Wednesday 7 August 2024

பந்து_மொகந்தி


ஒடிசா மாநிலத்தில் கட்டாக் நகர் ஜாஜ்பூர் கிராமத்தில் வாழ்ந்த ஓர் ஏழை. பூரி ஜெகந்நாதரின் பரம பக்தர். எல்லா நேரமும் பூரி ஜெகந்நாதரையே வழிபட்டும் அவரையே பாடி காலம் கழித்து வந்தவர். ஒரு சமயம் அவர் வாழ்ந்த கிராமத்தில் கடும் பஞ்சம் வர தன் மனைவி, குழந்தைகள் பசியில் வாடுவவதை கண்டு மனம் கலங்கினார். அது சமயம், அவருடைய மனைவி உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் சென்று எதாவது உதவி வேண்டுமாறு கூற, எனக்கு யாரையும் தெரியாதே, எனக்குள்ள ஒரே நண்பன் பூரி ஜெகந்நாதனே, அவனிடம்  செல்லலாம் என்று கூற, அனைவரும் உடன் கிளம்பி 140கிமீ நடந்தே, பூரி  வந்து அடைந்தனர். இரவு நேரமாக, பசியில் கோவில் மடப்பள்ளியில், அருகே படுத்திருந்த பந்து மொகந்தியை யாரோ தன் பெயர் சொல்லி கூவி அழைப்பது கேட்டது. யார் நம்மை இந்த இரவில் அழைப்பது என வியந்த பந்து மொகந்தி, "ஐயா,நான் தான் பந்து மொகந்தி, என்னை ஏன் அழைக்கிறீர்கள்" என வினவ, அந்த கருத்த பெரிய உருவம் கொண்ட நபரோ "என்னைத்  தானே  நீ தேடி வந்தாய், இந்தா உனக்கு, உன் குடும்பத்திற்கு பசிக்கு வேண்டிய உணவு, சாப்பிட்டு உறங்கு", என கூற அதற்கு பந்து மொகந்தி, "நன்றி" என வந்தவர் யார் என்று புரியாமல்,  வாங்கி "உணவினை எடுத்துக் கொண்டு தட்டுனினை திருப்பி தருகிறேன்" என சொல்ல, அந்த நபரோ, "தட்டினை நாளை நான் வாங்கி கொள்கிறேன். நீர் போய் சாப்பிட்டு விட்டு உறங்கு" என கூறிவிட்டு மடப்பள்ளி பக்கம் சென்று விட்டார். உணவினை வாங்கிய பந்து மொகந்திக்கோ,  ஆச்சரியம். இத்தனை விதமான பலதரப்பட்ட உணவு வகைகளை பார்த்து மகிழ்ச்சி. கொண்டு சென்று, தன் மனைவி குழந்தைகள் உடன் நன்றாக சாப்பிட்டு விட்டு அங்கே, தட்டினை தலையில் வைத்து தூங்கி விட்டார். அடுத்த நாள் காலையில் கோவிலில் ஒரே கூச்சல்.  சப்தம் கேட்டு, எழுந்த பந்து மொந்தி, என்ன என்று பார்த்தால், பூரி ஜெந்நாதனுக்கு பிரசாதம் படைக்கும் தங்க தட்டினை காணவில்லை என்று அங்கு அர்ச்சர்கள், காவலாளிகள் தேடுவதை கண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பந்து மொகந்தி கையில் இருந்த தங்க தாம்பாளத்தைக் கண்டவர்கள், அவரை பிடித்து கொண்டனர். "நீ தான் பூரி ஜெந்நாதனின் தங்கதட்டினை திருடினாயா?" என அவரை  கேட்க, அவர் அதை மறுக்க, அந்த ஊர் ராஜாவிடம் அவரை அழைத்து சென்று, தங்க தாம்பாள தட்டினை காணவில்லை, இவன் கையில் தட்டு கிடைத்தது, என முறையிட்டனர். ராஜாவும் அவரிடம், விசாரிக்க, பந்து