Wednesday 9 August 2017

ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த சரித்திரத்தை கேட்பவனும் படிப்பவனும் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உத்தமமான பகவத் பக்தனாவான்.


.
சாந்திபினி முனிவர் - இவர்தாம் ஸ்ரீ கிருஷ்ண பலராமனுக்கும் மற்றும் யாதவ சிறுவர்களுக்கும் - குருகுல ஆசிரியராய் இருந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சாதாரண மாணவனைப் போலவே குருகுலத்தில் தங்கி எளியோனாய் குருவிற்கும் குருபத்தினிக்கும் சேவை செய்து எல்லா கலைகளையும் கற்று தேர்ந்தான். இந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒரு தோழன் அவனை சுதாமா என்றும் குசேலன் என்றும் அழைப்பர். கிருஷ்ணன் மதுராவின் இளவல் அனைத்து சம்பத்துக்களும் பெற்றவன் ! குசேலனோ வறுமையின் கோரப் பிடியில் சிக்கி தவித்தவன். காலம் இருவரையும் இரண்டு எல்லைகளில் நிறுத்தியிருந்தது . குசேலனுக்கு லௌகீக ஆசைகள் என்று எதுவும் கிடையாது.
.
குருகுல வாசம் முடிந்து அவரவர் தம் இல்லம் சென்று வாழ்க்கையை தொடங்கினர்.

