Wednesday 26 February 2014

Thirumanjanam - 27.02.2014

Today Thiruvona Thirumanjanam held on SriLakshmi Hayagreevar at Sri Kannan Temple, Elangadu

Time : 10.00AM

Would You Like or Participate this Thirumanjanam

Contact our Trustee's

Mr.M.Chinna Durai

9942604383


Mr.J.Gopikrishnan

9500264545

Mr.S.P.Purusothaman

8056901601



 

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர்

மூலவர் : ரங்கநாதர்
உற்சவர் : நம்பெருமாள்
அம்மன்/தாயார் : ரங்கநாயகி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவரங்கம்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
மங்களாசாசனம்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்,
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,
திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார்,
தொண்டரடி பொடியாழ்வார்
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
-தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில்
ஒரு தென்னை மரத்தின்
அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின்
முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும்.
பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள்
முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில்
நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும்
ஓதவும், பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த
திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள்
திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில்
நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்)
லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத
தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும்,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில்
விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிரமாதந்தோறும்
இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும்.
தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின்
சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள்
வருகை இருக்கும்.
தல சிறப்பு:
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய
மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும்
21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய
கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க
அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின்
மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்க
து. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில்
பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம்.
புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலின
ின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ
பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின்
விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார்
தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்
ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம்
முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.
பெருமாளின் 108 திருப்பதிகளில்
தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான
திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம்
பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட
இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள்
வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம்.
இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில்
இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய
தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.
பொது தகவல்:
ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த
நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு'
உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில்
ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம்
தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.
ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்க
ொண்டாடப்படுகிறது.
அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார்.
அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில்
பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய
பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த
பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள்
சென்று மிதக்க விடுவார்கள்.
பிரார்த்தனை
மோட்சம் தரும் தலம் இது என்பதால்
இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப்
பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி,
ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம்
கிடைக்க, விவசாயம் செழிக்க
இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக்
கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல்,
குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும்
பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம்.
சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி,
வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள்,
பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம்
செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
இது தவிர கோயிலுக்கு வரும்
பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
தலபெருமை:
ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில்
காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை.
ஆனால், சூரிய
உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர்
பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும்
சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட
ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி,
முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம்
இங்கு பிரசித்தி பெற்றது.
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல்
எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய
நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள்,
இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத
அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில்
நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில்
லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம்
படைக்கப்படுகிறது.
தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில்
பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம்.
புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலின
ின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.ச
ுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ
பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின்
விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார்
தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்
ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம்
முடிந்தபின்பு தோன்றிய பழமையான
கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில்
தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான
திருச்சிறுபுலியூருமே அவை.
மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம்
ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர்,
இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள்
பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர்.
சிலகாலம் கழித்து அவர்
அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர்
இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.
சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ,
பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக
ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில்
நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக
போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும்
வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால்,
அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம்
செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்
மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின்
காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
காவிரி நீர் அபிஷேகம்! :
ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில்,
சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்
டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய
தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட
ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள
தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில்
காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற
நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம்
நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக
ஐதீகம்.
ஆடிப்பெருக்கு திருவிழா : ஆனி கேட்டையில்
சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில்
இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம்
கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம்
தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த
விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல்
ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்
கொண்டாடப்படுகிறது.
அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார
். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில்
பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய
பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த
பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள்
சென்று மிதக்க விடுவார்கள்.
கம்பருக்கு அருளிய நரசிம்மர் :
கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம்
செய்தபோது, அதில்
நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய
அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர்
பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர்,
"அதை நரசிம்மரே சொல்லட்டும்!'
எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.
அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன்
தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின்
கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.ம
ேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார்
சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார்.
கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது.
சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம்
உள்ளது.
மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை,
பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம்
நடக்கிறது.சத்தியலோகத்தில்
ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய
விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை,
"ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின்
இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,
ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக
காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில்
ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது.
பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால்
இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப்
படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.
அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில்
அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு
சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம்
இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்
வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர்
கையில், வேதங்களை வைத்திருக்கிறார்.
இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது.
கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம்,
கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள்
வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட
பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில்
பிரகாரத்தில் தானிய
லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது.
இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம்
நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு.
சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள்
இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து,
வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.
பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள்,
இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும்
வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான
அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில்
இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன
உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள
உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை.
பெருமாளே அன்னப் பெருமாளாக
அருள்பாலிப்பது சிறப்பு.
கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர்
சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில்
விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம்
அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத்
தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30
மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம்
கிடையாது. வியாழக்கிழமைகளில்
கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது.
இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும்
துவார பாலகர்களாக இருப்பதும்,
மார்கழி திருவாதிரையில்
இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும்
சிறப்பு.
நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்: மருத்துவக்கடவுளான
தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில்
மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம்
மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர்.
தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்,
இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம்
படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில்
ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும்
சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக்
கலவையையும் படைக்கின்றனர்.
சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த
கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம்.
பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில்,
சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம்
செய்யப்படுகிறது.
ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி,
பூதேவி இருவரும் பெருமாளுடன்
இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள
ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார்
உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி,
பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர்.
இத்தகைய அமைப்பில்
தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில்
தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும்
வாத்தியங்கள் இயகப்படுகின்றன.
தல வரலாறு:
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலின
ின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக
பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய
பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய
குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில்
இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன்
சீதையை கடத்தி சென்ற போது,
அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த
விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த
ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன்
அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில்
காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்
டு திரும்ப
எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை.
அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன்
தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும்
காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும்
என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத்
தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும்
தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக
உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில்
கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில்
வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ
மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற
அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: நூற்றுக்கணக்கான ஏக்கர்
பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும்
திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21
கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய
கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க
அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின்
மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்க
து. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான
கோயில்களில் இதுவும் ஒன்று
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்து ராஜகோபுரம்
இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம்
என்பது குறிப்பிடத்தக்கது.....