மொகந்தியோ, "நேற்று இரவு ஒரு நபர் மடப்பள்ளியில் இருந்து வந்து, என்னை கூப்பிட்டு இந்த தட்டில் பல உணவுகளை தந்தார், நான் திருடவில்லை, என கூறினார். "ராஜாவும் மடப்பள்ளியில் பணி ஆற்றியவர்களை அழைத்து, யார் இந்த தட்டில் உனக்கு உணவு அளித்தது யார் என அடையாளம் காட்ட சொன்னார். ஆனால் அங்கிருந்த யாரும் பந்து மொகந்தி பார்த்த பருத்த கருத்த நபரை போல் இல்லை. "இவர்களில் யாரும எனக்கு தரவில்லை" என பந்து மொந்தி உண்மை கூறி மறுக்க, இதனால் சந்தேகம் அடைந்த ராஜா பந்து மொகந்தியை சிறையில் அடைத்தார். அடுத்த நாள் வழக்கம் போல், பூரி ஜெகந்நானுருக்கு பூஜை செய்து நைவேத்தியம் செய்யும் போது ஜெகந்தானுக்கு, எதிரில் தெரியும், கண்ணாடியில் ஜெகந்நாதனினன் பிரதி பிம்பம் கண்ணாடியில் தெரியவில்லை. இதை கவனித்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஏன் ஜெகந்நாதனின் பிம்பம் வழக்கம் போல் பூஜையின் போது தெரியவில்லை என கலக்கம் அடைந்தனர்.  இந்த தகவலை ராஜாவிடம் தெரிவித்தனர். ராஜாவும் செய்தியை கேட்டு கலக்கம் அடைத்தார். எப்போதும் தெரியும் பிம்பம் ஏன் தெரியவில்லை என பூரி ஜெகந்நாதரை நினைத்து பிராத்தித்தார். ஏதேதும் தவறு செய்தால் மன்னிக்க பிராத்தித்தார். அன்று இரவில் ராஜா கனவில் தோன்றிய ஜெகந்நாதர், என் பக்தன் பந்து மொகந்தியை விடுவிக்க வேண்டும், என் தங்க தாம்பாளம் காணவில்லை என்றால் என்னிடம் அல்லவா நீ கேட்க வேண்டும், அதை விடுத்து, நீ என் பக்தன் பந்து மொகந்தியை சிறையில் அடைத்தது தவறு, நான் தான் எனக்கு நீ படைத்த 56 உணவு வகைககளை பந்து மொகந்திக்கு கொடுத்தேன் அவன் திருடவில்லை. உடன் அவரை விடுதலை செய்து பந்துமொகந்திக்கு கோவில் மடப்பள்ளியில் வேலை கொடுத்து அவரை கௌரவிக்க சொன்னார். உறக்கத்தில் இருந்து விழித்த ராஜா தன் தவறை உணர்ந்து, உடன் பந்து மொகந்தியை விடுதலை செய்து மன்னிப்பு வேண்டினார். பின்னர் கோவிலின் மடப்பள்ளி அருகே பந்து மொகந்திக்கு ஆசிரமம் அமைத்து கோவில் நிர்வாகத்தில் வேலையும் கொடுத்தார். 1815ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்வின் பின் இன்று வரை, பந்து மொகந்தி, அவருடைய பரம்பரை சந்ததியிரே பூரி ஜெகந்தாருக்கு மடப்பள்ளி கைங்கரியம் செய்து 56 உண்வு தயாரித்து ஜெகந்நாதனுக்கு படைக்கின்றனர். இன்றும் பூரியில் சிங்கவாசல் நுழைவாயிலிருந்து இடதுபுறம் சென்றால், மடப்பள்ளி சுவர் அருகில் பந்து மொகந்தி ஆசிரமம் உள்ளது. பூரியின் சிறப்பு, பசி ஆற்றுவதில் ஜெகந்தானுக்கு இணையில்லை.