குசேலனுக்கு காலக்ரமத்தில் பெரும் சகிப்பு தன்மை கொண்டவளும் பக்தியில் சிறந்தவளும் சீரிய குணவதியானவளுமான சுசிலை என்பவள் மனைவியாக வாய்த்தாள்.
சுசிலை தன்னுடைய பசியையோ, கந்தல் கோலத்தையோ பொருட்படுத்தாமல் இருந்தாலும் அவளது குழந்தைகள் பசியால் வாடுவதைக் கண்டு மனம் துடித்தாள்.  
.
என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.அப்போது, குருகுலவாசத்தில் கிருஷ்ணனும் தனது கணவனும் உயிர் நண்பர்களாக இருந்தது பற்றி தன் கணவன் சொன்னது ஞாபகம் வந்தது. கிருஷ்ணனை எல்லோரும் துவாரகபுரி மன்னனாக கொண்டாடுகிறார்களே அப்படியிருக்கும் போது நம் கணவர் அவர் மூலம் நமது ஏழ்மை நிலையை போக்கிகொள்ளலாமே என்று நினைத்தாள்.
சுசிலை தன் கணவரைப் பார்த்து கிருஷ்ணர் உமது பால்ய நண்பர்தானே அவரைப் பார்த்துவிட்டு வந்தால் நமக்கு சகாயம் உண்டாகுமே எனறாள். குசேலனுக்கு நன்கு தெரியும் கிருஷ்ணன் சாதாரண மானிடன் இல்லை அவனே பரம்பொருள் என்பதை அறிந்து இருந்தான் ஆகவே கண்ணனிடம் சென்று லௌகீகத்தின் தேவைக்காக உதவி கேட்பது சரியாக இருக்குமா என்று யோசித்தான். இருந்த போதும் கிருஷ்ணனை சந்திக்க ஒரு வாய்ப்பாக இதை பயன் படுத்திக்கொள்ளலாம் என முடிவுக்கு வந்தான் . குசேலன், "சுசிலை ! வெறுங்கையுடன் எப்படி செல்லுவது? தெய்வம் , மன்னன், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளை பார்க்க செல்லும் போது ஏதாவது எடுத்து செல்லவேண்டும். நம்மிடம் எதுவும் இல்லையே “என்றான். சுசிலை ஏற்கனவே தன்னிடம் இருந்த அவல் பொறியை ஒரு சிறு வஸ்திரத்தில் முடிந்து வைத்திருந்தாள். அதை கணவரிடம் கொடுத்து, "நிச்சயம் உங்கள் நண்பர் இதை ஏற்றுக் கொள்வார் என்றும் அவருக்கு எனது பக்தியுடன் கூடிய நமஸ்காரத்தை தெரிவிக்கும்படி கேட்டு கொண்டாள்.
.
குசேலன் துவராகபுரிக்கு கிளம்பி சென்றான். அதுவரை இல்லாத அச்சமும் நாணமும் கவலையும் அவரை பீடித்தன. எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன் அவருடன் குருகுலத்தில் படித்த என்னை அவருக்கு நினைவிருக்குமா? மன்னர்கள் எல்லாம் வந்து பார்த்து வணங்கி செல்லும் நிலையில் உள்ள கண்ணன் இந்த கந்தல் ஆடையில் நின்று நான் உன் நண்பன் என்று சொன்னால் எனக்கு கிடைக்கும் வரவேற்பு எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டே துவராகபுரியின் அரண்மனை வாசலை அடைந்தார்.
தயங்கி தயங்கி வாயிற்காப்போனை அணுகி, "நான் கிருஷ்ணனின் நண்பன் நானும் அவரும் ஒன்றாக குருகுலத்தில் பல ஆண்டுகளுக்கு முன் படித்தோம். சுதாமா என்ற என் பெயரை சொன்னால் கிருஷ்ணன் புரிந்து கொள்வார்"என்றார். இதை செவிமடுத்த வாயிற்காவலன் அவரை ஏற இறங்க பார்த்தான். மகுடமும் மயிற்பீலியும் அணிந்து, பீதாம்பரம் உடுத்தி, மன்னர்களால் கொண்டாடப்படும் மகாபுருஷனான கிருஷ்ணன் இவரது தோழனா? இதற்கு மேல் கந்தலாக முடியாத ஆடை, முகத்திலேயே தரித்தரக் களை கையில் ஒரு கந்தல் துணி முடிச்சு ! ஹும் இவனை எப்படி நம்புவது என்று ஒரு கணம் யோசித்தான்.
.
ஆனால் தோற்றம் எப்படி இருந்தாலும், கண்கள் உண்மை பேசின; நிர்மலமாய் இருந்தன. அதனால் நம்பாமலும் இருக்க முடியவில்லை. எனவே குசேலனை வாயிலில் நிற்கச் சொல்லிவிட்டு உள்ளே போய் கிருஷ்ணரிடம் கூறினான் . அவ்வளவுதான்! கிருஷ்ணர் எழுந்து வாயிலை நோக்கி ஓடிசென்றார். காவலர்களுக்கோ ஒன்றும் புரியவில்லை கலங்கி போயினர். இவ்வளவு அவசரமாக ஓடிச் சென்று யாரையும் வரவேற்றதில்லையே! என மனம் குழம்பினர். காவலர்கள் குழம்பியதற்க்குக் காரணம் இருந்தது. ஏனென்றால் கிருஷ்ணனை பார்க்க எவ்வளவோ பேர் வந்திருக்கிறார்கள்.
உயிர் நண்பன் அர்ஜூனன், துரியோதனன், அக்ரூரர், பல தேசங்களை சேர்ந்த மன்னர்கள் நிறைய பேர் வருவது வழக்கம்தான். ஆனால் இந்த மாதிரி விழுந்தடிச்சு ஓடி வரவேற்க போனதே இல்லையே ? ஏன்? 'அப்படியென்ன வந்திருப்பது என்ன பெரிய ஆளா? " என்று நினைத்தார்கள். அந்தஸ்து, அழகு, செல்வாக்கு, புத்திசாலித்தனம் என்று எதிலும் சமமில்லாத இவருக்கு ஏன் அத்தனை அவரசமாக ஓடி வரவேற்க சென்றார்?
.
சுதாமா என்ற பெயரை கேட்டவுடன் குருகுலத்தில் அவன் மடி மீது தலை வைத்து தூங்கியிருக்கிறோம். நமது கால்களை பிடித்து எனக்கு சிரமபரிகாரம் செய்த அவனை எப்படி மறந்தோம்? காவலன் சொன்ன அடையாளத்தை பார்த்தால் சுதாமா திருமணம் ஆகி குழந்தைகளுடன் இருக்கவேண்டும். பொருளின் மீது பற்றற்ற காரணத்தால் வறுமையில் வாடுகிறாரோ? என்றல்லாம் எண்ணியவாறு அவனை உடனே அரண்மனைக்கு அழைத்து அவனை போஷிக்க வேண்டும் என்று வாயிலை நோக்கி விரைந்தார்.கிருஷ்ணனை பார்த்ததும் வியந்து போனார் குசேலர். வந்த வேகத்தில் அவரை தன்னுடன் இழுத்து அணைத்துக் கொண்டார்.
.
பார்த்த எல்லோரும் பிரமித்தனர். என்ன ஒரு பாக்கியம் இவனுக்கு என்று ஆச்சரிய பட்டனர். தன்னுடன் அணைத்தவாறு குசேலனை உள்ளே அழைத்து சென்றார். குசேலர் சுயநிலையில் இல்லை. நடப்பது கனவா, நினைவா என்று புரியாத மயக்கத்திலிருந்தார். தன்னோடு அணைத்தபடியேஅவரை உள்ளே அழைத்துசென்று தான் அமர்ந்திருந்த ஆசனத்தில் அமர்த்தினான். பல மைல் தூரம் நடந்து வந்த புழுதி படிந்து காணப் பட்ட அவரது கால்களை ஒருதங்க தாம்பாளத்தில் வைத்து, ருக்மணி நீர் வார்க்க தனது திருக் கரங்களால் அலம்பினான். குசேலர் மனம் நெகிழ்ந்தார். மனம் கூசினார். ஹே கிருஷ்ணா ....இதென்ன சோதனை? உனக்கு எந்த விதத்திலும் தகுதியில்லாத நான் நீ அமரும் ஆசனத்திலா ? எல்லோருக்கும் அபயகரம் நீட்டி ரட்சிக்கும் உனது திரு கைகள் என் பாதங்களை அலம்புவதா? அதற்கு உன் தேவி தண்ணீர் வார்ப்பதா?"என்று "மனசுக்குள்ளே கசிந்துருகினார்.
.
