதகௌசிக ரிஷி:
ஸ்ரீ சீதாராம சந்த்ரோ தேவதா அனுஷ்டுப் சந்தக: சீதா சக்தி: ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஸ்ரீராமசந்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ர ஜபே வினியோக:

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்ருதஷர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோ வஸானம் நவகமலதள ஸ்பர்தி நேத்ரம் ப்ரஸன்னம்
வாமாங்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் நீரதாபம்
நானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமண்டலம் ராமசந்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்                1

த்யாத்வா நீலோத்பல ஷ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டிதம்            2

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் நக்தம் சராந்தகம்
ஸ்வலீலயா ஜகத் த்ராது மாவிர்பூதமஜம் விபும்                3

ராமரக்ஷாம் படேத்ப்ராக்ஞ: பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஸிரோ மே ராகவ பாதுபாலம் தசரதாத்மஜ:                    4

கௌஸல்யேயோ த்ருஷௌ பாது விஸ்வாமித்ர ப்ரிய: ஸ்ருதீ
க்ராணம் பாது மக்த்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸல:            5

ஜிஹ்வாம் வித்யாநிதி: பாது கண்டம் பரத வந்தித:
ஸ்கந்தௌ திவ்யாயுத: பாது புஜௌ பக்னேஷாகார்முக:            6

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ நாபிம் ஜாம்பவதாக்ஷரய:                7

சுக்ரீவேஷ: கடீ பாது ஸக்தினீ ஹனுமத்-பிரபு:
ஊரூ ரகூத்தம: பாது ராக்க்ஷ: குல வினாசக்ருத்                8

ஜானுனீ சேதுக்ருத் பாது ஜண்கே தசமுகாந்தக:
பாதௌ விபீஷண ஸ்ரீத: பாது ராமோ அகிலம் வபு:            9

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் ய: ஸூக்ருதீ படேத்
ஸ சிராயூ: ஸூகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்                10

பாதாள பூதல வ்யோம சாரிணஷ் ச்சத்ம சாரிண:
ந த்ரஷ்டுமபி சக்தாஸ்தே ரக்ஷிதம் ராம நாமபி:                11

ராமேதி ராமபத்ரேதி ராமசந்த்ரேதி வா ஸ்மரன்
நரோ ந லிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விந்ததி            12

ஜகஜ்ஜை த்ரைக மந்த்ரேண ராமநாம்னாபி ரக்ஷிதம்
ய: கண்டே தாரயேத்தஸ்ய கரஸ்தா: ஸர்வ ஸித்தய:            13

வஜ்ரபஞ்ஜர நாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாக்ஞ: ஸர்வத்ர லபதே ஜய மங்களம்                14

ஆதிஷ்டவான்யதா ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர:
ததா லிகிதவான் ப்ராத: ப்ரபுத்தௌ புதகௌசிக:                15

ஆ ராம: கல்பவ்ருக்ஷாணாம் வி ராம: ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராம: ஸ்ரீமான்ஸ ந: ப்ரபு:            16  

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
புண்டரீக விஷாலாக்ஷௌ சீர க்ருஷ்ணா ஜினாம்பரௌ        17  

ஃப்லமூலாஸினௌ தாந்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தசரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ        18

சரண்யௌ ஸர்வஸத்வானாம் ஸ்ரேஷ்டௌ ஸர்வ தனுஷ்மதாம்
ராக்க்ஷ: குல நிஹந்தாரௌ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ        19  

ஆத்தஸஜ்ஜதனுஷா விஷுஸ்ப்ருஷாவக்ஷயா சுகானிஷங்க ஸங்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்ரத: பதி ஸதைவ கச்சதாம்        20

ஸன்னத்த: கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஷ்ச ராம்: பாது ஸலக்ஷ்மண்:            21

ராமோ தாசரதி ஷூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸ்ய: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூத்தம்:            22

வேதாந்த வேத்யோ யக்ஞேஷ்: புராண புருஷோத்தம்:
ஜானகீ வல்லப: ஸ்ரீமானப்ரமேய பராக்ரம்:                    23

இத்யேதானி ஜபேந்நித்யம் மத்தக்த: ஸ்ரேத்தயான்வித:
அஸ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்சய:            24  

ராமம் தூர்வாதள ஷ்யாமம் பத்மாக்ஷம் பீதவாஸஸம்
ஸ்துவந்தி நாமபிர்-திவ்யைர்-நதே ஸம்ஸாரிணோ நரா:            25

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் சுந்தரம்
காகுத்ஸ்தம் கருணார்ணவம் குணநிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்    26  

ராஜேந்த்ரம் ஸத்யஸந்தம் தசரததனயம் ச்யாமளம் சாந்தமூர்த்திம்
வந்தே லோகாபிராமம் ரகுகுலதிலகம் ராகவம் ராவணாரிம்        27

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:                    28

ஸ்ரீராம் ராம் ரகுநந்தன ராம் ராம் ஸ்ரீராம் ராம் பரதாக்ரஜ ராம் ராம்
ஸ்ரீராம் ராம் ரணகர்கஷ் ராம் ராம் ஸ்ரீராம் ராம் சரணம் பவ ராம் ராம்    29

ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ வசஸா க்ருணாமி                  
ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ ஸிரஸா நமாமி
ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ சரணம் ப்ரபத்யே                    30

மாதா ராமோ மத்-பிதா ராமசந்த்ர:
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசந்த்ர:
ஸர்வஸ்வம் மே ராமசந்த்ரோ தயாளு:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே                    31

தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோ மாருதிர்-யஸ்ய தம் வந்தே ரகுநந்தனம்                32

லோகாபிராமம் ரணரங்கதீரம் ராஜீவனேத்ரம் ரகுவம்சநாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம் ஸ்ரீராமசந்த்ரம் சரணம் ப்ரபத்யே    33  

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே    34

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்            35  

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்            36

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்                37

ராமோ ராஜமணி: ஸதா விஜயதே ராமம் ரமேசம் பஜே
ராமேணாபிஹதா நிஷாசரசமூ ராமாய தஸ்மை நம:            38
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோ (அ) ஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ரனாம தத்துல்யம் ராம நாம வரானனே

|| இதி ஸ்ரீ புதகௌசிகமுனி விரசிதம் ஸ்ரீராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

தமிழ் அர்த்தம் கீழே உள்ளது.