जय जगन्नाथ महाप्रभु
Jai Jagannath Mahaprabhu
ஜெய் ஜெகந்நநாத் மகாபிரபு.

Tuesday 6 August 2024

கோமாதா பற்றிய 40 சிறப்பு தகவல்கள்


தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான்.
(1) பொன்னுக்கும் பொருளுக்கும் முக்கியத்துவம் இல்லாத காலத்தில் கால்நடைகளே ஒருவரது உண்மைச் செல்வமாக மதிக்கப்பட்டு வந்தன. கால் நடைகளான பசுக்களே ஒருவரது பொருளாதார மதிப்பீட்டிற்கு அளவு கோலாக இருந்தது.

(2) நாட்டின் பொருளாதார துறையில் தனிச் செல்வாக்கு மாட்டுக்கு இருந்தது. ஆதலால் செல்வத்தை “மாடு” என்ற சொல்லாலே குறிப்பிட்டு வந்தனர்.

(3) “கேடில் விழுச்செல்வம் கல்வி” ஒருவருக்கு “மாடு” அல்ல மற்றயவை என்று செல்வத்தை மாடு என்னும் பொருள்பட வள்ளுவரும் உரைக்கின்றார்.

(4) பசுவின் கர்ப்பகாலம் 9 மாதம் 9 நாள். எருமையின் கர்பகாலம் 10 மாதம் 10 நாளாகும்.

(5) முற்காலத்தில் ராஜாக்கள் அரண்மனைகள் கட்டும் போது உபய தோமுகி என்னும் பூஜை செய்து தான் பின் கட்டடம் கட்டுவார்கள். “உபய தோமுகி” என்பது ஒரு பசு ஆகும். அந்த பசு ஈனும் போது கன்றின் முன்னங்கால்களும் தலையும் தான் முதலில் வரும். கன்று போடும் காலத்தில் இவ்வாறு இரு பக்கமும் தலையுடைய பசுவை “உபய தோமுகி” என்று சொல்வார்கள். அப்பொழுது அந்த பசுவை வலம் வந்து வழிபட வேண்டும்.

(6) மாட்டின் வயிற்றில் இருந்து கன்று வெளிப்படும் பொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் மகாலட்சுமியாக நினைத்து வணங்கியும், ஆசீர்வாதமும் செய்வார்கள். அப்பொழுது 3 முறை வலம் வந்து வணங்கி தங்களுக்கு என்ன பிரச்சினைகள் தீரவில்லையோ அது விரைவில் தீர்ந்து நல்ல வழி கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டால் பயன் உறுதியாக விரைவில் கிடைக்கும்.

(7) கன்று ஈன்ற பசுக்களுக்கு தொடர்ந்து புல் புண்ணாக்கு தானியம் போன்றவற்றை அளித்து காலையில் வணங்கி வந்தால் கொடுத்த கடன் பிரச்சனையின்றி கிடைக்கும்.

(8) ஒருவருக்கு தீய கனவுகள் அடிக்கடி வந்து அவஸ்தைபட்டால் அதற்கு பரிகாரம் காலையில் பசுவின் தொழுவத்திற்கு சென்று வாழைப்பழம் கொடுத்து வழிபட்டால் சுகம் கிடைக்கும்.

(9) “கோ பூசை” செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.

(10) பசுக்கள் மேய்ச்சலுக்கு சென்று வீடு திரும்பும் போது அதாவது அந்திப் பொழுதில் அவற்றோடு சீதேவியும் வீட்டுக்கு வருவாளாம். எனவே வீடு திரும்பும் பசுக்களை நல்ல முறையில் வரவேற்க வேண்டும்.

(11) பலவித கிரக கோளாறுகளால் பீடிக்கப்பட்டவர்களும் தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் தங்கள் பீடைகளிலிருந்து விடுபடுவதற்கு கோதானம் என்னும் பசுதானம் செய்து வழிபட்டால் நலம் பெறலாம்.