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்


மூலவர்:அப்பக்குடத்தான்
  உற்சவர்:அப்பால ரங்கநாதர்
  அம்மன்/தாயார்: இந்திரா தேவி, கமல வல்லி
  தல விருட்சம்: புரஷ மரம்
  தீர்த்தம்:இந்திர புஷ்கரிணி
  ஆகமம்/பூஜை :பாஞ்சராத்ர ஆகமம்
  பழமை:1000-2000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர்:திருப்பேர்
  ஊர்:கோவிலடி
  மாவட்டம்: தஞ்சாவூர்
  மாநிலம்: தமிழ்நாடு   

இந்திரன் பழிதீர்த்தப் படலம்




Temple images
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது, அந்த ஊர் பற்றிய விபரங்களை விபரமறிந்தவர்களிடம் கேட்டோ, இணையத் தளங்கள் மூலம் அறிந்தோ செல்வது அங்கு சென்று வர எளிதாக இருக்கும். புராணங்களைப் படிக்கும் முன்பும் அப்படியே. புராணக்கதைகளை மட்டும் படித்தால் போதாது. அதை எழுதியவர் யார், அவரைப் பற்றிய விபரம், எந்தச் சூழ்நிலையில் எழுதினார், அவரை எழுதத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டால், படிப்பவர்களுக்கு அதுபற்றிய முழுமையான விபரமும் தெரியவரும். கூடல்மாநகராம் மதுரையில் சிவபெருமான் செய்த அற்புதலீலைகளை ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லியுள்ளார்கள். வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது. வேதாரண்யத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகனே பரஞ்சோதி. தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். நீறிட்ட உடலுடன் வேதாரண்யத்து பெருமானை துதித்து வந்த பதஞ்சலி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரையம்பதிக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமான் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் இனிய பாடல்களை வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். இது 64 படலங்களைக் கொண்டது. முதல் 18 படலங்கள் மதுரை காண்டம் என்றும், 19 முதல் 48 வரையான படலங்கள் கூடற்காண்டம் என்றும், 49 முதல் 64 வரையான படலங்கள் திருவாலவாய் காண்டம் என்றும் பெயர் பெற்றுள்ளன.
பிரம்மா ஒருமுறை ஒரு தராசுத் தட்டில் கைலாயத்தை ஒரு தட்டிலும், மதுரையம்பதியை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தார். அப்போது, மதுரை இருந்த தட்டு தாழ்ந்தது. கயிலையை விட மதுரை மிகச்சிறந்த தலம் என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய பெருமை பெற்ற மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்ற பரஞ்சோதி முனிவர் தயாராகி விட்டார். மக்கள் அனை வரும் சுந்தரேஸ்வர பெருமானின் திவ்ய லீலைகளைக் கேட்பதற்கு வரவேண்டும் பாண்டிய மன்னரின் சார்பில் பறையறைந்து தெரிவிக்கப் பட்டது. தேரோடும் வீதிகளை மக்கள் கோமயம் தெளித்து சுத்தமாக்கினர். அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. வாழை மரத் தோரணங்களை மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு கட்டினர். இன்றைய சித்திரை திருவிழாவுக்கு நகரை அலங்கரிப்பது போல், மக்கள் வெகு விமரிசையான ஏற்பாடுகளை அவரவர் செலவில் செய்தனர். இந்த விபரத்தையறிந்து வெளியூர்களில் இருந்தெல்லாம் சிவனடியார்கள் மதுரையை மொய்த்தனர். எங்கும் சிவாய நம என்ற திருமந்திரம் ஒலித்தது. திருவிளையாடல் புராண அரங்கேற்றத்தை நடத்த பெரிய மண்டபம் வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தனர் அமைச்சர்கள். கோயிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் அமரலாம், மண்டபத்துக்கு வெளியேயும் மக்களை கூடச் செய்யலாம் என்ற அடிப் படையில் மண்டபத்தை சீரமைத்தனர். அலங்கார மேடை ஒன்றில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, பரஞ் சோதியார் எழுதிய திருவிளையாடல் புராண ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. பரஞ்சோதியார் விழா மேடைக்கு வந்தார். அப்போது திருச்சங்குகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. பாண்டிய மன்னர் பரஞ்சோதியாரை எதிர்கொண்டு வரவேற்று, பொன்னாடை போர்த்தினார். அனைவரும் அன்னை மீனாட்சியின் சன்னதிக்குச் சென்றனர். கற்பூர ஒளியில் மரகதவல்லி மீனாட்சி தகதகவனெ ஜொலித்து ஆசிர்வதித்தாள். அடுத்து சுந்தரேஸ்வரப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அரங் கேற்றம் மிகச்சிறப்பாக அமைய வேண்டினார் பரஞ்சோதி முனிவர். பின்னர் மண்டபம் திரும்பி, விநாயகப் பெருமானை மனதில் எண்ணி கணீர் என்ற குரலில் திருவிளையாடல் புராணத்தை சொல்ல ஆரம்பித்தார்.
சக்தியாய் சிவமாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தியாகிய சொற்பொரு ணங்குள
சித்தி யானை தன் செய்பொற் பாதமே!
என்று விநாயகரை வணங்கிப் பாடினார்.
தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பைச் சொன்னார்.  இந்தக் குளத்தைப் பார்த்தால் தர்மம் செய்த புண்ணியம் சேரும். தீர்த்தத்தைத் தொட்டால் செல்வம் பெருகும். மூழ்கி எழுந்தால் மோட்சம் கிடைக்கும் என்றார்.