நவராத்திரி 9 நாட்களிலும் அதிகாலையில் குளித்து சுத்தமான உடை அணிந்து தியானம் செய்வதற்கு (stotra text says 'sit on the seat of kusa' - அதாவது குஸா என்னும் ஒரு வகை புல்லின் மேல் மான் தோலினால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து - இதன் மேல் விவரம் அறிய பகவத்கீதை as it is - என்ற லிங்க்-ஐ பார்க்கவும்.) ஏற்றவாறு அமர்ந்து கொண்டு, ஸ்ரீ ராமனை நினைவில் இருத்தி இந்த பெரும் பலனை அளிக்க வல்ல புனிதமான பாடலை (ஸ்தோத்ரா) குறைந்தது 11 தடவை தினமும் சொல்லவும். குறைந்தபட்சம் 7 தடவையாவது சொல்ல வேண்டும் என்பது நியதி.
நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கை. ஆகையால் நீங்கள் ராமனிடம் கொண்ட நம்பிக்கை  உங்களை கைவிடாமல் காப்பாற்றும். ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் நீளமானது ஆனால் தினப்படி அமைதியுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால், நினைவில் தங்கி விடும்.

வினியோக:
ராமரக்க்ஷா ஸ்தோத்ரத்துக்கு ரிஷி புத கௌசிகர். சீதா, ராமச்சந்திரமூர்த்தி தேவதைகள். மீட்டர் அனுஷ்டுப், சக்தி சீதா, முக்கியமானவர் ஸ்ரீ அனுமான். நோக்கம் - ஸ்ரீ ராம பிரானின் கருணைப் பெறுவது.

த்யானம்:
அடர்ந்து படர்ந்து விரிந்த கூந்தலுடன், மஞ்சள் ஆடை உடுத்தி, வில்லும் அம்பும் தாங்கி, பத்த பத்மாசனம் என்னும் யோக இருக்கையில், அன்று மலர்ந்த புதிய தாமரை இதழ்களின் அழகை மிஞ்சும் ஆனந்த கருணை பொழியும் கண்களுடன் ஆஜானுபாஹூவாய் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ராமனை தியானிக்கிறேன். அவரின் இடது பக்கத்தில் மேகவண்ண மேனியுடன், பல்வேறு விதமான தெய்வீக அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர் போன்ற முகத்தை உடைய ஸ்ரீ சீதா தேவியையும் ஸ்ரீராமனுடன் சேர்த்து தியானிக்கிறேன்.

ஸ்தோத்ரம்

ஸ்ரீராமபிரானின் சரித்திரத்தின் அழகை, அதன் அற்புதத்தை விவரிக்க நூறுகோடி வார்த்தைகளாலும் இயலாது.
ஒவ்வோர் எழுத்தும், வார்த்தையும் மனிதப்பிறப்பின் பாவங்களை அழிக்க வல்லது.
(இந்த தமிழ் அர்த்தம் எனது தனிப்பட்ட கருத்து. "சரிதம் ரகுநாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம், ஏகைக மக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்" என்று சொல்லப்பட்டுள்ளதை சிறப்பிலயல்பில் குறித்துள்ளேன். இதையே நூறுகோடி வார்த்தைகளால் ஆனது என்றும் அர்த்தம் கொள்ளலாம்)

நீலோத்பல (நீலோத்பலம், என்பது நீல நிற அல்லிப்பூ) நிறத்தவனும், தாமரை இதழ் போன்ற கண்களையுடையவனும், அடர்ந்துபடர்ந்து விரிந்த கூந்தலின் மேல் அழகான கீரிடம் அணிந்தவனும், கைகளில் கத்தி, வில், அம்புகளை
ஏந்தியவனும், அசுர சக்திகளை அழித்து இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காகவே பிறப்பு எடுத்திருப்பவனும் ஆகிய ராம பிரானை தியானிக்கிறேன். அக்கருணாமூர்த்தியை ஜானகி தேவியுடனும், லக்ஷ்மணனுடனும் தியானித்து இந்த ராம ரக்க்ஷ ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்தால் அனைத்து மனோபீஷ்டங்களும் பூர்த்தி ஆகும். அனைத்து பாபங்களும் போகும். ராகவன் எனது தலையையும், தசரத மைந்தன் எனது நெற்றியையும் காக்கட்டும்.

கௌசல்யையின்,புதல்வன் கண்களைக் காக்கட்டும். விஸ்வாமித்ரரின் பிரியமான மாணவன் காதுகளை காக்கட்டும். யக்ஞங்களை காப்பாற்றும் ராமச்சந்திரன் மூக்கினை காக்கட்டும். சுமித்திரையின் புதல்வரை நேசிக்கும் ராமபிரான் எனது முகத்தை காக்கட்டும்.