(12) ஒருமுறை திலீப மகாராஜனின் அசுவமேதக் குதிரையை தூக்கிச் சென்ற தேவேந்திரன் மாயையால் தன்னை மறைத்துக் கொண்டான். குதிரையை தேடிச்சென்ற மகாராஜன், கோசலத்தால் (கோமியம்) தன் கண்களைக் கழுவிக்கொள்ள, தேவேந்திரனின் மாயை அகன்றது. தேவேந்திரனிடமிருந்து அசுவமேதக் குதிரையை மகாராஜன் மீட்டு வந்தான்.

(13) சகல சவுபாக்கியத்தை அள்ளித்தரும் கோ பூஜையை ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது விதிப்படி செய்து வரவேண்டும்.

(14) அன்றாடம் செய்ய இயலாதவர்கள்கூட வெள்ளிக்கிழமை கோபூஜை செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் 108 பசுக்களைக் கொண்டு பெரிய அளவில் கோபூஜை செய்யலாம். அவ்வாறு கோபூஜை செய்வது ஆலயத்திற்கும் மக்களுக்கும் மட்டுமின்றி அகிலத்திற்கே நன்மை அளிக்கும்.

(15) அன்னை புவனேஸ்வரி இப்பூலோகத்தில் வசிஷ்டர் ஆசிரமத்தில் தேவ பசுவாக இருந்த நந்தினியின் சொரூபமாக விளங்குகிறாள் என்று தேவி புராணங்கள் கூறுகின்றன.

(16) பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜ சக்ரவர்த்தி, தசரதச் சக்ரவர்த்தி போன்ற ராஜாதி ராஜாக்கள் எல்லோரும் பூசிக்கொண்டார்கள்.

(17) ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி (தை மாதம் முதல் தேதி) இந்திர பூஜையுடன் சேர்த்து கோபூஜையைச் செய்து வருவது நல்லது.

(18( கோபூஜையை மூன்று அங்கங்களாக அதாவது விநாயகர் பூஜை, கோபூஜை, இந்திர பூஜை என்னும் நிலைகளில் செய்ய வேண்டும்.

(19) புண்ணிய நதிகள், சமுத்திரங்கள் பசுவின் உடலில் இருப்பதால் பசுவை வலம் வந்து வணங்கினால் பூமியை வலம் வந்து வணங்கிய பலன் கிடைக்கும்.

(20) பசுவின் பிருஷ்ட பாகத்தில் லட்சுமி வாசம் செய்வதால் பெருமாள் கோவிலில் விஸ்வரூப தரிசனத்தின் போது பெருமாளின் சந்நிதி நோக்கி பசுவின் பிருஷ்ட பாகம் இருக்கும்படி செய்து, பகவானும் மகாலட்சுமியைப் பார்த்துக் கொள்வது போல செய்கிறார்கள்.

(21) பசுவை அதிகாலையில் பார்ப்பதும், வணங்குவதும் புண்ணியமாகும்.

(22) வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.

(23) பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.

(24) நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும். அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.

(25) பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.

(26) ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது. அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.

(27) பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை. இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.

(28) பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை. பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது. இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.

(29) புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூடிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.

(30) ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.

(31) பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும். அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை எண்ணை போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.

(32) காலையில் எழுந்தவுடன் யாருடனும் பேசாமல், பசுவுக்கு ஒருபிடி புல் கொடுத்தால் மலடிக்கும் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்று சொல்வார்கள். பொதுவாக பசுவுக்கு உணவு கொடுத்த பின்னரே, நாம் உண்ண வேண்டும்.

(33) பசுவின் பாதத்துளி நம் உடலில் பட்டால் புனித நீராடிய பலன் கிட்டும். கோதுளி பட்ட அன்னத்தைச் சாப்பிடாது தூக்கி எறிந்ததால் சிறந்த சன்னியாசியாகிய கைசிகன் சண்டாளனாகப் பிறந்தான். கோவுக்குப் பணிவிடை செய்து திலீப மகராஜன் ரகுவைப் பெற்றான்.