இந்திரன் பழிதீர்த்தப் படலம்
ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும். அவன் தேவேந்திரன் என்றாலும், அவனுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. குறிப்பாக, தலைமை பொறுப்பில் உள்ளவன், சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனது பொறுப்பில் பலர் இருக்கிறார்களே என்ற அக்கறை வேண்டும். இல்லாவிட்டால், பதவி பறிபோய் விடும். தேவேந்திரனுக்கும் ஒருநாள் அப்படியொரு நிலை வந்தது. பூலோகத்தில் புண்ணியம் செய்தவர்களே தேவர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் அடைய நினைத்த இன்பமெல்லாம் அங்கே கிடைக்கும். அதற்காக எதற்கும் ஒரு நேரம், காலம் உண்டல்லவா! அங்கும் நல்லநேரம், கெட்ட நேரமெல்லாம் உண்டு. தேவேந்திரனுக்கு ஒருநாள் கெட்ட நேரம் வந்தது பெண்களின் வடிவில்! தேவலோகத்தில் தேவர்கள் கூடிக்களித்திருக்க, நாட்டியத்தை ரசிக்க அப்சரஸ்கள் எனப்படும் தேவகன்னியர் உண்டு. அவர்களில் ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த தேவேந்திரன், பல அப்சரஸ்களின் அழகில் மயங்கி லயித்துக் கிடந்தான். அந்த நேரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி அங்கு வந்தார். இவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டபத்தில் மஞ்சள் உடை உடுத்தி வடக்கு நோக்கி ஒரு சிற்பம் இருக்குமே! அந்த குரு பகவான் தான்! இவரது பார்வை ஒரு இடத்தில் பட்டாலே நல்லது நடக்கும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.
தேவேந்திரனுக்கு தான் கெட்ட நேரமாயிற்றே! இல்லாவிட்டால், பொறுப்புள்ள பதவியிலுள்ள ஒருவன், பெண்களுடன் பொது இடத்தில் கூடிக் களிப்பானா? மறைவிடத்து விஷயங்கள் பொது இடத்தில் நடந்தால், யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்! பிரகஸ்பதி, தேவேந்திரன் நிகழ்த்திய கூத்தைப் பார்த்து, அப்படியே கண்ணைப் பொத்திக் கொண்டார். குரு பார்வையை மூடினால், நிலைமை என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவேந்திரனுக்கு ஆரம்பமானது கெட்ட நேரம்.பிரகஸ்பதி, அப்படியே திரும்பிப் போய் விட்டார். தேவேந்திரன் தன் ஆட்டபாட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அந்தரங்க அறைக்குள் செல்லும் வேளையில், தேவர்களில் சிலர் அவனைப் பார்த்தனர். தேவேந்திரா! குருநாதர் பிரகஸ்பதி வந்திருந்தார். தாங்கள் அந்நேரத்தில் இருந்த நிலை கண்டு, கண் பொத்தி வெளியேறி விட்டார். உடனடியாக அவரைச் சந்தித்து, மன்னிப்பு கேளுங்கள். குருவின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களுக்கு மட்டுமல்ல! தங்களை நம்பியிருக்கும் எங்களுக்கும் சிரமம் வந்து சேரும், என்றனர். தேவேந்திரன் கதிகலங்கி விட்டான். குரு நிந்தை செய்தோமே! என்ன நடக்கப் போகிறதோ? உடனே அவரை சென்று பார்த்து வருகிறேன், என்று அவரது இல்லத்துக்கு தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி விரைந்தான்.
குரு அங்கே இருந்தால் தானே! சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? குடும்பத்தினர் அல்லது முன்னோர் செய்த பாவத்தின் விளைவே அது. இவர்கள் மீது குருவின் பார்வை பட வேண்டுமானால், பெரும் பரிகாரங்களை எல்லாம் செய்தாக வேண்டும்! தேவேந்திரனின் பார்வையில், குரு படவே இல்லை. தனது தலைமை சீடனே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? பெண் பித்தர்களான இவர்களுக்கு போய் பாடம் எடுத்தோமே என்ற வேதனையில் குரு மறைவான இடத்துக்குப் போய் விட்டார். தேவேந்திரன் அவரைத் தேடியும் காணாமல், அவன் பிரம்மாவைப் பார்க்க ஓடினான். குரு அபச்சாரம் செய்து விட்டதை அவரிடம் சொன்னான். பிரம்மா ஒரு யோசனை சொன்னார். தேவேந்திரா! குரு நிந்தனை கொடிய பாவம். இதற்கு தகுந்த பரிகாரம் செய்தால் தான் அவர் உனக்குத் தென்படுவார். அந்த பரிகாரத்தையும் நான் சொல்கிறேன் கேள். துவஷ்டா என்ற அசுரன் ஒரு மகனைப் பெற்றிருக்கிறான். அவனது பெயர் விஸ்வரூபன். அவனுக்கு மூன்று முகம். மிகவும் கொடியவன். ஆனால், ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகக் கடைபிடிப்பவன். அவனை உன் தற்காலிக குருவாக ஏற்றுக்கொள். வேறு வழியில்லை, என்றார். குரு பார்வை இல்லாவிட்டால் கெட்ட நேரம் விடவே விடாது. இந்திரன் அதற்கு விதிவிலக்கா என்ன! பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
தன்னிலும் உயர் பதவியிலுள்ள, வேதநாயகனான நான்முகன் சொன்ன யோசனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தேவலோகத்துக்கு ஒரு அசுரனை குருவாக நியமிக்கச் சொல்கிறாரே! இவருக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணியபடியே சென்றான். இருப்பினும், அவரது யோசனையை செயல்படுத்தாவிட்டால் அவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும். மேலும், தேவலோகத்துக்கு ஒரு குருவும் நிச்சயம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் விஸ்வரூபனை சந்தித்து அவனை வணங்கினான். என்ன இந்திரா! தேவலோகாதிபதி என்னைத் தேடி வந்திருக்கிறாய்! என்ன விஷயம்? என்றான். தங்களை குருவாக ஏற்க வந்துள்ளேன். தாங்கள் தேவலோக குரு பதவியை ஏற்க வேண்டும், என்றான். விஸ்வரூபனுக்கும் இதில் மனமில்லை. அசுரனான நாம், தேவர்களுக்கு குருவாக இருப்பதாவது! இருப்பினும், தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டு வைக்கலாமா! சிங்கமாக இருந்து இந்த தேவர்களை ஒரு வழி செய்து விட வேண்டும். ஏழு உலகிலும் அசுரக்கொடி பறக்க இதை விட அருமையான சந்தர்ப்பம் ஏது? என்று எண்ணி யவனாய், பதவி ஏற்க சம்மதித்தான். ஆக, மாணவனுக்கும் மனமில்லை, குருவுக்கும் வஞ்சக எண்ணம் என்ற ரீதியில் தேவர்கள் அசுரர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கினர்.
ஒரு வழியாக விஸ்வரூபன் தேவர்களுக்கு குருவானான். தேவேந்திரனுக்கு தன் குலகுரு பிரகஸ்பதிக்கு செய்த துரோகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவரது அதிருப்தியில் இருந்து விடுபட்டு பாவம் நீங்குவதற்காக யாகம் ஒன்றை நடத்த எண்ணம் கொண்டான். தன்னுடைய விருப்பத்தை விஸ்வரூபனிடம் தெரிவித்தான். புதிய குரு விஸ்வரூபன் யாகம் நடத்த ஒப்புதல் கொடுப்பது போல நடித்து, இதையே சந்தர்ப்பமாக்கி தேவேந்திரனை கொன்று தேவலோகத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். ஒருவருக்கு குரு பார்வை இல்லாவிட்டால் துன்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேவேந்திரனுக்கு இந்த யாகத்தின் மூலம் பெரும் துன்பம் வந்து சேர இருந்தது. யாகம் துவங்கியது. விஸ்வரூபன் யாகத்திற்கு தலைமை வகித்தான். யாக குண்டத்தில் நெய்யை வார்க்கும்போது, தேவர்குலம் தழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரக்கர் குலம் தழைக்க வேண்டும் என்று சொல்லி நெய்யை ஊற்றினான். மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. தேவேந்திரன் சுதாரித்துக் கொண்டான். தன் ஞானதிருஷ்டியால் எதிரே அமர்ந்திருக்கும் விஸ்வரூபன் குரு என்ற போர்வையில் தனக்கு எதிராக மந்திரங்களை உச்சரிக்கிறான் என்பதை தெரிந்துகொண்டான். அவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வஜ்ராயுதத்தை எடுத்து விஸ்வரூபன் மீது வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு தப்பியவர்கள் யாருமில்லை. விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்தது. அந்த தலைகள் மூன்று பறவைகளாக உருமாறி வானில் பறந்தது. எப்படியோ விஸ்வரூபனின் ஆவி பிரிந்துவிட்டது. ஏற்கனவே பிரகஸ்பதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட இந்திரன், இப்போது புதிய குருவான விஸ்வரூபனையும் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றிக் கொண்டது. ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அதற்கு மாபெரும் பரிகாரங்களை செய்தாக வேண்டும். அந்த பரிகாரங்களை எல்லாம் தேவர்கள் செய்தனர். இதன் மூலம் அந்த தோஷம் நீங்கியது. ஆனால் அசுரர்களின் பகையை அவன் அதிகமாக சம்பாதித்துக்கொண்டான். விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா. இவர் தன் மகனைக்கொன்ற தேவேந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டார். இதற்காக யாகம் ஒன்றை துவங்கினார். அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனது கண்களிலும் வாயிலும் விஷவாயு வெளிப்பட்டது. அவன் துவஷ்டாவை வணங்கிநின்றான்.
தலைவனே! உன் கட்டளைக்கு அடிபணிந்து உன் முன்னால் நிற்கிறேன். உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு துவஷ்டா, சீடனே! உனக்கு விருத்திராசுரன் என பெயர் சூட்டுகிறேன். நீ இப்போது இருப்பதைவிட பலமடங்காக உன் உருவத்தை வளர்த்துக்கொள்ளும் வரத்தையும் தருகிறேன். உன் உருவம் வளர வளர கோபமும் அதிகமாகும். அந்த கோபத்தை பயன்படுத்தி நீ தேவர்குலத்தை அழிக்க வேண்டும். குறிப்பாக என் மகன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனின் உயிர் எனக்கு வேண்டும். உடனே புறப்படு! என ஆணையிட்டார். விருத்திராசுரன் தனது நாற்பது கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை தாங்கி இந்திரனை தேடி புறப்பட்டான். விருத்திராசுரன் தன்னை நோக்கி வருவதை இந்திரன் அறிந்துகொண்டான். அவன் தனது வாகனமாகிய வெள்ளை ஐராவதத்தில் அமர்ந்து புறப்பட்டான். இருவரும் வானவெளியில் சந்தித்தனர். கடும் போர் ஏற்பட்டது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அதை விருத்திராசுரன் மீது அவன் எறிந்தான். ஆனால் அது அவனை எதுவுமே செய்யவில்லை. தன் கையிலிருந்த இரும்பு தடியால் வஜ்ராயுதத்தை தடுத்து நிறுத்திவிட்டான் விருத்திராசுரன். மேலும் அந்த தடியால் இந்திரனையும் தாக்கினான். இந்திரன் மயங்கி விழுந்துவிட்டான். இந்திரன் இறந்துவிட்டான் என நினைத்த விருத்திராசுரன், துவஷ்டாவிடம் திரும்பி சென்றுவிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் இந்திரனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் விருத்திராசுரனால் ஆபத்து ஏற்படும் என பயந்துபோன இந்திரன் சத்யலோகத்திற்கு வந்துசேர்ந்தான்.அங்கு பிரம்மாவை வணங்கி, விருத்திராசுரனை கொல்வதற்குரிய வழி பற்றி கேட்டான். பிரம்மா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. தேவேந்திரனே! விருத்திராசுரனை கொல்லும் வழியை நான் அறியமாட்டேன். அசுரர்களை கொல்லும் சக்தி ஸ்ரீமந் நாராயணனுக்கே இருக்கிறது. நாம் அவரிடம் சென்று யோசனை கேட்டு வரலாம் என சொல்லி வைகுண்டம் சென்றனர். அங்கே திருமால் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்தார். பரந்தாமனாகிய பெருமாளை இருவரும் பாடித்துதித்தனர். திருமால் அவர்களிடம், என்ன காரணத் திற்காக வந்தீர்கள்? என கேட்டார்.
அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.தேவேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது. பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான்.
மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை.
ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது. அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார்.
ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான். அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான். உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான்.
குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான். பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர். அங்கு சென்றதும், மற்றொரு புது பிரச்னை தோன்றியது.