அறிவின் புதையல் எனது நாக்கினையும், பரதனால் வணங்கப்படும் ராமபிரான் எனது தொண்டையினையும், தெய்வீக ஆயுதங்களை தாங்கியவர் எனது தோள்களையும், மஹாதேவரின் வில்லை உடைத்தவர் எனது
கரங்களையும் காக்கட்டும்.

சீதாதேவியின் பதி எனது கைகளையும், பரசுராமரை வெற்றி கொண்டவர் எனது இருதயத்தையும், கரா என்னும் அசுரனை அழித்தவர் எனது மத்திய பாகத்தையும், ஜாம்பவானுக்கு புகலிடம் கொடுத்தவரான ராமபிரான் எனது தொப்புள் கொடியையும் காக்கட்டும்.

சுக்ரீவனுடைய தலைவன் எனது இடுப்பையும், ஹனுமானின் ஹ்ருதயத்தில் வசிப்பவர் எனது சக்தினியையும் அதாவது வலது முழங்கால்களுக்கு மேல் உள்ள பகுதியையும், ரகுவம்சத்தின் சிறந்த அரசரும், அசுர குடும்பங்களை அழித்தவருமான ராமபிரான் எனது இடது முழங்கால்களுக்கு மேல் உள்ள பகுதியையும் காக்கட்டும்.

பாலங்களைக் கட்டுபவர் எனது முழங்கால்களையும், ராவணனை அழித்தவர் எனது தொடைகளையும், வீபிஷணனுக்கு அரசுரிமையையும்  பொக்கிஷத்தையும் அளித்தவர் எனது பாதங்களையும், மற்றும் எனது உடம்பையும் காக்கட்டும்.

நல்ல குணநலங்களை கொண்டவர் யாவரும் இராமபிரானின் சக்தி அடங்கிய இந்த ராமரக்க்ஷா ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வர்.அவ்வாறு பாராயணம் செய்பவர் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியுடனும், வெற்றி மற்றும்  வினயத்துடன் கூடிய புத்ர பாக்யத்துடன் வாழ்வர்.

ராம நாம பாராயணம் செய்பவரை மூன்று உலகத்திலும் உள்ள சக்திகளாலும், மறைமுகமாக‌(கண்களுக்குப் புலப்படாமல்) வாழும் சக்திகளாலும் ஏறெடுத்துக்கூட பார்க்க முடியாது. அத்தகைய புண்ணிய சக்தி வாய்ந்த மந்திரம் ராம மந்திரம்.

ராமேதி, ராம பத்ராய,ராம சந்திராய என்று ராம‌நாம பாராயணம் செய்பவர்களைப் பாவம் தீண்டாது. அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக நடக்கும். அவர்கள் மோக்ஷத்தை அடைவர்.

இதை மனப்பாடமாக நினைவில் இருத்தி வைப்பவர்கள் இவ்வுலகில் அனைத்து வெற்றிகளையும் அடைவார்கள். ராம நாமம் அவர்களை எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், இடர்களிலிருந்தும் காப்பாற்றும். அனைத்து வித சாதனைகளும் அவர்கள் வசம் வந்து சேரும்.

இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு ஒப்பான இந்த வஜ்ரபஞ்சர ராம கவசத்தை பாராயணம் செய்பவரின் வார்த்தைகள் கட்டளை போல் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்படும். வெற்றியும் புண்ணியமும் வந்தடையும்.

பவித்ரமான ராமரக்க்ஷா கவசமானது சிவபெருமானால் புதகௌசிக முனிவரின் கனவில் உரைக்கப்பட்டது. த‌ன் கனவில் சிவபெருமான் உரைத்தபடி எழுதிய பவித்ரமான ஸ்தோத்ரம் இது.

கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சத்தைப் போன்றவரும், உலகத்தின் துன்பங்கள் யாவற்றையும் களைபவரும், மூவுலகிலும் ஈடில்லா அழகை உடையவரும் ஆகிய ராமபிரானே என் தலைவன்.

வாலிப பருவத்தினரும், அழகான தோற்றமுடையவர்களும், மென்மையான ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த, பெரிய தாமரையைப் போன்ற கண்களை உடைய, மரவுரி மற்றும் மான் தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த, காய் மற்றும் கனி வகைகளை புசிக்கும், சுயகட்டுபாடுடைய, தபஸ்வி, பிரம்மச்சரியம் பேணுபவர்களும், அனைத்து உயிர்களுக்கும் புகலிடம் அளிப்பவர்களும், சிறந்த வில் வீரர்களும், அசுர குலத்தை அழிக்க வந்த ரகுவம்ச தசரதனின் புத்ரர்களுமான ராமன் மற்றும் லக்ஷ்மணன் ஆகிய இரு சகோதரர்களும் என்னை காக்கட்டும்.
 
எவர்களது வில்லானது எப்பவும் தன்னுடைய இலக்கை நோக்கியே இருக்கின்றதோ,யார் எப்பொழுதும் தங்கள் கைகளில் அம்பை வைத்திருக்கின்றார்களோ, எவருடைய அம்பறா தூளி எடுக்க எடுக்க குறைவில்லாமல் இருக்கிறதோ அவர்களே ராமனும் லட்சுமணனும் ஆவர். அவர்கள் இருவரும் என்னுடைய பாதையில் எனக்கு முன்னால் சென்று காத்து அருளட்டும்.

எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பவரும், கவசங்களை அணிந்தவரும், கையில் கத்தி வைத்திருப்பவரும், வில்லையும் அம்பையும் கையில் ஏந்தி இருப்பவரும், சிறு வயதினரும் ஆன ராமன் தன்னுடைய தம்பி லக்ஷ்மணனுடன் எனக்கு முன்னால் சென்று, என்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் காப்பாற்றி (நிறைவேற்றி)அருளட்டும்.

ராமா, தசரதி, சுரா, லக்ஷ்மணனுசார, பாலி, காகுஸ்த, புருஷா, பூர்ணா, கௌசல்யேயா, ரகுத்தமா, வேதாந்தவேத்யா, யக்ஞேசா, புராணபுருஷோத்தமா, ஜானகி வல்லபா, ஸ்ரீமன், அப்ரமேயபராக்ரமா ஆகிய நாமக்களை தினமும் நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் கிடைக்கும் புண்ணியமானது அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை விட பன்மடங்கு பெரியது. இதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.

அருகம்புல்லினை ஒத்த நிற கொண்ட, தாமரை கண்களை உடைய, மஞ்சள் வர்ண உடைகளை அணிந்த ராமபிரானை மேலே உள்ள நாமங்களால் எவர் துதி செய்கின்றோ, அவர் இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுதலை அடைவர்.

நான் இராமச்சந்திரமூர்த்திக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவர் லக்ஷ்மணனின் மூத்த சகோதரர், ரகுவம்சத்தில் சிறந்தவர், அன்னை சீதாதேவியின் கணவர், மிகவும் அழகானவர், காகுஸ்த வம்சத்தில் பிறந்தவர், கருணையுள்ளவர், நல்லொழுக்கத்தின் புதையல், பிரம்மத்தை மதித்து வணங்குபவர், ஆழ்ந்த தெய்வபக்தி உடையவர், அரசர்களுக்கெல்லாம் அரசர், சத்தியத்தின் வழி நடப்பவர், தசரதரின் புதல்வர், கருமை நிறத்தவர், அமைதியான மனத்தை உடையவர், மூவுலகத்திலும் ஈடில்லாத ஒப்பற்ற அழகுடையவர், ரகுவம்சத்தில் இவருக்கு சமமான வேறொருவரும் இல்லாதவர், ரகுவம்சத்தில் பிறந்ததால் ராகவன் என்று அழைக்கப்படுபவர், ராவணனின் எதிரி.. இத்தனை சிறப்புடைய ராமபிரானை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ராமா, ராமபத்ராய, ராம சந்திராய, இப் பிரபஞ்சத்தின் உருவாக்கியை, ரகுநாதனை, சீதையின் கணவனான சீதாராமச்சந்திரனை, என் தலைவனை நான் போற்றி வணங்குகிறேன்.

ஓ ! ரகுநந்தனா, ஸ்ரீ ராமா ! ஓ ! ராமா, பரதனின் மூத்த சகோதரா, நிலையான போர்வீரர் ஆன ராமச்சந்திரா, எனக்கு அடைக்கலம் அளிப்பாயாக.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாதக்கமலங்களை இருதயத்தில் வைத்து பூஜித்தும், அவருடைய பாத தூளிகளின் மகிமையை என் வார்த்தைகளால் பரப்பியும், அவருடைய பாதங்களில் என் சிரத்தை வைத்து போற்றி வணங்கியும் நான் ராமனின் பாதத்தில் அடைக்கலம் வேண்டுகிறேன்.

ராமனே என் தாய், தந்தை, தலைவன் மற்றும் நண்பனும் ஆவார். கருணையே வடிவமான ராமச்சந்திரன் எனக்கு எல்லாமும் ஆவார். எனக்கு அவரைத்தவிர வேறு யாரையும் தெரியாது.

நான் எனது சிரம் தாழ்த்தி ரகுநாதனை வணங்குகிறேன். அந்த ரகுநாதனுக்கு வலப்புறத்தில் லக்ஷ்மணனும், இடப்புறத்தில் சீதா தேவியும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஹனுமான் அமர்ந்திருக்கிறார்.

எல்லா உலகத்திலும் ஈடில்லாத அழகை உடையவர், உறுதியான போர்வீரர், தாமரை கண்ணாளன், ரகுவம்சத்தின் தலைவன், இரக்கமே வடிவாகவும், புதையலாகவும் கொண்ட ஸ்ரீ ராமச்சந்திரனிடத்தில் அடைக்கலம் வேண்டி வணங்குகிறேன்.

மனோ வேகத்தையும், காற்றை விட வலிமையான சக்தியையும் (வாயுபுத்ரன்) கொண்டவரும், பஞ்சேந்திரியங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும், சான்றோர்களில் சிறந்தவரும், ஸ்ரீ ராமனின் முதன்மை தூதுவனும் ஆகிய பாவன நந்தன ஹனுமானிடம் அடைக்கலம் வேண்டி வணங்குகிறேன்.

ராமா, ராமா என்று ராம நாமத்தைக் கவிதையாக பாடும் வால்மீகி முனிவராகிய குயிலை வணங்குகிறேன்.

நான் திரும்ப திரும்ப பலமுறை ஸ்ரீ ராமனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஸ்ரீ ராமன் நமது அனைத்து துயரங்களையும், கஷ்டங்களையும் களைந்து அனைத்து வகை செல்வங்களையும் வழங்குவார். ஸ்ரீ ராமன் நமது மனதை கொள்ளை கொள்ளக்கூடிய கவர்ச்சி பெற்றவர்.