(34) உயிரினங்களில் பசு மட்டுமே தனக்கென வாழாத, மிக உயர்ந்த பிறவியாகும். இது மனிதர்களுக்குப் பால் என்னும் சிறந்த சத்துப் பொருளை தருகிறது. மனிதன் உண்ட பின் அவன் கழிவாக எண்ணும் வைக்கோல், தவிடு முதலிவைகளை மட்டுமே ஏற்கும் உயர்ந்த பண்பினை உடையது.

(35) குணத்திலும் இதனைப் போன்ற சாந்த குணம் கொண்ட உயிரினங்கள் வேறு எதுவும் கிடையாது. இதன் சீரிய பண்பினை உணர்ந்தே நம் முன்னோர் தனக்கென வாழாது பிறருக்கென்ன வாழும் தியாகப் பண்புடைய பசுவை வணங்கி, அப்பண்புகள் நமக்கு வரவேண்டும் என்று அதனை வணங்கி, அத்தகு தியாகப் பண்பைப் பெற்றனர்.

(36) கோதானத்தைவிடச் சிறந்த தானம் எதுவும் கிடையாது. எனவேதான் திருமணம் போன்ற நல்ல காரியங்களில் கோதானம் செய்வதை நம் சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன. கோதானம் கொடுக்கும்போது பசுவின் வாலை உருவியே தானம் கொடுக்க வேண்டும்.

(37) காலையில் எழுந்ததும் மங்கள ரூபியான பசுவைத் தினமும் தரிசிப்பவன் துன்பங்கள் நீங்கி சுபத்தைப் பெறுகிறான்.

(38) தினமும் கோபூஜை செய்பவன் மகா விஷ்ணுவின் மகத்தான திருவருளைப் பெற்று மகிழ்ச்சியை அடைவான். பசுக்களுக்குத் தினமும் உணவு தருபவனுக்கு இறைவன் அவன் விரும்பிய வரங்களை அளிப்பான்.

(39) வாழ்வில் சிக்கல் நிம்மதி இல்லாதவர்கள் 5 முறை கோபூஜை செய்து அதற்கு உணவு தர துன்பமும் விலகி இன்பம் பிறக்கும்.

(40) பசு என்பதன் உண்மையான பொருள் தர்மத்திற்குக்கட்டுப்பட்டது என்பதாகும்.

Monday 5 August 2024

சித்த சோரா

கடவுளின் புகழைப் பாடி, அதை ஒரு தொழிலாகக் கொண்டிருந்த ஒரு பாகவதர்.
 அன்று பாகவதத்தின் கதையை
ஒரு வீட்டில் பிரவசனம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அந்த வீட்டிற்குள் திருட வந்த ஒரு திருடன் நுழைந்து, மூலையில் மறைந்து, (வேறு வழியில்லாமல்) பிரவசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

"ஸ்ரீமத் பாகவதம்", பகவான் 
ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் மற்றும் மாய லீலைகள் நிறைந்த ஒரு புனித நூலாகும்.

திருடன் இக் கதைகளைக் கேட்கும் கட்டாயத்தில் இருந்தான். 

பாகவதர் அச்சமயம் பால கிருஷ்ணர் அணிந்திருந்த ஆபரணங்களை பிரமாதமாக வர்ணித்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணரை பசுக்களுடன் அனுப்புவதற்கு முன், தாயார் யசோதை அவருக்கு அணிவித்து மகிழ்ந்த நகைகளை பாகவதர் விவரித்தார்.

இக் கதைகளைக் கேட்டு பரவசம் அடைந்த திருடன், எப்படியாவது அப் பாலகனின் நகைகள் எல்லாவற்றையும் கொள்ளை அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

தினமும் சிறு சிறு பொருட்களைத் திருடுவதை விட, இது மேல் என்று எண்ணினான்.

பிரவசனம் முழுவதும் முடியும் வரை திருடன் காத்திருந்தான். 

இப்பாலகன் இருக்கும் இடத்தை திருடன் அறிய விரும்பினான். நிகழ்ச்சி முடிந்த பின் அவன் பாகவதரைப் பின் தொடர்ந்து சென்று அவரை வழி மறித்தான்.