தான் எதிர்ப்பார்த்தற்கு மேலாக, கிருஷ்ணன் தன்னை கௌரவித்துவிட்டதாக எண்ணி சந்தோஷ பட்டார். இப்பேர்ப்பட்ட கிருஷ்ணனிடம் போய் 'வறுமை தீரப் பொருள் கொடு'என்று கேட்பதா? கூடாது என்று அமைதியாக இருந்து விட்டார். அவரை உணவருந்தச் செய்தான் கிருஷ்ணன். ருக்மணி பரிமாறுகிறாள். கிருஷ்ணன் விசிறுகிறான். ஆனந்தத்தால் கண்கள் கலங்குகின்றன குசேலருக்கு. ! உணவருந்தியபின், தாம்பூலம் தந்து, பட்டு மஞ்சத்தில் படுக்க வைக்கிறான். ருக்மணி விசிறிகொண்டிருக்கிறாள். அடடா எவ்வளவு தூரம் இந்த இளைத்து சிறுத்த பாதங்கள் நடந்து வந்திருக்கின்றன . எவ்வளவு துன்பத்தை அடைந்திருக்கும். நன்றாக ஓய்வு எடுங்கள் என்று சொல்லியபடி, குசேலரின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விடுகிறான். குசேலரால் இந்த அன்பை தாங்க முடியவில்லை. அவர் கண்கள் கசிகின்றன. 'சுதாமா, அன்று போலவே இன்றும் இருக்கிறார். குருகுலத்தில் எல்லோருக்கும் அவர் பணிவிடை செய்தார். அப்போது அவருக்கு யாராவது உதவி செய்தால், அவரால் தாங்கமுடியாது கண்கலங்கி விடுவார்'என்று சொல்லி சிரித்தான் கிருஷ்ணன். ருக்மணி புன்னகைத்தாள். குசேலரின் பிரமிப்பு தீரவில்லை. நாட்கள் நகர்ந்தன கிருஷ்ணனின் அன்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது. குசேலர் வந்த காரணத்தை சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை. மனைவி மக்களின் நினைவு தோன்றித் தடுமாற வைத்தது.
கிருஷ்ணனிடம் விடைபெற நினைத்தார்.
.
தயக்கத்துடன் சொல்லவும் செய்தார். "சுதாமா ! அண்ணியார் எனக்கென்று எதுவும் கொடுத்திருப்பார்களே! அது எங்கே? "என்று கேட்டான் கிருஷ்ணன். தூக்கி வாரிப் போட்டது குசேலருக்கு. 'அந்தக் கந்தல் துணி முடிச்சை அவிழ்த்து அவலை எடுத்துத் தருவதா? முடிச்சை பார்த்தாலே விகாரம்? உள்ளேயோ சாதாரண அவல்! இதைப் போய் கொடுப்பதா'என்று எண்ணி நாணிக் கொண்டிருந்தார். அதற்குள் கிருஷ்ணன் அவரது கந்தல் முடிச்சை பார்த்துவிட்டான். முடிச்சை பிரித்தான். 'அடடா... எனக்கு பிடித்தமான அவல்! என்று சொன்னபடியே ஒரு பிடி அவலை எடுத்தான். குசேலர் கண்கலங்க அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். பார்க்கவே அழுக்கா இருக்கு அந்த கந்தல் துணி! அதுக்குள்ளே முடிஞ்சு வைத்திருக்கும் அவலை எடுத்து சாப்பிடறது சாதாரண விஷயமல்ல. கிருஷ்ணன் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. ரொம்ப விசேஷமா நினைத்தான். உள்ளே இருக்கிற அவல் உலக்கையால் குத்துப்பட்டு குத்துப்பட்டு அவலான மாதிரி லௌகீக வாழ்க்கையில் குசேலரும் அவர் குடும்பமும் குத்துப்பட்டு இருக்கிறது என்பது கிருஷ்ணனுக்கு புரிந்தது. சுசிலையின் பக்தி தெரிந்தது. அதை கவனமாக கொண்டு வந்த குசேலனின் சிரத்தை புரிந்தது. 
.
பக்தி என்றால் என்ன ? உள்ளன்பு ! ஏழைக்கு உணவிடுவது பக்தி. உதவி கேட்டு வருவோருக்கு உள்ளன்போடு உதவுவது பக்தி. குசேலன் சுசிலையின் உள்ளன்பை உணர்ந்த பரமாத்மா ஒரு பிடி அவலை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். ஆஹா ! எவ்வளவு சுவை அமிர்தம் கூட இதற்கு ஈடாகாது எல்லாம் அண்ணியின் கை பக்குவம் என்று சொல்லி ஆனந்தமாகச் சாப்பிட்டான். குசேலரின் மனைவி எப்போது அவலை இடித்தாள். அக்கம்பக்கத்திலே யாசகமாய் வாங்கியது. எத்தனை பேர் அவளுக்கு தெரியாமல் பரிகசித்தினரோ ? எந்த வேதனையையும் கணவன் மேல் சுமத்தாமல் தானே தாங்கிக் கொண்டு இந்த அவலை கொடுத்து அனுப்பினாள் அது பகவானுக்கு நன்கு தெரிந்தது. இதையெல்லாம் கைப்பக்குவம் என்று சொல்லி சுசிலையை கெளரவபடுத்தினான். அடுத்தப் பிடி அவலை வாயில் போட எடுத்தான்; அதற்குள் ருக்மணி அவன் கைகளை பற்றினாள். பரமாத்மாவிற்கு புரிந்தது ருக்மணியின் நடத்தை ! ஆம் சுவாமி நீர் ஒரு பிடி அவல் சாப்பிட்டதுமே அவர் தரித்தரம் நீங்கி இப்போ குபேரனுக்கும் மேலே என்னும் படி ஆகிவிட்டார். அடுத்தபிடியை நீர் சாப்பிட்டால் செல்வத்துக்கெல்லாம் அதிதேவதையான நானே அவரது கிரஹத்திற்கு போய் இருக்கிற மாதிரி ஆகிவிடும். குசேலன் விடை பெற்றான். இவரும் எதுவும் கேட்கலை. அவரும் எதுவும் தரவில்லை.
கிருஷ்ணனும் ருக்மணியும் குசேலரை வாசல் வந்து வழியனுப்பி வைத்தனர். 
.
சுசிலைக்கு என்ன சொல்வது ? ஒரு சம்பத்தும் வாங்கி வரவில்லை என்று நினைத்தாலும், கண்ணன் தன் மீது காட்டிய பரிவும் ருக்மணியின் உபசரிப்பையும் எண்ணியவாறு தன் ஊரை அடைந்தார். ஊரே அடையாளம் மாறியிருந்தது. எங்கு நோக்கினும் வளமும் செழுமையும் புலப்பட்டது. ஒன்றுமே புரியவில்லை அவருக்கு. ஊரின் எல்லையை அடைந்தார். அங்கே பூர்ண கும்பத்துடன் வரவேற்க எல்லோரும் காத்திருந்தனர். 'யாரோ பெரிய மனிதர்கள் வருகிறார்கள் போலும்' என்று நினைத்தபடி நடந்தார். அவர் அருகே வந்தவுடன் அவருக்குத்தான் பூர்ண கும்பம் கொடுத்தார்கள். குசேலர் குழம்பினார். அப்போது ஒரு செல்வசெழிப்புடன் காணப்பட்ட பெண் ஒருத்தி அவரது கால்களை விழுந்து வணங்கினாள். தீர்க்கசுமங்கலிபவ என்று வாழ்த்த வணங்கிய பெண் எழுந்தபோது குசேலர் அதிர்ந்தார். காலில் விழுந்து வணங்கிய பெண் யாருமில்லை அவரது மனைவி சுசிலை.
.
குசேலர் கண் கலங்கினார். "கிருஷ்ணா ! இது என்ன விளையாட்டு? உன்கிட்டே நான் எதையுமே சொல்லலே கேட்கலை கேட்டிருந்தாக் கூட இவ்வளவு செல்வத்தை நான் கேட்டிருக்க மாட்டேன். குடிசையை மாளிகையா மாத்தியிருக்கே செழிப்பை வீடு பூரா ஊர் பூரா நிரப்பியிருக்கே ! ஏன் கண்ணா ஏன்? வறுமையிலிருந்த போது இருந்த அன்பு மாறும்ன்னு பார்க்கவா? மாறாது என்னிக்கும் நான் குசேலனாகவே இருப்பேன் என்று சங்கல்ப்பம் செய்துக் கொண்டார். எதிலும் பற்றற்று கண்ணன் மீது தனது எண்ணங்களையெல்லாம் திருப்பி அவன் நினைவாகவே இருந்து இறுதியில் செல்வம் அனைத்தையும் அந்தணர்களுக்கு தானமளித்து வைகுந்தத்தை அடைந்தார்.
.
ஸ்ரீ கிருஷ்ணரின் இந்த சரித்திரத்தை கேட்பவனும் படிப்பவனும் ஏழ்மையில் இருந்து விடுபட்டு உத்தமமான பகவத் பக்தனாவான்.