ராம ராம என்னும் ராம நாம சப்தம் இடிமுழக்கத்தைப் போன்றது. அது அனைத்து உலகத்திலும் உள்ள விதைகளை உயிர்ப்பிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அனைத்து வித சந்தோஷத்தையும், செழுமையையும் வழங்கக்கூடியது. யம தூதர்களை நடுநடுங்கச் செய்யும் சக்தி உடையது.

அரசர்களில் சிறந்தவரான ராமனுக்கு எல்லா வெற்றிகளும் உரித்தாகுக. திருமகளின் மணாளனை நான் மிகவும் நேசிக்கிறேன். அசுரர்களின் அனைத்து படைகளையும் அழித்தவரான ஸ்ரீ ராமச்சந்திரரை நான் வணங்குகிறேன். ராமனை விட மேலான புகலிடம் வேறொன்றுமில்லை. அந்த ராமனுக்கு நான் சேவகன், எனது சிந்தை, எப்பொழுதும் ராம பக்தியில் ஆழ்ந்து இருக்கட்டும். ஓ ! ராமச்சந்திரா ! எனக்கு உன்னை விட்டால் வேறு ஒருவருமில்லை. என்னை தங்களின் தயை மற்றும் கருணையின் கிருபா கடாக்ஷத்திற்கு பாத்திரமாக்கி மோக்ஷத்தை அளிப்பாயாக.

ஸ்ரீ மஹாதேவர் பார்வதியிடம் சொல்லுகிறார் - " மிகவும் அழகான முகத்தை உடையவளே ! ராம் என்னும் ஒரு நாமம் விஷ்ணுவின் ஆயிரம் நாமத்திற்கு சமம்  நான் எப்பொழுதும் இந்த அபூர்வமான கவர்ச்சிகரமான நாமத்தில் ராமா, ராமா, ராமா என்று ஆழ்ந்து இருக்கிறேன்.

|| ஸ்ரீ புதகௌசிக முனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீ ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் முற்றிற்று ||

நன்றி: திரு. மன்னார்குடி சீதாராமன் சீரினிவாசன்.

Thursday 22 March 2018

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?
கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்!
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா?
ஏன் அப்படிச்செய்யவில்லை பகவானே? என்று கேட்கப்பெற்ற
போது கிடைத்த பதில் -. அதிரவைக்கும் பதில்
---------------------------------------------
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம் முதலே, அவருக்குப் பணிவிடைகள் செய்து, தேரோட்டி, பல்வேறு சேவைகள் புரிந்தவர்
உத்தவர். இவர் தனது வாழ்நாளில், தனக்கென நன்மைகளோ
வரங்களோ கண்ணனிடம் கேட்டதில்லை.
துவாபரயுகத்தில், தமது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர், "உத்தவரே, இந்த அவதாரத்தில் பலர்
என்னிடம் பல வரங்களும், நன்மைகளும் பெற்றிருக்கின்றனர்.
ஆனால், நீங்கள் எதுவுமே கேட்டதில்லை. ஏதாவது கேளுங்கள்,
தருகிறேன். உங்களுக்கும் ஏதாவது நன்மைகள் செய்துவிட்டே,
எனது அவதாரப் பணியை முடிக்க நினைக்கிறேன்" என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,சிறு வயது முதலே கண்ணனின்செயல்களைக்கவனித்து வந்த உத்தவருக்கு,
சொல் ஒன்றும்,செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின்லீலைகள்,
புரியாத புதிராக இ ருந்தன.அவற்றுக்கானகாரண, காரியங்களைத்
தெரிந்து கொள்ள விரும்பினார்.
"பெருமானே! நீ வாழச் சொன்னவழி வேறு; நீ வாழ்ந்து காட்டியவழி
வேறு! நீ நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ ஏற்றபாத்திரத்தில்,
நீ புரிந்த செயல்களில்,எனக்குப் புரியாத விஷயங்கள் பல உண்டு.அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய ஆவலாக
இருக்கிறேன்.நிறைவேற்றுவாயா?"என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா! முதலில் எனக்கு ஒரு
விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ பாண்டவர்களின் உற்ற நண்பன்.
உன்னை அவர்கள் ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும் நன்கறிந்த
ஞானியான நீ, 'உற்ற நண்பன் யார்’ என்பதற்கு நீ அளித்த
விளக்கத்தின் படி, முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை? போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,
தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.
இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால்
விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,
அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை
ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான் ஒருவன்,
குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய
மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப்
படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்?
இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று; மகாபாரதம் படித்து
விட்டு நாம் அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.நமக்காக
இவற்றை அன்றே கண்ணனிடம் கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்"
என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம். தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம்
வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே?
சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்?
நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,அவன் கேட்கும் எண்ணிக்கைளை
என்னால்தான் போடமுடியாதா? போகட்டும். தருமன் என்னை
ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள மறந்துவிட்டான் என்பதையாவது
மன்னித்து விடலாம். ஆனால், அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான். 'ஐயோ! விதி வசத்தால் சூதாட
ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்னுக்கு
மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட
மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்
கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று
மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.
பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,
தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,
என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே! அண்ணன் ஆணையை
நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.
அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள்
செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற
அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச்
சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை
நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ
வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை;
அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய்.
நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து
பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே
இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக
உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை
நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை
களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து
விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து
விடலாம் என்று எண்ணுகிறீர்கள். பாதிப்புக்கு உள்ளாக்கும்
சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல்
சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது
அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும்
இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை!
---------------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Monday 12 March 2018

அகல்_விளக்கின் நவகிரஹ_தத்துவம்



கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = *சூரியன்*

2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*

3.) திரி = *புதன்*

4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*

வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது*

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது.