 தட்சிணையாகக் கிடைத்த தனது சிறு செல்வமும் தொலைந்து விடுமோ என பாகவதர் பயந்து, தன்னிடம் ஒன்றும் இல்லை என்று திருடனிடம் கூறினார்.

திருடன், பாகவதரின் பொருளில் தனக்கு எதுவும் வேண்டாம் என்றும், அவர் வர்ணித்த மாடு மேய்க்கும் பாலகனின் ஆபரணங்கள் பற்றிய விவரம் தனக்கு வேண்டும் என்றான்.

 தன்னை அவ்விடத்திற்கு அழைத்துச் செல்லும்படி திருடன் அவரைக் கேட்டான்.

 பாகவதர் குழப்பம் அடைந்தார். அவர் திருடனிடம்,(தப்பிக்க) “யமுனை நதிக் கரையில் உள்ள பிருந்தாவனம் என்னும் நகரத்தில், பச்சைப் புல்வெளியில் காலை வேளையில் வருவான்.

 அவன் மேகங்களின் நிறத்தைப் போல் நீல வர்ணமாகவும், கையில் புல்லாங்குழலுடனும்,  பட்டாடைகளுடனும் இருப்பான்.

 நான் வர்ணித்த நகைகளை அந்த நீல வர்ண பாலகன் அணிந்திருப்பான்” என்று கூறி சமாளித்தார்.

பாகவதர் கூறியதை நம்பிய திருடன் பிருந்தாவனத்திற்கு உடனடியாகக் கிளம்பினான். 

அந்த அழகான இடத்தை அவன் கண்டு பிடித்து, ஒரு மரத்தின் மீது ஏறி, ஸ்ரீகிருஷ்ணன் வரும் வழியை எதிர்பார்த்து, நம்பிக்கையுடன் காத்திருந்தான். 

சூரியோதயம் ஆனது.

 காற்றுடன் புல்லாங்குழலின் இனிமையான ஓசை மிதந்து வந்தது.

 அந்த இசை நெருங்கி, ஓசை சற்று வலிதானதும், திருடன் பால கிருஷ்ணனைக் கண்டான்.

 மரத்திலிருந்து இறங்கிய அவன், ஸ்ரீகிருஷ்ணனை நெருங்கினான்.

 பால கிருஷ்ணரின் மனோகரமான ரூபத்தைக் கண்டதும், அவன் தன்னை மறந்து அவரை கை கூப்பி வணங்கினான். 

அவனையும் அறியாமல் ஆனந்தக் கண்ணீர் அவன் கண்களிலிருந்து வழிந்தது.

 இக் கண்ணீர் அவன் உள்ளத்திலிருந்து வந்ததால், தன்மையாக இருந்தது.

 இந்த அழகான சிறுவனை எந்தத் தாயார் அனுப்பி இருப்பார்கள் என எண்ணி அவன் வியந்தான்.

 கண்களை அகற்றாமல் ஸ்ரீகிருஷ்ணனை பார்த்தான்..! அவனுள் ஒரு மாற்றம் ஏற்பட தொடங்கியது!!

அவன் கிருஷ்ணனை நெருங்கி “நில்” என்று கூச்சலிட்டபடி கிருஷ்ணரின் கையைப் பிடித்தான்.

 அக்கணமே, பஞ்சு மூட்டை நெருப்பில் எரிவது போல், அவனது பழைய கர்மாக்கள் அழிந்தன. 

அவன் கிருஷ்ணரை நெருங்கி மிக அமைதியாக “யார் நீ” என்று கேட்டான்.

கிருஷ்ணர் அவனைப் பார்த்து, ஏதுமறியாதது போல் ‘உன் பார்வை என்னை பயமூட்டுகிறது.

 தயவு செய்து என் கைகளை விட்டு விடு’ என்றார். 

திருடன் அவமானத்துடன் “என்னுடைய கெட்ட எண்ணம் என் முகத்தில் பிரதிபலிக்கிறது; எனவே நீ பயந்து கொள்கிறாய். நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். ஆனால் உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது. நான் உன்னை விட்டு விட வேண்டும் என்று மட்டும் தயவு செய்து கூறாதே” என்றான்.