🌺🌺Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare 🌺🌺 🙏🏻

திருவாய்மொழி

"""ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி
   அரவூறு சுலாய் மலை
   தேய்க்கும் ஒலி
   கடல் மாறு சுழன்று
   அழைக்கின்ற ஒலி
   அப்பன் சாறு பட அமுதம்
   கொண்ட நான்றே !
                                     - திருவாய்மொழி

இப்பாசுரத்தில் நம்மாழ்வார் திருப்பாற்கடல், அமுதம் (இன்னும் பலவும் அப்போது தோன்றின) வேண்டி, கடையப்பட்ட நிகழ்வை #நாலே_வரிகளில் பிரம்மாண்டமாக சித்தரிக்கிறார்.

பாற்கடல் கடையப்பட்டபோது எழுந்த பேரொலிகளுக்கான (cosmic sounds) காரண காரியங்களை ஆழ்வார் ஆராய்கிறார். பாசுரத்தின் பிரம்மாண்ட சித்தரிப்பை வைத்து, ஆழ்வார் பேசுவது, கடல் கடைதலான அவதார நிகழ்வை மட்டுமே அல்ல, கொஞ்சம் அறிவியலும் பேசியிருக்கிறார்….

மூன்று பெரும் சப்தங்கள் குறித்து ஆழ்வார் சொல்கிறார்...

1. ஆறு மலைக்கு எதிர்ந்தோடும் ஒலி

கடைந்த இடத்தில் கடல்நீர் அதிவேகமாக சுழன்றதால் ஏற்பட்ட பெரும்சக்தி வாய்ந்த வெளி நோக்கிப் பாய்ந்த விசையானது (centrifugal force), மலைகளிலிருந்து கடல் நோக்கிப்பாயும் ஆறுகளை, புவியீர்ப்பு விசைக்கு எதிராகத் திருப்பி, மலைகளில் ஏறி ஒடும்படியாகச் செய்தது! இதனால் பேரொலிகள் எழுந்தன.

2. அரவூறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி

அடுத்த பேரொலிகள் உராய்வு விசை (Frictional force) சார்ந்தது. பாற்கடலைக் கடைகையில், மந்தர மலையைச் சுற்றிய பிரம்மாண்ட அரவின் உடலானது, மலையையோடு உராய்கையில் உண்டான பெரும் சப்தம்,

3. கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி

கடையப்பட்ட கடலானது, மாறி மாறி சுழன்றதால், கடல் நீர் ஏற்படுத்திய பேரிரைச்சல். சூரியனைச் சுற்றிவரும் பூமி, தனது அச்சிலும் (மேற்கிலிருந்து கிழக்காக) சுழல்வது தெரிந்ததே. “கடல் மாறு சுழன்று” என்று ஆழ்வார் பாடும்போது, #பூமி_சுழற்சி பற்றி புரிந்தவராகவே அவரை எண்ண வேண்டும், அதாவது, இந்த பிரம்மாண்டக் கடல் கடைதலின் ஒரு பக்க சுழற்சி, பூமியின் சுழற்சிக்கு எதிராக நிகழ்ந்த போது, பூமியின் சுழற்சியே பாதிப்புக்குள்ளாகி, பூமி அதிர்ந்து பேரொலிகள் உண்டாயின!

4. அப்பன் சாறு பட அமுதம் கொண்ட நான்றே!

அமுதத்தைப் பங்கிடுவதில் தேவர்களுக்கும் அசுரருக்கும் சண்டை ஏற்பட. மோகினி உருவெடுத்த விஷ்ணு, அசுரருக்குக் கிடைக்காத வண்ணம், அமுதைக் கவர்ந்து சென்றார். அசுரர்கள் மோகினியான மஹாவிஷ்ணுவை துரத்தினர். பின் தேவர்களுக்கு அமுதம் கிடைக்கும் வண்ணம் செய்தார் மஹா விஷ்ணு.

🌹 குறிப்பு:

அசுரர்கள் துரத்திய சமயம், அமுதக்குடத்திலிருந்து சிந்திய #நான்கு_துளிகள் இந்தியாவில் பிரயாகை (அலகாபாத், கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம்), ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் விழுந்ததாலேயே, அந்த நான்கு இடங்களும் புனித/புண்ணியத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