மகாசிவராத்திரி

அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.

சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

சிவராத்திரியின் சிறப்புகள்: மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று வரும் சிவராத்திரியில் உமாதேவி சிவனை வழிபட்டாள். வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியில் சூரியன் ஈசனை வழிபட்டார். ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தன்னைத் தானே வழிபட்டார். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகன் வழிபட்ட நாள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரன் வழிபட்ட தினம். புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷன் சிவனை வழிபட்டார். ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரன் வழிபட்ட தினம். கார்த்திகை மாதத்தில் வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி  என இரண்டு சிவராத்திரிகள். இவை இரண்டிலும் சரஸ்வதி வழிபட்டாள். மார்கழி மாதமும் இரண்டு சிவராத்திரிகள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசிகள். இது லட்சுமி வழிபட்ட நாள். தை மாதம் வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால், சிவன் அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும்.

ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்:


நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.

மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.


சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்.

1. ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ
3. ஸ்ரீ பசுபதயே நம
4. ஸ்ரீ ருத்ராய நம
5. ஸ்ரீ உக்ராய நம
6. ஸ்ரீ மகாதேவாய நம
7. ஸ்ரீ பீமாய நம
8. ஸ்ரீ ஈசாநாய நம

சிவராத்திரியின் நான்கு காலங்களில் பஞ்ச வில்வங்களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லாதபோது மூன்றாவது காலமான லிங்கோற்பவ காலத்திலேனும் பஞ்ச வில்வங்களைக் கொண்டு பஞ்சமுகார்ச்சனை செய்யலாம். லிங்கோற்பவ காலத்தில் தான் சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு அருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்தார்.  மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பார்வதிதேவி ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி.சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி முதலானோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றுள்ளனர். விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று இரவு முழுதும் கண் விழித்து வழிபாடு செய்ய இயலாவிட்டாலும் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.


சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை: மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர், மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசிக்காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான்.  மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன், அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.
விரதமுறை: சிவராத்திரி அன்று பகலில் சாப்பிடாமல் இருந்து, முழுமுழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும். அன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். இவ்வேளையில் சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து, ஐந்தெழுந்து மந்திரமான ஓம்நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.

பலன்: மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, சோம்பல் ஆகிய குணங்களை வென்று, நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு பிறப்பற்ற நிலை கிடைக்கும்.


Thanks to  : Dinamalar Temple
 

Sunday 23 February 2014

Mr.Raghavanvaradachari Raghavan is Report of Homam

Raghavanvaradachari Raghavan
15 hours ago

A small Village, Elangadu (kukkiraamam) near Thirukattupalli, on the banks of Cauvery near Kallanai-Thiruvaiuaru road. I had an unique participation to day i.e. Hayagrevar Homam performed for the benefit of children - going to schools, writing their final exams this year and also the welfare/wellbeing of all. I was surprised to see the enthusiastic participation of almost all the residents of that village. The priest while performing the Homam had explained for each slokas the importance of it, and why it should be recited in that manner in a simple tamil, that can beunderstood by all.. The Homam had started at 8.00 am and purthi was around 2.0 PM. so one can guess the meticulous pains taken by the Priests/ organizers viz. Sri Kannan Trust of Elanngadu village. I shall be uploading the selected videos of the function for the benefit of like minded FB members. Thanks to all .
anbudan-Raghavan





Thank You Sir

ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம்

காக்கும் கடவுளான திருமால் அசுரர்களான மது, கைடபர் என்ற இருவரையும் வதைத்த பின்னர் மேலும் பல அசுரர்களோடு, ஆயிரக்கணக்கான முறை போரிட்டு அவர்களை யெல்லாம் கொன்றார். இதனால் அவர் களைப்புற்றார். மிகவும் சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்தவாரே, நாண் பூட்டிய தனது வில்லை பூமியில் ஊன்றி, கழுத்தை அதன் மீது சாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்.

திருமால் இவ்வாறு திடீரென்று தூக்கம் கொண்டபோது உலகமே செயலிழந்து போனது! தேவர்கள் கதி கலங்கி பிரம்மாவும், சிவனும் சேர்ந்து திருமாலின் தூக்கத்தை எப்படியேனும் கலைத்து அவரைத் துயிலெழச் செய்ய வேண்டுமென்று வேண்டினர்.