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?

தினமும் ராமாயணம் முழுவதும் படித்தால் எவ்வளவோ புண்ணியம்? எவ்வளவோ பலன்? எவ்வளவோ நல்லது? ஆனால் நம்மால் தினமும் ராமாயணம் முழுவதும் படிக்க முடியுமா?
என்றால் ...
நிச்சயம் முடியும் எப்படி?
காஞ்சி மஹா பெரியவரால் அருளிச் செய்யப்பட மிக எளிய அற்புதமான கிடைத்தார் கிடைத்தற்கரிய பொக்கிஷமான வெறும் ஒன்பது வரிகளை மட்டுமே கொண்ட 30
வினாடிகளில் சொல்லி முடித்து அனைத்துப் பலன்களையும் பெற்றுத் தரக்கூடியதாக நமக்கு வழங்கியுள்ளார். இதோ உங்களுக்காக....!
|| ஸ்ரீ ராமம் ரகுகுல திலகம் ||
|| சிவதனு சாக்ரிஹத சீதா ஹஸ்தகரம் ||
|| அங்குல்யா பரண சோபிதம் ||
|| சூடாமணி தர்சனகரம் ||
|| ஆஞ்சநேய மாஸ்ரயம் ||
|| வைதேஹி மனோகரம் ||
|| வானர சைன்ய சேவிதம் ||
|| சர்வமங்கள கார்யானுகூலம் ||
|| சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம் ||
ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய்ஸ்ரீராம்
இவ்வளவு தான் அந்த ஸ்லோகம்...முழு ராமாயணமும் படித்து முடித்தாகி விட்டது.
நல்லதுன்னு நினைத்தால் நாலு பேருக்கு இல்ல கோடி பேருக்கு சொல்லுங்கள் உங்கள் வம்சம் ராம நாமத்தால் வளரும்..........இது சத்திய வாக்கு என்று பெரியவா கூறியுள்ளார்.

காரடையான் நோன்பு 14/3/18 புதன்கிழமை.

மாசி,பங்குனி சேரும்சமயத்தில் சரடு கட்டிக்கணும்.ஆனால்நடு இரவை ஒட்டி பூஜை செய்வது உத்தமம் அல்ல.

இரவு 9.00 மணிக்கு மேல் அம்பாளின் சாந்த சொரூபம் மாறுவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது.

எனவே 14/3/18 அன்று இரவு 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் பூஜை செய்து சரடு கட்டிக்கொள்ள உத்தமம்
கொழுக்கட்டை செய்யும் வழக்கம் இருந்தால் செய்யலாம்.இல்லையென்றால் பெருமாள் சந்நதியில் விளக்கேற்றி பழம் நைவேதனம் செய்யலாம்.இரவு பலகாரம் அவரவர் செளகரியபடி இட்லி,தோசை,உப்புமா செய்து சாப்பிடலாம் (சாதத்தை தவிர).
தீர்க்க சுபங்கலி பவ.
வாழ்க வளமுடன்

Friday 9 March 2018

திருக்கண்ணங்குடி

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"திருக்கண்ணங்குடி "


"பன்னிய பாரம் பார்ம கட் கொழியப்
பாரத மாபெரும் போரில்,

மன்னர்கள் மடிய மணி நெடுந் திண்டேர்
மைத்துனர்க் குய்த்தமா மாயன்,

துன்னுமா தவியும் சுர புனைப் பொழிலும்
சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே"


திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி - பாசுரம் 1756.


பூமிப்பிராட்டியாரின் பாரம் நீங்கும்படியாக மிகப் பெரியதாக நடைபெற்ற மகாபாரதப் போரின் போது, துரியோதனன் முதலிய மன்னர்களெல்லாம் மடியும் பொருட்டு, மைத்துனராகிய அருச்சுனனின் மணிகள் பூட்டிய உறுதிமிக்க தேரைச் செலுத்தியருளிய மாயனாகியஎம்பெருமான் ஸ்ரீ கண்ணபிரான் மாதவி, சுரபுன்னை மரங்கள் நிறைந்த சோலைகளுடன் சூழ்ந்திருக்கின்ற செண்பக மலர்களில் அமர்ந்திருக்கின்ற வண்டுகள்" தென்ன.. தென " என்று இசையினை இசைத்துக் கொண்டிருக்கின்ற "திருக்கண்ணங்குடி " என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளப் பெற்று அருள்பாலிக்கின்றார்.

Thursday 8 March 2018

விஷ்ணுவைப் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள் !!



🌟 திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

🌟 திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோவிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர் ஏற்பட்டது.

🌟 கருங்குளத்தில் பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

🌟 திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

🌟 ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலை வாசனின் பாதச்சுவடுகளே வழிபடப்படுகின்றன.

🌟 திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில் மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

🌟 உடுப்பி கிருஷ்ணருக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் புடவை உடுத்துகிறார்கள்.

🌟 ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

🌟 சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோவில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.

🌟 காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.

🌟 ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன் - திருமால் கோவில் இதுமட்டும்தான்.

🌟 மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

🌟 காஞ்சி உலகளந்தபெருமாள் திருக்கோவிலில் திருமழிசையாழ்வாராலும், திருமங்கை மன்னராலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட நான்கு திவ்ய தேசங்கள் உள்ளன. பேரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகியவையே அவை.