ஓம் நமோ நாராயணா

"எனக்குத் தெரியாமல் ஒளிப்பாயோ


விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் அவள். பெரும்பாலும் கோகுலத்திலுள்ள அனைவருமே விடியலுக்கு முன் எழுந்துவிடுவர். எழுந்ததும் ஒரு எண்ணெய் விளக்கை எடுத்துக்கொண்டு நேராக மாட்டுத் தொழுவத்திற்கு வந்தாள். நாற்பதைம்பது மாடுகள் நிரம்பிய தொழுவம். ஒவ்வொன்றும் நன்றாக வளர்ந்து சித்தானைக்குட்டி போலிருக்கும். ஒவ்வொரு மாடாய்த் தடவி விட்டுக் கொண்டும், அவைகளோடு பேசிக்கொண்டும் கன்றுக்குட்டிகளை ஊட்டுவதற்காக அவிழ்த்துவிட்டாள்.
ஒரு காளைக்கன்று எப்போதும் துள்ளிக்கொண்டே இருக்கும். கண்ணன் பிறந்த அன்று அதுவும் பிறந்தது. அவன் நினைவாக அதற்கும் கான்ஹா என்று பெயர். அதன் அம்மா மாடு வரலக்ஷ்மி. அதன் பாலைக் கண்ணன் மிகவும் விரும்பிக் குடிப்பான். சமயத்தில் கான்ஹாவும் அந்தக் கருப்பனும் சேர்ந்து வரலக்ஷ்மியிடம் ஊட்டுவதை அவளே நேரில் கண்டிருக்கிறாள்.
கண்ணன் அவளிடம் ஊட்டிவிட்டுப் போனால் அந்த வரலக்ஷ்மி மகிழ்ச்சி மிகுதியால் இரு மடங்கு பால் கொடுப்பாள்.
சமயத்தில் வரலக்ஷ்மி கண்ணனுக்கு ஊட்டினாளா அல்லது அவன் இவளுக்கு செலுத்தினானா என்று சந்தேகம் வருமளவிற்கு பாலைக் கொட்டித் தீர்த்துவிடுவாள்.
அந்தப் பாலைத் தோய்த்து வெண்ணெய் கடைந்தால் அதன் சுவையை பூலொகத்தில் எதனுடனும் ஒப்பிட முடியாது.
பொதுவாகவே சித்ரகலா மிக இனிமையாகக் கண்ணனின் லீலைகளைத் தொகுத்துப் பாடிக்கொண்டே பால்கறப்பாள். அவள் குரலினிமையிலும், அவனது லீலாம்ருதத்திலும் மயங்கும் மாடுகள் ஏராளமாகப் பாலைக் கொட்டித்தரும்.
இன்றும் வழக்கம்போல் பாடிக்கொண்டே கறக்க ஆரம்பித்தாள்.
நாற்பது பானைகள் நிரம்பின. வண்டியில் கட்டி விடிவதற்குள் அரண்மனைக்கு அனுப்பவேண்டும்.
ஜாக்கிரதையாக எடுத்து வைத்தபின், வெண்ணெயைக் கடைய ஆரம்பித்தாள். தன் இனிமையான குரலால் அதில் கருப்பனின் நாமங்களைக் கலந்தாள்.
த்ருஷ்டி சுற்றி எடுத்தாள்.
இனிமேல்தான் சவால்.
எங்கே ஒளித்து வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறானே. என்ன செய்யலாம்? சமையலறையில், பருப்புப் பானைகளுக்கு நடுவே வைத்தாள்.
திரும்பியவள் இங்கே வேண்டாம் என்று கூடத்தில் மச்சில் வைத்து மூடினாள். ஒரு நிமிடம் கழித்து யோசித்து வேறிடம் மாற்றினாள். அங்கு வைத்தபோதும் ஒருநாள் அவன் கொள்ளையடித்தது நினைவுக்கு வர, மறுபடி மாற்றினாள். பத்துப் பதினைந்து இடங்களுக்கு மாற்றியபின்னும் குழப்பம் தீரவில்லை. அதற்குள் அவளது கணவன் ஸ்மிதாக்ஷன் வந்தான்.
சித்ரா என்ன செய்யற? நேரமாச்சு பார். அரண்மனைக்குப் போகணும். பால் குடங்களை எடு என்றான்.
வேலையிருந்ததால், ஒருவாறு சமாதானப்படுத்திக் கொண்டு, அவனுக்கு உதவி செய்யப் போய்விட்டாள்.
இன்று அதிசயமாக,
சூரியன் வந்ததும், கண்ணனும் வந்தான். அதை விட ஆச்சரியம் என்னவெனில்,
மாமி, உன் வீட்டு வெண்ணெய் நாக்கை சுண்டியிழுக்குது. எனக்கு கொஞ்சம் புது வெண்ணெய் தறீங்களா?
என்று கேட்டானே பார்க்கவேண்டும்.
கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.
ஏனடா? திருடித்தானே சாப்பிடுவாய்? இன்னிக்கென்ன புத்தி வந்துட்டதா? கேட்கிறாயே..
இல்லை‌ மாமி. கேட்டால் நீங்கள் தருவீங்களோ இல்லையோன்னு தான். இது என் வீடு மாதிரிதானே. நானே எடுத்துப்பேன். இன்னிக்கு நீங்க ரொம்ப அழகா என் அம்மா மாதிரியே எனக்குத் தெரியறீங்களா. அதான் கேட்டேன்.
உள்ளம் உருகிவிட்டது. மகாராணியின் பிள்ளை, அழகன், இவனைப்போல் ஒரு பிள்ளையோ, அல்லது இவனோடு விளையாடவேனும் ஒரு பிள்ளையோ வேண்டும் என்று தவமிருப்பவள்.
பாவமாய்க் கெஞ்சிக் கேட்கிறானே குழந்தை. அம்மா என்கிறானே. மனம் தாங்கவில்லை.
சரி இரு. ஒரு உருண்டைதான் தருவேன். சரியா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே போனவள் திரும்பிப் பார்த்து, நீ ரேழியிலேயே நில்லு. நானே கொண்டுவரேன் என்று சொல்லிவிட்டுப் போனாள்.
வைத்த இடத்தை அவன் பார்த்தால் அடுத்த வேளைக்குள் பானையோடு காணாமல் போகுமே.
போனாள் போனாள் போனாள் வருவதாய்க் காணோம்.
கண்ணனோ சற்றைக்கொருதரம்,
மாமி மாமீ.. மா....மீ.... என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தான்.
உள்ளிருந்து வந்தவள் வெறுங்கையோடு வந்தாள்.
மாமீ என்னாச்சு ஏன் இவ்ளோ நேரம்? எங்கே வெண்ணெய்?
அதில்லடா கண்ணா. எங்கே வெச்சேன்னு மறந்துட்டேண்டா
என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
குறும்புக்காரக் கண்ணன், நமுட்டுச் சிரிப்போடு சொன்னான்,
அவ்ளோதானே மாமி, என்னைக் கேட்டா நான் எடுத்துக் கொடுத்திருப்பேனே
என்று சொல்லிக்கொண்டே நேராக உள்ளேபோய், தண்ணீர்ப்பானைகளுக்குள் ஒன்றாய் இருந்த வெண்ணெய்ப்பானையை எடுத்துக்கொண்டு வந்தான்.
மாமீ நான் கண்டுபிடிச்சதால, முழுசும் எனக்குத்தான்.
நாளைக்கு வேற இடத்தில் ஒளிச்சு வைங்கோ. நான் வந்து எடுத்துதரேன் என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே பானையோடு ஓடிவிட்டான்.
மலங்க மலங்க விழித்துக் கொண்டு அவ்விடத்திலேயே சாயங்காலம் வரை நின்றுகொண்டிருந்தாள் அந்தப் பேதை சித்ரகலா