குறும்புக்கார கிருஷ்ணன் திருடனிடம், அவன் வந்த காரணத்தை நினைவு படுத்தி, சிரித்தபடி, “நீ விரும்பியது போல்  இதோ, இந்த ஆபரணங்களை எடுத்துக் கொள்” என்றார்.

 குழப்பமடைந்த திருடன் “அனைத்து ஆபரணங்களையும் நீ கொடுத்து விட்டால், உன் தாயார் உன்னை கோபித்துக் கொள்ள மாட்டாரா?” என்று கேட்டான்.

 அதற்கு கிருஷ்ணர் புன்சிரிப்புடன், “நீ அதைப் பற்றி கவலைப் படாதே. என்னிடம் அதிக அளவில் ஆபரணங்கள் இருக்கின்றன. 

நான் உன்னை விடப் பெரிய திருடன்; ஆனால் நம் இருவரிலும் ஒரு சிறு வித்தியாசம் இருக்கிறது. நான் எவ்வளவு திருடினாலும், எவரும் என்னைப் பற்றி புகார் கூற மாட்டார்கள்.

 என்னை அன்புடன் ‘சித்த சோரா’ என்று அழைப்பார்கள். 

உனக்கே தெரியாமல், உன்னிடம் பழைய ஆபரணம் ஒன்று இருக்கிறது; உனது சித்தம் (உள்ளம்). அதை நான் இப்போது திருடி எடுத்துச் செல்லப் போகிறேன்” என்று கூறிய உடனே, மாயகிருஷ்ணன் திருடன் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டார்.

திருடன் வியக்கும் வகையில், ஆபரணங்கள் நிறைந்த ஒரு பை அவன் தோளில் தொங்கிக் கொண்டிருந்தது. 

அதை பாகவதரின் வீட்டுக்கு எடுத்து வந்து, அவன் நடந்த அனைத்தையும் அவருக்கு விவரித்தான்.

 பாகவதர் இப்போது மிகவும் பயந்து, திருடனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று, பையைத் திறந்து பார்த்தார்.

 அவர் திகைக்கும் வகையில், பாகவதத்தில் அவர் விவரித்தபடி, கிருஷ்ணர் அணிந்திருந்த அத்தனை ஆபரணங்களும் அப்பையில் இருந்தன.

ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி பாகவதர் திருடனிடம், கிருஷ்ணரை அவன் கண்ட இடத்திற்கு, தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறினார்.

 திருடன் ஒப்புக் கொண்டு, தான் முந்தைய தினம் கிருஷ்ணரை கண்ட இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றான்.

திடீரென திருடன் ஆச்சரியத்துடன் "அதோ, அங்கே அவன் வருகிறான்" என்று கூறினான். 

ஆனால் பாகவதர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. 

ஏமாற்றம் அடைந்த அவர், 
“மாய கண்ணா ஒரு திருடனுக்கு நீங்கள் தரிசனம் அளித்தீர்கள்; 
ஆனால் எனக்கு ஏன் காட்சி தரவில்லை?”என்று கண்ணீருடன் கேட்டார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகுந்த பரிவுடன் இவ்வாறு பதிலுரைத்தார்.

 நீங்கள் ஸ்ரீமத் பாகவதத்தை, மற்ற கதைகளைப் போல படிக்கிறீர்கள்.

 திருடனோ நீங்கள் என்னைப் பற்றி கூறியதை நம்பி, என்னைத் தேடி உண்மையாக வந்தான். 

என்னிடம் பூரண நம்பிக்கை வைத்து சரணாகதி அடைபவர்களுக்கே நான் தரிசனம் அளிக்கிறேன்.

*நீதி:*

*ஆன்மீக நூல்களை, நம்பிக்கை இல்லாமல் ஒப்புக்கு படிப்பதால் ஒரு பயனும் கிடையாது. தீவிர நம்பிக்கை இருந்தால், மலைகள் கூட அசையும்..*