🌟 திருக்கோவிலூரில் உள்ள மூலவர் இலுப்பை மரத்தால் ஆனவர். இவரது பெயர் திருவிக்ரசுவாமி.

🌟 கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.

🌟 திருமலை, தான்தோன்றிமலை, உப்பிலியப்பன்கோவில், குணசீலம் ஆகிய நான்கு பெருமாள் கோவில்களிலும் தாயாருக்கு சன்னிதி இல்லை.

🌟 பொதுவாக பெருமாள் ஆதிசேஷன் மேல் சயனித்தபடி இருப்பார். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
                  Thanks to     ரங்கராஜன்
                     

Saturday 3 March 2018

தர்ப்பண மந்த்ரங்களின் சுருக்கமான அர்த்தம் இதோ

 :--
1.ஆவாஹனம்
> -(எழூந்தருளச் செய்தல்)
> .பித்ருக்களே!  மிகவும் நல்லவர்களாக  நீங்கள் ,எங்களுக்கு  சந்ததியையும்  ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும்  ஆசீர்வதித்துக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில்  இங்கு எழுந்தருளுங்கள் .இந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களையும் ஆவாஹனம் செய்கின்றேன்
>2. .ஆசனம்
> ,-( இருக்கை.)
ஹே தர்பமே !நீ , ஒரு போது என்னால் சேகரிக்கப் பட்டாய்.உன்னைப் பித்ருக்க்ளுக்காகப்
பரப்புகிறேன்.நீ  அவர்களுக்குப் பஞ்சு போல் மிக மிருதுவான ஆசனமாக இரு.அருள் சுரக்கும் எங்கள் பித்ரு ,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளட்டும்.  இரண்டு வம்ச பித்ருக்களுக்கும்  இது ஆசனம் .அவர்களை எல்லா வித
உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன்.
3..தர்ப்பணம்
> .சோம யாகம் செய்த சிறந்த
> பித்ருக்களைப் போலவே ,
> நடுத்தரத்தினரும்
> கடைப்பட்டவரும் கூட
> உயர்ந்த கதியை
> அடையட்டும் .நம்மிடம்
> கோபமற்றவர்களாய்
> அவர்கள் நாம் செய்யும்
> நற் கர்மாவை உணர்ந்து
> ,நமது பிராணனை
> ரக்ஷித்து ,நாம்
> அழைக்கும்போது வந்து ,
> நம்மைக்
> காத்தருளவேண்டும்.இன்ன
> கோத்திரனரும் இன்ன
> பெயருள்ளவரும் , வஸு
> ரூபியான எங்கள்
> தந்தையை நமஸ்கரித்து
> அவருக்குத் தர்ப்பணம்
> செய்கின்றேன் .அங்கீரஸர்
> ,அதர்வணர் ,பிருஹுக்கள்
> என்று பெயருள்ள நமது
> பித்ருக்கள் புதிது
> புதிதான வகையில் அருள்
> புரிபவர்கள் .சோம
> யாகம் செய்தவர்கள்
> .பூஜித்தர்க்குரிய
> அவர்கள் எந்த சிறந்த
> வழியில் சென்றார்களோ ,
> அதையே நாமும் பின்
> பற்றி ,மங்களகரமான நல்ல
> மனது உடையவர்கள் ஆவோம்
> .இன்ன
> கோத்திரத்தினரும்
> …தர்ப்பணம்
> செய்கின்றேன்.அக்னிச்வாத்தர்கள்
> என்பவர்களும் ,சோம
> யாகம் செய்தவர்களுமான
> நமது பித்ருக்கள் தேவ
> மார்க்கமாக இங்கு
> எழுந்தருளட்டும் .இங்கு
> நாம் செய்யும்
> ஆராதனையில்
> சந்தோஷமடையட்டும் .நம்மைக்
> காப்பாற்றட்டும் .
>4. ஜலங்களே
> ,எல்லாவற்றிலும் உள்ள
> சாரத்தை நீங்கள்
> உங்களிடம்
> கொண்டிருகிறீர்கள்
> .ஆகையால்
> அம்ருதமாகவும்
> ,நெய்யாகவும் ,
> பாலாகவும் ,மதுவாகவும்
> பானகமாகவும்
> பரிணமித்து (எது
> வேண்டுமோ ,அதுவாய்
> நின்று நீங்கள் )
> எங்கள் பித்ருக்களை
> திருப்தி
> செய்வீர்களாக .இன்ன
> கோத்திர ‘.. எனது பிதா மஹரை
நமஸ்கரித்து ..தர்ப்பணம்> செய்கிறேன்.
5.ஸ்வதா> என்னும் சொல்லால்
> திருப்தி அடையும்
> பித்ருக்களுக்கு
> ஸ்வதா எனக்கூறி
> நமஸ்கரிக்கின்றேன்
> .ஸ்வதா என்னும் சொல்லால்
> திருப்தி அடையும்
> பிதா மஹர்களுக்கும்
> ,ப்ரபிதா மஹர்களுக்கும் ஸ்வதா
> எனக்கூறி
> நமஸ்கரிக்கின்றேன்
>6. .இன்ன ……எந்த பித்ருக்கள்
> எந்த உலகில்
> இருக்கின்றார்களோ ,
> எவர்கள் இங்கு இல்லையோ
> , எவர்களை நாங்கள்
> அறிவோமோ ,எவர்களை
> அறியமாட்டோமோ
> , அவர்களை எல்லாம்
> அக்னி பகவானே, நீர்
> அனைத்தையும் அறிவீர்
> ஜாதவேதஸ் ஆதலால்
> அறிவீர்
> .அவர்களுக்குரியதை
> அவர்களிடம் சேர்த்து
> அருள்வீர் .
> அதனால் அவர்கள்