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

எது சிறந்த பக்தி



துரியோதனனுடன் சூதாடித் தோற்றார் தருமர். பாண்டவர்களின் ராஜ்யத்தைக் கைப்பற்ற, அவர்களைக் கொன்றொழிக்க பல முயற்சிகள் செய்து வந்தான் துரியோதனன்.
ஆனாலும் பாண்டவர்கள் தர்ம வழியில் நடப்பவர்கள் என்பதால் எல்லாச் சூழ்ச்சியிலும் தப்பி, பத்து வருட வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழச் சென்றார்கள்.
காட்டில் வாழ்ந்து வந்த குந்திதேவி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் பீமனோ, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுவான். இதனால் அவன் பிரார்த்தனையில் பங்குபற்றுவதில்லை.
ஒருநாள் "நீ யானைபோல் பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே. உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கடிந்தார் தருமர்.
இதன்பிறகாவது நேரத்திற்கு எழுந்து பிரார்தனையில் கலந்து கொள்வான் என்று எண்ணினார் தருமர். ஆனாலும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுவான்.
ஒரு நாள் கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான்.
"நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அருச்சுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான்.
அங்கு சென்ற அருச்சுனனும், நாளை விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்தான். "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர்.
மனம் இடிந்தவனாக,அருச்சுனன் திரும்பினான். அருச்சுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர்.
வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்த வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான்.
அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார்.
"இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன்.
"நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.., நீ கூப்பிட்டு வந்துவிடுவானா.." என்று அருச்சுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை (தண்டாயுதம்) தூக்கிக் கொண்டு புறப்பட்டான்.
போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.
சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விடுவேன்." என்று உரக்கக் கத்தினான்.
உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக்கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர் தலை குனிந்தனர்.
பீமனின் பக்திதான் சிறந்தது என்று நிரூபணம் ஆயிற்று. அவன் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை என்பதை உணர்ந்தான் அருச்சனன்.
தினமும் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாத போதிலும், அவன் பக்தியே தூயதாகவும் தன்னலம் அற்றதாகவும் இருந்தது.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

Wednesday 2 August 2017

மாம்பழ இராமானுஜர்

ராமானுஜரை எதிர்கொண்டழைத்து,
பிரசாதம் வழங்கிய திருவேங்கடவர்!!!

ராமானுஜர் தம் இரண்டாம் திருமலை விஜயத்தின் போது,மலைமீது நடந்து வந்த களைப்பில்,ஓரிடத்தில்(முழங்கால் முடிச்சுக்குப் பக்கத்தில்,தம் முதல் விஜயத்தின் போது,பெரிய திருமலைநம்பிகள்அவரைஎதிர்கொண்டழைத்த இடத்தில்)அமர்ந்துஓய்வெடுத்தார்.

அவருக்கும்,உடன் வந்த சீடர்களுக்கும் பசியும் கூட.அப்பொழுது அங்கு ஒரு இளவயது பிரம்மசாரி வந்து அவர்களுக்கு ததியன்னமும்,(தயிர்சாதம்)மாம்பழமும் திருவேங்கடவரின் பிரசாதம் என்றுகொடுத்தான்.

ஶ்ரீவைஷ்ணவர்கள் வெளியில் யாரிடத்திலும்
எதுவும் சாப்பிடமாட்டார்கள்.எனவே அவனிடம் "நீ யார்?எங்கிருந்து வருகிறாய்"என்று உடையவரின் சீடர்கள் கேட்க

"அடியேன் பெயர்மதுரகவிதாஸன்.
அனந்தாழ்வானின் அனந்தாணபிள்ளை சீடன்;திருமலையிலிருந்து வருகிறேன்"
என்றான்.

உடையவர் அவனிடம் ஆசார்யன் தனியனைக் கூறுமாறு கேட்க

"அகிலாத்ம குணாவாஸம்,அஜ்ஞாத திமிராபகம்,ஆச்ரிதாநாம் ஸுசரணம் வந்தே
அனந்தார்ய தேசிகம்"
"நற்குணங்கள் அனைத்துக்கும் இருப்பிடமானவரும், அறியாமையாகிய இருளை அகற்றுபவரும்,அடியவர்களுக்கு உயர்ந்த தஞ்சமானவரான் அனந்தாழ்வானை வணங்குகிறேன்"என்று சொன்னான்."

தனியனில் ஆசார்யரின்,ஆசார்யரைப் போற்றியும் குறிப்பு இருக்க வேண்டும்.இந்தத் தனியனில் அனந்தாழவானின் ஆசார்யரான் ராமானுஜரைப் பற்றி ஒன்றும் இல்லையே"என்று வினவ,

சுதாரித்துக் கொண்ட பிரம்மசாரி,இன்னொரு தனியனும் உள்ளது என்று கூறி

"ஶ்ரீமத் ராமானுஜாசார்ய,ஶ்ரீ பாதாம்
போருஹத்வயம், ஸ்துத்தமாங்க ஸந்தார்யம்,அனந்தார்யம் அஹம் பஜே"

"ஶ்ரீமத் ராமானுஜருடைய திருவடித் தாமரைக்கு இணயானவரும்,அதனால் ந்ல்லோர்களால் சென்னிக்கு அணியாகத் தரிக்கப்படுமவருமான அனந்தாழ்வானைச் சேவிக்கிறேன்"

என்று அந்தத் தனியனச் சொன்னான்.

அதன் பிறகே அவர்கள் பிரசாதம் எடுத்துக் கொண்டனர்.அந்த பிரம்மசாரி அதன் பிறகு அங்கிருந்து சென்று விட்டான்.

சிறிது நேரம் கழித்துப் புறப்பட்ட உடையவரும் சீடர்களும் திருமலை அடைந்து அனந்தாழ்வானிடம் சீடன் மூலம் கொடுத்தனுப்பிய பிரசாதம் போக்யமாக இருந்தது என்றனர்.

அனந்தாழ்வான் "அடியேன் யாரையும் அனுப்பவில்லையே.பிரசாதமும் கொடுக்க வில்லையே !"என்று ஆச்சர்யப் பட்டார்.

அவர்கள் சீடனின் பெயரையும்,அவன் சொன்ன தனியனையும் கூற,அப்படி ஒரு சீடன் தமக்கு இல்லையென்றும்,தனியனைக் கேள்விப்பட்டதே இல்லை என்றும் கூறினார்.