பிரம்மனால் படைக்கப்பட்ட பூச்சி இனங்களில் ஒன்றான கரையான் பூச்சி அந்த ஊன்றப்பட்ட வில்லின் நாண் நுனியினைக் கடித்து அரித்தால், நாண் அறுந்த அந்த ஓசையில் இறைவன் துயிலெழுந்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். பிரம்மாவின் கட்டளைப்படி கரையான்கள் ஒன்று திரண்டு வில்லின் நுனியை அரிக்கத் தொடங்கின.

பேரொலியேடு நாண் அறுந்தது. அதே வேகத்தில் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்து விட்டது. இதைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டு போனார்கள். ஒருமுறை மகாவிஷ்ணு, லட்சுமியின் முகத்தைப் பார்த்து கேலி செய்ய, தேவியோ கோபம் அடைந்து தன்னைப் பரிகாசம் செய்த இறைவனின் தலை ஒரு சந்தர்ப்பதில் அறுந்து விழக் கடவது என்று சாபமிட்டாளாம்.

இந்த சாபத்தின்படியே திருமாலின் தலை அறுந்து போயிற்றாம். இதே நேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரைத் தலையுடன் கூடிய ஹயக்ரீவன் என்ற அசுரன் ஒருவன் தேவி பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவி அவனுக்கு காட்சி அளித்தபோது, குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான்.

பிறகு அனைத்து தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். இதற்கிடையே பிரம்மாவும் இதர தேவர்களும் திருமாலின் உடலில் வேறு ஒரு பொருத்தமான தலையை கண்டுபிடித்து பொருத்துமாறு தேவ சிற்பியான துவஷ்டாவை வேண்டினர். துவஷ்டாவும் ஓர் அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார்.

இதன் மூலம் குதிரைத் தலையுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். ஸ்ரீஹயக்ரீவர் இந்திர னையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்த ஹயக்ரீ வாசுரனை வதம் செய்தார். ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது.

பின் வலக்கரத்தில் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையும், இடக்கரத்தில் பாஞ்ச ஜன்யம் என்ற சங்கையும், முன் வலது கரத்தில் ஏடையும் ஏந்தி மக்களுக்கு ஞானத்தை போதிக்கும் ஞான சொரூபியாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார். ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தி ஞானத்தின் உறைவிடம் என்றும் அவரைத் துதித்தால் முக்குணங்களிலிருந்தும் நமக்கு விடுதலை கிடைக்கும்.

தனது இடது தொடையில் ஸ்ரீமஹாலட்சுமியை ஏந்தி, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவராகத் திகழ்கிறார். சிவபெருமானின் அஷ்டாஷ்ட (64) மூர்த்தி பேதங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி உருவத்தையே ஸ்ரீஹயக்ரீவரின் திருவுருவம் பிரதிபலிப்பதாக உள்ளது. தட்சிணாமூர்த்திக்கும் சிவபெருமானின் அக்னி,

மழுவோடு சின் முத்திரையும், ஏடும் கரங்களில் இருப்பது போலவே, ஸ்ரீஹயக்ரீவரருக்கு திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரத்தோடு, வியாக்கியான முத் திரை, ஏடு உள்ளன. இரண்டு அவதாரங்களுமே உலக மக்களுக்கு ஞானத்தையே போதிக்கின்றன.

ஸ்ரீஹயக்ரீவரின் வாய் சற்றுத் திறந்தது போல அமைக்கப்பட்டிருக்கிறது. இது அவர் எப்போதும் பிரணவ மந்திரமான `ஓம்' என்பதை எப்போதும் ஜெபித்துக் கொண்டிருப்பதை காட்டுகிறது. அசுரன் ஹயக்ரீவன் நான்கு வேதங்களையும் கடலுக்குள் கொண்டு சென்று ஒளித்து வைத்த போது, ஸ்ரீஹயக்ரீவர் அவனைக் கொன்று வேதங்களை மீட்டு வந்து வேத சொரூபமாக விளங்குகிறார்.

அவித்யையும், அஞ்ஞானத்தையும் அகற்றும் சந்திரனின் அழகிய ஒளிபோல ஸ்ரீஹயக்ரீவர் விளங்குவதால், அவர் சந்திரப் பிரபையில் அமைந்துள்ளது போல சித்திரிக்கப்படுகிறார்*

ஹயக்ரீவர் ஹோமம்

வாலாஜாபாத் அருகில் உள்ள தன்வந்திரி பீடத்தில் சுமார் 4 அடி உயரத்தில் வெளிர் பச்சை நிறத்தில் குதிரை முகத்துடன் சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார். மேலும் பீடத்தில் விசேஷமான முறையில் தன்வந்திரி லிகித ஜப மந்திரங்களை பிரதிஷ்டை செய்து, கரிகோலம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.

இவருடன் தேசிகரையும் பிரதிஷ்டை செய்துள்ளனர் என்பது காணக்கிடைக்காத காட்சியாகும். ஒவ்வொரு மாதமும், விசேஷ தினங்களிலும் இங்கு ஹயக்ரீவர் ஹோமம், சரஸ்வதி ஹோமம், வித்யா ஹோமம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவர் பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர், உபநிஷத்தில் இடம் பெற்றவருமாவார்,

சரஸ்வதிக்கே குருவுமானவர், இதிகாச புராணங்களில் இடம் பெற்றவர், அனுமனுக்கு ஆசி வழங்கியவர், அகஸ்தியருக்கும், தேசிகருக்கும் காட்சி கொடுத்தவர்,. இவர் புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.

குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இவர் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார், சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு.

இவர் வெளிர் பச்சை நிறத்தில் காட்சி கொடுப்பவர். ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும், ஆனந்த வாழ்க்கையும் பெறுவார்கள்.

ஹயக்ரீவ பிரார்த்தனை இடங்களும் பலன்களும்

அத்தி மரத்தடியில் ஜபம் செய்வதால் பூமி லாபம் கிடைக்கும்.

* வில்வ மரத்தின் அடியில் ஜபம் செய்தால் தனலாபம் கிடைக்கும்.

* புளியமரத்தின் அடியில் ஜபித்தால் மனச்சாந்தி கிடைக்கும்.

* வேப்ப மரத்து அடியில் ஜபம் செய்தால் தேஜஸ் ஏற்படும்.

* மாமரத்தினடியில் ஜபம் செய்தால் நல்ல மனைவி வாய்ப்பாள்.

* துளசிவன மத்தியில் அமர்ந்து ஜபித்தால் ஞானம் பெறலாம்.

* நதிதீரத்தில் அமர்ந்து ஜபம் செய்தால் சிறந்த கல்வியைப் பெறலாம்.

* நிலையான புகழை விரும்புபவர் மலையில் அமர்ந்து ஜபம் செய்ய வேண்டும்.

* தான்ய விருத்தியை அடைய விரும்புபவர்கள் வீட்டில் இருந்து ஜபம் செய்யலாம்.

* பசுவை விரும்புபவர்கள் பசு கொட்டகையில் இருந்து ஜபம் செய்யலாம்.

* புத்ரலாபம் அடைய விரும்புபவர்கள் கர்ப்ப கிருஹத்தில் இருந்து ஜபிக்கவும்.

* அசோக மூலத்தில் இருந்து ஜபிப்பதால் வசியம் செய்யும் சக்தி ஏற்படும். ஆக எந்த இடத்தில் ஸ்ரீஹயக்ரீவஜபம் செய்தாலும் ஏதாவதொரு நன்மை அடைந்தே தீரும்.