> சந்தோஷமடையட்டும் .
> இன்ன ……
> ப்ரபிதா மஹர்..
> 7.காற்று இனிமையாக
> வீசட்டும் .நதிகள்
> இனிமையைப் பெருக்கிக்
> கொண்டு ஓடட்டும் .செடி
> கொடிகள் இனிமை
> அளிப்பவையாக
> இருக்கட்டும் .இன்ன
>8. …….ப்ரபிதா மஹரை
> நமஸ்கரிக்கின்றேன்.இரவும்
> காலையும் இனிமையாக
> இருக்கட்டும் .பூமியின்
> புழுதியும் இன்பந்
> தருவதாய்
> இருக்கட்டும்..நமது
> தந்தை போனற ஆகாயம்
> இன்பமளிக்கட்டும் .இன்ன……வன
> விருக்ஷங்கள் இன்பம்
> நிறைந்தவகளாக
> இருக்கட்டும் .சூரியன்
> இன்பந் தரட்டும்..பசுக்கள்
> அமிர்தமான பாலைத்
> தரட்டும்.
9.இன்ன …தாயார்.இன்ன
> கோத்திரத்தினரும்
> இன்ன… பெயருள்ளவரும்
> வசு ரூபிணியும் ஆகிய
> எனது தாயை
> நமஸ்கரித்துஅவருக்குத்
> தர்ப்பணம்
> செய்கின்றேன்.( மூன்று
> முறை )
> இன்ன
> கோத்திரத்தினரும்
> இன்ன…
> பெயருள்ளவரும்,ருத்ர
> ரூபிணியும் ஆகிய எனது
> மாதா மஹியைநமஸ்கரித்து
> அவருக்குத் தர்ப்பணம்
> செய்கின்றேன் . (மூன்று முறை)
> .இன்ன கோத்திரத்தினரும்
> இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய
> ரூபிணியும் ஆகிய எனது
> ப்ரபிதா மஹியை
> நமஸ்கரித்து
> அவருக்குத் தர்ப்பணம்
> செய்கின்றேன் .(மூன்று
> முறை)தாய்> வழித் தாத்தா,
கொள்ளுத் தாத்தா பாட்டி
> கொள்ளுப்பாட்டி வகை
> .இன்ன
> கோத்திரத்தினரும்
> இன்ன… பெயருள்ளவரும்
> வசு ரூபியும் ஆகிய
> எங்கள் மாதா மஹருக்கு
> தர்ப்பணம்செய்கின்றேன்..
( மூன்று தடவை )
ருத்ர ரூபியாகிய எங்கள்
> தாயின் பிதா மஹருக்குத்
> தர்ப்பணம் .( மூன்று
தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள்
> தாயின் ப்ரபிதா மஹருக்குத் தர்ப்பணம்
> ..( மூன்று தடவை )வசு
> ரூபியாகிய எங்கள் மாதா
> மஹிக்கு தர்ப்பணம்
(> மூன்று தடவை ).
ருத்ர> ரூபியாகிய எங்கள்
தாயின் பிதா மஹிக்குத்
> தர்ப்பணம் .( மூன்று
> தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள்
> தாயின் ப்ரபிதாமஹிக்குத் தர்ப்பணம்
.( மூன்று தடவை ).
10.அன்னரஸமாகவும்
> அம்ருதமாகவும்
> ,நெய்யாகவும்,பாலாகவும்,
> தேனாகவும் பானகம்
> ஆகவும் பரிணமித்து ,
> எது வேண்டுமோ அதுவாய்
> நின்று நீங்கள் எனது
> பித்ருக்களைத்
> திருப்தி
> செய்வீர்களாக !
11.பித்ருக்களே,திருப்தி அடையுங்கள்
.திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
.(பூணூல் வலம்)
12..தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும்
> அவ்வாறே மகா யோகிகளுக்கும்
> நமஸ்காரம்
.ஸ்வதா என்னும் பெயர் கொண்டு
> விளங்கும் பர தேவதைக்கு எப்போதும்
> மீண்டும் மீண்டும் நமஸ்காரம் .
( மூன்று முறை )
13.அபிவாதனம்
> , நமஸ்காரம் (.பூணல் இடம்)
.பித்ருக்களே !மிகவும்
> நல்லவர்களான நீங்கள்
> எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும்
> நீண்ட ஆயுளையும் ஆசீர்வதித்து
> அளித்துக்கொண்டு> கம்பீரமாக சிறந்த ஆகாய
> மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள்
> .இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க
> பித்ருக்களையும் அவரவர்களுடைய
> இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப்
> பிரார்த்திக்கிறேன்
>14. (.பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு
> ,உபவீதியாக)
,ஆசமனம் செய்து , பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு
> பூணூலை இடமாக்கவும் .
> எவர்களுக்கு தாயோ
> தந்தையோ ஸ்நேகிதரோ
> தாயாதிகளோ பந்துக்களோ
> இல்லையோ
> அவர்களெல்லாம் நான்
> தர்ப்பை நுனியால்
> விடும் தீர்த்தத்தால்
> திருப்தி அடையட்டும்
> .கூர்ச்சத்தைப்> பிரித்து நுனி வழியாக
> தர்ப்பணம் செய்யவும்
>( .பவித்ரம் பிரிக்கவும் ).
> 15.பூணூல் வலம் ஆசமனம்.
> பின்பு பிரம்ம யஜ்ஞம் செய்க.