அவர்கள் அனைவருக்கும் அப்போது தான்
புரிந்தது திருவேங்கடவரே நேரில் சென்று தமக்கு நைவேத்யம் செய்த பிரசாதங்களை ராமானுஜருக்கு கொடுத்தார் என்பது.

அது மட்டும்ல்லாமல் ராமானுஜரையும்,அவரது அத்யந்த சீடர் அனந்தாழ்வானையும் போற்றித் தனியன் பாடியதிலும் திருவேங்கடவரின் அளவற்ற கருணையையும்,அன்பையும் எண்ணிப்
பரவசமடைந்தனர்.

ஏற்கனவே மலையப்பனுக்கு சங்காழி அளித்ததால் ராமானுஜரை ஆசார்யராக ஏற்றுக் கொண்டார் பெருமாள்.இப்பொழுது அனந்தாழவானுக்கு தனியன் பாடி,அவரையும் ஆசார்யராக ஏற்றுக் கொண்டார்
திருமலையப்பன்

ஏற்கனவே

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்"தனியன் அவதார நாள் பதிவில்,எப்படி ஶ்ரீரங்கத்தில் நம்பெருமாள் மணவாள மாமுனிகள் பேரில் தனியன் பாடி அவரை ஆசார்யனாக் ஏற்றுக் கொண்டார் என்பதையும்,அனைத்து திவ்ய தேசங்களிலும் அந்தத் தனியன் பாட வேண்டும் என்று நம்பெருமாள் நியமனம் செய்ததையும் அறிவோம்

அங்கு நம்பெருமாள் பாடியதுக்கு முன்னோடியாக, ஶ்ரீனிவாசப் பெருமாள் திருமலையில் பாடிவிட்டார்.

திருமலயில் மட்டும் இரண்டு தனியன்களும் -பொதுத் தனியனான "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" மற்றும் அனந்தாழ்வான் மீது திருவேங்கடவர் பாடிய தனியனும் -முன்னும்,பின்னும் சேவிக்கப் படுகின்றன!!

மாம்பழ ராமானுஜர் !!!

வழியில் திருவேங்கடவ்ர் பிர்சாதமாகக் கொடுத்த மாம்பழத்தைப் புசித்த ராமானுஜர் கொட்டையை அங்கே எறிந்து விட்டார்.

அங்கு ஒரு மாஞ்செடி முழைத்து ,மாமரமாகி விட்டது,அதற்குப் பக்கத்தில் இந்த வைபவத்தின் நினைவாகவும்,முதல் விஜயத்தில் பெரிய திருமலை நம்பிகள்,ராமானுஜரை எதிர்கொண்டழைத்ததின் நினவாகவும்,
பிற்காலத்தில் ராமானுஜருக்கு அங்கு (நடைபாதையில் படி எண் 3260க்குஅருகில்) ஒரு சந்நிதி அமைக்கப்பட்டது.

 "தோவ பாஷ்யகாரர்(ஶ்ரீ பாஷ்யத்தை இயற்றிய ராமானுஜருக்கு கல்விக்கடவுளான சரஸ்வதி தேவியே கொடுத்த பட்டம்) சந்நிதி"

என்று அழைக்கப் படுகிறது.

பிற்காலத்தில் திருமலைக்கு எழுந்தருளிய ராமானிஜரின் மறு அவதாரமான ஸ்வாமி மணவாள மாமுனிகள்

மாமரக் கோவில் ராமானுஜரைச் சேவித்து

"மாம்பழ ராமானுஜர்" என்று கொண்டாடினார்.

இனிமேல் திருமலை செல்லும் போது "மாம்பழ ராமானுஜரை"யும் சேவித்து வாருங்கள்

"ஸ்ரீ வேங்கடவா உன் திருவடிகளே சரணம்"

எம்பெருமானார்

"பொறி தட்டுகிறது இராமானுசருக்கு"