ஸ்ரீஹயக்ரீவரின் திருவிளையாடல்


தேசிகனின் உள்ளத்தில் பெரிய பெருமாளைச் சேவித்து உள்ளம் கலக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டாயிற்று, காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் விடை கொண்டு, ஸ்ரீ ரங்கம் நோக்கி ஸ்வாமி பயணப்பட்டுச் செல்லும்போது, திருக்கோவிலூர் அருகே கடலை வியாபாரம் செய்யும் ஒரு வைசியரின் இல்லத்தின் வாசல் திண்ணையிலே ஓரிரவு தங்கும் படியாயிற்று.

அன்று திருவமுது செய்ய ஒன்றும் இல்லாதபடியால், தம் உபாசனா மூர்த்திக்கு தூய நீரை நைவேத்யமாக நிவேத்தித்து விட்டு தானும் உபவாசத்துடன் சற்றுக் கண்ணயர்ந்தார். இரவில் ஸ்ரீஹயக்ரீவரின் திருவிளையாடலாக ஒரு வெள்ளைக் குதிரை, கடலை வியாபாரம் செய்து வரும் அந்த வீட்டுக்காரருடைய வயலில் இறங்கி துவம்சம் செய்ய ஆரம்பித்தது.

காவலர்கள் எவ்வளவு விரட்டியும் அது போகவில்லை. வீட்டுக்காரர் தனது வீட்டின் திண்ணையில் படுத்திருக்கும் தேசாந்திரியின் குதிரையாக இது இருக்குமோவென்று நினைத்து தேசிகனை எழுப்பி, "உங்கள் குதிரையைச் சற்றுக் கட்டிப் போடுங்கள்'' எனக் கேட்டுக் கொண்டார்.

ஸ்வாமியும் உள்ளதுணர்ந்து சிறிது பால் கொண்டு வரச் சொல்லி தமது மூல ஆராதனை மூர்த்தியான ஸ்ரீஹயக்ரீவருக்கு நிவேதனம் செய்த பிராத்தனை செய்ய, அதுவரை வயலில் விளையாடிக் கொண்டிருந்த அந்தக் குதிரை மாயமாய் மறைந்தது. வணிகனும் ஸ்வாமியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

அது மட்டுமின்றி குதிரையின் கால் குளம்புகள் பட்ட இடத்தில் எல்லாம் சுவர்ணக் காசுகள் இருப்பதைக் கண்ணுற்ற வணிகர் ஸ்ரீ ஹயக்ரீவர் அருட்பெருமையையும், ஸ்வாமிகளின் ஏற்றத்தையும் உணர்ந்து மிகவும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்து மறுநாள் விருந்து படைத்து, ஆச்சார்யனை வழி அனுப்பி வைத்தார்

ஞானம் தரும் ஸ்ரீஹயக்ரீவர் 50 வழிபாடுகள்

ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானின் பார்வை, அடியார்கள் அனைவரையும் குளிரச் செய்யும் ஆற்றல் கொண்டதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. ஹயக்ரீவ ஸ்தோத்திரம் 33 துதிகள் கொண்டது. இந்த 33 துதிகளையும் பொருள் உணர்ந்து பாராயணம் செய்தால், அவர்கள் கலைகளில் தேர்ச்சி பெற முடியும்.

3. ஹயக்ரீவர் எழுப்பும் "ஹலஹல'' என்ற கனைப்பு சத்தம் எல்லை இல்லாத வேதாந்த உண்மைகளை உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

4. ஹயக்ரீவர் மூல மந்திரத்தை நாம் வாய்விட்டு சத்தமாக சொன்னால், அதை ஹயக்ரீவர் நம் அருகில் நேரில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவார்.

5. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபடுபவர்கள் எந்த கலைகளிலும் தெளிவான முடிவை எடுக்கும் ஆற்றலை கைவரப் பெறுவார்கள்.

6. பக்தர்கள் நல்வழிப் பெறுவதையே கடமையாகக் கொண்டுள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஞான வடிவமாகவும், கருணைக் கடலாகவும் உள்ளார்.

7. உலகம் புகழும்படியான நூல்களை இயற்றிய வியாச முனிவருக்கு, ஸ்ரீ ஹயக்ரீவர் வழங்கிய அருளே காரணமாக கூறப்படுகிறது.

8. தேவர்களுக்கு எல்லாம் குருவாக இருப்பவர் பிரகஸ்பதி. அந்த பிரகஸ்பதி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை ஹயக்ரீவரிடம் கேட்டு தெளிவு பெற்றார்.

9. ஸ்ரீ ஹயக்ரீவர் ஓம் எனும் பிரணவ சொரூபமாகவும், அதன் அட்சரங்களாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

10. பிரபஞ்சத்தின் முதலும் முடிவுமாக ஸ்ரீ ஹயக்ரீவர் இருப்பதாக வேதங்கள் போற்றிப் புகழ்கின்றன.

11. ஸ்ரீ ஹயக்ரீவரை பற்றி லேசாக சிந்தித்தாலே போதும், அது நம் மனதின் தாபத்தை போக்கி குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்கிறார்கள்.

12. புண்ணியம் செய்தவர் களால் மட்டுமே ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமானை தினமும் பூஜிக்க முடியும்.

13. ஹயக்ரீவப் பெருமானே கதி என்று கிடக்கும் பக்தர்களுக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள்.

14. ஹயக்ரீவரின் பாத கமலங்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், அது பிரம்மன் நமக்கு எழுதிய தலை யெழுத்தையே மாற்றி அமைத்து விடும்.

15. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் மலர் போட்டு வணங்கினால் நம்மிடம் உள்ள அஞ்ஞான இருள் விலகும் என்பது நம்பிக்கை.

16. ஸ்ரீ ஹயக்ரீவர் தன் கையில் காட்டும் ஞானமுத் திரையின் மகிமை அளவிடற்கரியது.

17. ஸ்ரீ ஹயக்ரீவரை மனம் உருக வழிபாடு செய்தால் அது பல புண்ணிய தலங்களுக்கு சென்று தரிசனம் செய்த பலனைத் தரும்.

18. ஸ்ரீ ஹயக்ரீவ வழிபாடு மெய்ப் பொருளை உணரச் செய்து நம் மனதில் உள்ள மாசுவை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது.

19. ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத் திரத்தைப் பக்தியுடன் பாராயணம் செய்தால் கவி பாடும் வல்லமை உண்டாகும்.

20. ஹயக்ரீவர் கவசம் அதிக ஆற்றல் கொண்டது. இந்த கவசத்தை நம் உடம்பு பகுதிகளை தொட்டுக் கொண்டு படித்தால், அவர்களுக்கு எந்த துன்பமும் வராது.

21. ஸ்ரீ ஹயக்ரீவர் கவசத்தை தினமும் 3 தடவை படிப்பவர்கள், பிரகஸ்பதிக்கு நிகரான அறிவைப் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

22. ஸ்ரீ ஹயக்ரீவர் துதிகளில் ஸ்ரீமத்வாதிராஜ சுவாமிகள் இயற்றிய துதியே புகழ் பெற்றது.

23. ஸ்ரீ ஹயக்ரீவர் வழிபாடு கல்வி, ஞானம் மட்டுமின்றி செல்வமும் தரக்கூடியது.

24. ஸ்ரீ ஹயக்ரீவரை தினமும் வழிபட்டால் பெரும் சபைகளில் சாதூர்யமாக பேசக்கூடிய தன்மை கிடைக்கும்.