விறு விறு என்று கோபுரத்தின் மேல் ஏறுகிறார் உடையவர்! கண்களின் ஓரத்தில் லேசாக நீர்!
வந்த கண்ணீரை, கண்களின் நடு வழியில் வரும் போதே....
"படக்"கென்று தொண்டைக்குள் அடைத்துக் கொள்ளும் வித்தை!
அதைத் தெரிஞ்சி வைச்சிருக்கார் போல!
சின்னஞ் சிறு வயதிலேயே அத்தனை கொடுமையும் பார்த்து விட்டார் அல்லவா?
ஆசிரியர் தன்னை விரட்டி விடல், பின்பு, குருவே தன்னைக் கொல்ல முயற்சி,
பின்பு, திருமண முறிவு, பின்பு, உடன் பழகிய பலரின் வெறுப்பு, பின்பு சக அடியவர்கள் தன் மீது பொறாமை...
பின்பு, குருவைப் பார்க்க வந்து கொண்டிருக்கும் போதே குருவின் மரணம்!
இப்படிப் புடம் போட்டு விட்டது போல! கண்ணீர் மட்டும் வெறுமனே வழிகிறது!
கோபுரத்தில் இருந்து, உரத்த குரலில் கூவிக் கூவி எல்லாரையும் அழைக்கிறார்!
உடன் வந்த சீடர்கள், "இவர் என்ன தான் பண்ணுறாரு?"-ன்னு தெரியாமல் விழிவிழி-ன்னு விழிக்கிறார்கள்!
வயல் வெளிகளில் இருந்தும், ஊர்ச் சந்தைக்கும் வந்த கூட்டம், கீழே அலை மோதுகிறது! கோபுரத்தின் கீழ் நிற்க இடமில்லை!
இந்தச் சின்னப் பையன், வாலிபத் துறவி, இனிக்க இனிக்கப் பேசுகிறான் தான்! இல்லை-ன்னு சொல்லலை! ஆனா அப்படி என்ன பெருசா சொல்லிடப் போறான்?
உடையவர் கீழே குனிந்து அத்தனை பேரையும் பார்க்கிறார்!
கன்னங் கரேல் என்று அன்றாடம் வெயிலில் வாடிடும் மக்கள்! இவர்களுக்கு என்னா-ன்னு சொல்லுறது?
நம்பிகள் தம்மிடம் சொன்னது என்ன???
நர சமூகோ நாரா:
நாரா ஜாதானி தத்வானி
நாரா நிதி ததோ விது:
தான்யேவ சயனம் தஸ்ய - தேன
நாராயண ஸ்மிருதா:
செற்றமே வேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யுமாறு எண்ணி,
நற்றுணையாகப் பற்றினேன் அடியேன்
நாரணா என்னும் நாமம்!
இப்படி எல்லாம் சொன்னா,
இவிங்களுக்குப் புரியுமா?
சரி, சரி, மிகவும் எளிதாக்கிச் சொல்லீற வேண்டியது தான்!
வேறு வழியில்லை.....
இறைவனே பன்றியாய்க் கீழே இறங்கி வருகிறானே!
நாம் இறங்கினால் ஒன்னும் குறைந்து விட மாட்டோம்!!
என்னை மன்னித்து விடுங்கள் திருக்கோட்டியூர் நம்பிகளே!
ஓம் நமோ .....
அந்த "ரகஸ்யம்",
இதோ.....ஊருக்கே போட்டு உடைக்கப்பட்டு விட்டது! உங்களுக்கு?
அனைவர் முகத்திலும் ஏதோ எளிமையாகப் புரிந்து கொண்ட திருப்தி!
எல்லாருக்கும் வாயெல்லாம் சிரிப்பு!
உடையவர் வாயால் திருமந்திர அர்த்தம் கேட்டதே போதும் என்ற மோட்சத் திருப்தி!
அடியவர்களோடு கூடி இருந்து குளிந்தேலோ என்ற மோட்சத் திருப்தி!
அப்பாடா....
இனி பிறவியே இல்லை என்ற
சுயநலம் வெறுமனே சம்சார துக்க நிவர்த்தி அதுவா மோட்சம்?
இல்லை! இல்லவே இல்லை!
அந்தமில் பேரின்பத்து "அடியவர்களோடு" கூடி
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
உடையவர் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வருகிறார்.....
எதிரே சாட்சாத் திருக்கோட்டியூர் நம்பிகள்!
அவர் முன்குடுமி கோபத்தால் ஆடுகிறது!
பழுத்த வைணவ நம்பிக்கு, கண்களோ சிவக்க!!
நம்பி: "இராமானுஜா! என் முகத்தில் விழிக்காதே! போய் விடு இங்கிருந்து! திருக்கோஷ்டியூர் பக்கம் இனி எட்டியும் பார்க்காதே!"
உடையவர்: "அடியேன் என்றைக்கும் உங்கள்-இராமானுசன் தான், குருவே!"
நம்பி: "இதற்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! உதட்டில் பஞ்சு, உள்ளத்தில் நஞ்சா? குருத் துரோகி! போயும் போயும் உன்னையா ஆளவந்தார் நம்பினார்?"
உடையவர்: "ஐயோ...சுவாமீ...."
நம்பி: "ச்சீ....அப்படி அழைக்காதே! நான் உன்னைச் சபித்தால் என்ன ஆவாய் தெரியுமா?"
உடையவர்: "ஆச்சார்யர் திருவடிகளே தஞ்சம் என்று, அப்போதும் உங்கள் காலடியிலேயே வீழ்ந்து கிடப்பேன்!"
(நம்பிக்குக் கண் கலங்குகிறது...இவனை என்னவென்று சொல்வது?..எவ்வளவு திட்டினாலும், நம்மை அல்லவா ஏக்கமுடன் பார்க்கிறான்!
சாத்திரத்தை மீறியவன் போலவும் தெரிகிறான்! மீறாதவன் போலும் தெரிகிறானே.........?
நம்பியின் கோபத்தைப் பார்த்து, மொத்த ஊரே அரண்டு போய் நிற்கிறது!)
நம்பி: "குருவின் வார்த்தையை, அரை நாழிகைக்குள் மீறி விட்டாயே! உனக்கு என்ன கிடைக்கும் தெரியுமா?"
உடையவர்: "நரகம் தான் சுவாமி!"
நம்பி: "தெரிந்துமா இப்படிச் செய்தாய்?"
உடையவர்: "கேட்பவர் "எவராயினும்" அவருக்கு மோட்சம் "காட்ட" வல்லது என்று நீங்கள் தானே சொன்னீர்கள்?
இத்தனை பேர் இங்கு உழல்வதை விட, அடியேன் ஒருவன் தானே? நரகத்தில் தாராளமாக உழலலாம் அல்லவா? கேட்ட அத்தனை பேரும் மோட்சம் அடைவார்கள் இல்லையா?"
நம்பி: "ஆஆஆஆஆஆஆ...இராமானுஜா!"
உடையவர்: "நொண்டியோ, குருடோ, விகாரமோ, அழகோ.....அத்தனை குழந்தைகளும் தாயிடம் சேரட்டுமே!
அடியேன் ஒருவன் குருத் துரோகி ஆகி நரகத்தைச் சேர்கிறேன்! எனக்கு ஆசி கூறி, நரகத்துக்கு அனுப்பி வையுங்கள் சுவாமி!"
(நம்பியின் காலில் உடையவர் விழ......அதட்ட வந்த நம்பிகள் அரண்டு போகிறார்! இப்படி ஒரு பதிலைத் தன் வாழ்நாளில் அவர் கேட்டதே இல்லை!)
(இளைய இராமானுசனை வாரி எடுத்துக் கொள்கிறார்!)
நம்பி: "காரேய்க் கருணை இராமானுசா! ஆசை உடையோர்க்கெல்லாம் பேசி "வரம்பு அறுத்தாயோ"?
எம்பெருமான் தன்னிலை இறங்கி வருவான் தெரியும்! ஆனால் மனிதன் இறங்கி வர மாட்டானே? அவன் பிடிச்சதே பிடியாச்சே! இள ரத்தத்துக்கு இன்னும் அதிகமாச்சே? இந்தச் சின்ன வயதில் இவ்வளவு இரக்கமா உனக்கு? நீ மகாலக்ஷ்மித் தாயாரின் குணத்தை அல்லவா பெற்று இருக்கிறாய்?
அவன் எம்+பெருமான்!
ஆனால் நீயோ
எம்+பெரும்+ஆனார்!
நீரே எம்பெருமானார்! நீரே எம்பெருமானார்!

"ஸ்ரீஎம்பெருமனார் திருவடிகளே சரணம்"