25. ஹயக்ரீவர் பக்தர்களை எதிரிகளால் வெல்ல இயலாது.

26. ஆன்மீக பேச்சாளர்கள், ஜோதிடர்கள், கவிஞர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு ஸ்ரீ ஹயக்ரீவரின் அருள் அவசியம் தேவை.

27. பிகல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்றவர் ஹயக்ரீவர்.

28. பிரம்மனை படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

29. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது.

30. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக்ரீவருக்கு உண்டு.

31. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

32. ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.

33. மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன.

34. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வணங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

35. காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

36. சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.

37. புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாகவும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள்.

38. குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.

39. அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீவர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது.

40. ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.

41. ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித்து நீடித்த புகழ் பெற்றனர்.

42. சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவியோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.

43. ஹயக்ரீவர் ஆனந்த மயமான வாழ்வு தருபவர் ஆவார்.

44. ஹயக்ரீவரின் மந்திரத்தை சுவாமி தேசிகருக்கு ஸ்ரீகருடாழ்வாரே தோன்றி உபதேசித்தார் என்பது சரித்திரம்.

45. ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. பரிமுகன் என்றால் பரிந்த முகம், பரியும் முகம், பரியப் போகும் முகம் என்று மூன்று காலத்தையும் காட்டுகிறது.

46. ஹயக்ரீவரை ஆராதித்தவர்கள் அனைவரும் நிறைந்த ஞானமும், நீடித்த செல்வமும், பெரும்புகழும் பெற்று இன்புறுவார்கள் என்பது ஐதீகம்.

47. ஹயக்ரீவர், அன்னையை பூஜித்து அம்பாள் வழிபாடுகள் செய்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

48. திருவந்திபுரம் மலை மேல் அமைந்துள்ள லட்சுமி ஹயக்ரீவரை வழிபட்டால் செல்வம் சேரும்.

49. ஆடி பவுர்ணமியில்தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது என்பார்கள்.

50. ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், ரகசியங்களில் மிகவும் ரகசியமானது என்று ஹயக்ரீவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹயக்ரீவரை நேரில் தரிசித்த ஸ்ரீதேசிகர்

நான்கு வேதங்களையும் தொகுத்த ஸ்ரீவேத வியாசரின் முக்கிய சீடர்களில் ஒருவர் யாக்ஞவல்கியர். வியாசருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தான் கற்ற யஜுர் வேதத்தை யாக்ஞ வல்கியர் மீண்டும் அசானுக்கே திரும்பத்தர நேரிட்டது.

தான் கற்றதை அப்படியே தன் வாய் வழியா வெளியே எறிந்து விட்டதாகவும், அப்போது வியாசரின் சீடர்கள் தித்திரி என்ற பறவைகளாக மாறி அவற்றை உண்டதாகவும், அவர்கள் மூலம் தெரிய வந்ததே தைத்திரிய ஸம்ஹிதை என்று கூறப்படுகிறது. யாக்ஞவல்கியர் வியாசரை விட்டுப் பிரிந்து கடுந்தவம் இயற்றினார்.

அவர் முன் சூரிய பகவான் குதிரை முகத்துடன் தோன்றி யஜுர் வேதத்தை இன்னொரு முறையில் கற்றுக் கொடுத்தார். வாஜி என்ற சொல் குதிரையைக் குறிக்கும். எனவே யஜுர் வேதத்தின் இப்பகுதிக்கு வாஜஸ்னேயி ஸம்ஹிதை என்றே பெயர். மேலும் தேவலோகத்து புனிதக் குதிரை யான ததிக்ரா சூரியனுடன் சம்பந்தப்பட்டது.

சூரியன், ஆதித்தர்கள், வசுக்கள் போன்றோரடன் சம்பந்தப்பட்ட இந்த ததிக்ரா என்ற புனிதக் குதிரை ஞானத்தின் திருவுரு என்று நம்பப்படுகிறது. காஞ்சீபுரத்துக்கு அருகில் உள்ள தூப்புல் என்ற கிராமத்தில் அனந்தசூரி தோத்தாரம்மா என்ற தம்பதியருக்கு அவதரித்தவர் (புரட்டாசி திருவோணம்) ஸ்ரீமத் நிகமாந்த மஹாதேசிகர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த வைணவ பெரியார் திருமாலின் திருமணியாழ்வான் (கண்டா மணி) அம்சமாக அவதரித்தவர்.

எண்ணற்ற நூல்களையெல்லாம் கற்றுணர்ந்து தலை சிறந்த அறிவுக் கடலாக விளங்கிய ஸ்ரீதேசிகன் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்தபுரம் என்ற திருத்தலத்திற்குச் சென்று அங்கிருந்த ஒளஷதகிரி என்ற ஒரு சிறு குன்றின் மீது உள்ள அசுவத்த (அரச) மரத்தின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தை ஜெபித்து கொண்டிருந்தார்.

ராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலைபை தூக்கி வந்த போது, விழுந்த அதன் ஒரு சிறு பகுதியே இந்த ஒளஷதகிரி என்றும் கூறப்படுகிறது. அவருக்கு கருட பகவான் பிரத்தியட்சமாகி ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்தாராம்.

ஸ்ரீதேசிகன் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்த ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியைத் துதிக்க ஸ்ரீஹயக்ரீவரே அவர் முன் பிரத்யட்சமாகி தன் திருவாய் அமுதை அளித்தாராம். ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை நேரில் தரிசிக்கும் பேறுபெற்ற ஸ்ரீதேசிகன் ஞான பானுவாக விளங்கி `ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்' என்ற மகத்தான பட்டத்தைப் பெற்று எண்ணற்ற கிரந்தங்களை நமக்கு அருளினார். 


thanks to maalaimalar

Thanks to All

Thanks to all 

Sri Hayagreeva Homam celebrate very well yesterday i will later full information about Homam.

again thanks to all participated.

 

Saturday 22 February 2014

தினமலர் - கோயில் வலைதளத்திற்க்காக தயாரிக்கப்பட்டது



திருக்கோயிலின் பெயர்          :     ஸ்ரீகண்ணன் திருக்கோயில்
மூலவர்                   :     ஸ்ரீ ஆ(யா)தவக்கண்ணன் – ஸ்ரீ லக்ஷ்மி
ஹயக்ரீவர்
உற்சவர்                   :     ஸ்ரீ வேணுகோபாலன் 
பிற மூர்த்தங்கள்           :     ஸ்ரீ ஸந்தான கோபால கிருஷ்ணன்
தாயார்                    :     மூலவர் கோமாதாவுடன் ஒன்றாக
இருப்பதால் தனியே தாயர் சன்னதி இங்கு இல்லை.
ஆகமம்                   :     பாஞ்சராத்ர ஆகமம்
திருவாரதனம்              :     தென்கலை
புராதன பெயர்             :     இராஜகேசரி புரம் (ஊரின் பெயர்) 
ஊர்                       :     இளங்காடு(வாலவனம்,இராஜகிரி) 
மாவட்டம்                 :     தஞ்சாவூர்
மாநிலம்                   :     தமிழ்நாடு 
திருவிழா                  :     ஸ்ரீஜெயந்தி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவ
                                ஜெயந்தி
திறக்கும் நேரம்            :     காலை 7.00 – 11.00மணி
                                மாலை 6.00 – 8.00மணி
முகவரி                   :     தெற்குத்தெரு
                                இளங்காடு(அஞ்சல்)
                                திருக்காட்டுப்பள்ளி(வழி)
                                திருவையாறு(வட்டம்)
தஞ்சாவூர்(மாவட்டம்)
                                அ.கு எண்:613104
பேருந்து வழித்தடம்   :    
Ø  தஞ்சாவூர் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து 51 என்ற பேரூந்து மூலமாக நேரே கோயிலின் வாசலில் இறங்கி கொள்ளலாம்.
Ø  தஞ்சாவூரிலிருந்து கல்லணைக்கு அகரப்பேட்டை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் இளங்காட்டு பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம்.
Ø  திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5கி.மீ தொலைவில் சிற்றுந்து மூலமாகவும் வந்து அடையலாம்.
Ø  திருச்சிராப்பள்ளியிலிருந்து கல்லணை வந்து,கல்லணையிலிருந்து அகரப்பேட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் இளங்காட்டு பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோயிலை அடையலாம்.

ப்ராத்தனை:
ü  விரும்பியதைத் தரும் காமதேனுவுடன் கண்ணபிரான் சேவை சாதிப்பதால் இங்கே தாங்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற சனிக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி திருத்துளாயால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் விரும்பியவை கைகூடும்.
ü  புத்திர பாக்யம், திருமணம் கைகூட, மனை மற்றும் வீடு  ஆகியவைகள் உடனே கிட்ட இங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணனை மூலவருக்கு நடைபெறும் உரோகிணி திருநட்சத்திர திருமஞ்சன காலங்களில்  வெண்ணையுடன் வழிபட்டு பயனை அடையலாம்.
ü  மார்கழி மாத புதன்கிழமையில் குசேலர் கண்ணபிரானுக்கு  அவல் படைத்து செல்வந்தரானது போல நீங்களும் இங்கு கண்ணபிரானுக்கு  அவல் படைத்து குபேரனாகளாம்.
ü  திருக்கோயில் துவங்கியதிலிருந்து அட்டமி திதி இக்கோயிலுடனே தொடர்ந்து வருகின்றது இங்கு அனைத்து விசேடங்களும் எதிர்பாராதவிதமாக அட்டமியிலே நடைபெறுகின்றன,ஆகவே அட்டமி திதியில் தவறாது அர்ச்சித்து வணங்கி அனைத்திலும் வெற்றி வாகை சூடலாம்.
ü  உரோகிணி நட்சத்திரகாரர்கள் உரோகிணி திருமஞ்சனங்களில் தவறாது கலந்து கொண்டு பகவானை சேவித்து தடைகள் நீங்கப் பெறலாம்.
ü  கல்வி, நாவன்மை மேம்படவும் செல்வம் தழைத்தோங்கவும் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற இங்குள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வரப்பிரசாதியாவார்.இவருக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம், ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்து பயனடைந்தோர் பலர்.
ü  நாக தோஷம் நீங்க கருடாழ்வாருக்கு இராகு காலங்களில் தீபமேற்றி வழிபட்டு பயன் அடையலாம்.
ü  பட்சி,நாக தோஷம் நீங்க ஆடி மாத கருட,நாக பஞ்சமியில் நடைபெறும் திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு அருள் பெறலாம்.

சிறப்புகள்:
v  காமதேனு ஸ்ரீ கண்ணபிரானின் திருவடி தனது நாக்கால் வருடி ஸ்ரீவைஷ்ணவ முக்கியமான ஸரணாகதி தத்துவத்தினை இங்கே நமக்கு காட்டிகொடுக்கிறார் இந்த கண்ணபிரான் ஆகையால் பஞ்ஜ ஸமஸ்காரம் செய்துகொள்வது விசேஷம்.
v  ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த் எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் வந்து வணங்கிய பெருமாள்.அன்றுமுதல் மூலஸ்தான திருவிளக்கீடு கைங்கர்யம் இன்றளவும் இவருடையது.
v  வாரந்தோறும் சனிக்கிழமையில் மாலை வேதமனைத்திற்க்கும் வித்தாகும் திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
v  ஆழ்வார்கள் அவதார திருநட்சத்திரங்களில் அவர்கள் அருளிச்செய்தவை பாராயணம் செய்யப்படும்.
v  ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை போலவே ரேவதி தான் இக்கோயிழாழ்வான் திருநட்சத்திரமாகும்.
v  ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் இங்கு பிரதிஷ்டை செய்தவுடனே இங்கு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.
v  மாசி மாதந்தோறும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் நடைபெறும்.
v  தை முதல் நாளும், ஸ்ரீஜெயந்தி அன்று நடைபெறும் வையாழி சேவை நடைபெறும்.
v  உற்சவர்  எப்போது திருவீதி கண்டருளி மூலஸ்தானம் சேரும் முன்பு பன்னிருஆழ்வார்கள் பாசுரங்கள் ஆழ்வாருக்கு ஒன்று வீதம் கேட்டுக்கொண்டே பெருமாள் மூலஸ்தானம் சேருவார்.
v  நாக , பட்சி தோஷமுள்ளவர்கள் கருட,நாக பஞ்சமி திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு திருமணம் கைகூடியவர்கள் பலர்.
திருவிழாக்கள்:
*      தை முதல்நாள் தான் ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் துவங்க ஆரம்பித்து முதல் புறப்பாடு ஆகையால் தைமுதல் நாள் மாலை உற்ச்சவர் கோயிலின் தெற்க்கு வீதியில் வையாழி கண்டருளி,பாசுரங்கள் கேட்டருளி,கருட மஹா மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளுவார்.
*      சித்திரை முழுநிலவன்று மாலை ஸ்ரீ சத்யநாரயண பூசை நடைபெறும்.
*      ஸ்ரீஜெயந்தி உத்சவம் மூன்று நாள்கள் நடைபெறும்.
o   முதல்நாள் மாலை உபன்யாசங்கள், இசைச்சொற்ப்பொழிவு,திவ்யபிரபந்த கோஷ்டி நடைபெறும்.
o   ஸ்ரீஜெயந்தியன்று காலை கோபூசையும்,மஹா திருமஞ்சனமும் திருவரங்கம் திருவத்யன கோஷ்டியினரின் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவையுடன் நடைபெறும்.
o   ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் மஹாமண்டபத்தில் தொட்டியில் எழுந்தருளுவார்.
o   மாலை உத்சவர் திருவீதி புறப்பாடு கண்டருளுவார்.
o   வையாழி சேவை,வானவேடிக்கை நடைபெறும்.
o   உற்சவர் ஆழ்வார் அருளிச்செயலுக்கு அருளால்
o   உறியடித்தல்,சாற்றுமுறை
o   மறுநாள் விடையாற்றி
*      ஆவணி திருவோணம் ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக நடைபெறும்.
*      புரட்டாசி சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடைபெறும்.
*      நாச்சியார் திருக்கோலம் வைகுந்த ஏகாதசி முதல்நாள் நடைபெறும்.
*      பரமபத வாசல் திறப்பும் நடைபெறவும்.

ஆலய தகவல் பெற
அர்ச்சகர்:
ரெகுநாத பட்டாச்சார்
9791999936
ஆலய அறங்காவலர்கள்
ஜெ.கோபிகிருஷ்ணன்
9500264545
ம.சின்னதுரை
9942604383
ப.புருசோத்தமன்
8056901601